Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை
சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ
குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம்

கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ
நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள்
நெஞ்சுகளில் இளம் பூவீரரே! 
"

-->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து

 

 

201628_104201269664010_929184_o.jpg

 

 

ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.}

 

துயிலுமில்லங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், அவற்றைப் பற்றி நானொரு ஆவணம் எழுதியுள்ளேன், வாசித்துப்பாருங்கள்:-

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 201
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல உறுதிமொழி & பாடல்

 

 

  • எழுதியவர்: தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை
  • இசையமைப்பாளர்: திரு. "இசைவாணர்" கண்ணன்
  • பாடியவர்: அமரர் வர்ண இராமேஸ்வரன்
    • பின்னணிப் பாடகர்கள்: மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி, அபிராமி.
  • பாடப்பட்ட ஆண்டு: 1991
  • முதன் முதலில் ஒலிக்கவிடப்பட்ட இடம்: கோப்பாய் மா.து.இ. (1991)

prabakaran-flag.jpg

 

maaveerar-day-song-1.jpg

 

maaveerar-day-song-2.jpg

 

maaveerar-day-song-3.jpg

 

 

மாலை,

  1. 5:00 மணி சொச்சத்திலிருந்து 6:04:59 மணிக்கு முன்பாக - தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை முடிவடையும்
  2. 6:05 மணி - நினைவொலி எழுப்புதல்
  3. 6:06 மணி - அகவணக்கம்
  4. 6:07 மணி - பொதுச்சுடர் ஏற்றுதல். தொடர்ந்து நினைவுச்சுடர் & ஈகைச்சுடர் ஏற்றுதல், சம நேரத்தில் உறுதிமொழியும், அதனைத் தொடர்ந்து மாவீரர் நாள் பாடலும் ஒலிக்கத்தொடங்கும்

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ் ஜி சாந்தன் அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான கோணாவில் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெட்டமைத்துப் பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் பல்லவி வரிகள் பின்வருமாறு,

"வானம் பூமியானது
பூமி வானமானது - இங்கு
புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது!
தேசம் நாசமானது..."

நானறிந்த மட்டில் மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போரிலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக உள்ளது. 

 

ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற்

 

 

எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இச்சிலையின் பெயர் அறிந்தோர் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை துயிலுமில்லங்களினுள் கண்டிருக்கிறேன்.

 

 

"வாழ்கின்ற காலம்வரை
வாழ்த்துங்கள் வீரர்களை
பிறர்கென உயிர்க்கொடை  
கொடுப்பது தெய்வீகம்!"

 

 

 

2002<

வன்னியில்

 

15056339_336047216752404_7144085985548824788_n.jpg

 

s5467.jpg

 

nkn.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

உறுதியின் உறைவிடம் 

 

 

"தியாக மறவர் கூட்டமிங்கு
தீரமாகப் போர் புரிந்தார்
தீந்தமிழ்த்தாய் நலம் பேணவே!"

 

 

உறுதியின் உறைவிடம் என்ற பெயரினைக் கொண்ட இது மாவீரர் வீரவணக்கச் சின்னமாகும்.

 
 

மாவீரர் வீரவணக்க இலச்சினை.jpg

 

 

 

இதன் சிலை விருத்து:

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

kj.jpg

ufow.png

 

 

 

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

Kanagapuram Martyr's graveyard in Kilinochchi767.jpg

3-2.jpg

2-2.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பொதுத் திருவுருவப்படம்

 

 

"தேசத்தையும் மாந்தரையும்
கண்மணி போல் காத்து வந்தார்
தங்கள் தேகம் பலியாக்கியே!"

 

 

இதைத்தான் அனைத்து மாவீரர்களின் படிமங்களும் வைக்க இயலாத இடத்தில் பொதுவாக சில மாவீரர் படங்களோடு வைத்து வீரவணக்கம் செலுத்துவர். இதனோடு "முதல் மாவீரர்களின் படங்கள்"ஓடு கூடியவரையான மாவீரர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். 

 

 

மாவீரர் இலச்சினை.jpg

 

 

 

 

இதன் சிலை விருத்து (version):

இது மட்டு. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மை சுடர் பீடத்திலிருந்து பார்க்கின் - இரு ஒலிமுகங்களிற்கும் நடுவில், முதன்மைச் சுடர்ப் பீடத்திற்கு அருகில், (45 பாகை கோணத்தில்)/ (V வடிவிலெனில் அதன் கவட்டில்) அமைக்கப்பட்டிருந்தது.

தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் - Tamil Eelam Maaveerar Thuyilumillam (18).jpg

main-qimg-173b832fef090083092491f42ba63616.png

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதல் மாவீரர்
லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை

 

large_Lt.Shankarstomb.jpg.be609cd08dfce2bec202b1867578139c.jpg

 

  

On 11/7/2021 at 15:36, நன்னிச் சோழன் said:

உதயபீடம்

 

13680727_993369757462884_450471314383292983_n.jpg

 

13716226_993369707462889_124436516540602009_n.jpg

'இதுதான் லெப் சங்கர் அண்ணாவின்ர கல்லறை'

 

z3a3.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்ல ஒலிமுகங்கள்

 

 

"மாவீரர் வாழ்ந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கையடா - அவர்

வாழும் சரித்திரத்தில் 
மரணம் கூட மடிந்ததடா"

 

 

இதன் முதன்மை வாயிலிற்குள்ளால்தான் வித்துடல்கள் காவிச் செல்லப்படும்.

 

1991 ஆம் ஆண்டு புதுவை இரத்தினதுரை அவர்களால் தான் "மாவீரர் துயிலும் இல்லம்" என்ற பிடாரச் சொல் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் துயிலும் இல்லம் "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்'' ஆகும்.

 

wer32.jpg

 

large.81688645.jpg.1aac8ddcf9182027a7e57e3399685d43.jpg

 

hb.jpg

 

Scannen0004-Kopie.jpg

 

vanni.jpg

 

bvu8.jpg

'?????? கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

 

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

 

5.jpg

10.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (பழையது)'

 

10710659_1633355693558352_1924458378556678989_n.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (புதியது)'

 

unnamed (7).jpg

'கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

noi.jpg

'மேற்கண்ட கட்டுமான வேலைகள் முடித்த பின் புத்துயிர் பெற்று எழுந்த கோப்பாய் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் '

 

m-thugi-.jpg

'ஈச்சங்குளம்'

 

m20.jpg

'முள்ளியவளை'

 

d65.jpg

'தலைநகர்'

 

k8.jpg

 

81796464.jpg

'தரவை'

 

311021_131032807004768_660096942_n.jpg

'உடும்பன்குளம்'

 

ste 3.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர்

 

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர் துயிலுமில்லத்தினுள்ளிருந்து பொதுமக்கள் வெளியேறும் காட்சி. முதன்மை வாசல் உட்பட மூன்று வாசல்களுக்குள்ளாலும் மக்கள் வெளியேறுகின்றனர். 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (33).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எச்சங்கள் இவ்வாறு கண்ணாடிப் பெட்டியில் இடப்பட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  ஏனைய மாவட்டங்கள் பற்றி நானறியேன்!

 

 

"மாவீரரான செல்வங்களே!
மனிதம் உள்ளவரையில் நின்று வாழ்வீர், தெய்வங்களே!"

 

66.jpg

 

383260_131032053671510_1623085490_n.jpg

 

fu.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதன்மை சுடர்ப் பீடம்

இங்குதான் பொதுச்சுடர் ஏற்றப்படும்

 

 

"ஒளி தீபம்தான் தேசம் போலத் தோணுதே!
தனித் தேசம் காணப் போரிடு என்றே கூறுதே!"

 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (23).jpg

'முதன்மைச் சுடர் கொளுந்துவிட்டு எரிவதைக் காண்க'

 

FLW21.png

 

 

 

iy.png

'???'

 

 

 

கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றும் முதன்மை சுடர்ப் பீடம்:-

main-qimg-35ad24c2575465a524d7c58df35767f7.png

maaveerar thuyilumillam (2).jpg

 

 

 

 

 

maaveerar thuyilumillam (7).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஈகைச்சுடர்கள்


மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும்

 

 

 

"கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் - உங்கள்
கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்"

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

5.jpg

 

1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்லங்களின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பலகை

 

10407341_1783654078526376_3072659698786073242_n.jpg

 

 

11-1.jpg

 

 

maaveerar.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்பு
 

 

"மாவீரர் பெற்றோரே! 
மனம் சோர வேண்டாமே!
தானாக விடிந்திடும் ஈழம்!"

