Jump to content

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?
முற்குறிப்பு:
அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல்.
இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும்.
அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை.
அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை.
அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்பது யதார்த்தம்.
விதி விலக்ககளும் உண்டு!
நிற்க,
யாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியமும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுஜீவித்தனமும் இரண்டு வேர்களுடன் பின்னிப் பிணைந்தது.
1. காலனித்துவக் கல்வி
2. நாவலர் வழிக் கல்வி
இது இரண்டையும் தவிர்த்து யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனத்தை வரவிலக்கணம் செய்ய முடியாது.
காலனித்துவ கல்வியானது, அந்நிய எஜமானர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வாறு சிறப்புற முதுகு சொறிவது அல்லது சேவகம் செய்வது என்பதைக் கற்றுத் தருகின்றது. பேராசையையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. எமது பண்பாட்டையும் விழுமியங்களையும் மெல்ல மெல்ல விற்றுப் பிழைக்க வைக்கின்றது. சுயநலத்துக்காக எமது மக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பேரம் பேசி விற்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கின்றது. அறிவுபெற்ற அடிமைகளை உருவாக்குகின்றது அல்லது அடிவருடிகளுக்கு அறிவைக் கொடுக்கின்றது.
நாவலர் கல்விச் சிந்தனை, கல்வியை உடமையாக்கிக் கொண்டு அதன் மூலம் சொந்த மக்களை அதிகாரம் செய்வதற்கு வழிகாட்டுகின்றது. அறிவின் மூலம் எப்படி மற்றவர்களை அடக்கி ஆளுவது, மற்றவர்களைச் சுரண்டுவது, மற்றவர்களை அடிப்மைப்படுத்துவது, மற்றவர்களை இழிவூபடுத்துவது, மற்றவர்களை ஒடுக்குவது, மற்றவர்களின் வாய்ப்புகளையூம் உரிமைகளையூம் பிடுங்கி எடுப்பது போன்ற வித்தைகளைக் கற்றுத் தருகின்றது.
அறிவை தன் சொந்த உடமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி அது மற்றவர்க்கு கிடைக்காமலும் பார்க்கும் மனோபவத்தையூம் வளர்க்கிறது இந்த யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம். ஆசிரியர்கள் தமக்குத் தெரிந்த அனைத்தையம் மாணவர்க்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதும், லைபறறியில் உள்ள அரிய புத்தகங்களை களவெடுத்துக் கொண்டு போய் தன் வீட்டு புத்தக அலுமாரியில் தானும் படியாமல் பிறரும் படிக்காமற் பேணுவதும், தன்னைவிட தன் நண்பன் அல்லது நண்பி அதிகம் அறிந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மாணவர் குழாமை உற்பத்தி செய்வதும்தான் இந்த யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்.
அட, தான் பார்த்த நல்ல சினிமாக்களை மற்றவர்கள் பார்த்திடக் கூடாது என்று நினைக்க வைப்பது கூட இந்த நாவலர் வழி யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்தான்.
இவற்றைத் தவிர வேறு எதையாவது யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம் எமது மக்கள் மத்தியில் விதைத்துள்ளதா? ஏதாவது ஒரு நல்ல குணம்..
அன்பு? கருணை? விடுதலை உணர்வு?
அறிவானது, படைப்பாக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். புதிய விடயங்களைப் படைப்பதாக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்து அறிவு இந்த உலகுக்கு எதையவது புதிதாகப் படைத்துக் கொடுத்தள்ளதா. ஒரு குண்டூசியைத்தானும்…? தன் சொந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த வகையிலாவது உதவியுள்ளதா? அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் செக்குமாட்டு அறிவுஜீவித்தனமே இது. எங்கேயோ யாரோ கண்டுபிடித்தவைகளை அப்பிடியே அப்ளை செய்து அதில் தம்மை கெட்டிக்காரா; என நிரூபிக்கும் அறிவவுஜீவித்தனம்.
புதிய கண்டுபிடிப்புகள், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த அறிவியல் நடைமுறை என்பன எல்லாம் போர்க் காலகட்டத்திலேயே இருந்தன. அறிவுஜீவிகள் அல்லாதோர் என்ப்படுபவர்களாலேயே அவை மேற்கொள்ளப்பட்டன.
அறிவானது அன்பையும் கருணையையூம் ஊட்டுவதாக இருக்க வேண்டும். எமது அறிவுஜீவிகளிடம் அது உள்ளதா? அவர்கள் கதைப்பதை சற்று உற்றுப் பாருங்கள். அதிகாரத்துவம் இருக்கும். வக்கிரம் இருக்கும். கர்வம் இருக்கும். மற்றவர்கள் பற்றிய இழக்காரம் இருக்கும். கொலைவெறி கூட இருக்கும். அன்பு இருக்காது. கருணை இருக்காது. குழைவு இருக்காது. குழந்தைத்தனம் இருக்காது. எப்பிடி மற்றவனை வீழ்த்தலாம், வெல்லலாம், ஆளலாம் என்ற ஆதங்கம் இருக்கும்.
கல்வியானது, சுய விடுதலைக்கும் தான் சார்ந்த மக்களின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். பேராசையையும் கர்வத்தையும் ஊட்டி வளர்க்கும் அறிவுஜீவித்தனம் எப்படி சுய விடுதலைக்கும் சரி அல்லது மக்களின் விடுதலைக்கும் சரி வழிகாட்ட முடியும்?
எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?
அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் யாழ்ப்பாண அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்
 

