Jump to content

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை - திண்டுக்கல் ஐ லியோனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரச்சாரம் - சர்ச்சை

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரசாரத்தின் சமயத்தில் பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நியமன அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி கடந்த சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனம் குறித்து திண்டுக்கல் லியோனி அவரது ட்விட்டரில், 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தலைவராக முதல்வர் என்னை பணியில் அமர்த்திப் பெருமைப்படுத்தினார்.

30ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருந்த எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக நான் கருதுகிறேன்' எனப் பதிவிட்டிருந்தார்.

பதவியேற்பு

இந்தச் சூழலில் இன்று டி.பி.ஐ வளாகத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் லியோனியை வரவேற்ற அன்பில் மகேஷ், அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விருப்ப பாடமாக மாற்றம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 2011ஆண் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது கீழே வைத்த பாடப் புத்தகத்தை இப்போது சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பள்ளி புத்தகங்கள் என்றால் மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றுவதே எனது நோக்கம்.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு

karunanidhi-1533641561.jpg

'நாங்கள் மாணவர்களாக இருந்த சமயத்தில் அண்ணாவின் பேச்சுக்கள் எல்லாம் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தது . கடந்த ஆட்சியில் பாடநூல் புத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் கூட நீக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியலுக்காகச் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்' என்று அவர் கூறினார்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-textbook-corporation-chief-dindigul-leoni-said-steps-will-be-taken-to-bring-karunanidhi-s-biograp-426874.html

டிஸ்கி :

உள்ளது உள்ளபடியே போடுங்கப்பா .. 👍 கள உறவுகளின் விருப்பமும் அதே..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி,

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன இனி சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு பள்ளிக்கூடங்களுக்கு புத்தகமாய் வரும்.

மற்றவர்களை நையாண்டி பண்ணி பட்டிமன்றம் நடத்துவது போல் பிள்ளைகளின் படிப்பையும் முன்னெடுத்து செல்லட்டும்.

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இணை, துணையுடன், கலைஞரின் 3 மணி நேர உண்ணாவிரத மகிமை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடப்புத்தகத்தில் வரும் தானே....

 

5 hours ago, குமாரசாமி said:

வரும்...வரும் எல்லாம் வரும் 😂

image004.jpg

karuna-3hr-fastimg.jpg

முதலாவது... மனைவியை,  ஏன்.. பாடப் புத்தகத்தில் சேர்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் இப்ப சேர்க்க ஆட்சி மாற வரலாற்றை நீக்க, மாறி மாறி நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

leoni-7-1616840350.jpg

சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

 

 

karunanidhi-1533641561.jpg

 

அதுதான் ஆரம்பத்தில் லியோனி சொல்லி விட்டாரே "மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவது" தனது நோக்கம் என்று.......அதற்கு பொருத்தமாக வேறு யார் இருக்கிறார்கள்......பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் எல்லாம் அதுக்கு சரிவர மாட்டார்கள்.....அவர்கள் தாம் முன்னேறாவிட்டாலும்  பரவாயில்ல நாடு முன்னேறவேண்டும் என்று பாடுபட்டவர்கள்.....இவரிடம்தான் மகிழ்ச்சி, கவர்ச்சி, கரன்சி,கணக்கு கேட்டால் கட்சியை விட்டு நீக்குதல்,கூட வந்தவர்களை குளத்தில் தள்ளி விட்டு  தன் குடும்பங்களை மட்டும் கரையேற்றுதல்  எல்லாம் சேர்ந்திருக்கிறது.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 12/7/2021 at 20:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை -  திண்டுக்கல் ஐ லியோனி

வரலாறு என்று பார்த்தால் இங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்.😎

ஒரு ரயில் வேகத்துடன் சென்னை பட்டினத்தை நோக்கி வருகின்றது

அந்த ரயிலுக்குள்.......அதாவது ரயிலின் மலசல கூடத்திற்குள்
ஒரு கறுப்பு உருவம்  அழுக்கு துணியை போர்த்திக்கொண்டு பதுங்கியிருக்கின்றது.

ஆம்.....அவரே தான்....அந்த உருவம் தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்னு சொல்லிக் கொடுக்கிறது.. துணை மனை இணை என்று மூன்று பொண்டாட்டிகளும் ஊரெல்லாம் வைப்பாட்டிக்களும் வைத்திருங்கள் பிள்ளைகளே. பள்ளிப்படிப்பை 8 டோடு நிறுத்திவிட்டு.. சினிமா அரசியல் என்று அலையுங்கள் சிறுவர் சிறுமிகளே.. தமிழர் என்ற உணர்வை தொலைத்து..  ஈழத்தமிழர்களை பாடையில் ஏற்றி பரிகாசம் பண்ணுங்கள் சின்னஞ்சிறுசுகளே.. கள்ளை குடிக்காவிட்டாலும்.. சாராயக்கடைகளை திறந்து சாராய சமூதாயத்தை ஆக்குங்கள் குஞ்சு குருமானுகளே..  சினிமாவுக்கு விசிலடிப்பதே உங்களின் தலையாக கடமை என்று விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடுங்கள்.. தமிழ் தமிழர் தமிழ்நாடு ஆட்சி அதிகாரம் என்று சிந்தித்துவிடாதீர்கள். அது ஐயா கட்டுமரம் கருநாநிதியின் குடும்பத்துக்கே சொந்தம் ஆகும்... என்று எழுதிப் படியுங்கள் மாணவர்களே. 

