Jump to content

அரசியல் பிரவேசம்::ரஜினி மீண்டும் ஆலோசனை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பிரவேசம்:: ரஜினி மீண்டும் ஆலோசனை.!

1625107981_rajinikanth.jpg

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், இன்று சந்தித்து பேச உள்ளாா். அதற்கு முன்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன் என்றார். 


முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் ரஜின வருத்தம் தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போது அவர் தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. 


சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, சென்னையிலிருந்து, கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றாா். அவருடன் குடும்பத்தினரும் சென்றனா். 


அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அங்கு தங்கி சிறிது நாள்கள் ஓய்வெடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ரஜினி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.dinamani.com/tamilnadu/2021/jul/12/political-entry-rajini-consults-again-3658675.html

Link to comment
Share on other sites

அன்று பேரூந்து நடத்துனர் அல்லவா...! எந்தெந்தத் தரிப்புகளில் தரித்துச் செல்லவேண்டும் என்ற அனுபவம், இன்றும் அவரை வழிநடத்துவதில் ஆச்சரியமென்ன. ??

Link to comment
Share on other sites

கொரோனா தொல்லைய விட, இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசனி…. அரசியலுக்கு வந்து, தமிழகத்து… சிஸ்ரத்தை சரி படுத்த வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு படமும் வெளிவரும் முன்னர் இப்படியான செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.
ஆனாலும் அரசியியலில் ரஜனி வருவார்.   ஆனாலும் அரசியலிற்கு  வரமாட்டார்.
படம் ஓடினால் காணுமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Old Guy Dancing GIFs - Get the best GIF on GIPHY

அவரது ரசிகர்களை திருப்திப் படுத்த அப்பப்ப புளுகித் தொலைக்க வேண்டிக் கிடக்கு.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: "மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும் - அரசியல் எண்ணம் கிடையாது"

7 மணி நேரங்களுக்கு முன்னர்
ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை," என்று கூறியுள்ளார்.

"நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்."

"கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

முன்னதாக, செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை காலையில் பேசிய ரஜினிகாந்த், உடல் நல பிரச்னைகள் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியதாகவும், கொரோனா கால சூழல்கள் காரணமாக பொதுவெளியில் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நிர்வாகிகளுடன் பேசிய ரஜினிகாந்த், தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படிப்பிப்பின் இறுதிக் காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் கவனம் செலுத்துவார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரஜினிகாந்தின் அரசியல் தவிர்ப்பு அறிவிப்பை வரவேற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு கூறியிருந்த ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று அப்போது அவர் கூறியதால், தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடந்த ஜனவரி மாதம் சூடுபிடித்தபோது, அந்த களத்தில் தமது மக்கள் மன்றம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இருந்தபோதும், "ரஜினிகாந்த் கொரோனா கால சூழ்நிலை மற்றும் உடல் நல பிரச்னைகளால், அப்போதுதான் அரசியலுக்கு வரமாட்டார். இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அவர் அரசியலுக்கு வருவார். அதன் அடையாளமாகவே மக்கள் மன்றம் கலைக்கப்படவில்லை," என்று ரஜினியின் அரசியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், அந்த கருத்துகளுக்கும் தமது இன்றைய அறிவிப்பு மூலம் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

"ரஜினியை இயல்பாக இருக்க விடுங்கள்"

ரஜினியின் சமீபத்திய நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகையில், "ரஜினி எடுத்த முடிவு நல்லதுதான். தமிழ்நாட்டுக்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். சாதாரண நடத்துநராக இருந்த தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் கொடுத்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று ரஜினி கூறி வந்தார். அவர் அரசியலுக்கு வந்து செய்ய முடியாத நல்ல பணிகளை வெறும் நற்பணி மூலம் செய்யலாம். இப்படிப்பட்ட ஒருவரை அரசியலில் இழந்து விட்டோமே என்று மக்கள் எண்ணம் அளவுக்கு அவரால் நற்பணி மன்றத்தை பயன்படுத்தி சமூக சேவை செய்ய முடியும்," என்றார்

"ரஜினி நினைத்தால் பல முனைகளில் இருந்தும் கோடி கோடியாக நன்கொடையாக குவியும். அந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளுக்கு உதவுவது போன்ற சமூக பணிகளில் அவர் தமது நற்பணி மன்றம் மூலம் செய்தாலே போதும், அதுவே தமிழக மக்களுக்கு செய்யும் பெருந்தொண்டாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"தமது அறிக்கையின் கடைசி வரிசையில், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த் என்று கூறி முடித்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு சாதகமாக அரசியல் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி மீண்டும் அவரை உசுப்பி விடாமல் ரஜினியை அவரது போக்கில் இயல்பாக இருக்க விட்டாலே போதும்," என்கிறார் குபேந்திரன்.

