Jump to content

தமிழ் மக்களின் உறுதுணையாக இருப்பது இந்தியாவே.: எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - சிறிதரன் எம்.பி அவசர கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் உறுதுணையாக இருப்பது இந்தியாவே.: எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - சிறிதரன் எம்.பி அவசர கடிதம்

(ஆர்.ராம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே ஆகும். 

அவ்வாறான நிலைமைகளை புரிந்துகொண்டு சீனா தனது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

leeter.jpg

அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு, கிளிநொச்சி மாவட்டத்தின் ஆதிக் கிராமங்களுள் ஒன்றாக, 2700 வருடங்களுக்கு முன்னைய வரலாற்றையும் தொல்பொருள் அடையாளங்களையும்,  பல்லவர்கால பக்தி இலக்கியமரபைக் கொண்ட மண்ணித்தலை சிவன் கோயில் உள்ளிட்ட மரபுரிமைச் சொத்துக்களையும் கொண்டமைந்துள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தின் கடற் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு கடலட்டைப் பண்ணை எமது மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

பரமன்கிராய், கௌதாரிமுனை ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளையும், வில்லடி மேற்கு, பரமன்கிராய்,  வெட்டுக்காடு, கௌதாரிமுனை, வினாசியோடை, மண்ணித்தலை, கல்முனை ஆகிய உப கிராமங்களையும் உள்ளடக்கியுள்ள கௌதாரிமுனை எனும் பழம்பெரும் கிராமத்தில் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையிலுள்ள 320 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே கடற்றொழிலைத் தமது பிரதான சீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் தங்கள் நாட்டவர்களால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

பன்னெடுங்காலமாகவே தமிழர்களுக்கும், சீனர்களுக்குமிடையே ஆதிகால பண்பாட்டுத் தொடர்புகள் பேணப்பட்டு வந்ததை வரலாறுகள் எண்பிக்கின்றன. ஆனால் தற்போதைய காலச்சூழலில் சீனர்களால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகள் அனைத்தும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறிச் செயல்களால் அனைத்து இயலுமைகளும் அடியோடு அழிக்கப்பட்டு காலம்காலமாக தமது இருப்பைத் தக்கவைப்பதற்காக நிலம் வேண்டிப் போராடும் ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியையும் இல்லாமற் செய்துள்ளது.

யாழ்குடாநாட்டின் தலைத்தீவுகளான நெடுந்தீவு,  அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சீன நிறுவனமொன்று மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் தங்கள் நாட்டினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் உள்ளிட்ட செயற்பாடுகளும் எமது மக்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணம் என்பது எமது மக்களின் வாழ்வாதாரத்தை நலிவுறச் செய்வதில் நேரடித் தாங்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மீள் புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லை முனைப் பகுதியான கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை ஆகியவற்றின் தொழிற்பாட்டினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பிரதேச மக்களும், குருநகர், பாசையூர் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேசத்தில் முற்றுமுழுதாக பொருண்மியத்தால் நலிவுற்ற குடும்பங்கள்; வாழும் கௌதாரிமுனை, பள்ளிக்குடா, வலைப்பாடு,  கிராஞ்சி, வேரவில், நாச்சிக்குடா, இரணைதீவு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் தமது வாழ்வாதார மூலத்தை முழுமையாக இழக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப்போரில் சிங்கள பேரினவாதத்தால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்புக்கு நீதி வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் சீனா வாக்களித்திருந்தமை எமது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமது வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்வையும் பாதிக்கும் வகையில் சீனாவினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயற்பாடுகளும், இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையே பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வரும் தொப்புள்க்கொடி உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்தும் விதத்திலான தங்களின் நிலைப்பாடுகளும் ஈழத்தமிழ் மக்களிடையே சீனா மீதான வெறுப்புணர்வை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

எழுபது ஆண்டுகால இனவிடுதலைப் போரினால் நொந்து போன ஈழத்தமிழர்களுக்கு ஆத்மபலமளிக்கும் செயற்பாடுகளை அவ்வப்போது இந்தியாவே மேற்கொண்டு வந்துள்ளது. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் இன அழிப்பை மேற்கொள்கின்றது என்பதை முதன்முதலில் 1984களில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்தவர் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி தான்.

1987 களில் கைச்சாத்திடப்பட்டு, இன்றும் நடைமுறையிலிருக்கும் இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், தமிழர்களுக்கு அரசியல்த்தீர்வைப் பெற்றுத்தரவும் இந்தியாவே முனைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமானதும், நியாயமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுத்தர இந்தியாவால் மட்டுமே முடியும் என்பது உலகம் புரிந்த விடயமாகும்.

இத்தகைய அரசியற் சூழலில் வடக்கில் தங்கள் நாட்டினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நோக்கிய நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டுவதாகவும், ஈழத்தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்து வதாகவும் அமைந்துள்ளது. நான்கு இலட்சத்துக்கு (400,000) மேற்பட்ட பொதுமக்களையும் அறுபதாயிரத்திற்கு (60, 000) மேற்பட்ட மாவீரர்களையும் இந்த மண்ணிலே புதைத்து விட்டு விடுதலை நோக்கிய ஆழ்மன ஏக்கங்களோடு தவித்திருக்கும் எமது மக்களின் உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் நேரடித் தலையீடின்றி தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு கிட்டப்போவதில்லை என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவான புரிதலோடுள்ளார்கள்.

