Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

எல்லா(hello)...

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவல்துறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுகிறேன்.

சரி இவ்வாவணத்தை அவர்களின் சீருடையில் இருந்து ஒவ்வொன்றாகத் தொடங்குவோம்…..

 


  • சீருடை (Uniform):-

தமிழீழக் காவல்துறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே உடுத்தியிருந்தனர்.

ஆண்:-

  • முழுக் காற்சட்டை (full pant)- கடுநீலம்
  • முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம்

பெண்:-

  • முழுக் காற்சட்டை - கடுநீலம்
  • முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம்

→ தமிழீழக் காவல்துறையில் யார் முழுக்கைச் சட்டை அணிவார்கள்? யார் அரைக்கைச் சட்டை அணிவார்கள்? என்று எனக்குத் தெரியாது. ←

→ ஆண்களும் பெண்களும் மேற்சட்டையில் மூன்று தெறிகள்(button) மட்டுமே வெளியில் தெரியுமாறு மேற்சட்டை அணிந்திருந்தனர்.

→ பெண்களினது மேற்சட்டையில் 4 பக்குகள்(pocket) இருந்தன;  ஆண்களினது மேற்சட்டையில் 2 பக்குகள் இருந்தன. அவற்றின் நடுவிலே பூட்டுவதற்கு ஒரு தெறி(button) இருந்தது.

->ஆண்களினது  முழுக் காற்சட்டையின் பின்பக்கத்தின் பிட்டத்தில் இரு பக்குகள் இருந்தன. அவற்றினைப் பூட்டுவதற்கு பக்கின் மூடியின் கீழ் இரு மூலையிலும் தலா ஒரு தெறி இருந்தது.

Untitled.png

 

இவ்விடத்தில் இன்னுமொரு விடையத்தைக் குறிப்பிட விடுர்ம்புகிறேன். அனைத்துக் காவலரும் விசிலினை வைத்திருந்தனர். அதை திரிக்கப்பட்ட கயிற்றில் கட்டி அதை தமது வலது கை தோள்மூட்டில் சுற்றிக் கொளுவியிருந்தனர் (ஏனைய தெற்காசிய நாட்டுக் காவல்துறையினர் போன்று). அக்கயிறு கடுநீல நிறத்தில் (நீளக் காற்சட்டையின் நிறம்) இருந்தது. வெண்கலத்தால் ஆனது விசில்.

 


தமிழீழக் காவல்துறையின் ஆண் & பெண் காவலர்கள் அனைவரும் 1996 வரை இருவேறு விதமான தொப்பிகளை(cap) அணிந்திருந்தார்கள். அவை ஆவன

  • ஒரு பக்கக் தொப்பி(one side cap) - பெண்கள்

ஆனால் அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள்(higher officers) யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர்.

முழுக்கை:-

main-qimg-d146524746b6ebeaf7c6656e57735c6a.png

'யாழில் படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்'

அரைக்கை:-

main-qimg-f4629b8c57707eb394228b7f04803d53.png

'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் | வலது பக்க ஓரத்தில் நன்கு உத்துப் பாருங்கள், அரைக்கைச் சட்டையும் குணகு மகுடக்கவியும் அணிந்த இரண்டு ஆண் காவலர்களும் தெரிகின்றனர்'

main-qimg-f95f1e3a78346583b36b70f284e2e2ea.png

இதன் பக்கவாட்டு நடுப்பகுதி சரியரைவாசியாக பிரிக்கப்பட்டு அதில் ஓர் வில்லை(badge) தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும்.

  • குணகு மகுடக்கவி(Slouch hat) - ஆண்கள்

ஆனால், அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள் யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். ஆனால், அக்காலத்தில் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறம் கறுப்பு ஆகும்.