ரஜினிகாந்த்: "மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும் - அரசியல் எண்ணம் கிடையாது" - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவது தொடர்பாக இங்கு ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த். அதைத் தொடர்ந்து மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளில் இணைந்தனர்.

 
  • 7/7
     
    vikatan%2F2021-07%2F31f6b40d-851f-4370-997c-b17a3076e4a7%2FWhatsApp_Image_2021_07_12_at_10_45_13_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 1/7
     
    vikatan%2F2021-07%2F22346d9f-3957-458a-af13-de66f031bcd4%2FWhatsApp_Image_2021_07_12_at_10_47_34_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 2/7
     
    vikatan%2F2021-07%2Fedec1596-26e2-4ea8-a010-f51520fe3ac9%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_58_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 3/7
     
    vikatan%2F2021-07%2F39ab992c-dff2-4d81-a7c6-34e6488e4e23%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_59_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 4/7
     
    vikatan%2F2021-07%2F82daaad4-bfd8-4787-983a-77820fddbf72%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_51_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 5/7
     
    vikatan%2F2021-07%2F86c87ac6-b9d2-4737-9141-9dfb596d6cf0%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_50_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 6/7
     
    vikatan%2F2021-07%2Fe2e3f33b-5853-4165-a3ce-77755c2ad31c%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_47_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 7/7
     
    vikatan%2F2021-07%2F31f6b40d-851f-4370-997c-b17a3076e4a7%2FWhatsApp_Image_2021_07_12_at_10_45_13_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 1/7
     
    vikatan%2F2021-07%2F22346d9f-3957-458a-af13-de66f031bcd4%2FWhatsApp_Image_2021_07_12_at_10_47_34_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1

சிலர் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்கு முன்பாகப் பேசிய ரஜினி, `` `அண்ணாத்த’ ஷூட்டிங், கொரோனா, தேர்தல் அதன் பிறகு மெடிக்கல் செக்கப் இவற்றால் ரசிகர்களை, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க முடியாமல் போனது. மக்கள் மன்றத்தின் பணி என்ன, அதைத் தொடரலாமா என்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து ரசிகர்களிடம் குழப்பம் உள்ளது; எனவே, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவிருக்கிறேன்!" எனத் தெரிவித்தார்.

 
ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!
 
 

``வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை’’ என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு! Rajini kanth Meets Rajini makkal mandram cadre (vikatan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரசனி…. அரசியலுக்கு வந்து, தமிழகத்து… சிஸ்ரத்தை சரி படுத்த வேணும். 🤣

அமெரிக்காவுக்கு போய் மண்டை கழுவிக்கொண்டு வந்திருக்காரு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரசமாக ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்த ரஜினி பின்னணி என்ன?

1990-கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசி வருகிறார். ஊடகங்களில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் இதை ஒரு விளம்பரம் போல செய்து வந்தார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து திமுகவை பலவீனமாக்க முயன்றது. ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர நேரடி மறைமுக அழுத்தங்களைக் கொடுத்தது பாஜக. ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதற்கு முன்பே ரஜினி ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றம் என்பது போல ஆக்கி அதில் பல அணிகளை உருவாக்கி வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்தார்.

பின்னர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லி விட்டு ஒதுங்கியும் விட்டார். ஆனால் ரஜினி மக்கள் மன்றங்களும் அதன் நிர்வாகிகளும் அப்படியே இருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பாஜகவினரோடு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருவதாகவும், பாஜக பலரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதாகவும் ரஜினிக்கு செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் திமுகவின் பக்கம் பல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சாய இது தேவையற்ற அழுத்தங்களை தனக்கு உருவாக்கும் என்பதை உண்ரந்த ரஜினி மக்கள் மன்றங்களை கலைப்பதாக இன்று அறிவித்ததோடு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்து விட்டார் ரஜினி.

