Jump to content

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை - திண்டுக்கல் ஐ லியோனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரச்சாரம் - சர்ச்சை

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரசாரத்தின் சமயத்தில் பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நியமன அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி கடந்த சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனம் குறித்து திண்டுக்கல் லியோனி அவரது ட்விட்டரில், 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தலைவராக முதல்வர் என்னை பணியில் அமர்த்திப் பெருமைப்படுத்தினார்.

30ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருந்த எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக நான் கருதுகிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.

பதவியேற்பு

இந்தச் சூழலில் இன்று டி.பி.ஐ வளாகத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் லியோனியை வரவேற்ற அன்பில் மகேஷ், அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விருப்ப பாடமாக மாற்றம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 2011ஆண் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது கீழே வைத்த பாடப் புத்தகத்தை இப்போது சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பள்ளி புத்தகங்கள் என்றால் மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றுவதே எனது நோக்கம்.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு

karunanidhi-1533641561.jpg

'நாங்கள் மாணவர்களாக இருந்த சமயத்தில் அண்ணாவின் பேச்சுக்கள் எல்லாம் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தது . கடந்த ஆட்சியில் பாடநூல் புத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் கூட நீக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியலுக்காகச் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்' என்று அவர் கூறினார்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-textbook-corporation-chief-dindigul-leoni-said-steps-will-be-taken-to-bring-karunanidhi-s-biograp-426874.html

டிஸ்கி :

உள்ளது உள்ளபடியே போடுங்கப்பா .. 👍 கள உறவுகளின் விருப்பமும் அதே..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி,

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

 

5 hours ago, குமாரசாமி said:

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

முதலாவது... மனைவியை,  ஏன்.. பாடப் புத்தகத்தில் சேர்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் இப்ப சேர்க்க ஆட்சி மாற வரலாற்றை நீக்க, மாறி மாறி நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

 

karunanidhi-1533641561.jpg

 

அதுதான் ஆரம்பத்தில் லியோனி சொல்லி விட்டாரே "மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவது" தனது நோக்கம் என்று.......அதற்கு பொருத்தமாக வேறு யார் இருக்கிறார்கள்......பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் எல்லாம் அதுக்கு சரிவர மாட்டார்கள்.....அவர்கள் தாம் முன்னேறாவிட்டாலும்  பரவாயில்ல நாடு முன்னேறவேண்டும் என்று பாடுபட்டவர்கள்.....இவரிடம்தான் மகிழ்ச்சி, கவர்ச்சி, கரன்சி,கணக்கு கேட்டால் கட்சியை விட்டு நீக்குதல்,கூட வந்தவர்களை குளத்தில் தள்ளி விட்டு  தன் குடும்பங்களை மட்டும் கரையேற்றுதல்  எல்லாம் சேர்ந்திருக்கிறது.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 12/7/2021 at 20:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

வரலாறு என்று பார்த்தால் இங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்.😎

ஒரு ரயில் வேகத்துடன் சென்னை பட்டினத்தை நோக்கி வருகின்றது

அந்த ரயிலுக்குள்.......அதாவது ரயிலின் மலசல கூடத்திற்குள்
ஒரு கறுப்பு உருவம்  அழுக்கு துணியை போர்த்திக்கொண்டு பதுங்கியிருக்கின்றது.