முழுக்கை:-

main-qimg-597700bd1d7aa3ac41992da5005d7e9a.png

'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள ஆண் காவலர்'

அரைக்கை:-

main-qimg-b1081a487d660d646d4153024bde9b36.jpg

'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள ஆண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன், படைத்துறை கட்டளையாளர்களான அதியரையர்(Brig) ஜெயம்(வ) & அதியரையர்(Brig.) சொர்ணம்(இ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(ஈ)* '

*ஈ- ஈற்று

இக்குணகு மகுடக்கவியின் சுண்டிற்கு(bill) அண்டவாக ஓர் வில்லை தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும்.

 


  • கடுநீல சுற்றுக்காவல் தொப்பி(patrol cap)

96 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் ஆண்காவலரும் பெண்காவலரும் சுற்றுக்காவல் தொப்பிகளையே அணிந்திருந்தார்கள். இவை புலிகளிற்கே உரித்தான தொப்பிகளாகும்(caps)

முன் பக்கப் பார்வை:

main-qimg-562a63f03096648ffd76eb883da16189.png

பக்கவாட்டுப் பார்வை

main-qimg-f27ba652d22e383b6148c04465936a86.png

'படத்தில் கொஞ்சம் நிறம் மாறியுள்ளது, தவறாக நினைக்க வேண்டாம். நல்ல படம் கிடைக்கவில்லை'

இந்த தொப்பியின் பக்கவாடுகளில் இரு கண்ணிகள் (eyelets) இருக்கும். இவர்களுடைய தொப்பியின் [வரைகவி(Barret) நீங்கலாக] சுண்டிற்கு(bill) நெருக்கமான மேற்புறத்தில் வில்லை ஒன்று சுற்றிவரக் தைக்கப்பட்டிருக்கும். அது மூன்று பகுதியாக்கப்பட்டு மேலும் கீழும் சிவப்பாகவும் நடுவில் ஒக்க வெளிறிய மஞ்சளாகவும் இருந்தது. இந்நிறங்கள் குறித்து நிற்கும் பொருள் பற்றி நான் அறியேன்(unknown). இவை சில வேளை ஈழத்தமிழரின் மஞ்சள் சிவப்பு நிறங்களை குறித்தனவாக இருக்கலாம் என்பது என் துணிபு.

இதை தொப்பியின் இரு பக்கவாட்டிலும் இருந்து தொடங்கி பிற்பகுதி முழுதும் மூடிமறைக்கும் விதமாக, தேவைப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் இருந்து மேனோக்கி தொப்பியில் 33% கொள்ளும் வகையில் ஓர் துணியானது தைக்கப்பட்டு அது மேன்னோக்கி மடிக்கப்பட்டு தொப்பியூசி(அதான் தொப்பி ஊசி) கொண்டு இருபக்கத்திலும் குத்தப்பட்டிருக்கும். குத்தப்பட்ட இடம் சொண்டு(bill) தொடங்கும் இடமாகும்.

இதன் சொண்டானது புலிகளின் படைத்துறை சுற்றுக்கவல் தொப்பி(military patrol cap) போல நன்கு தட்டையாகவும் உலகளாவிய சுற்றுக்கவல் தொப்பி போன்றல்லாமல் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. இதன் பலகம்(panel) மிகவும் விறைத்தது(stiff) ஆகும்.

 


  • கடுநீல வரைகவி(beret)

இவ்வகைத் தொப்பியானது கொலுவிருத்தங்களின் போது மட்டும் அணியப்படுவதாகும். இதை காவல்துறை இசைக்குழுவினரும் அணிவர்.