 

மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழையும் போது மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்படும் காட்சி. இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்கு ஆகும்.

இவர்களை வீதியில் மாவீரர் துயிலுமில்லம் தொடங்கும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லத்தின் முற்றம் வரை அணியிசைக் கலைஞர்கள் அழைத்து வருவர். அணியிசைக் கலைஞர்கள் முன் வர அவர்கட்குப் பின்னார் ஒரு கிடைவரிசையில் போராளிகள் (பெரும்பாலும்) அல்லது மாணாக்கர் கைகளைக் கோர்த்தபடி நடந்து வருவர். அவர்கட்குப் பின்னால் மாவீரர் பெற்றார் வருவர். இவ்வாறு இவர்கள் நுழையும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் நின்றிருப்பர். இவ் அணியிசைக் கலைஞர்களாக, நானறிந்த வரை, பாடசாலை மாணவர்களே கடைமையாற்றினர்.

 

பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்லும் அணியிசை வகுப்புகள்:
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (4).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (8).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (37).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (3).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (5).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (15).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (19).jpg

 

அணியிசை வகுப்பிற்குப் பின்னால் செல்லும் மாவீரர் பெற்றார்/உறவினர் (பெற்றார் வரமுடியா இடத்தில்):

நவம்பர் 27 என்றாலே மழை தான்.
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (36).jpg

 

இரு மருங்கிலும் நின்று இவர்களைக் காணும் பொதுமக்கள்:

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (38).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முழுத் திரைப்பிடிப்புப் படிமம்

 

 

2008 இறுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் "விடுதலை வயல்கள்" என்றும் சுட்டப்பட்டன, போரிலக்கியப்பாடலூடாக. படம் எடுக்கப்படும் போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 


"பெற்றவரை மறந்து,
ஒவ்வொரு பொழுதிலும் எம்மை நினைத்து,
சாவினில் வாழ்வளித்து,
சாகும் போதிலும் எம்மை நினைத்து,

வேரோடு பகை வீழ்த்த வீச்சோடு களமாடி வேதனை தீர்த்தவரே!
மண்ணுக்குள் விதையாகி மடிப்பூக்கள் எனவாகி விண்ணுக்குள் சென்றவரே!
கல்லறை மீது துயில்பவரே!"

 

 

  • முழுப் படிமம்:

main-qimg-36560bb4c9da07b630bd1cb7842b84bc.png

 

  • ஒலிமுகமும் சூழலும்:-

main-qimg-27afa0450a7d55f1e2432baae8162fb3.png

 

  • முதன்மைச் சுடர்ப் பீடமும் சூழலும்:

main-qimg-deb00337fc98b1fd9c01364d75eb4b6a.png

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுச்சுடர்

 

வேறொரு மா.து. கல்லறை அமைக்கப்பட்டு அதற்கான நினைவுக்கல் வேறொரு மா.து. நாட்டப்பட்டு இரண்டிற்கும் உறவினர்களால் செல்லமுடியாது இருப்பின், பல்வேறு காரணங்களால், "நினைவுச்சுடர்" என்ற ஒன்று உறவினர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். உரியவர்கள் ஒவ்வொரு தேசிய நாளிலும் வந்து அங்கு விளக்கெரித்துவிட்டுச் செல்வர்.

எனது குடும்பத்தினருக்கான கல்லறை தென்மராட்சியில் இருந்ததால் நாங்கள் கிளிநொச்சி கனகபுரத்தில் இருந்த நினைவுச்சுடரிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று விளக்கெரிப்போம். அது ஒரு தீப்பந்தம் வடிவில் இருந்தது, கீழுள்ளது போன்று. 

இதற்கும் சில பேரால் செல்லமுடியாது இருக்கும். அவ்வாறு உரியவர்கள் வராமால் இருப்பவைக்கு போராளிகள் ஆளிட்டு விளக்கேற்றுவர்.

ஒவ்வொரு தடவையும் மாவீரர் நாளன்று து. செல்லும் போது அம்மா, கூடுதலான பூக்களும் சாம்பிராணிக் குச்சியும் கொண்டு வருவார். எமது பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவையை ஓடியோடி ஒவ்வொரு நினைவுதீபங்களின் அடியிலும் குத்தி எரித்துவிட்டு பூக்களையும் சாற்றிவிட்டு எங்களின் நினைவுச்சுடரிற்குத் திரும்புவேன். இன்றும் இது பசுமையான நினைவாக நெஞ்சில் நிலைத்துள்ளது.

