Jump to content

கொரோனாவின் 'லேம்டா' திரிபு: இந்தியாவுக்கு ஆபத்தா? - உண்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின் 'லேம்டா' திரிபு: இந்தியாவுக்கு ஆபத்தா? - உண்மை என்ன?

  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் இந்தியாவிலும் தொற்றுகள் பரவியிருக்கும் நிலையில் அச்சுறுத்தும் வகையில் லேம்டா என்ற மற்றொரு திரிபின் பெயர் அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகிறது.

இது ஆபத்தானதா, வேகமாகப் பரவக்கூடியதா, இறப்பு விகிதம் எப்படியிருக்கும், எங்கெல்லாம் பரவியிருக்கிறது, இந்தியா அஞ்ச வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

லேம்டா திரிபு "கவனிக்கப்பட வேண்டிய திரிபு" (Variant of Interest) என உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. அந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் நான்கு திரிபுகளில் ஒன்று இது. அதாவது இதன் பரவலைக் கண்காணிக்க வேண்டும் என்று பொருள்.

உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை, கவலைக்குரிய திரிபுகள், கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகள் என இரண்டு வகையாகக் கொரோனா திரிபுகள் பட்டியலிடப்படுகின்றன.

 

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய நான்கு திரிபுகள் இதுவரை கவலைக்குரிய கொரோனா திரிபுகள் (Variant of Concern) பட்டியலில் உலக சுகாதார அமைப்பு வைத்திருக்கிறது. லேம்டா திரிபு இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. மாறாக தொடர்ந்து கண்காணிகப்பட வேண்டிய திரிபுகளின் பட்டியலில் அது வைக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் உச்சரிப்பதற்கு வசதியாகவும், நினைவு கொள்ளத் தக்க வகையிலும் கொரோனாவின் திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களில் பெயரிடுவதை உலக சுகாதார அமைப்பு தற்போது கடைப்பிடித்து வருகிறது. கவலைக்குரிய திரிபுகள், கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகள் ஆகியவற்றின் பட்டியல்களையும் அவ்வப்போது புதுப்பித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி லேம்டா திரிபு இதுவரை 29 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா, டெல்டா பிளஸ் திரிபுகளை விட மிகவும் வேகமாகப் பரவக் கூடியது, தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாதது என்ற கருத்து உருவாகி இருக்கிறது.

"ஆனால் இதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள் ஏதுமில்லை. ஏனென்றால் இதுவரை இதுபற்றிய தரவுகள் மிகவும் குறைவாகவே சேகரிக்கப்பட்டுள்ளன" என்கிறார் இந்திய விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்.

கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் வகை இது. குறிப்பாக பெரு போன்ற நாடுகளில் வைரஸ் பரவலுக்கு இது காரணமாக இருக்கிறது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்தத் திரிபு பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்தியாவில் இதுவரை லேம்டா திரிபு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை தரப்பில் தகவல் இல்லை.

லேம்டா திரிபு புதிதாகக் கண்டறியப்பட்டதா?

லேம்டா திரிபானது இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டதல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இப்படியொரு வைரஸ் திரிபு பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். டிசம்பர் மாதத்தில் இருந்து இதன் முதற்கட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தென்னமெரிக்காவின் பெரு நாட்டின் லிமா நகரில் இது உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாத புள்ளி விவரங்களின்படி அங்கு 97 சதவிகித கொரோனா தொற்று இந்த வைராஸால் ஏற்பட்டிருக்கிறது. அண்டை நாடுகளான சிலி, ஈகுவடார், அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் இத்திரிபின் பரவல் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்கிறார் டி.வி. வெங்கடேஸ்வரன்.

உலகின் பல பகுதிகளில் லேம்டா திரிபு பரவியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. எனினும் தென் அமெரிக்காவைத் தவிர பிற பகுதிகளில் இது பரவியிருக்கும் அளவு மிகவும் குறைவுதான்.

லேம்டா திரிபின் முக்கியத்துவம்

"லேம்டா திரிபானது வூகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புரத நீட்சியில் 14 மாற்றங்களுக்கு உள்பட்டது" எனக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.

"C.37 என முன்னர் அழைக்கப்பட்டு வந்த லேம்டா திரிபுக்கு, வீரியமாகப் பரவுவது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதது போன்ற தன்மைகள் இதற்கு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்தத் தன்மைகளைக் குறித்து ஆய்வு செய்வதற்காகத்தான் இதனை கண்காணிக்க வேண்டிய திரிபுகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு வைத்திருக்கிறது"

பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட காமா திரிபுகளைவிட லேம்டா திரிபு வேகமாகப் பரவும் என சிலியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

சீனாவின் சினோவேக் தடுப்பூசியின் செயல்திறனைக் குறைப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆனாலும் லேம்டா திரிபின் தன்மை குறித்த முழுமையான முடிவுகள் இன்னும் வரவில்லை.

"பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பானது அதிகமாக இருந்தால் அங்கு கொரோனா திரிபுகளும் அதிகமாக உருவாகின்றன. அவற்றில் சில கவலைக்குரிய திரிபுகளாக வகைப்படுத்தப்படுகின்றன" என்கிறார் வெங்கடேஸ்வரன்

கொரோனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய திரிபுகள் கண்டறியப்படுவது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"புதிய திரிபுகள் அதிகரிப்பதால் தடுப்பூசிகளின் திறன் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல கொரோனாவுக்காக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் சில திரிபுகள் தென்படாமல் போவதும் உண்டு. அதற்காகவே புதிய திரிபுகள் பற்றிய விவரங்கள் கிடைத்ததும் பரிசோதனைகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. புதிய திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கெனவே பரவிய சில திரிபுகள் நாளடைவில் இல்லாமலேயே போய்விடுகின்றன" என்கிறார் வெங்கடேஸ்வரன்.

லேம்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாறுபட்ட புதிய அதிகுறிகள் ஏதுமிருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அதேபோல் தடுப்பூசிகளின் திறன் லேம்டாவுக்கு எதிராகப் போதுமான அளவுக்கு இருக்கும் என்றே இதுவரையிலான தரவுகள் கூறுகின்றன.

லேம்டா தவிர, ஈட்டா, அயோட்டா, காப்பா, ஆகிய திரிபுகளும் கண்காணிக்கப்படும் கொரோனா திரிபுகளின் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் காப்பா திரிபு இந்தியாவில்தான் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/science-57778646

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.