ஆம்.....அவரே தான்....அந்த உருவம் தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்னு சொல்லிக் கொடுக்கிறது.. துணை மனை இணை என்று மூன்று பொண்டாட்டிகளும் ஊரெல்லாம் வைப்பாட்டிக்களும் வைத்திருங்கள் பிள்ளைகளே. பள்ளிப்படிப்பை 8 டோடு நிறுத்திவிட்டு.. சினிமா அரசியல் என்று அலையுங்கள் சிறுவர் சிறுமிகளே.. தமிழர் என்ற உணர்வை தொலைத்து..  ஈழத்தமிழர்களை பாடையில் ஏற்றி பரிகாசம் பண்ணுங்கள் சின்னஞ்சிறுசுகளே.. கள்ளை குடிக்காவிட்டாலும்.. சாராயக்கடைகளை திறந்து சாராய சமூதாயத்தை ஆக்குங்கள் குஞ்சு குருமானுகளே..  சினிமாவுக்கு விசிலடிப்பதே உங்களின் தலையாக கடமை என்று விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடுங்கள்.. தமிழ் தமிழர் தமிழ்நாடு ஆட்சி அதிகாரம் என்று சிந்தித்துவிடாதீர்கள். அது ஐயா கட்டுமரம் கருநாநிதியின் குடும்பத்துக்கே சொந்தம் ஆகும்... என்று எழுதிப் படியுங்கள் மாணவர்களே. 

இவர் லியோனிக்கு வர வர புத்தி மங்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

என்னென்னு சொல்லிக் கொடுக்கிறது.. துணை மனை இணை என்று மூன்று பொண்டாட்டிகளும் ஊரெல்லாம் வைப்பாட்டிக்களும் வைத்திருங்கள் பிள்ளைகளே. பள்ளிப்படிப்பை 8 டோடு நிறுத்திவிட்டு.. சினிமா அரசியல் என்று அலையுங்கள் சிறுவர் சிறுமிகளே.. தமிழர் என்ற உணர்வை தொலைத்து..  ஈழத்தமிழர்களை பாடையில் ஏற்றி பரிகாசம் பண்ணுங்கள் சின்னஞ்சிறுசுகளே.. கள்ளை குடிக்காவிட்டாலும்.. சாராயக்கடைகளை திறந்து சாராய சமூதாயத்தை ஆக்குங்கள் குஞ்சு குருமானுகளே..  சினிமாவுக்கு விசிலடிப்பதே உங்களின் தலையாக கடமை என்று விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடுங்கள்.. தமிழ் தமிழர் தமிழ்நாடு ஆட்சி அதிகாரம் என்று சிந்தித்துவிடாதீர்கள். அது ஐயா கட்டுமரம் கருநாநிதியின் குடும்பத்துக்கே சொந்தம் ஆகும்... என்று எழுதிப் படியுங்கள் மாணவர்களே. 

இவர் லியோனிக்கு வர வர புத்தி மங்குது. 

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

அவர்கள் ஒருவித பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால்.. நாங்கள் எல்லாம் தியேட்டர்களை தரைமட்டமாக பார்த்த பரம்பரை. இன்னொரு வகை. பாவப்பட்ட ஜென்மங்கள்.  ஆனாலும்.. தியேட்டர்களின் திரைகளுக்கு அப்பால்.. தியாகிகளை.. நிஜ ஹீரோக்களை கண்டிட்டம், அதனால்.. சினிமா தாக்கமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

டிஸ்கி

இன்று நாடு முழுதும் புகையிரதங்கள் ஓடாது.☺️..😊

IMG-20210715-200708.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2021 at 20:25, goshan_che said:

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

எனக்குள் கன  காலமாக  இருக்கும்  சந்தேகங்கள்  தீரும் என்று  நினைக்கின்றேன்??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

வாழைப்பழத்துக்கு புகையடித்த மாதிரி சிகரட் பீடி சுருட்டு இதையுமல்லவா தாங்கினோம்.

வீட்டை போக மணத்திலேயே பிடித்துவிடுவார்கள்.

நாங்களும் 3-4 பேர் இருந்து ஒரு சிகரட்டில் குனிந்து குனிந்து இழுத்து விட்டு(யாரும் பார்க்கலையாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கதையை எழுதினால் தலை குனியப்போவது தமிழினமே தவிர அவரது குடும்பம் அல்ல.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் கொலைக்குப்பின், இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக பெரிய அளவில் உதவி ( கல்வி, முகாமகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், மன உளச்சல் தரும்நெருக்கடி அற்ற) செய்தவர் கருணாநிதி தான், 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.