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (31).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (20).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் 

"நினைவுச்சுடர்"

 

 

"காற்றோடு காற்றாகக் கரைந்து போனவர்கள்,
கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள்,
அன்னையைவிட அதிகம் அணைத்தது, உன்னைத் தானே!
கடலலையே! கடலையே!
உரிமையோடு உன்னைக் கேட்கின்றோம் - நீ 
கரையைத் தொடும் போது எம் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு,
'விடுதலையை வென்றெடுங்கள், விடுதலையை வென்றெடுங்கள். அப்பொழுது அவர்கள் வருவார்கள்.' "

--> மேஜர் பாரதி, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர்

இப்பண்பாடானது லெப் கேணல் மறவன் மாஸ்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களால் 2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தமிழீழம் சிறீலங்காப் படைகளால் வன்வளைக்கப்படும்வரை தொடரப்பட்டது.

main-qimg-9eae0ca3107c45c0af261a6fdd69ef92.jpg

 

(Oct 31, 2003 வரை வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்கக்கொடி

 

 

இதுவும் மாவீரர் வாரத்தில் துயிலுமில்லமெங்கும் - மட்டும் - தமிழீழத் தேசியக் கொடியோடு பறந்துகொண்டிருக்கும். 

துயிலுமில்லத்தில் நான்கு விதமான கொடிகள் பறப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

  1. ஒன்று எமது நாட்டின் தேசியக்கொடி. இதன் பெயர் புலிக்கொடி ஆகும்.
  2. இரண்டாவது எமது தேசத்தின் நிறங்களைத் தாங்கிய கொடி. இதன் பெயர் வெற்றிக்கொடி ஆகும். இது நீள்சதுர சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடி. இவற்றின் செந்தர வடிவம் மேலே சிவப்பும் கீழே மஞ்சளும் கொண்ட நீள்சதுர வடிவிலான கொடியேயாகும். ஆனால் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். அவற்றின் பெயர் நானறியேன். இரு முக்கோணங்கள் (/\) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டு பெறப்பட்ட நீள்சதுர வடிவிலான கொடியென, செங்குத்தான (||) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டு பெறப்பட்ட நீள்சதுர வடிவிலான கொடியென, ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடியென இரு வெற்றிக்கொடிகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டது போன்றதென இவை பறக்கவிடப்பட்டன.
  3. மூன்றாவது முக்கோண வடிவிலான சிவப்பு & மஞ்சள் கொடிகள். இதன் பெயர் எழுச்சிக்கொடி ஆகும். 
  4. நான்காவதான உந்த நீள்சதுர வடிவில் இருக்கும் கொடி. இதன் பெயர் வீரவணக்கக்கொடி என்று நினைக்கிறேன். இதன் மூலப் பெயர் எனக்குத் தெரியவில்லை. இது செங்குத்தான நீள்சதுர வடிவில் மஞ்சள் சிவப்பு ஆகிய இரு நிறங்களில் காணப்படும். இதில் வரையப்பட்டுள்ளவை ஆவன:
  • தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் - இது இரு கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • மாவீரர் வீரவணக்கச் சின்னமும் ("உறுதியின் உறைவிடம்") அதன் அடியில், முன்புலத்தில், சிட்டிகளும் - இவை கறுப்பு நிறத்தில் காணப்படும்.

துயிலுமில்ல மஞ்சள் கொடி.jpg

'இது வரலாறு கற்றலிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு ஆகும்'

 

image (20).png

'மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இக்கொடி பறப்பதைக் காண்க'

32119434892_ba1f214986_o.jpg

'புலிக்கொடியோடு அந்த நீள்சதுரக் கொடியும் பறப்பதைக் காண்க'

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 மாவீரர் இறுதி ஊர்வலம்

 

 