இவ் வரைகவியில் வில்லையில்லை. வில்லையானது இடது நெற்றிற்கு மேல் இருந்தது.

main-qimg-2c1bf916be98ff6c40146799062e6ba8.png

'கிளி. காவல்துறை நடுவப்பணியகத் திறப்பு விழாவில் கடுநீல 'வரைகவி ' அணிந்து T-56 கொண்டு சீராக நிற்கும் காவலர்'

 

police_2.jpg

'7- 9- 2003 அன்று தமிழீழக் காவல் துறை நடுவப்பணியக திறப்பு விழாவின் போது காவல்துறை இசுக்குழுவினரும் இவ்வரைகவியை தலையில் அணிந்திருப்பதைக் காணலாம்'

 


  • வில்லை - Badge

main-qimg-459fbee81ef1b3bd3f8253b7da3ce7da.png

பொதுவாக அனைத்துக் தொப்பிகளின் முன்பக்கத்திலும் இந்தப் வில்லையின் மையத்தின் மேற்பகுதியில் கொஞ்சமாக தொடும்படியாக காவல்துறை வில்லையினைக் (badge) குத்தியிருப்பார்கள். அது வெள்ளியால் ஆனது ஆகும்.

 


  • தலைச்சீரா - Helmet

போக்குவரத்துக் காவலர்கள் இரு விதமான தலைச்சீராவினை அணிந்திருந்தனர்.

விதம் - 1

தமிழீழ காவல்துறை வீதி போக்குவரவுக் காவலர் - Tamileelam Traffic Policeman directs the traffic during the Black Tigers day on 2004 while the students of Kili. Central College passes.jpg

 

\Tamil Eelam Traffic Police officer riding in a Cycle.jpg

 

விதம் - 2

இந்த வித தலைச்சீராவில் இரு வெவ்வேறு தோற்றமுடைய இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 

1) இந்த தலைச்சீராவின் முன்பகுதியில் 'Police' என்று ஆங்கிலத்தில் கடுநீல நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்கு மேலே, இதன் தலை முன்பகுதியில் சிவப்பு நிறத்திலான வட்டத்திற்குள் முக்கோணம் இருப்பது போன்ற தோற்றத்திலான ஒரு இலச்சினை உள்ளது. அது குறித்துநிற்கும் பொருள் அறியில்லை.

FGgzF3nXIAchxdA.jpg

'இப்படிமத்தில் நீங்கள் காணும் காவலரின் இடுப்புப்பட்டி போன்றே அனைத்துக் காவலரும் கடுநீல நிற இடுப்புப்பட்டி (அண்ணும் பெண்ணும்) அணிந்திருந்தனர்.'

 

2) இத தலைச்சீராவின் நெற்றிப்பக்கத்தில் கிடைமட்டமான நீளவட்டத்தினுள் மூன்று சுருக்க ஆங்கில எழுத்துக்கள் (U.P.Co) - உபாலி பெரேரா கொம்பனி - எழுதப்பட்டுள்ளது. 

 

Tamil Eelam Police.jpg

 

ஆங்கில எழுத்துக்களுடனான வேறு சில காவலர்கள் அணிந்துள்ள தலைச்சீராவில், இந்த ஆங்கில எழுத்துக்களுக்குக்(U.P.Co) கீழே 'Police' என்று கடுநீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.

16807597_698347816993196_2891535973227830621_n.jpg

 


  • அலகு வில்லை - Unit Badge

இருபாலரும் இருபுயத்திலும் அணிந்திருந்தனர்.

main-qimg-658d3365dd836a3e9be0cc8d3d876530.jpg

 


  • எண் தகடு

 

main-qimg-b591d0dde37772acf50c5d96126313d1.png

இதை,

→பெண்கள் தங்களின் இடது & வலது தோள்மூட்டில் உள்ள தோள் மணையில் இதைக் குத்தியிருப்பர்.