இவர் லியோனிக்கு வர வர புத்தி மங்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

என்னென்னு சொல்லிக் கொடுக்கிறது.. துணை மனை இணை என்று மூன்று பொண்டாட்டிகளும் ஊரெல்லாம் வைப்பாட்டிக்களும் வைத்திருங்கள் பிள்ளைகளே. பள்ளிப்படிப்பை 8 டோடு நிறுத்திவிட்டு.. சினிமா அரசியல் என்று அலையுங்கள் சிறுவர் சிறுமிகளே.. தமிழர் என்ற உணர்வை தொலைத்து..  ஈழத்தமிழர்களை பாடையில் ஏற்றி பரிகாசம் பண்ணுங்கள் சின்னஞ்சிறுசுகளே.. கள்ளை குடிக்காவிட்டாலும்.. சாராயக்கடைகளை திறந்து சாராய சமூதாயத்தை ஆக்குங்கள் குஞ்சு குருமானுகளே..  சினிமாவுக்கு விசிலடிப்பதே உங்களின் தலையாக கடமை என்று விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடுங்கள்.. தமிழ் தமிழர் தமிழ்நாடு ஆட்சி அதிகாரம் என்று சிந்தித்துவிடாதீர்கள். அது ஐயா கட்டுமரம் கருநாநிதியின் குடும்பத்துக்கே சொந்தம் ஆகும்... என்று எழுதிப் படியுங்கள் மாணவர்களே. 

இவர் லியோனிக்கு வர வர புத்தி மங்குது. 

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

மிஸ்டர் நெடுக்ஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரியே....ஆனால் இந்த சினிமாவுக்கு விசிலடிக்கிற வசனத்தை எடுத்து விட முடியாதா,  இங்கேயும் இதயத்தில் வலிக்குது......!  😢

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தவறு திருத்தப்படுதல் அவசியம். தொடரக் கூடாது. இப்ப யோசிச்சு பாருங்கள்.. உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் சினிமா பார்ப்பார்கள்.. விசிலடிக்கிறார்களா என்று.. மேற்கு நாடுகளில் நீங்கள் வாழ்பவராக இருந்தால்...

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

அவர்கள் ஒருவித பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால்.. நாங்கள் எல்லாம் தியேட்டர்களை தரைமட்டமாக பார்த்த பரம்பரை. இன்னொரு வகை. பாவப்பட்ட ஜென்மங்கள்.  ஆனாலும்.. தியேட்டர்களின் திரைகளுக்கு அப்பால்.. தியாகிகளை.. நிஜ ஹீரோக்களை கண்டிட்டம், அதனால்.. சினிமா தாக்கமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

டிஸ்கி

இன்று நாடு முழுதும் புகையிரதங்கள் ஓடாது.☺️..😊

IMG-20210715-200708.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2021 at 20:25, goshan_che said:

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் எவ்வளவு முக்கியம், குடும்பத்துக்காக உழைக்க வேண்டியதன் அவசியம், குடும்பத்துக்காக செய்ய வேண்டிய விட்டு கொடுப்புகள். குடும்பத்தை திறம்பட மேலாண்மை செய்வது எப்படி போன்ற விடயங்களை இவர் வாழ்கையை வைத்து விளக்குவாகள் போலும்.

எனக்குள் கன  காலமாக  இருக்கும்  சந்தேகங்கள்  தீரும் என்று  நினைக்கின்றேன்??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

கியூவில் நின்று இடிபட்டு கசங்கி தியேட்டர்காரன் மதிலில் ஏறி நின்று தடியால் அடிக்க அதையும் வீரத்தழும்பாய் ஏற்று சரியாக 65 சதம் குடுத்து கலரி டிக்கட் வாங்கி உள்ளே போய்  (புதுப்படம் 65 சதம் ,பழைய படம் 35 சதம் ) கிழிந்த சேட்டுடன் திரும்பி 1st  கிளாஸையும் பால்கனியையும் பார்க்கிற கெத்து இருக்கே .......அதெல்லாம் இந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்காத சொர்க்கங்கள்.......!  😂

வாழைப்பழத்துக்கு புகையடித்த மாதிரி சிகரட் பீடி சுருட்டு இதையுமல்லவா தாங்கினோம்.

வீட்டை போக மணத்திலேயே பிடித்துவிடுவார்கள்.

நாங்களும் 3-4 பேர் இருந்து ஒரு சிகரட்டில் குனிந்து குனிந்து இழுத்து விட்டு(யாரும் பார்க்கலையாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கதையை எழுதினால் தலை குனியப்போவது தமிழினமே தவிர அவரது குடும்பம் அல்ல.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜீவ் கொலைக்குப்பின், இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக பெரிய அளவில் உதவி ( கல்வி, முகாமகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம், மன உளச்சல் தரும்நெருக்கடி அற்ற) செய்தவர் கருணாநிதி தான், 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.