Jump to content

ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார்.

106908377-1625767965417-gettyimages-1233

மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 2001 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. 

இதில் அங்கு ஆட்சியிலிருந்த தலீபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி கொண்டுவரப்பட்டது.‌ 

ஆனாலும் அதே ஆண்டு தலீபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.‌ 

இந்தப் போரில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. 20 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த உள்நாட்டு போரில் தலீபான்களின் தாக்குதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தரப்பில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த சூழலில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் முழுமையாகத் திரும்ப பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டது.‌

ஆனால் அமெரிக்காவில் ட்ரம்புக்கு பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜோ பைடன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப‌ பெறப்படும் என அறிவித்தார். 

அதன்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.‌ 

ஒரு கருத்துக் கணிப்பின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றுவதற்கான பைடனின் முடிவை பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஆதரிக்கின்றனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது இலக்குகளை நிறைவேற்றியதாக 28 சதவீதமானோர் மாத்திரம் ஒப்புக் கொண்டனர், மேலும் 43 சதவீதமானோர் படைகளை திரும்பப் பெறுவது அல்கொய்தாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.
 

 

https://www.virakesari.lk/article/109069

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Out post என்றோரு படம் பார்த்தேன். திட்டமிடல் இல்லாமல் ஒரு பள்ளத்தாக்கில் முகாம் அமைக்கிறார்கள், தீவிரவாதிகளின் பலத்த தாக்குதலால் உயிர் இழப்புகளுடன் ராணுவம் பின் வாங்குகிறது. ஒரு கட்டத்தில் Bharain இல் இருந்து தாக்குதல் விமானங்கள் அழைக்க படுகின்றன.

கடல் வழி இல்லாத நாட்டில் தோற்ற மூன்றாவது வல்லரசு நாடாக திரும்புகிறார்கள். 

 

Link to comment
Share on other sites

தலபான்கள் ஒவ்வொரு இடமாக பிடித்துக்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தலபான்கள் ஒவ்வொரு இடமாக பிடித்துக்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

 

வெளிநாட்டு படைகளுக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர் தொடக்கம் ஏனைய அனைவருக்கும் குடும்பம் உட்பட வெளிநாட்டு வாழ்விட வசதி அளிக்கப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட 24000 மேல் என ஒரு தகவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

கடல் வழி இல்லாத நாட்டில் தோற்ற மூன்றாவது வல்லரசு நாடாக திரும்புகிறார்கள். 

இதில ஒரு புதினமும் இல்லை பாருங்கோ, ரசியா காரன் உள்ள நிண்டு சண்டை பிடிக்கேக்க அமெரிக்காரன் தாலிபனுக்கு  ஆயுதம் கொடுத்தான்.

இப்ப, அமெரிக்கா காரன் உள்ள நிக்கேக்க ரசியாகாரன் சும்மா இருப்பானே? 

பல டிரில்லியன் டாலர் பெறுமதியான கனிமவளம் உள்ளதை வேறு கண்டு பிடித்து விட்டார்கள்.

சீனாகாரன் சும்மாவே இருப்பான்?

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தானில் 85 சதவீதப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தலிபான்கள் அறிவிப்பு!

 
ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

நாட்டின் 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துவிட்டதாக பிற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரான் எல்லைப் புறத்தில் தொடங்கி, நாட்டின் மறுபுறத்தில் சீன எல்லைப் புறம் வரை ஒரு வளைகோடு போல இந்த தலிபான் கட்டுப்பாட்டு பகுதி பரவியிருக்கிறது.

ஹெராட் மாகாணத்தில் 5 மாவட்டங்களை சண்டை இல்லாமலேயே தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தை தலிபான்கள் சடுதியில் கைப்பற்றிக்கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதேவேளை தலிபான்கள் 6 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிடுவார்கள் என்று சில அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுவதாக ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

இந்தநிலையில், ஈரான் அருகே உள்ள இஸ்லாம் குவாலா, துர்க்மெனிஸ்தான் அருகே உள்ள தொர்குண்டி ஆகிய எல்லையோர நகரங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

இஸ்லாம் குவாலா எல்லைப் பகுதி ஆப்கானிஸ்தான் – ஈரான் இடையிலான மிகப் பெரிய வணிக நுழைவாயில். இந்த எல்லை வழியாக நடைபெறும் வணிகத்தின் மூலம் ஆப்கான் அரசாங்கத்துக்கு மாதம் 2 கோடி அமெரிக்க டொலர்களுக்கு நிகரான வருமானம் வரும்.

அதைப் போலவே தொர்குண்டி நகரம், துர்க்மெனிஸ்தான் உடனான வணிக நுழைவாயிலாக உள்ளது.

இந்த இரு எல்லைப்புற நகரங்களையும் மீண்டும் கைப்பற்ற ஆப்கான் படைகள் முயற்சி செய்துவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியான் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1227809

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.