→ஆண்கள் வலது மார்பில் பக்கிற்கு(pocket) மேலே குத்தியிருப்பர். ஆண்கள் பெண்களைப் போலல்லாமல் வெறும் எண்களை மட்டுமே குத்தியிருந்தனர்.

main-qimg-5a2f99aacc8237ae18358862054ccbf6.jpg

'பெண்கள் குத்துவது'

 


  • பதவிக்குறி - Chevrons

பதவிக்குறிகளை தமது இடது கையில் குத்திய காவலர்கள் இருக்கும் இரண்டு படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சிலர் இரண்டு பதவிக்கோடுகளையும் வேறுசிலர் மூன்று பதவிக்கோடுகளையும் குத்தியிருந்ததை காணக்கூடியவாறு உள்ளது. அவை இடது கையில் புயவில்லைக்கு கீழே கீழ்நோக்கி பார்த்தப்படியாக குத்தப்பட்டிருந்தன. அவ்வாறு குத்தப்பட்டிருந்த வில்லைகள் பால் வான்னீல நிறத்தில் இருந்தன. இவற்றை குத்திய காவலர்களின் படங்கள் வேறு கிடைக்காமையால் இது பற்றிய வேறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

Tamileelam Police Chevrons.jpg

 


  • காவல்துறை சீக்காயி - Police whistle

இருபாலரும் இடது பக்கத் தோளில் காவல்துறைக்கே உரித்தான கயிறுமூலம் அதை கட்டி இடது பக்க பக்கிற்குள்(pocket) வைத்திருப்பர்.

main-qimg-b591d0dde37772acf50c5d96126313d1.png

 


  • தோள் மணை - Shoulder board
    • பெண் அலுவலர்கள் தோளில் கடுநீல நிற தோள் மணை அணிந்திருப்பர்.
    • ஆண் அலுவலர்கள் ஏதும் அணியார்
    • மேல் அலுவலர்களில்(Superior officers) இருபாலரும் தோள் மணை அணியார். ஆனால் தோள் மணை இருக்கும் இடத்தில் உள்ள துண்டத்தின்(piece of cloth) மேல் ஒன்று, இரண்டு, மூன்று என்று பதவிக்கேற்ப அறுமுக தாரகைகள் குத்தியிருந்தனர். அத்தாரகையின் நடுவே தட்டையான கூம்பு ஒன்று இருந்தது.

main-qimg-334de956f4db534c691b788b6c51eef8.jpg

 

Tamil Eelam Police officers handshaking

'இம் மேல் அலுவலர்களின் தோள் துண்டத்தின் மேல் அறுமுக தாரகைகள் இருப்பதை கவனி. ஒவ்வொருவரின் தோளிலும் அவரவர் பதவிக்கேற்ப அறுமுக தாரகைகளின் எண்ணிக்கை கூடிக்குறைந்திருப்பதை நோக்குக.'

 


  • கைத்துப்பு தடறு - Pistol Holster

இதை உயர் & மேல் அலுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். இதை இவர்கள் இடுப்பில் கட்டுவார்கள். இதற்காக ஒரு வார் ஒன்றினை வலது பக்கத் தோளின் துண்டத்தில் இருந்து நெஞ்சிற்குக் குறுக்காக கைச்சுடுகலனின் பிடங்கோடு இணைத்திருப்பர்.


 

  • இடைவார் - Belt

96 வரை:

ஆண்கள் - கறுப்பு நிறம்

இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தன. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. இது புலிகளின் பாணி!

main-qimg-b1081a487d660d646d4153024bde9b36

பெண்கள் - வெள்ளை நிறம்

ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள் இருந்தன.

main-qimg-c189431bd31bb06553972b0a2abd0bc9.jpg

'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன்(இ), படைத்துறை கட்டளையாளரான(Military Commander) சொர்ணம் (வ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(பி) '

 

96 இல் இருந்து:

ஆண்கள் - கடுநீல நிறம்

இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர் இருந்தது. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது.

main-qimg-47120e822b922de63b9f6141a63f4676 (1).jpg

'போக்குவரத்துக் காவலர் கதுவீ சுடுகலன் (RADAR Gun) கொண்டு வேகத்தை அளவிடும் காட்சி | '

பெண்கள் - வெள்ளை நிறம் & கடுநீல நிறம்

→அலுவலர் - வெள்ளை நிறம்

→உயர் அலுவலர்(Higher officers) - கடுநீல நிறம்

ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தது.

