Jump to content

தவறுகளா?  தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்!


Recommended Posts

 

தவறுகளா?  தப்புக்களா? – கலாநிதி சூசை ஆனந்தன்!

 
 
கச்சதீவு ஒப்பந்தம்   1974

கச்சதீவு  தொடர்பான ஒப்பந்தம்  இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு சார்ந்து தவறுகளையே இந்தியா செய்து வருவது போலவே பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கில் பாக்குநீரிணைப் பகுதியில் இந்திய இலங்கை  ஆள்புல நீர்ப்பரப்பரப்பு  எல்லையில் இட அமைவு பெற்றுள்ளது கச்சதீவு ஆகும்.மனித சஞ்சாரமற்ற வெறும் பாறைத்தீவு இது.இதன் பரப்பு ஆக 82ஹெக்டேர் மட்டுமே. 1974 இல் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நட்புக்காக அக்கால இலங்கைப் பிரதமராக இருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களுக்கு அன்பளிப்பாக இந்த சிறிய தீவை தன்னிச்சையாக வழங்கியிருந்தார்  இத்தீவின் .இன்றைய கேந்திர முக்கியத்துவம் அப்போது இந்திரா காந்தி அம்மையாருக்கு அன்று  புரிந்திருக்க வாய்ப்பில்லை.அன்று தமிழகத்தில் இச்செயலைக் கண்டித்துப் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன.ஆயினும் பலன் ஏதுமில்லை.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் 2004இல் இத்தீவை மீட்க  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஒன்றையும் செய்திருந்தார்.அதுவும் கிடப்பில் போனது.

இத்தீவு இப்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ளது. தமிழருக்கு இதுவரை இத்தீவால் எதுவித பயனும் இதுவரையிலும் இல்லை. எனினும் இந்திய மீனவர்கள் சுமார் ஐந்நூறு வரையில் இப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.மீனவர்கள் இடையிலான முறகல்கள் முடிவின்றித் தொடர்கின்றன.

இப்போது  யாழ் தீவகத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மூன்று தீவுகள் சீனாவுக்குத்தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டன. கச்சதீவு  இத்தீவுகளுக்கு கூப்பிடு தொலைவிலேயே  இட அமைவு பெற்றுள்ளது. நினைத்த வேளையில் அத்தீவில் சீனா கால் பதிக்க முடியும். இந்தியா கச்சதீவவை மீட்பது அவ்வளவு சுலபமல்ல

வடபகுதி கடல் வளச்சூறை

இது இந்திய தரப்பு தெரிந்தே செய்யும் தப்பு போலவே படுகிறது. கச்சதீவு சார்ந்துள் கடற்பிரதேசங்களில் முக்கியமாக இலங்கையின் ஆள்புல எல்லைப்பரப்பினுள் பெருந்தொகையானதும் உயர் இழுவைச்சக்தி கொண்டதுமான இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி பெருந்தொகையான கடல்வளங்களை தமிழக மீனவர்கள்  வாரி  அள்ளிச் செல்லும்நிலை  இந்தியாதரப்பால் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே  போரினால் மோசமாக நலிவுற்றிருந்த வட பகுதி மீனவர்கள் மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக  நலிவடைந்து விரக்தியடைந்த நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர். பலமில்லியன் ருபா பெறுமதியான கடல்வளங்கள்  தசினமும்ூறையாடிச் செல்லப்படுவதுடன் கடலடி உயிர்ப்பல்வகைமையிலும் பாரிய அழிவுகள் ஏற்பட்டு எதிர்கால கடல்வள இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது பலதடவைகள் இதுகுறித்து முறைப்பாடுகள் உரிய தரப்புக்களுடன் செய்யப்பட்ட போதிலும் பலன்ஏதுமற்ற நிலையே தொடர்கிறது.

ஒருநாட்டின் ஆள்புல எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து கடல்வளங்களைச் சூறையாடுவது தப்பு எனத் தெரிந்திருந்தும் இதனை அனுமதிப்பது  நல்லதல்ல. இந்தியா இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு த் தீர்வினைக்காண முடியாத இந்தியா அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காணப்போகிறதோ?

இன அழிப்பு போர் 2009

 இந்தியா உதவியிராவிடின் நாம்போரில் வென்றிருக்க முடியாது” என இலங்கை படைத்தரப்பிலும் அரசுதரப்பிலும் அடிக்கடி கூறப்படுவதுண்டு.ஆகவே ஈழத்தமிழின அழிவில்இந்தியாவுக்கும் பங்குண்டு என்பது தெளிவு. ஆயுத உதவிகள், வழிகாட்டல்கள் ,ஆலோசனைகள் கடல்வழி உதவிகள் எனபல்வேறுவழிகளில் உதவிகள் போரின்போது வழங்கப்பட்டுள்ளன. அதன் விளைவு போரின் பின்னர் வடக்கு நிலம் கடல்  முழுவதும் இலங்கைப் படைகள் வசமாயின.மட்டுமல்ல   சீனாவின்  செல்வாக்கு என்றுமில்லாத வகையில் இந்த பிராந்தியத்தில்  ஆழ வேரூன்றி ப்போயுமுள்ளது..