https://www.facebook.com/gnanadas.kasinathar

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂😂

அது A/L இறுதி வருடம். மாணவர் விடுதியில் என்னுடைய  வகுப்பில் 8 மாணவர்கள். ஒரே பாடங்கள். எல்லா பாடங்களிலும் இவ்விரெண்டு Past question papers புத்தகங்கள். ஆனால் எங்களுக்கோ எப்போதுமே ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகம்தான் இருக்கும். அதனையும் ஒரு குறிப்பிட்ட மாணவன் மாத்திரமே வைத்திருப்பார். கேட்டாலும் தரமாட்டார். (அவர் இப்போது கத்தோலிக்க பாதிரியார் 😜). எங்கு தேடிப் பார்த்தாலும்  மற்றைய புத்தகங்கள் கிடைக்கா. 

பரீட்சைகள் முடிவடைந்துவிட்டன. 

குவித்து வைத்திருந்த பொச்சு மட்டைகள் கறையான் பிடித்துவிட்டது. 

அதனைப் பிரித்து வேறு இடத்தில் போடும்படி வேண்டுகோள். 

வெலை தொடங்கியாயிற்று. அரைப் பங்கு மட்டைகளை எடுத்திருப்போம், காணாமல் போன புத்தகங்கள், கறையான் அரித்த மிச்ச சொச்சங்களுடன்........

யாழ்ப்பாணத்தான்..... 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?

அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானதாஸ் அண்ணை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் அவரும், வாழ்க்கை துணையும் படித்தவர்கள்தான். படிப்பிப்பவர்களும்.

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய, அரசோடு இணைந்து கொலை முகாம் நடத்தியவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? அதை விட என்ன பெரிய அநியாயத்தை படித்தவர்கள் செய்தார்கள்?

அன்ரன் பாலசிங்கம் படித்தவரா? படிக்காதவரா?

கேணல் சங்கர்? வானோடிகள்? பாலகுமார்? டாக்டர் சிவகுமார்? இன்னும் பலர்.

படிக்காதவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாய்ப்பை தேடி நாட்டை விட்டு ஓடிவர, வெளிநாட்டில் இருந்த வாய்ப்பை விட்டு விட்டு, எமது மக்களோடு நிற்க என போன பல படித்தவர்கள் உள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஞானதாஸ் அண்ணை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் அவரும், வாழ்க்கை துணையும் படித்தவர்கள்தான். படிப்பிப்பவர்களும்.

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய, அரசோடு இணைந்து கொலை முகாம் நடத்தியவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? அதை விட என்ன பெரிய அநியாயத்தை படித்தவர்கள் செய்தார்கள்?

அன்ரன் பாலசிங்கம் படித்தவரா? படிக்காதவரா?

கேணல் சங்கர்? வானோடிகள்? பாலகுமார்? டாக்டர் சிவகுமார்? இன்னும் பலர்.

படிக்காதவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாய்ப்பை தேடி நாட்டை விட்டு ஓடிவர, வெளிநாட்டில் இருந்த வாய்ப்பை விட்டு விட்டு, எமது மக்களோடு நிற்க என போன பல படித்தவர்கள் உள்ளார்கள்.

 

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்கே  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டுமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

Just now, விசுகு said:

 

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்க  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

🤣 அவரும் இதை பார்த்தால் - வருவார் என்ற கோணத்தில்தான் நானும் எழுதுகிறேன்🤣

மறுபடியும் அதே யாழ் புத்தி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

 

"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

 

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தீவகத்தில் பிறந்தவன்

அதனால் இது  போன்ற  பலவற்றை பாடசாலைகளிலும்  சரி  பொது  வாழ்விலும் சரி முகம்  கொடுத்தவன்

ஆனால்  திருப்பி அவர்களை நையாண்டி  செய்ததில்லை

காரணம்  அதன் வலி   எனக்குத்தெரியும்

அதனையே  நானும்  செய்தால்??