மாவீரர் மண்டபத்தில் வீரவணக்கக் கூட்டம் முடிந்த பின்னர் குறித்த போராளியின் சந்தனப்பேழை/ மாவீரர் படமானது மஞ்சள் சிவப்பு நிறத் துணிகளாலும் பிற தமிழீழத் தமிழர் பண்பாட்டுகளோடும் (மலர் மாலைகள், வாழை மரங்கள், எழுச்சிக் கொடி, தேசியக் கொடி) ஒப்பனை செய்யப்பட்ட ஊர்தியில் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச் செல்லப்படும். அப்போது அவ்வூர்திக்கு முன்னால் இம்மாவீரர் பற்றி அறிவித்தப்படி ஒரு முச்சக்கர தானுந்து அல்லது வேறு ஏதெனும் ஒரு ஊர்தியில் சிலர் செல்வர். பின்னால் ஒரு சோகமான இசை ஒலிக்கவிடப்பட்டிருக்கும். சில வேளைகளில் வித்துடல் தாங்கிய ஊர்தியிலேயே ஒலிபெருக்கி பூட்டி அறிவிப்பும் செய்தபடி செல்வர்.

இவ்வித்துடல் தாங்கிய ஊர்தியின் நான் மூலைகளிலும் சில வேளைகளில் இருப்பக்கம் முழுதிலும் துமுக்கிகள் ஏந்திய போராளிகள் அமர்ந்திருப்பர், படைய மரியாதையாக. இவ்வாறான செயலிற்கு ஆண் மாவீரர் எனில் ஆண் போராளிகளும் பெண் மாவீரர் எனில் பெண் போராளிகளுமாக அமர்ந்திருப்பார். 

July 11,2007 Funeral - A 'Viththudal' of a Tiger cadre is being carried to Thuyilumillam according to the tradition of Tamil Tigers.jpg

'சங்கீதன் என்ற இயக்கப்பெயரைக் கொண்ட மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகள் துயிலுமில்லத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. மேலும் இப்படத்தில் இருந்து நாம் அறிவது யாதெனில் சந்தனப் பேழைகளில் மாவீரரின் பெயர் விரிப்புகளும் இடம்பெற்றிருந்தது என்பதாகும். '

 

துயிலுமில்லம் இருக்குமிடத்தை அண்டியதும் போராளிகள் வித்துடல் ஊர்தியின் பின்னால் அணிவகுத்து நடந்து செல்வர். துயிலுமில்லத்தை நெருங்கும் முன்னரே வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்பட்டு வித்துடலை போராளிகள் சுமந்து செல்வர் (சில வேளைகளில் ஒலிமுக வாசலிலேயே வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்படுவதுண்டு). பின்னால் போராளிகள் அணிநடையாகச் செல்வர். இவ்வித்துடலின் முன்னே அணியிசைக் குழுவினர் வாய்த்தியங்கள் இசைத்தபடி அணிநடையில் செல்வர்.

32599520967_6f4bec5732_o.jpg

'கடற்கரும்புலி லெப் கேணல் சஞ்சனா நினைவுருவப்படம் தாங்கிய வித்துடல் ஊர்தி'

 

k8.jpg

''மா. து.இ. ஒன்றின் ஒலிமுக வாசலில் வித்துடல் தாங்கிய ஊர்தி நிறுத்தப்பட்டு அதிலிருந்து வித்துடல் இறக்கப்படப்போவதைக் காணலாம்''

 

 

 

 

=========================================

 

 

 

 

ஒலிக்கவிடப்படும் சோக இசையைக் கேட்டதும் அது பயணிக்கும் வீதியில்/தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வித்துடல் ஊர்தியை மறித்து சந்தனப் பேழையின் மேல் (விரும்பிய பக்கத்தில்) மலர்களைத் தூவி மலர் வணக்கம் செய்வர்.  அவ்வீதியில் இருக்கும் வீடுகளில குத்துவிளக்கு ஏற்றிவைத்தும் வீரச்சாவடைந்த மாவீரருக்கு மரியாதை செய்வர். சிலர் வித்துடல் ஊர்தியை மறித்து அதன் முன்னர் குடத்தில் நீரை எடுத்து ஊற்றுவர். இவற்றையெல்லாம் மக்கள் தாமாக விரும்பி செய்தனர். ஒரு பண்பாடாக அவர்களால் போற்றப்பட்டது.

maaveera.png

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்லத்தினுள் இப்படித்தான் காவிச் செல்லப்படும்... எப்பொழுதும் ஆட்களே காவிச் செல்வர்... 