இந்து சமுத்திரத்தில் இந்தியாவைப்பின்தள்ளி அதிகவலிமைகொண்ட ஓர்நாடாக சீனா மிளிர்கிறது.  புலிகளை வெளியேற்ற இலங்கைக்கு இந்தியா செய்த பேருதவியானது தென்கோடியில் இந்தியாவின் வாசற் கதவுகளைத் தட்டும் நிலைக்கு சீனாவைக் கொண்டுபோய் விட்டுள்ளது.கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்டது போலவும்,கிணறுவெட்ட பூதம் புறப்பட்ட கதைபோலவும்  சீன ட்ராகனின்  நுழைவு இந்தியாவைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக்கான  இதியாவின்  இறுதி யுத்தப் பேருதவியானது இந்தியா  தெரிந்தே விட்ட மகா தவறா அல்லது   தப்பா என்பதைப் புரிந்கொள்ள முடியாதுள்ளது.  சீனா இந்து சமுத்திரத்திலும், இலங்கையிலும் கொடிகட்டிப் பறக்க  இந்தியா வோ இந்திய உப கண்டம் முழுதிலும் தனதுதேசிய பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் இந்து சமுத்தரத்தில் கொழும்பு போட்சிற்றி சீனாவுக்கான இனன்னொரு பிடியாகவு மாறி  மேலும் தன்னை ஸ்திரப்படுத்தியிருக்கிறது.

யுத்தப் பேருதவியானது இந்தியாவை மட்டும்  பாதிக்கவில்லை ஈழத்தமிழர்களின் பேழிவுக்கும் அது வித்திட்டிருக்கிறது. நிலமிழந்து,மொழியிழந்து வாழ்வும் வளமும சிதறிச் சின்னாபின்னமாகிப்போகவும் காரணமாகின .தாய் மொழியிலே சொந்த இடத்தில் நாட்டின் கீதத்தை  ப் பாடமுடியாது.,சொந்த இடத்தில் காவல் துறையில் பேசமுடியாத அவல நிலைக்கும்  தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் – இந்த ஒப்பந்தம் இப்போது என்னவாயிற்று?

இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துபோயின எந்தப்பயனுமற்ற அவ் ஒப்பந்தம்  அது மரீனா ஆழியில் அமிழ்ந்த படகு போலவும்  “பெர்மியூடா’முனைச் சுழியில் சிக்கி காணாமல் போன கப்பல்  போலவும் ஆகிவிட்டது.

இணைந்த வடகிழக்கு  துண்டாடப்பட்டபோது  இந்தியா எங்கே ஒழிந்து கொண்டது? யுத்தம் ஒழிந்து தசாப்தம்கடந்துவிட்டது. மணலாறு வெலிஓயாவாயிற்று  இந்துக்கோயில்களெல்லாம் பெளத்த மயம். தொல்லியல் திணைக்களத்தின்  தொல்லைகளோ அருவருப்பானவையாகவுள்ளன.

 இவ்வாறான ஒருபின்னணியில் இவ் ஒப்பந்தம் எதற்கு? அது அவசியம் தேவைதானா?

யுத்தம் முடிவடைந்த கையோடு இவ்ஒப்பந்தம் உரியவாறு நடைமுப்படுத்ப்படுதற்கான நடவடிக்கைகளை போருக்கு உதவியவர்கள் முன்னெனடுக்கத் தவறியுள்ளனர். இது தரிந்தே செய்த மகா தப்பு. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பின் பல வேண்டத்தகாத விளைவுகள் பலவற்றையும் இன்று தடுத்து நிறுத்தி யிருக்க முடியும்.

இதனிடையே   இவ்வாண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் கொலைகாரர்களையும் வன்புணர்வாளர்களையும் பாதுகாக்கும் தீர்மானம் என வடக்கு முன்னாள் முதல்வர் சாடியிருந்தமையும் இங்கு நோக்கத் தக்கது.

இந்தியா தீர்மானத்தில்  எதிர்பார்க்கப்பட்டதுபோல நடுநிலை

வகித்திருந்தது. அந்நாட்டிற்கு ஈழத்தமிழர் விவகாரத்தைவிட அதன் வர்த்தகமும் அதன்தேசியநலனுமே முக்கியம். அவ்வப்போது  தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும்   இத்துப்போன பழைய ரெக்கோர்ட் டைப் போடுவதுபோல பயனற்ற  பதின்மூன்றாவது சீர்திருத்தத்தைப் பற்றி பாடும் அதுவே அதன் வாடிக்கையாகிப்போய்விட்டது.   த.தே.கூட்டமைப்பினரோ  இந்தியா உருட்டி விளையாடும் தாயக்கட்டைகளே. எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கப்போவதில்லை என்பது தெளிவு.

இந்திய அமைதிப்படை

அமைதிப்படை என்ற போர்வையில் வடகிழக்கு பகுதிகளில் இப்படை மேற்கொண்ட அடாவடிகள் படுகொலைகள் வன்புணர்வுகள் எல்லாம்  பதிவிலுள்ளன.குறிப்பாக யாழ் வைத்திய சாலையில் செய்த படுகொலைகளை எப்படி அழைப்பது ? சமாதானத்தை நிலைநிறுத்த என்று இறங்கி அமைதியைக் குலைத்து  பெருத்த 

அவமானத்துடன் நாடு திரும்பியது.காலம் கடந்தாலும் இவையெல்லாம்  இந்தியாவின் தவறுகளே.

தவறுஎன்பது தவறிச் செய்வது.தப்பு என்பது தெரிந்தே  செய்வது.தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன்  வருந்தியாகணும். இந்தியா இதுவரை  திருந்தவுமில்லை வருந்தவுமில்லை போலும் என்பது எமது கணிப்பு.

https://athavannews.com/2021/1227867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.