1 minute ago, goshan_che said:

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

இங்கே  நான் பதிந்த பதிவுகள் அனைத்தையும் போட்டுள்ளேன்

அவர் மட்டுமல்ல  அவரது துணைவியாரும் விருப்பு  போட்டுள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுமுற்றும் விகாரைகள், விமான நிலையத்திலிருந்து  பல்கலைகழகம் வீதி அபிவிருத்தி சபை முதற்கொண்டு விவசாயம் கடல் வளங்கள், வனம் ,காணிகள்  ஆக்கிரமிப்புவரை எல்லாமே சிங்கள ஆளுமைகளின் வசம்

இனியெல்லாம் யாழ்ப்பாணத்தின் அறிவுஜீவிதனம் யாழ்ப்பாணம் சிங்களவனின் நாடு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே பயன்படும்,

காலம் காலமாக எம் அறிவுஜீவிகளின் புலமையெல்லாம் சொந்த வீட்டுக்குள் பீலா காட்டவே பெரும்பாலும் உதவியது அதனால் வீட்டை சுற்றி பாம்பு புற்றுகள் தோன்றுவதையிட்டு கவலை பட்டதேயில்லை.

இப்போ எல்லாமே போச்சு .

இப்போது கொஞ்சமாவது மிஞ்சியிருக்கும் தமிழர் பாரம்பரிய நிலமென்பதை வீடியோ எடுத்து வைப்பது நல்லது  ஒருகாலம் எமக்கென்று தனி மாவட்டம் மாகாணம் இருந்ததென எதிர்கால சந்ததிக்கு காட்டி பெருமூச்சுவிட அது உதவும்.

அப்போதும் அறிவுஜீவிகள் பிழைத்துக்கொள்வார்கள், சிங்களவனுக்கு கீழிருந்து சேவகம் செய்து மூன்றாம் நிலை அதிகாரத்திலிருந்தாவது தமது எகத்தாளத்தை சொந்த இனத்தின்மீது காண்பிக்கும் தொழிலுக்கு நகர்வார்கள், அவர்களுக்கு சிங்களவனுக்கு அடிமையாயிருப்பதைவிட சக தமிழனை அடிமையாக்குவதே பெருமையாய் பெரும் தகுதியாய்  கருதி வாழ்பவர்கள்.

ஆனால் ஒன்று இலங்கைக்குள் சுற்றி சுற்றி வண்டியோட்டும்வரை மட்டுமே அறிவுஜீவிகளின் ஆட்டமெல்லாம், இலங்கையின் எல்லையை கடந்துவிட்டால் பிறர்மேல் ஆதிக்கம் செலுத்த அவர்களின் மேதாவிதனம் கை கொடுப்பதில்லை,

இன்னும் சொல்லபோனால் அந்தகால அறிவுஜீவகள் பலர் புலம்பெயர் நாடுகளில் ஊரில் பத்தாம் வகுப்புகூட பாஸ் பண்ணாமல் வெளிநாடு வந்து சுய முயற்சியில் முன்னேறியவர்களின் கீழ் வாட்ச்மேன் ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம், அந்த பழைய கறையை உருவாக்கியது அவர்கள்தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

 

இன்னும் சொல்லபோனால் அந்தகால அறிவுஜீவகள் பலர் புலம்பெயர் நாடுகளில் ஊரில் பத்தாம் வகுப்புகூட பாஸ் பண்ணாமல் வெளிநாடு வந்து சுய முயற்சியில் முன்னேறியவர்களின் கீழ் வாட்ச்மேன் ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம், அந்த பழைய கறையை உருவாக்கியது அவர்கள்தானே .

இதை இங்கே  லாப்பலில் பல  கடைகளில்  முக்கியமாக உணவகங்களில்  காணலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம்,

நானும் இதை கண்டுள்ளேன்.

மேலே ஞானதாஸ் சொன்ன இந்த புத்தி தனியே படித்தவருக்கு மட்டும் உரியதல்ல என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

வாய்ப்பு கிடைக்கும் போது யாழ்பாணம் அதன் தலையை தூக்கவே செய்யும்.

இந்த புத்தியை காட்ட ஊரில் படித்தவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புலம் பெயர் நாட்டில் படிக்காதவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவ்வளவுதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

நானும் கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் வாசிக்கப் போறன்.

