Jump to content

மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகர், எழுத்தாளர் அ.செ.மு.

 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

spacer.png

 

ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் அ.செ.மு. அதைப்போல மூத்த முன்னோடி ஊடகவியலாளர்களிலும் முக்கியமானவர். 1940களிலேயே ஊடகத்துறையில் இயங்கி, தனி அடையாளங்களை உருவாக்கியவர். ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு, எரிமலை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றிய அ.செ.முருகானந்தன், “எரிமலை” என்று தனியாக தன் சொந்தச் செலவிலும் ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். திருகோணமலையிலிருந்து வெளிவந்தது. திருகோணமலையின் முதற்பத்திரிகையும் அதுதான் என்று கூறப்படுகிறது. 

ஆனால் அது நீடிக்கவில்லை. காரணம்,பெரிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர்களைப்போல அ.செ.மு பெரும் தனவந்தராக அந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கவில்லை. அதற்கான பொருளாதார வசதியும் அவரிடம் கிடையாது. குறைந்தது அன்று செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த அரசியல் தரப்புகளின் ஆதரவைக் கூட அவர் பெற்றிருக்கவில்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் ஈடுபாடுமில்லை. அவரிடமிருந்த ஒரே மூலதனம் ஆர்வம் மட்டுமே. அதை வைத்தே ஒரு சுயாதீனப் பத்திரிகையாக எரிமலையை ஆரம்பித்தார். அவ்வாறான சுயாதீனப் பத்திரிகைகளுக்கு நம்முடைய தமிழ்ப் பெரும் சமூகத்தில் கிடைக்கும் ஆதரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லவா. அந்த விதியின்படி அது ஆறு இதழ்களோடு நின்று தன்னுடைய வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. 

ஆனால், அ.செ. முவுக்கு வாசல்கள் ஆயிரம். அதன்படி அவர் ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு என்ற மாதிரி அல்லது ஒரு கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கப்பட வேண்டும் என்று சிந்திப்பவர் என்பதால், வேறு பத்திரிகைகளில் இயங்கினார். அதுவும் போதாதபோது சிற்றிலக்கிய இதழாழராகவும் இருந்திருக்கிறார். ஈழத்தின் முன்னோடி இலக்கிய இதழான “மறுமலர்ச்சி”க்கும் அ.செ.முவே மையம். இதற்கெல்லாம் முக்கிய காரணம், அவர் அடிப்படையில் எழுத்தாளர் என்பதே. இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர் என்பதே. 

இப்படியெல்லாம் இருந்த அ.செ.முவை இன்று பலருக்கும் தெரியாது. அதாவது நூற்றாண்டு நாயகனாக நினைவு கூரக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளரை –ஒரு முன்னோடி ஊடகவியலாளரை பெருந்தமிழ்ச்சமூகதினால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. இது எவ்வளவு துயரம்? எவ்வளவு அவலம்? 

அ.செ. மு தெரிந்தவர்களிலும் பலர் இன்று மறந்து விட்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைக் கை விட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார். இதனால் அவருடைய மரணம் பற்றிய தகவலே குழப்பமானதாக வந்தது. இரண்டு தடவை அவர் இறந்த சேதியை பத்திரிகைகளே வெளியிட்டன என்றால் நிலைமையின் தாற்பரியத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  

ஆனாலும் பலருக்கும் அ.செ.முவின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரியும். இப்போது கூட அவர்களிடம் அ.செ.மு என்ற பேரைச் சொன்னால் போதும். எழுந்து உட்கார்ந்து கொண்டு அவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுமளவுக்கு அ.செ.மு வின் எழுத்துகளின் மீது ஈர்ப்புண்டு. அந்தளவுக்கு சிறுகதைகளில் தன்னை அடையாளப்படுத்தியவர் அ.செ.மு. இன்றும் கூட அவருடைய பல கதைகள் நினைவு கொள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அதில் ஒன்று “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற கதை. 

இது மலையக மக்களை நாடற்றவர்களாக்கும் பிரஜா உரிமைச் சட்டத்தைப்பற்றிப் பேசுகிறது. இதற்குப் பிறகுதான் மலையகத்திலேயே இந்தப் பிரச்சினையைப் பற்றிய எழுத்துகள் மேலெழுந்தன. அந்த வகையிலும் அ.செ.முவே இதற்கும் முன்னோடி. இதை விட “மாடு சிரித்தது”, “மனித மாடு” “பழையதும் புதியதும்” என இன்றும் புதுமை குன்றாத பல கதைகளை எழுதியிருக்கிறார் அ.செ.மு. சிறுகதைகள் மட்டுமல்ல, நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள் என ஒரு காலத்தில் ஏராளமாக எழுதித்தள்ளியவர். அவற்றில் கவனத்தைக் குவிக்கக் கூடிய அழகியலையும் மொழிச் சிறப்பையும் வெளிப்படுத்தியவர். 

ஆனால் அவற்றையெல்லாம் நூலாக்கும் வாய்ப்பு அ.செ.முவுக்குக் கிடைக்கவில்லை. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று அவர் வசதியான வாழ்க்கையில் ஒரு போதுமே இருந்தவரில்லை. வறுமையும் ஏழ்மையும் தனிமையுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. இரண்டாவது, எந்த அரசியல் நிலைப்பாட்டையும் அ.செ.மு ஆதரித்தவரில்லை. அவருடைய கொள்கை எப்படியானது என்றால், “அரசியல் சமூக விசயங்களை குத்திக் கிளறுவதற்காகவே ஒரு புதுமையான இலக்கியத்தை மறுமலர்ச்சி சிருஷ்டிக்கப் போவதில்லை. ஆனால், இலக்கியத்தின் வளர்ச்சியிலே சமூகத்தின் வளர்ச்சி பின்னி வரும் என்பதை மறுமலர்ச்சி நிரூபிக்கும்” என்பதாகும். இதை அவரே மறுமலர்ச்சி இதழில் குறிப்பிட்டிருக்கிறார். என்பதால் அவர் எந்த அரசியல் கட்சிகளின் உள்ளுமில்லை. பின்னுமில்லை என்பது தெளிவு. மூன்றாவது தன்னுடைய காரியங்களைத் தந்திரமாகவோ நியாயமாகவோ பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் கரிசனையும் அவரிடமிருந்ததில்லை. இவ்வளவு ஊடகத் தொடர்புகளோடும் எழுத்துச் சிறப்போடும் இருந்தவர் தொடர்ந்தும் ஏழ்மையிலும் தனிமையிலும் வாழ்ந்திருக்கிறார் என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டால், அவருடைய இயல்பையும் மனநிலையையும் விளங்கிக்கொள்ள முடியும். 

 

https://arangamnews.com/?p=5489

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.