Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கனவு

ஒரு கனவு
இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம்.
சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம்.
கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே.
என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும்.
ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா பார்க்கறாங்க, கொஞ்சம் அசந்தா கொலை கூட பண்ண தயங்கமாட்டாங்க.
சரி நாம முதல்ல இருந்த இடத்துக்கே வரலாமுன்னா நம்ம இடத்துல வேற எவனோ வந்து உட்கார்ந்துடறான். அவன் இப்ப நம்மளை எதிரியா பார்க்க ஆரம்பிச்சிடறான்.
சில பேருக்கு ஜாதக பலன் நல்லா இருக்குது சார், அவன் பெரிய முதலாளிகிட்ட இருக்கற மிதப்புல நம்மளை பார்ப்பான் பாருங்க, மனசு எல்லாம் வெந்து போயிடும் சார். அதை விட வேடிக்கை ஒண்ணு கேளுங்க !
காரு ஒண்ணு சார், அதுவும் சும்மா பள பளன்னு மின்னுது சார், நான் தெரியாத்தனமா அது பக்கமா போயி நின்னுட்டேன் சார், உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கலாமுன்னு முயற்சி பண்ணி பார்த்தேன்.
என்னைய விட மூணு மடங்கு குண்டா ஒருத்தன் உட்கார்ந்திருந்தவன், சட்டுன்னு என்னை ஒரு மிரட்டு மிரட்டினான் பாருங்க, அப்படியே சப்த நாடியும் ஒடுங்கி போச்சு.அவனோட பார்வையும் எகத்தாளமா இருந்துச்சு.
நீ கார்ல உட்கார்ந்திருக்கற மிதப்புல பேசறே, இப்படி நினைச்சுட்டு பேசாம வந்துட்டேன். வேற என்ன செய்ய சொல்றீங்க?
வழக்கம் போல வாட்ச்மேன் வேலை பார்க்கறதா முதலாளிகிட்ட காண்பிச்சுகிட்டு அப்படியே காலை மடக்கி உட்கார்ந்து சுகமா கனவு கண்டுகிட்டிருந்தேன்.
படக்குன்னு ஒரு சத்தம், எங்கிட்டே ஒரு பழக்கம் இருக்கு சார் எவ்வளவு தூக்கத்துல இருந்தாலும், கொஞ்சம் சத்தம் கேட்டா போதும் முழிச்சுக்குவேன்.
சத்தம் கேட்டவன் அப்படியே தூங்கற மாதிரியே படுத்து கிட்டு கண்ணை மட்டும் மெல்ல திறந்து பார்த்தேன், பார்த்தவுடனே மனசுக்கு இவன் நல்லவனில்லை அப்படீங்கறமாதிரி மனசுக்கு பட்டது.
இருந்தாலும் சட்டுன்னு அவனை எதிர்க்க முடியாது, முதலாளிக்கு தெரிஞ்சவனா இருந்தா, அதுக்கும் அந்தம்மா சத்தம் போடும், அதனால சுதாரிச்சு அவனை கண்காணிச்சு கிட்டு இருந்தேன்.
அவன் வாசல்ல வந்து நின்னான். என்னை அவன் கவனிக்கலை, ஏன்னா நான் கொஞ்சம் மறைவாத்தான் உட்கார்ந்திருந்தேன்.
கதவை தட்டுனான், அந்தம்மா கதவை திறந்தது இங்கிருந்தே தெரிஞ்சது, அந்தம்மா கூட ஏதோ பேசினதும் தெரிஞ்சது.
அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியலை, அந்தம்மா திடீருன்னு கையில கழுத்துல இருக்கறதை எல்லாம் கழட்டி அவன் கையில கொடுக்கறதையும் பார்க்கறேன்.
அவன் ஏதோ சொல்றான், அந்தம்மா அப்படியே அவனை வெறிச்சு பார்த்துகிட்டு நிக்குது, இவன் மெல்ல வாசலை விட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கறான்.
இதுக்கு மேல என்னால தாங்க முடியலை, எந்திரிச்சவன் ஒரே தாவா தாவி போனவன் சட்டுன்னு அவன் கையை குறி வச்சேன்.
அவன் என்னைய எதிர்பார்க்கலை போலிருக்கு, அப்படியே மிரண்டு போய் ஓடறதுக்கு ஆரம்பிச்சான். அதுக்குள்ள நான் சத்தம் கொடுக்க, வாசல்லயே நின்னுகிட்டிருந்த பொண்ணு திடீருன்னு உணர்வு வந்த மாதிரி "திருடன்"திருடன்" சத்தம் போட..
அப்புறம் என்ன ! அவனுக்கு தர்ம அடி போட்டு கையில இருந்த நகைகளை எல்லாம் அப்பவே புடுங்கிட்டாங்க. இந்த மாதிரி திருடனுங்க யாரா இருந்தாலும் இரண்டு நிமிஷம் வசியம் பண்னற மாதிரி நிக்க வச்சு அவங்ககிட்ட இருக்கறதை அவங்களாவே கழட்டி கொடுக்க வச்சிடுவாங்கன்னு அங்குள்ளவங்க பேசிகிட்டாங்க.
இப்பவெல்லாம் எனக்கு ரொம்ப மரியாதை கிடைக்குது சார், ஒரு சிலர் என் பக்கத்துல வந்து என் தலையை தட்டிட்டு கூட போறாங்க.
என்னைய போலீஸ் டிபார்ட்மெண்ட்டுல கூட சேர்த்துக்கலாமுன்னு அடுத்த வீட்டு அக்கா பக்கத்து வீட்டு அக்காகிட்டே சொல்லிட்டு இருந்ததை கேட்டேன் சார்.
ஏன் சார் போலீஸ் டிபார்ட்மெண்ட் வேலைக்கு எங்களை மாதிரி ஆளுங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
அடச்சீ..நாயே எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கறே, அப்படீன்னு யாரோ என் முதுகில அடிக்கறாங்க.
வலி தாங்காம "வள்"வள் ளுன்னு கத்திட்டு அந்த இடத்தை விட்டு ஓடறேன் சார்.https://eluthu.com/kavithai/407927.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.