main-qimg-8f4311cbb5c9e3d412c66dbaf287b051.jpg

'பணிக்குச் செல்ல முன் உறுதியேற்கும் பெண் காவலர். இது தமிழீழ காவல்துறை வழக்கம்'

 


  • உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - HIgh Visibility safety vest

இது செம்மஞ்சள் நிறத்தில் வீதி போகுவரத்துக் காவலர்களால் அணியப்பட்டது.

main-qimg-8618eda75756cd9aeae9cf8731f233ec.jpg

 


  • சப்பாத்து(Shoe):

படைத்துறையினைச் சார்ந்தவர்கள் அணியும் சண்டைச் சப்பாத்திற்கு(combat shoe) மாற்றாக சாதாரண சப்பாத்தினை அணிந்திருந்தார்கள்.


 

  • பெண்கைளின் தலைமயிர்:

இவர்கள் புலிகளின் படைத்துறையில் இருந்த பெண்களைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரை வேறுபட்ட விதத்தில் இதோ இப்படித் தூக்கிக் கட்டியிருந்தனர்:

main-qimg-a24f0cd9379be5fb728a135394af9fdd.jpg


  • ஆண்களின் தலைமயிர்:

இவர்களும் புலிகளுக்கே உரித்தான விதத்தில் படைத்துறையில் பணியாற்ற்றும் ஆண்களைப் போலவே மயிர் வெட்டியிருந்தனர்.

 


  • உந்துருளி - Motor bike

இவர்கள் வெள்ளை நிற 'கீரோ கொண்டா பாசன்(Hero Honda passion)' உந்துருளியினைப் பயன்படுத்தினர்.

main-qimg-f36cd67ecbb575a3245d8a8051c9361e.jpg

அவற்றில் காற்றுத்தட்டியும் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-f6da3770f9828356fe53d4420b45b445.jpg

'முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2006'

tamil eelam police 3.jpg

''முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2002''

main-qimg-dcc57ea9d544d00f0e89d3a00302d756.jpg

'தமிழீழக் காவல்துறை உந்துருளியின் பக்கவாட்டுப் பார்வை | பின் இருக்கைக்கு கீழே ''Police" என நீல நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்குக'

 


  • ஊர்திகள்:

அவை பிக்அப், பஜரோ, கண்டர் என்று பற்பல விதமானவை. இவற்றின் நிறங்கள் வெள்ளை அல்லது கடு நீலத்தில் இருந்தன.

main-qimg-a9fccf0e23387bb0b2555d094f453923.jpg

pol3.png

 

nbiuuy5r.jpg

 


  • போக்குவரத்துக் காவலரின் கைமேசு(Gloves of the TE Traffic Police):-

வெள்ளை நிறத்தில் இருந்தது.அதன் உள்ளங்கைப் பகுடியில் ஒரு சிவப்பு நிறத்திலான வட்டம் இருந்தது. புறங்கையில் சத்தாருக்கு இரு பட்டை போன்ற கோடுகள் இருந்தன.

main-qimg-1505d159b0106429589cb17806a3aa24.png

 

  • கைச்சுடுகலன் (Pistol)

உயர் அலுவலர்கள் அனைவரும் கைச்சுடுகலனை வைத்திருந்தனர்.

வலது கை தோள்மூட்டு தோள்மணையோடு ஒரு இறப்பர் நாடா மூலம் அது பிணைக்கப்பட்டிருந்தது, யாரும் பறித்திடா வண்ணம் பாதுகாக்க. கைச்சுடுகலனை தடறினுள் இட்டு இடது பக்க இடுப்பில் இடுப்புப்பட்டி கொண்டு கட்டியிருந்தனர்.

madhu_murder_2_280702.jpg

'இக்காவல் அதிகாரி வைத்திருப்பதைக் காண்க'

 