 

 

"வாய்வார்த்தை பேச்சாக வாழ்ந்ததில்லை 
எங்கள் புலிகள்

செயலொன்றே மூச்சாகத் திகழ்ந்தார்கள் 
தமிழ் விடிவெள்ளிகள்"

 

 

LTTE coffins, julai 11 2007.jpg

'கிளிநொச்சிக்கு கிட்டவாக நடந்த அமுக்கவெடித் தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல் தாங்கிய சந்தனப்பேழைகளை மாவீரர் துயிலுமில்லத்தினுள் எடுத்துச் செல்லும் போராளிகள் | சூலை 11, 2007.'

 

 

 

==========================

 

 

 

 

இப்படத்தில் உள்ளது போன்று நடைபெறுவது அரிது . இது மட்டக்களப்பு தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்றது ஆகும். இரும்புத் தண்டுகளில் சந்தனப் பேழையைத் தாங்கிச் செல்லும் நிகழ்வு மிகவும் அரியது. இவ்வாறு தரவை துயிலுமில்லத்தில் மட்டுமே நடைபெற்றதை காண முடிகிறது, அதுவும் நான்காம் ஈழப்போரில் மட்டுமே.

ba_27_01_05_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  இறுதிவணக்கம்

 

 

"சூரிய தேவனின் வேருகளே! 
ஆயிரம் பூக்களை சூடுகிறோம்!

போரினில் ஆடிய வேருகளே! - விட்டுப் 
போகின்ற வேளையில் பாடுகிறோம்"

 

மாவீரர் துயிலுமில்லத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஒரு மாவீரரின் சந்தனப் பேழையானது துயிலுமில்லத்தினுள் இறுதிவணக்கத்திற்காக வைக்கப்படும். மாவீரர் துயிலுமில்லத்தினுள் நடைபெறும் வித்துடல் ஒன்றிற்கான இறுதிவணக்க நிகழ்வு இதுவாகும். இதில் வீரச்சாவு வீட்டிற்கு வர முடியாமல் போனவர்கள் மற்றும் பழகிய போராளிகள் என பலர் வந்து இறுதிவணக்கம் செலுத்திவிட்டுச் செல்வர்.

அப்போது ஒலிபரப்பப்படும் சோக இசையைத் தொடர்ந்து "சூரிய தேவனின் வேருகளே" என்ற இயக்கப்பாடல் ஒலிக்கவிடப்படும் (மூன்றாம் ஈழப்போரின் தொடக்கத்திலிருந்து இது பாவிக்கப்படுகிறது) இப்பாடலானது வீரவணக்க நிகழ்வுகளில் மலர்வணக்கத்தின் போதுகூட ஒலிக்கவிடப்படுவதுண்டு.

zdsa.jpg

 

lt. col. arjunan.jpg

லெப். கேணல் அர்ச்சுணன் அவர்களின் வித்துடலிற்கு போராளி ஒருவர் மலர்மாலை அணிவிக்கிறார். பின்னால் பிரிகேடியர் கடாபி, கேணல் வேலவன், லெப் கேணல் ராஜேஸ் எனப் பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். தமிழீழக் காவல்துறைப் போராளி உட்பட பலர் சூழ்ந்து நிற்பதைக் காண்க

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வித்துடல் மேடை

 

 

"அன்னை மண்ணில் விடுதலைப் பண்ணை இசைத்திட வீழ்ந்திட்ட வீரர்களே - உங்கள்
கனவு பலித்திட நாளும் களத்தினில் பலமாய் நாங்கள் நடந்திடுவோம்"

 

 

பின்னர் அங்குள்ள வித்துடல் மேடை நோக்கி தாங்கிச் செல்லப்பட்டு அங்கு வைக்கப்படும். அதற்குள் "சூரிய தேவனின் வேருகளே" என்ற பாடல் ஒலித்து முடிவடைந்திருக்கும். அதாவது பொதுச்சுடர் பீடம் பின்னால் இருக்கக்கூடியதாக வித்துடல் வைக்கப்பட்டிருக்கும். அச் சந்தனப் பேழையானது மஞ்சள்-சிவப்பு நிறத் துணியின் மேலே தான் வைக்கப்படும். பின்னர் குத்துவிளக்கு ஏற்றுவர்.

 

Lt. Col Arjunan.jpg

'லெப். கேணல் அர்ச்சுணனின் வித்துடலானது வித்துடல் மேடையை நோக்கி படிக்கட்டில் தூக்கிச் செல்லப்படுகிறது. வித்துடல் மேடை தமிழரின் பண்பாட்டிற்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டுள்ளதை நோக்குக.'

