Jump to content

பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பத்மப்ரியா
 

டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியாவும் ஒருவர். மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணையாமல் இருந்துவந்த பத்மப்ரியா, தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்திருக்கிறார்.டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்ததை அடுத்து தற்போது பத்மப்ரியாவும் திமுக-வில் இணைந்திருக்கிறார்.

பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்! Environmental activist padmapriya joins dmk in presence of mk stalin - Vikatan

பத்மப்ரியா, டாக்டர் மகேந்திரன் திமுக-வில் இணைந்தனர்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் சூழலியலாளர் பத்மப்ரியா உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தனர். டாக்டர் மகேந்திரன் கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் 1.4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் தோல்வியைத் தழுவினாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மப்ரியா கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

Tamil News Today: ` டாக்டர் மகேந்திரன், பத்மப்ரியா திமுக-வில் இணைந்தனர் Tamil News Today 08-07-2021 just in live updates - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்மப்ரியாவையும் பாழாய்ப்போன அரசியல் ஆசை விட்டு வைக்கவில்லை.

ஒரு சட்டம் குறித்து, இவர் ஏதோ சொல்லப் போக, பிஜேபியில் கலியாண ராமன் என்று இப்போது குண்டர் சட்டத்தில் உள்ளே இருக்கும் ஒருவர், பயமுறுத்த, ஓடிப் போய், இவரது அபிமான நடிகர் கமல் கட்சியில் சேர்ந்தார்.

கமல் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று விலகினார்.

சாதியை ஒழிக்கவேண்டுமாயின், சான்று பாத்திரங்களில், சாதி போடுவதை தடுக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்து, அது குறித்து டிவி நிருபர்கள் கேள்வி கேட்ட போது உளறிக் கொட்டி, கேமராவை ஆப் பண்ணுங்க ப்ளீஸ் என்று கோரியவர்.

இன்னும் அரசியல் ஆசை விடாததால், திமுக பக்கம் ஓடிப்போய் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மப்ரியா கட்சிகள் பல மாறினாலும் 
காட்சி மாறும்வரை எங்கள் உறுதியான 
 தீவிர ஆதரவு பத்மப்ரியாவுக்கு இருக்கும் என்பதை 
இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பத்மப்ரியா கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

பத்மபிரியா மதுரவாயலில் மூன்றாவது பெரிய வேட்பாளர்🤣 இப்படி திமுகவில் போய் சங்கம் ஆக வேண்டி வந்தது சோகம்தான்.

மனப்பூராவும் பார்ப்பன ஆதிக்க அழுக்கு எண்ணங்கள். சாதி சான்றிதழை ஒழித்து விட்டால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடலாம் என்ற எண்ணம் உடைய hidden sangi. மகேந்திரன் கூட்டி போய் திமுகவில் சேர்துள்ளார். திமுக என்ன செய்கிறது பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆஃபாயிலு , டிக்டாக் பன்றவனு கிண்டல் பன்னுனது என்னவோ உண்மைதானுங்கோவ் நீங்க எங்க கட்சில சேருவீங்கனு நினைக்கலிங்க மன்னிச்சிருங்கோவ். 

Image

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.