Jump to content

குடும்ப ஆட்சியும் இலங்கையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப ஆட்சியும் இலங்கையும்

என்.கே.அஷோக்பரன்

சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியாடாத, தேசியப்பட்டியலில் கூட பெயர் இடம்பெறாத, ஆனால் இன்று பாராளுமன்றம் ஏகியுள்ள தம்பி பெசில் ராஜபக்‌ஷ  நிதி அமைச்சர், அண்ணன் சமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், அவரின் மகன் சஷீந்திர ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ அமைச்சரவை அமைச்சர், ராஜபக்‌ஷர்களின் சகோதரியான காந்தனி ராஜபக்‌ஷ ரணவக்கவின் மகன் நிபுன ரணவக்க மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். மஹிந்தராஜபக்‌ஷவின் இன்னொரு மகனான யோஷித ராஜபக்‌ஷ பிரதமரின் அலுவலர்களின் முதல்வர்.

2015 முன்னர் இருந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நிஷாந்த விக்ரமசிங்ஹ, மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சகோதரர். அதே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்த சமீந்திரராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷவின் இன்னொரு மகன். 2006 காலப்பகுதியில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டவரும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் உக்ரேன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்தவருமான உதயங்க வீரதுங்க மஹிந்த ராஜபக்‌ஷவின் தாயின் சகோதரியின் மகன்.

முன்னர் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட ஜாலிய விக்ரமசூரிய மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையின் சகோதரர் டீ.எம்.ராஜபக்‌ஷவின் மகளின் மகன். மத்தளை விமானநிலையம் கட்டப்பட்ட காலத்தில் சிவில் விமானசேவை அதிகாரசபையின் தலைவராக இருந்த பிரசன்ன விக்ரமசூரிய, ஜாலிய விக்ரமசூரியவின் தம்பியாவார். நாமல் ராஜபக்‌ஷவின் கருத்து நகைமுரணான வரவேற்பைப் பெற்றமைக்கு இந்தப் பின்புலம்தான் காரணம்.

குடும்ப ஆட்சி என்று தமிழில் நாம் சுட்டுவதை ஆங்கிலத்தில் நெபொடிஸம் (Nepotism) என்பார்கள். இது nepotismo என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தையின் வேர் nepos என்ற இலத்தீன் வார்த்தை. இலத்தீனில் nepos என்றால் nephew மருமகன் என்று அர்த்தம். 17ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பாப்பரசர்களின் தமது அதிகாரத்தை தமக்கடுத்து, தமது மருமகன்களுக்கு வழங்கிய வழக்கத்தைக் குறித்து இந்தச் சொல் உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆனால் இந்தச் சொல்லின் பயன்பாடு, ஜனநாயக வௌியில்தான் முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.

ஃபிரஞ்ச் புரட்சிக்கு முன்னர், அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியாக இருந்த பதின்நான்காம் லூயியின் ஆட்சியின் போது, தனது அறுதிப்பலத்தைக் குறிக்க பதின்நான்காம் லூயி சொன்னதான சொல்லப்படும் கூற்றுதான் “லீ டட் சீ முஆ” (l’etat, c'est moi), அதாவது “அரசு, அது நானே” (நானே அரசு). கவனிக்க, அரசன் நானே என்று லூயி சொல்லவில்லை, அரசே நான்தான் என்பதுதான் அவரது கூற்று. இத்தகைய அறுதிப்பலங்கொண்ட முடியாட்சியை வீழ்த்தித்தான் பிற்காலத்தில் நவீன ஜனநாயகம் பிறக்கிறது.

ஃபிரஞ்ச் புரட்சியின் சிந்தாந்தகர்த்தாக்களில் ஒருவரான மொன்டஸ்க்யு “அதிகாரப் பிரிவுக் கோட்பாட்டை” முன்வைத்தது அறுதிப்பலங்கொண்ட தனிநபரின், அல்லது குழுக்களின் ஆட்சி உருவாகிவிடக்கூடாத என்பதனால்தான். ஓர் அரசின் மூன்று பாகங்களான சட்டவாக்கம், சட்டநிர்வாகம், நீதி ஆகியன ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதுதான் மொன்டெஸ்க்யூவின் கருத்தின் அடிப்படை. “அரசு, அது நானே” என்ற நிலை ஜனநாயகத்துக்கு  உவப்பானதல்ல என்பதுதான் அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் தாற்பரியம். ஆகவேதான் குடும்ப ஆட்சி ஜனநாயக விரோதமானதாகக் கருதப்படுகிறது.

இந்த இடத்தில்தான் சிக்கலானதொரு மாற்றுக்கருத்து இடையீடு செய்கிறது. இங்கு கோட்டாபய, மஹிந்த, சமல், சஷீந்திர, நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்களும், நிபுன ரணவக்கவும் தேர்தலில் கோட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.  ஆகவே, இதனை ஜனநாயக விரோதம் என்று எப்படிச்சொல்லலாம் என்ற கேள்வியில் சில நியாயங்கள் தென்படலாம்.

