Jump to content

ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால் இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால்  இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

 

119341069 hearthealthgettyimages 1279332419 ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளால்  இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாகவும் கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.

இருப்பினும், மருத்துவர்களும் நோயாளிகளும் இதயத்தில் ஏற்படும் அழற்சி சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என்றும அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

 

https://www.ilakku.org/heart-inflammation-link-to-pfizer-and-moderna-jabs/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளின் பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

  • ஜேம்ஸ் கல்லேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு கூறியுள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக மருந்து பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

இருப்பினும், மருத்துவர்களும் நோயாளிகளும் இதயத்தில் ஏற்படும் அழற்சி சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதயத்தில் வலி ஏற்படுவது, அவ்வப்போது சுவாசம் இல்லாத தன்மையை உணர்வது, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது இதயத் துடிப்பு சீரற்று இருப்பது போன்றவை இதய அழற்சிக்கான அறிகுறிகள். யாருக்காவது இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து தங்களுக்கு இதய அழற்சி இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இருதயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதய அழற்சி தொடர்புடைய மையோகார்டிட்டிஸ் மற்றும் பெரிகார்டிட்டிஸ் என்ற இரண்டு அறிகுறிகள் ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதால் ஏற்படுகின்றன.

இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதுதான் மையோகார்டிட்டிஸ். இதயத்தில் இருக்கும் பெரிகார்டியம் பகுதிகளில் ஏற்படும் அழற்சிதான் பெரிகார்டிட்டிஸ்.

ஃபைசர் - பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 145 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 138 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது.

மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 19 பேருக்கு மையோகார்டிட்டிஸ் மற்றும் 19 பேருக்கு பெரிகார்டிட்டிஸ் ஏற்பட்டிருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ முகமையின் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அந்த ஐவரும் வயதானவர்கள், தவிர அவர்களுக்கு மற்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரிட்டன் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை விசாரித்து வருகிறது.

இதயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இதயத்துக்கு கொரோனா, கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இடர்கள்.

"கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்ட பின் இளம் வயது ஆண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன" என கூறியுள்ளது பிரிட்டனின் மருத்துவ மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்காற்று முகமை.

"இது போன்ற புகார்கள் மிக அரிதாகவே வருகின்றன. மேலும் லேசான அளவிலேயே இருக்கின்றன. இப்படி இதயம் சார்ந்த சிக்கல்களால் பாதிக்கப்படுவோர் வழக்கமான சிகிச்சைகள் பெற்று, போதிய ஓய்வில் இருந்தால் கொஞ்ச நாளிலேயே அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள்" என கூறியுள்ளது அந்த முகமை.

பெரும்பாலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு 14 நாட்களுக்குள் இப்படிப்பட்ட இதயக் கோளாறுகள், மிக அரிதாகவே ஏற்படுகின்றன.

தற்போது பிரிட்டனில் நடக்கும் தடுப்பூசி இயக்கத்தின் முக்கிய இலக்காக கருதப்படும் இளைஞர்களுக்குதான் இந்த பிரச்சனை பெரும்பாலும் ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டங்களின் போதே அதிகம் விவாதிக்கப்பட்டது.

பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் கொரோனாவால் ஏற்படும் பக்க விளைவுகள் பட்டியலில் மையோகார்டிட்டிஸ், பெரிகார்டிட்டிஸ் ஆகியவை அதிகாரபூர்வமாக சேர்க்கப்படவுள்ளன.

இதயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அரிதாக ஏற்படும் இதய அழற்சி, தடுப்பூசியின் பக்க விளைவு - தேவை கண்காணிப்பு

கடந்த ஜூன் மாதம்தான், ஃபைசர் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளாக இந்த இரண்டு இதய அழற்சி பிரச்சனைகளையும் பட்டியலிட்டது அமெரிக்கா.

"கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு இதய அழற்சி ஏற்படுவது மிகவும் குறைவுதான். இருப்பினும் இத்தகைய இதய அழற்சி நோயின் அறிகுறிகள் தொடர்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அப்போதுதான் முறையாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற/அளிக்க அதன் மூலம் உடல் நலம் தேற, மேற்கொண்டு நோயினால் உடல் நிலை சிக்கலுக்கு உள்ளாகாமல் தடுக்க முடியும்," என்கிறது ஐரோப்பிய மருத்துவ முகமை.

எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசிகளில்தான் இதய அழற்சி பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மரபணு மாற்றம் செய்த வைரசை பயன்படுத்தும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஜென்சன் போன்ற தடுப்பூசிகளில் இந்த பிரச்சனைகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-57791412

தடுப்பூசி செலுத்திக்கொண்ட உறவுகள் அச்சப்பட வேண்டாம், மிகமிக குறைவானோருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விழிப்பாக இருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.