இன்னும் கொஞ்ச நாளில் நானும் அப்பிடி இப்பிடி கதைப்பேன்
கண்டு கொள்ளக் கூடாது.

1 hour ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

 

10 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

 

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

 

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

அடி  வாங்கியதால தான்  இங்க  பலருக்கு புலிக்காய்ச்சல் என்பதை  தானே  சொல்கிறீர்கள் அண்ணை??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

நானும் வரலாமா உங்க சங்கத்திலை சேர ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சமூகவலை ஊடகம், இணையம் எல்லாம் வந்த பின்னர் எல்லோரும் அறிவுஜீவிகள்தானே.😁 புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

ஆனால் ஆசான் சொன்னதுமாதிரி பரோட்டா மாஸ்டர் மாதிரி ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிலர்தான் மாஸ்டர். எல்லாரும் அப்படி ஆக முடியாது மக்கா!

இப்ப பரோபகாரம் என்றால் @விசுகு ஐயா மாஸ்டர். ஆசாரவாதம் என்றால் @குமாரசாமி ஐயா மாஸ்டர். சட்டநுணுக்கம் என்றால் @goshan_che மாஸ்டர். ருசிகரமாக ரப்லொயிட் செய்தி எழுதுவது என்றால் @Nathamuni மாஸ்டர்! இப்படி பல மாஸ்டர்கள் யாழில் இருந்தார்கள், இருக்கின்றார்கள், இருப்பார்கள்😃

ஆசான் இப்படியும் சொல்லியிருக்கின்றார், மக்காள்!

ஒருவரை அவர் தன் துறையில் மாஸ்டர் என்று உணரும்போது உங்களுக்குள் தோன்றுவதென்ன என்று பாருங்கள். எரிச்சல், சிறுமைப்படுத்தவேண்டும் என்ற உந்துதல், உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுதல் என்றால் நீங்கள் சாமானியர். 

நீங்கள் உங்கள் சிலலறைகளுடன் புழங்கும் உலகில் அவர் இல்லை, அவர் உங்களை பார்க்கப்போவதே இல்லை. அது உங்கள் சொந்த நரகம். நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, முழுமையாக விலகிக்கொண்டு உங்கள் எறும்புலகுக்குள் சென்றுகொள்ளலாம். அங்கே நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

ஒருபோதும் ஒருபோதும் ஒரு மாஸ்டரை அவருடைய ஆணவத்தின்பொருட்டு அல்லது நாகரீகமின்மையின் பொருட்டு விமர்சனம் செய்யாதீர்கள். நாகரீக உலகில் எங்கும் அந்த வழக்கம் கிடையாது- அப்பட்டமான பண்பாட்டுப் பயிற்சியின்மை மட்டும்தான் அது. நாகரீகம் என்பது ஒத்திசைவிலிருந்து உருவாவது. ஒத்திசைவு சமூகமாகச் செயல்படுபவர்களுக்குரியது. எந்த மாஸ்டரும் தனிப்பறவைதான். பெரும்பாலானவர்கள் அத்துமீறுபவர்களும் எரிச்சலூட்டுபவர்களும்தான்.“

 

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.  

5 minutes ago, கிருபன் said:

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

யாழ் களத்தில் படித்தவன், படிக்காதவன், பிராக்கு பார்த்தவன் எல்லாருக்கும் வாயில கவ்வ கொடுத்து அடிச்சு போட்டியள். எல்லாம் புத்தகம் வாசிக்கிற திமிர்.

தலிபான் போல் புத்தகங்களை எரித்தால்தான் உங்களை போல ஆட்களை திருத்த முடியும் 🤣.

அது சரி யாரிந்த ஆசான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

மம்மல் நேரம் சில நடமாட்டங்கள் இருக்கும் என்பார்கள்👻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.

நானும் ஒன்று எடுக்கவேணும் என்று பலநாளா முயற்சிக்கிறன். ஒருத்தரும் ஐடியாவை தருகிறார்கள் இல்லை. டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா மாதிரி இல்லாமல் என்னுடைய பெயரில் குறைஞ்சது 4 peer reviewed papers உடன் ஒரு thesis உம் வேணும். டீல் இருந்தால் சொல்லுங்கள். 😀

 

10 minutes ago, goshan_che said:

அது சரி யாரிந்த ஆசான்?

என்னது! என்னுடைய ஆசானைத் தெரியாதா கோஷான்? நுணுக்கமான விவரம் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவராயிற்றே நீங்கள்! அதற்கு களங்கம் வராமல் இருக்கவேண்டும். எப்போதும் கிரீடம் முக்கியம்😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.