 

sa.jpg

'வேறொரு மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளதை நோக்குக.'

 

maaveerar thuyilum illam (4).jpg

'ஒரே நேரத்தில் பல சந்தனப் பேழைகள் பொதுச்சுடரைச் சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்க. அத்துடன் அவை எவ்வாறு அழகுற தேசியங்களால் சோடிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நோக்குக.'

 

வைத்த பின்னர் வித்துடல் மேடையில் நின்றபடி பொறுப்பாளர் ஒருவர் இறுதியாய் மாவீரருக்காக அங்கே கூடியுள்ள மக்கள் முன்னிலையில் உறுதியுரை வாசிப்பார். அப்போது வித்துடல் பேழையின் இரு மரங்கிலும் இப்படி கவனநிலையில் நிற்கும் போராளிகள்,

asd.jpg

ஒரு பெண் போராளியின் வித்துடல் வைக்கப்பட்டுள்ளது

 

உடனே தம் தலைகளைக் குனிந்து இப்படி நிற்பர், ஒரு கண நேரம்.

large.Uruthimozhireading.jpg.a42ba6efea2e5712e9f79802e86d1da7.jpg

'அருகில் குத்துவிளக்கு சுடர்விட்டு எரிவதைக் காணவும்'

 

NFLSA.png

 

அகவணக்கம் முடிந்த அடுத்த கணமே வித்துடலைச் சுற்றி நான்கு மூலைகளில் நின்றிருக்கிற துமுக்கி (rifle) ஏந்திய போராளிகள் நால்வர், மூன்று முறை வெற்று வேட்டுகளை தீர்ப்பர். பின்னர் துயிலுமில்லப் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி’ ஒலிபரப்பப்படும் (இப்பாடலானது மாவீரர் நாள்களில் உறுதிமொழியுடன் சேர்த்து  ஒலிக்கவிடப்படும்.). அப்போது அனைவரும் வீரவணக்கம் செலுத்துவர். 

 

இதுவொரு தமிழீழப் பண்பாட்டுச் சடங்கு ஆகும்!

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 விதைப்பு
 

 

"சொந்த உறவுகள் துன்பம் சுமக்கையில் உம்மைப் பலிகொடுத்தீர்!"

 

பின்னர், வீழ்ந்து வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது இவ்வாறு கயிறுகள் மூலம் விதைகுழியினுள் இறக்கப்படும், பழகிய அ உறவுக்காரப் போராளிகளால் (!?).

 

 

 

f7.jpg

மேஜர் புகழ்மாறன் அவர்களின் வித்துடல் விதைகுழியினுள் விதைக்கப்படுகிறது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விதைகுழி

 

 

"மண்ணில் விதையாய் விழுவது
மீண்டும் மீண்டும் முளைப்பது - என்றும்
மீண்டும் மீண்டும் முளைப்பது

எங்கள் மாவீரர் தானது!
தமிழா உன் திருநாளாம் 
மாவீரர்கள் தினமதுதானே! "

 

 

இதற்குள் தான் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை விதைக்கப்படும். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் து. ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர். விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் போட்டுவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு. ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர்.

மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், குழந்தை, சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் போட்டுச் செல்வர். 

 

few3.png

'விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர், பெரும்பாலான இடங்களில்'

 

 

cytyt.jpg

'போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர்'

 

4as4.jpg

'பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

(மேலுள்ள மறுமொழிப்பெட்டிகளில் உள்ள வித்துடல் விதைப்புத் தொடர்பான தகவல்கள் விரைவில் விரிவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.)

--> 19/11/2023

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்லத்தினுள்ளிருந்த ஏதோ ஒன்று

 

பார்ப்பதற்கு நன்கு சோடிக்கப்பட்டதாக பூக்கூடை போன்று தோற்றமளிக்கிறது. என்னவென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஒருவேளை பொதுச்சுடர் பீடத்திலுள்ள அந்த பொதுச்சுடர் ஏற்றும் கிண்ணத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட தட்டாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

சரியாக என்னவென்று அறிந்தவர்கள் வரலாற்றைக் கடத்த தெரியப்படுத்துங்கள்.  

(நீங்கள் ஆரும் சொல்லித் தரமாட்டியள் எண்டு தெரியும்... பரவாயில்லை, நானே நாடியறிந்துகொள்கிறேன்😏😤.)

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (32).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.