Jump to content

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ? - யதீந்திரா

தமிழர் சமூகத்திற்கு இப்போது எப்படியானதொரு அனுகுமுறை தேவை? இப்படியொரு கேள்வியை கேட்டால் எல்லோருடைய பதிலும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒற்றுமை என்பதே அனைவருடைய பதிலாகவும் இருக்கும். ஆனால் அந்த ஒற்றுமை ஏன் இதுவரையில் சாத்தியப்படவில்லை ? இப்படி கேட்டால் எவரிடமும் தெளிவான பதில் இருக்காது. ஏனெனில் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. எனவே இதுவரை கால அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்தால் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று எண்ணினால், அது கல்லில் நாருரிப்பதற்கு ஒப்பானதாகும். இந்த பின்னணியில் சிந்தித்தால், இனியும் ஒற்றுமை தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு புதுவிதமான அரசியல் அணுகுமுறை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று தமிழ் அரசியல் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது. இது போன்றதொரு நிலைமை இதற்கு முன்னர் ஒரு போதுமே ஏற்பட்டதில்லை. முன்னர் பிரச்சினைகள் இருந்தாலும் கூட, ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் கட்சிகள் இந்தளவிற்கு பலவீனமடைந்திருக்கவில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவம் தொடர்பான கேள்வி இன்று பரவலாக எழுந்திருக்கின்றது. இரா.சம்பந்தன் மிகவும் தளர்வடைந்திருக்கின்ற நிலையில் (சக்கர நாற்காலியில் பாராளுமன்றம் செல்லும் நிலைமை) தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தில் ஒரு பெரிய வெற்றிடம் தெரிகின்றது. சம்பந்தனுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? கூட்டமைப்பு அப்படியே தொடருமா அல்லது துண்டுகளாக சிதறுமா? கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்திலேயே இதற்கு தெளிவான பதில் இல்லை. அவர்கள் மத்தியில் ஒரு நடுக்கம் தெரிகின்றது. சம்பந்தனுக்கு பின்னர் தங்களால் கூட்டமைப்பாக தொடர முடியுமா என்னும் சந்தேகம் எழுந்திருக்கின்றது.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையிலும் இரண்டாம் நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தலைவர் எவரும் இல்லை. இந்த நிலையில் சம்பந்தனுக்கு பின்னரான காலத்தில் தமிழரசு கட்சிக்குள்ளும் முரண்பாடுகளும், உடைவுகளும் ஏற்படலாம். ஆயுத விடுதலைப் போராட்ட இயக்க பின்னணியிலிருந்து ஜனநாயக அரசியலுக்கு திரும்பிய கட்சிகளை பொறுத்தவரையிலும், அவர்களிடமும் பலமான கட்சி கட்டமைப்பு இல்லை. எந்தவொரு இயக்கத்திடமும் இரண்டாம் நிலையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தலைவர்கள் இல்லை. இந்த விடயங்களை கவனமாக நோக்கும் ஒருவரால், தமிழர் அரசியலின் பலவீனத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். நிலைமைகளை அவதானிக்கும் போது சம்பந்தனுக்கு பின்னரான காலம் பெருமளவிற்கு தமிழ் கட்சிகள் சிதறிப் போகும் நிலைமையே உருவாகும். இவ்வாறு நான் குறிப்பிடுவதால், சம்பந்தன் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார் என்று நான் வாதிடவில்லை. சம்பந்தனின் அரசியல் பின்னணி, ராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் அவருக்கு இருந்த அங்கிகாரம், அவரது வயது – இப்படியான சில காரணங்களால், அவரை ஏனையவர்களால் நிராகரிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே சம்பந்தனால் இப்போதும் தலைவராக இருக்க முடிகின்றது. மற்றும்படி சம்பந்தன் தனக்கு கிடைத்த அரிய சந்தர்பங்களை தவறவிட்ட ஒரு அரசியல்வாதிதான். அதில் இந்தக் கட்டுரை முரண்படவில்லை. ஆனால் இப்போது விடயம் சம்பந்தன் பற்றியதல்ல.