  • அணிநடையின்போது (During Marchpast)

main-qimg-1e3a5c730f8139be34f06e8adcfa2087.png

 


  • காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (Police Special Commando)

இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான உடையினை அணிந்திருந்தனர்

main-qimg-8c8a43878680981c65504d7d98c73987.jpg

'படிமப்புரவு: வேசுபுக்கு'

main-qimg-5f225fc371fb56c215c7e3f203beca2d.png

'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை'

main-qimg-a0762eec006a0908f05c7b8e47cc5d5d.png

'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை'

 


  • காவல்துறை படையணி

இப்படையணி 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இதில் பணியாற்றியுள்ளனர்.  இவர்கள் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் என்னிடம் இல்லை.

இவர்கள் தமது பயிற்சித் தொடக்கத்தின் போது ஒரு விதமான கடுஞ்சாம்பல் & பச்சை ஆகிய இரு நிறங்களிலான சீருடை அணிந்திருந்தனர். அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். சுற்றுக்காவல் தொப்பியில் ஏதோ ஒருவிதமான சதுர அவ்டிவ வில்லையினைப் பொறித்துள்ளனர், ஆனால் அதில் உள்ள சின்னத்தை என்னால் தெளிவாகக் காண இயலவில்லை.

  • பச்சை - ????????
  • கடுஞ்சாம்பல் போன்ற நிறம் - ?????????????

large.TEP_18_03_06_04.jpg.33c4bdc55d2b473978f50a7c2b3d24d0.jpg

'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.'

main-qimg-d2dcf12bbc075b1cc72386ec4d6b04a2.png

'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.'

ஆனால் நான்காம் ஈழப்போரின் போது (பயிற்சி முடிந்து பணியின் போது) இவர்கள் கடும்பச்சை நிறத்திலான படையணிச் சீருடை ஒன்றை அணிந்திருந்தனர். அதைக் கீழ்க்காணும் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமத்தில் நீங்கள் காணலாம். இவர்களின் தொப்பியாக புலிகளின்ச் எந்தரப்படுத்தப்பட்ட தொப்பியே பாவிக்கப்பட்டுள்ளது.

lt. col. arjunan.jpg

வலது பக்கத்தில் நீட்டுவரிக்காரர் இருவருக்கு நடுவில் நிற்கும் தமிழீழ காவல்துறை படையணிப் போராளியை காணுங்கள் (நான் அவருடைய தொப்பியில் உள்ள வில்லையையும் (badge) அவர் அணிந்துள்ள சீருடையையும் வைத்தே இன்னாரென கண்டுபிடித்தேன்).

 


 

உசாத்துணை:

  • படங்களை வைத்து சொந்தமாக எழுதியது. அவற்றில் காவல்துறை சிறப்புப்படைக்கான ஆதாரமாக இந்த ஒரு படத்தினை தருகிறேன்: https://www.sundaytimes.lk/020609/columns/sitrep1.html
  • செ.சொ.பே.மு.

படிமப்புரவு

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காவல்துறை படிமங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

இண்டைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னால், எமது காவல்துறை பற்றி புலம்பெயர்ந்துள்ள தமிழீழக் குடிமக்களாக உள்ள சில யாழ்கள உறவுகள் நடத்திய புடுங்குப்பாடுகள். ஒரே வெடியாத்தான் கிடக்குது...😆

அந்த பக்கம் 4, 5 ஒரே பகிடிதான்...

//எங்கட காவல்துறை...//😍
//அடுத்தவன் காவல்துறையை விட்டுட்டு எங்கட காவல்துறையைப் பாருங்கோ...//😍

 

 

Edited by நன்னிச் சோழன்
கடைசி சொற்றொடர் நீக்கியுள்ளேன், பிழையான தகவல் காரணமாக
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ காவல்துறையினரின் சீருடைகள் மற்றும் அணிகலங்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

காவல்துறையின் கைச்சுடுகலன், காவல்துறை படையணி ஆகியவற்றின் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.