பெசிலின் நியமனம் வௌித்தோற்றத்திற்கு ஜனநாயக விரோதமானது என்பதில் மாற்றக்கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால், பெசில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என்பதில் பெரும் ஐயம் எழ முடியாது. இதற்குக் காரணம் எமது நாட்டின் அரசியல் கலாசாரம். எமது நாடு என்பதை விட, தெற்காசியாவின் அரசியல் கலாசாரம் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஜனநாயகம் என்பது எமது நாடுகளில் போராடிப் பெறப்பட்ட ஒன்றல்ல. ஃபிரன்ஞ்ச் புரட்சியைப் போன்ற பெரும் புரட்சிகள் இங்கு மக்களால் நடத்தப்பட்டு முடியாட்சி வீழ்த்தப்படவில்லை. பிரித்தானிய கொலனித்துவத்துவக் காலகட்டத்தில் ஜனநாயகத்தின் சில அம்சங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஜனநாயக, தாராளவாத சிந்தனைகள் வலுப்பெறத்தொடங்கிய காலகட்டத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கல்வியைப் பெற்றுக்கொண்ட உயர்குழாம் அங்கு பிரபலமாகிக்கொண்டிருந்த ஜனநாயக, தாராளவாத சிந்தனைகளை இங்கு கொண்டுவந்தார்கள்.

ஆகவே, ஒருவகையில் சிந்தித்தால் இங்கு ஜனநாயகம் என்பது உயர்குழாமின் செயற்றிறட்டமாகவே இருந்தது. இதனால் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டாலும், ஜனநாயக சிந்தனைகள் இங்கு பெருமளவிற்கு வேரூன்றவோ, வளம்பெறவோ இல்லை. நிலபிரபுத்துவக் கால சிந்தனைகளின் செல்வாக்கு தொடரவே செய்தது. அதனால்தான் ஆரம்பகாலம் முதல், இன்று வரை பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவால் செல்வாக்குப் பெற்ற குடும்பங்களாக மாறியவையே, இன்றும் அரசியலிலும் செல்வாக்கோடு தொடர்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இதனைக் குறிப்பிடுவதால் ஜனநாயகத்தால் மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் அதிகாரத்தின் ஸ்தலம் பெருமளவிற்கு மாறவில்லை. அவ்வப்போது ஏற்படும் குறுகிய மாற்றங்கள் கூட, புதிய “நிலபிரபுக்களை” உருவாக்குகிறதேயன்றி, இங்கு ஜனநாயக அரசியல் கலாசாரம் உறுதியடையவில்லை. 1936ல் தெற்கிலிருந்த கிராமமொன்றில் நிலவுடைமையாளர்களாக இருந்த ராஜபக்‌ஷர்களின் குடும்பத்திலிருந்து டீ.எம்.ராஜபக்‌ஷ அரச சபைக்கு தெரிவு செய்யப்படுவதோடு ராஜபக்‌ஷர்களின் அரசியல் பிரவேசம் தொடங்கியது.

1945ல் டொன் மத்யூ ராஜபக்‌ஷவின் மரணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத் தேர்தலில் அவரின் சகோதரரும், மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தையாருமான டொன் அல்வின் ராஜபக்‌ஷ தேர்தலில் வெற்றி பெறுகிறார். அதன் பின்னர் அரசியலில் அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாக்குகளோடு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆகவே இந்த குடும்ப ஆட்சிக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள்தான் பிரதான காரணம்.

இந்தியாவில் தேர்தலில் போட்டியிட நேரு பரம்பரையில் வந்தவன் என்பதைத்தவிர ராகுல் காந்திக்கு வேறு எந்த தகுதியும் தேவையில்லை. அதுபோலத்தான் இங்கும் பண்டாரநாயக்க, ராஜபக்‌ஷ, சேனநாயக்க, விக்ரமசிங்ஹ, விஜேவர்த்தன போன்ற குடும்பங்களைச் சார்ந்தவர்களின் நிலையும். இதற்கு அவர்கள் காரணம் என்று சொல்வது சோம்பேறிகளின் சாட்டாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலில் வெல்லவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் ஒரு வாய்ப்பு இருக்கும் போது அதனை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. இங்கு மக்களின் சிந்தனையும், மனநிலையும், அரசியல் கலாசாரமும்தான் மாறவேண்டும். ஒருவர் நல்லவர் வல்லவர் என்பதற்காக அவரது தம்பிக்கும், மனைவிக்கும், மகனுக்கும், பேரனுக்கும் வாக்களிக்கும் மக்கள் கூட்டம் குடும்ப ஆட்சியைப் பற்றி விமர்சிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது.

அதேவேளை ஒருவர் அரசியலில் இருந்தார் என்பதனால், அவரது மகனோ, பேரனோ, தம்பியோ, மனைவியோ அரசியலுக்கு வரவே கூடாது என்பதும் அபத்தமாகும். இந்த நிலையில் ஒரு சாதகமான சமநிலையை சாதிப்பதற்கு வலுவான ஜனநாயக விழுமியங்களும், ஜனநாயகக் கட்டமைப்புக்களும், ஜனநாயக அரசியல் கலாசாரமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகையதொரு கட்டமைப்பும், கலாசாரமும் இல்லாது போனால், இன்றுள்ள நிலபிரபுத்தன மனநிலையின் தொடர்ச்சியை நாம் மாற்றியமைக்க முடியாது.

மாறாக காலங்காலமாக குடும்ப ஆட்சி பற்றி பிதற்றிக்கொண்டிருக்கும் கையறு நிலையில் நாம் சிக்கிக்கொண்டு விடுவோம். ஒரு வகையில், இந்த கலாசார மாற்றம் ஏற்படுதவற்கு இந்த குடும்ப ஆட்சியின் வல்லாதிக்கம் உதவலாம். இந்த வல்லாதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்சி தோல்வியடையும். அப்போதுதாவது மக்கள் இத்தகைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்களேயானால், இங்கும் ஜனநாயனத்தின் தாற்பரியமும், தேவையும் மக்களால் நேரடியாக உணரப்படும். அது மட்டும்தான், இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான விதையாக அமையும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குடும்ப-ஆட்சியும்-இலங்கையும்/91-276107

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.