spacer.png

இன்று தமிழ் அரசியல் சூழலில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. சீனா – இந்தியா – அமெரிக்கா என்றெல்லாம் பேசப்படுகின்றது. சீனா வடக்கில் புகுந்துவிட்டதாக பலரும் பேசுகின்றனர். இவற்றை ஒரு புறமாக வைப்போம். ஒரு வேளை சிலர் சொல்லுவது போன்று, இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால், தமிழர்களுக்கும் சில வாய்ப்புக்கள் வருவதாகவே வைத்துக் கொள்வோம் – ஆனால் இந்த இடத்தில் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி – அவற்றை கையாளுவதற்கான ராஜதந்திர ஆட்டத்தில் ஈடுபடுவதற்கான அரசியல் இயலுமை தமிழர்களிடம் இருக்கின்றதா? அதற்கான ஒரு பலமான அரசியல் தலைமைத்துவம் தமிழர்களிடம் இருக்கின்றதா? ஏன் இது பற்றி எவரும் சிந்திக்கவில்லை? ஏனெனில் ஒரு பலமான அல்லது, வெளித் தரப்புக்கள் கருத்தில் கொள்ளக் கூடிய தலைவமைத்தும் இல்லாத போது, எவருக்குமே நாங்கள் தேவைப்படப் போவதில்லை. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் ஒவ்வொருவரும் இதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

இந்த கட்டுரை முன்வைக்கும் விடயம் தொடர்பில் எவருக்குமே முரண்பாடுகள் இருக்காது எனலாம். ஏனெனில் இதுதான் இன்றைய நிலைமை. நிலைமை இதுதான் என்றால், இதனை எப்படி மாற்றியமைப்பது? என்ன செய்தால் இன்றைய நிலைமை ஒரளவாவது எதிர்கொள்ளலாம். ஏனெனில் நிச்சயமாக தற்போதைய சூழலில், ஒரு பலமான அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவே முடியாது. அவ்வாறான கற்பனைகளில் இருப்போர் முதலில் அதனை கைவிட்டுவிட வேண்டும். ஒப்பீட்டடிப்படையில், மற்றவர்களால் திருப்பிப் பார்க்க கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்கலாம்? அதற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றியே அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய அடிப்படையில் செயற்படும் கட்சிகளை ஒன்றுபடுத்தும் பல்வேறு முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனாலும் எந்தவொரு முயற்சியும் வெற்றியை காணவில்லை. இதற்கு தேர்தல் அரசியலே பிரதான காரணமாகும். ஏனெனில் கட்சிகள் என்றாலே தேர்தல்தான். தேர்தல் நலன் இல்லாமல் எந்தவொரு கட்சியும் இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு கட்சியும், அதன் தேர்தல் நலனின் அடிப்படையில்தான் விடயங்களை அணுக முற்படுகின்றன. தங்களின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் விடயங்களை எந்தவொரு கட்சியும் முன்னெடுக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தமைக்கு இதுவே காரணமாகும். இதனை மறைப்பதற்கு சிலரோ கொள்கை என்னும் நிறத்தை பூசிக் கொள்கின்றனர். அந்த நிறத்தை கடந்து சென்று பார்ப்போமானால், அங்கும் தங்களுடைய கட்சி என்னும் விம்பமே மேலோங்கியிருப்பதை காணலாம். இந்த நிலைமையை நாம் எவ்வாறு கடந்து, செல்வது?

spacer.png

இந்த கட்டுரை சில விடயங்களை பரிந்துரை செய்கின்றது. இங்கு கூறப்படும் எவையும் முடிந்த முடிபுகளல்ல. இது ஒரு உரையாடலுக்கான ஆரம்பம் மட்டுமே! பல கோணங்களில் இது தொடர்பில் உரையாடினால் ஒரு பாதையை நாம் கண்டடைய முடியும்.

இன்று தமிழர் தேசத்திற்கு தேவை ஒரு தேசிய இக்கமாகும். வெறுமனே கட்சிகளின் கூட்டுக்களை ஏற்படுத்துவதால், எந்தவொரு பயனும் இல்லை. தேர்தலை இலக்காக கொண்டு உருவாக்கப்படும் இவ்வாறான கூட்டுக்கள், தேர்தல் முடிந்ததும் சிதறிவிடுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமாயின் கலப்பு அரசியல் கட்டமைப்பு தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த கட்டுரை பரிந்துரைக்கும் தேசிய இயக்கமானது, தேசிய நலனை கருத்தில்கொண்டு, தேர்தல் அரசியலிலிலும் தலையீடு செய்யும் அதே வேளை, ஒரு அரசியல் இயக்கமாகவும் தொழிற்பட வேண்டும்.

ஏனெனில் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை தீர்மானிப்பதில் தேர்தல் அரசியல் முக்கியமானது. மக்களின் பிரதிநிதிகளாக ஆளுமையுள்ள இளம் தலைவர்களை வெளிக்கொண்டு வரவேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அதற்கு தேர்தல் அரசியல் முக்கியமானது. அதே வேளை இவ்வாறானதொரு தேசிய இயக்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியும் ஆனால் அதனை ஒரு கருங்கற் பாறையாக கருதக் கூடாது. உடனடி மற்றும் நீண்ட கால அடிப்படையில் விடயங்களை கையாளும் அரசியல் ஒழுக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். இன்றைய சூழலில் எது முதன்மையான பிரச்சினையோ அதனையே குறித்த தேசிய இயக்கம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த விடயங்களையும் பேசலாம் ஆனால் முதலில் இருப்பதை பாதுகாக்க வேண்டும். இன்றைய சூழலில் மாகாண சபையை உச்சளவில் பயன்படுத்திக் கொண்டு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவதற்காக அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்கவேண்டும். புதுடில்லிக்கும் தமிழர்களுக்குமான அரசியல் உரையாடலின் மையம் 13வது திருத்தச்சட்டம்தான். அதனை தவிர்த்து புதுடில்லியை ஒரு போதுமே அணுகமுடியாது.