 

 

https://inioru.com/அவரசமாக-ரஜினி-மக்கள்-மன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

நீங்கள் சட்டம் கொஞ்சம் தெரிஞ்சவர் எண்டபடியாலை ஒரு கேள்வி. 😂

பட்டப்பெயரை எல்லாம் கையெழுத்தாய் வைக்கலாமோ? 😎

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சட்டம் கொஞ்சம் தெரிஞ்சவர் எண்டபடியாலை ஒரு கேள்வி. 😂

பட்டப்பெயரை எல்லாம் கையெழுத்தாய் வைக்கலாமோ? 😎

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

ஆள் சட்டபடி பேரை மாத்தீட்டோ தெரியா. இல்லாட்டிலும் பிரச்சனை இல்லை எண்டு நினைக்கிறன். வேறு சிலர் சினிமாவுக்கு வைத்த பெயரில் தேர்தலிலும் நின்றுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

இதென்ன சிம்ரன் இதெல்லாம்... 🥴

வதந்திகளை நம்பவேண்டாம் என்று சொல்லிப்போட்டு, நீங்களே வதந்திகளை பரப்புவதே?

ம்...ம்ம்ம்... நீங்களே வதந்தி என்று சொன்னாலும், தல, பிரகிராசிதான், பிரகிராசிதான்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

Vadivelu Kovai Sarala Comedy Video - Pooviyoor Anbarasu Comedy animated gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

மக்கள் மன்றத்தை, ரசிகர் மன்றமாக மாத்திப்போடார்.... அதுக்காக தான் இன்றய சந்திப்பு...

அடுத்த படத்துக்கும் கையெழுத்து போட்டாச்சு. அண்ணாத்தே ஓடவேணும்...கீர்த்தி சுரேசுடன் நடிக்க போகிறார் என்று கதை... 

கில்லாடி, வியாபாரி.... 80 வயதை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர், மக்களின் சினிமா மோகத்தினை காசாக்கி கொண்டு இருக்கிறார். 

ஊடகங்களும், சும்மா கிளப்பி விட்டு, அவர் காசை என்னும் விளம்பரத்துக்கு உதவுகின்றன. 👌

6 minutes ago, குமாரசாமி said:

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

வரேக்க ஒரு மாதம் லீவு எண்டார், பிறகு, அதெல்லாம் சும்மா எண்டார்... இப்ப, துண்டை உதறி தோளிலை போட்டு விட்டாரே.... என்ன விசயமா இருக்கும்....🤔

தல நம்மளை வைச்சு, பகிடி பண்ணவில்லை தானே....😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

Vadivelu Kovai Sarala Comedy Video - Pooviyoor Anbarasu Comedy animated gif

கு.சா வும் கோஷா வும் ஒண்ணு.

இதை அறியாதார் வாயில மண்ணு😎 

36 minutes ago, Nathamuni said:

வரேக்க ஒரு மாதம் லீவு எண்டார், பிறகு, அதெல்லாம் சும்மா எண்டார்... இப்ப, துண்டை உதறி தோளிலை போட்டு விட்டாரே.... என்ன விசயமா இருக்கும்....🤔

தல நம்மளை வைச்சு, பகிடி பண்ணவில்லை தானே....😇

சேச்சே…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

மக்கள் மன்றத்தை, ரசிகர் மன்றமாக மாத்திப்போடார்.... அதுக்காக தான் இன்றய சந்திப்பு...

அடுத்த படத்துக்கும் கையெழுத்து போட்டாச்சு. அண்ணாத்தே ஓடவேணும்...கீர்த்தி சுரேசுடன் நடிக்க போகிறார் என்று கதை... 

கில்லாடி, வியாபாரி.... 80 வயதை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர், மக்களின் சினிமா மோகத்தினை காசாக்கி கொண்டு இருக்கிறார். 

ஊடகங்களும், சும்மா கிளப்பி விட்டு, அவர் காசை என்னும் விளம்பரத்துக்கு உதவுகின்றன. 👌

தமிழ் நாட்டு சனத்தின்ரை தலையிலை எவ்வளவு அரைக்கேலுமோ அவ்வளவுக்கு அரைக்கின்றார்கள். பாவம்.....அறியாமை மக்களை நினைத்து வருத்தப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி காந் என்பது அவரது படப் பெயர் அல்ல.அவருக்கு மாத்தி வைக்கப்பட்ட பெயர்.அது தான் அவரது சட்டபூர்வமான பெயர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.