2015 செப்டம்பரில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொண்ட போதும் அத் தீர்மானத்தை சீனா எதிர்த்திருந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சீனா மீதான அதிருப்தியை அதி உச்சமாக்கியுள்ளது. எனவே, ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்திருக்கும் அரசியல் தீர்வுக்கு குந்தகம் இல்லாமல், இந்தியாவின் நேரடித் தலையீட்டால் மட்டுமே தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, தங்களின் எதிர்கால செயற்பாடுகளை இலங்கையில் மேற்கொள்வீர்கள் என்று அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/109184

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் சீன தூதரகத்துக்கு கடிதம் போட்டிருக்கிறார், இது  சீனாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைய போகிறது, 

நான் நினைக்கிறேன் இந்த இக்கட்டான நிலமையில்  சீனாவுக்கு ரஷ்யா எப்படியும் உதவி செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது?

தமிழ் மக்களுக்கு எந்தக் காலத்தில் இந்தியா உறுதுணையாக நின்றது?

சிங்களவனை மகழ்ச்சிப்படுத்துவதாக, தமிழர்களை ஒடுக்கி, இன்று கந்தறுந்து போய் கையை பிசைந்து கொண்டு நிக்கிறது.

அதிலும் பார்க்க, இந்தியாவை நம்பி ஏமாந்து போனோம்.... சீனா ஏதாவது செய்து எமக்கான உரிமைகளை பெற்றுத் தரவேண்டும் என்று எழுதிப்பாருங்கள்...

சும்மா அதிரும்... 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் கடிதம் எழுதும் அறிவாளி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போ ஹிந்தியக் கூலி ஆகிட்டார். தமிழர்களைப் பொறுத்த வரை சீனாவை விட ஹிந்தியா மோசமான துரோகி. ஹிந்தியாவை நம்புவது அல்லது நம்பச் சொல்வது.. தமிழர்களை புதைகுழிக்கு மேலும் மேலும் அனுப்பும் செயலாகும்.

ஏன் தமிழர்கள் மாற்றி யோசிக்கக் கூடாது. சீனா.. மேற்குலகம்.. ஹிந்தியா என்று எல்லார் நடுவிலும் நின்று விளையாடுறது.. யார் பக்கமும் சார்ந்தும்.. சாராமலும். அப்படித்தானே சிங்களம் இவ்வளவு காலமும் பிழைப்பை ஓட்டி வருகிறது.. இந்த உலகில். எதற்கு ஹிந்தியா சார்பாக தமிழர்கள் நிற்கனும்..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே கூத்தமைப்புகாரர்கள் யோககாரர்கள்..

hqdefault.jpg

ரெண்டு சம்பளதிற்கு உழைக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

சிறிதரன் சீன தூதரகத்துக்கு கடிதம் போட்டிருக்கிறார், இது  சீனாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைய போகிறது, 

நான் நினைக்கிறேன் இந்த இக்கட்டான நிலமையில்  சீனாவுக்கு ரஷ்யா எப்படியும் உதவி செய்யும்.

சிறிதரனின் இந்தக்கடிதத்தால் பெரும்இராஜதந்திர நெருக்கடி வரப்போகிறது.சீனாவுக்கு ரஜ்யா உதவிசெய்ய வந்தால் அnமிரிக்காவும்.பிரிட்டனும் இந்தியாவுக்கு உதவும். இந்தியா வும் தன் பலத்தை காட்டுவதற்கான சந்தர்பம் வந்து விட்டது.ஆநேகமாகஇஅமெரிக்க இரஸ்ய ஜனாதிபதிகள் சிறிதரனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று  நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பற்றி ஏதும் எழுதாமல் விட்டு இருந்தால் கூட இதை பகிடியாக எடுக்காமல் சீனா விட்டிருக்கும். இந்தியாவை இன்னுமாடா நம்புகிறீர்கள் என்று தான் நினைப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

சிறிதரனின் இந்தக்கடிதத்தால் பெரும்இராஜதந்திர நெருக்கடி வரப்போகிறது.சீனாவுக்கு ரஜ்யா உதவிசெய்ய வந்தால் அnமிரிக்காவும்.பிரிட்டனும் இந்தியாவுக்கு உதவும். இந்தியா வும் தன் பலத்தை காட்டுவதற்கான சந்தர்பம் வந்து விட்டது.ஆநேகமாகஇஅமெரிக்க இரஸ்ய ஜனாதிபதிகள் சிறிதரனும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று  நினைக்கிறேன்.

இவர் எழுதிய இந்த கடித்ததால் மூன்றாம் உலகப்போர் மூளப்போகுது இருந்து பாருங்கோவேன்! சீனன் தூக்கி குப்பையிலே கடாசி விட்டு இன்னும் அமோகமாக வேலை பார்ப்பான்.

  சீனன் உதவி என்கிற பெயரில் நாட்டை ஆக்கிரமிக்க போகிறான் என்று நான் ஒரு தடவை இங்கு கருத்தெழுதியபோது, "சீனா எந்த நாட்டை ஆக்கிரமித்தது என்று காட்டுங்கள் பாப்போம்"  ஒரு உறவு கேட்டு கருத்து பதிந்து தர்க்கம் செய்திருந்தார். அந்த உறவை  கூச்சப்படாமல் களத்திற்கு வந்து சிறிதரனுக்கு பதில் தரும்படி விநயமாக கேட்டுக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.