இவ்வாறான ஒரு தேசிய அரசியல் இயக்கம் தொடர்பில் சிந்திக்கும் போது எவரையும் புறக்கணிக்க வேண்டியதில்லை. எவரையும் புறக்கணிக்கும் தகுதி எவருக்கும் இல்லை. துரோகி, தியாகி, இந்தியாவின் ஆள், கொழும்பின் ஆள் – இந்த சொற்களுக்கு இப்போது தமிழர் அரசியலில் எந்தவொரு பெறுமதியும் இல்லை. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளும் அனைவருமே தகுதியுடையவர்கள்தான். இவ்வாறானதொரு தேசிய இயக்கம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய கடப்பாடு முன்னாள் விடுதலை இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கே அதிகம் உண்டு. ஏனெனில் அவர்கள் தங்களின் வாழ்வை இந்த அரசியலுக்காக கொடுக்க முன்வந்தவர்கள். தங்களது இளமை காலம் முழுவதையும் இதற்குள் செலவழித்தவர்கள். கடந்த காலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அவற்றை தூக்கி பிடிப்பதால் தமிழர் அரசியலின் என்ன மாற்றம் ஏற்படும்?

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியில் நிற்கும் இயக்க தலைவர்கள் அனைவரும் இது தொடர்பில் சிந்திக்க முன்வர வேண்டும். இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு வரலாற்று பொறுப்புண்டு. ஏனெனில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு கடந்த காலத்தில் தமிழர் அரசியலை வழிநடத்தியவர்கள்தான் பொறுப்பு. கடந்தகாலத்தின் தவறுகளை சரிசெய்ய வேண்டிய வரலாற்று பொறுப்பு முன்னாள் இயக்கங்களுக்கு உண்டு. பொறுப்புக்கள் அனைத்தையும் சிலரின் மீது போட்டுவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள முடியாது. அந்த வகையில் இன்றைய சூழலை சரிசெய்ய வேண்டிய வரலாற்று பொறுப்பு, முன்னாள் இயக்க தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு உண்டு. முதலில் இவர்கள் தங்களுக்குள் உரையாட வேண்டும். ஒரு பொது வேலைத்திட்டத்தி;ன் கீழ் எவ்வாறு ஒன்றிணைவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே ஒரு அரசியல் ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

spacer.png

ஆனால் இவர்கள் சுயாதீனமாக இவ்வாறான ஒரு ஒழுங்கிற்குள் வரப் போவதில்லை. வரவும் முடியாது. இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலை பாதுகாப்பது தொடர்பில் சிந்தித்துவரும் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆகியோரின் தலையீடு அவசியப்படுகின்றது. அரசியல் சிந்தனையாளர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் போதுதான் அது ஒரு தேசிய இயக்கம் என்னும் தகுதியை பெறும். அவ்வாறில்லாது வெறுமனே கட்சிகள் சிலர் கூடி தேர்தலில் போட்டியிடுவதால், தேசிய இயக்கம் என்னும் தகுதியை பெற முடியாது. மேலும் இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போது அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அனைவரும் சமத்துவமாக நடத்தபாடாமையும் ஒரு காரணமாகும்.

கொள்கை சார்ந்த விடயங்கள், களநிலைமைகள் தொடர்பான பரிசீலனை, லொபி என்பவற்றை கையாள்வதற்கு தனியான குழுக்கள் இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று மேவும் நிலைமை இருக்கக் கூடாது. இவை அனைத்தையும் உள்ளடக்கியவாறு தற்காலிக உயர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பயணித்தால் நிச்சயம் இந்த கட்டுரை குறிப்பிடும் தேசிய அரசியல் இயக்கமொன்று பரிணமிக்கும். ஆனால் இது எழுதுவது போன்று இலகுவான விடயமல்ல என்பது உண்மை. தமிழ் சூழலில் இயங்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், கருத்துருவாக்கிகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் இது தொடர்பான உரையாடல் ஒன்று இடம்பெற வேண்டும் என்பதற்கான ஒரு முதல் படியே, இந்த கட்டுரை.

http://www.samakalam.com/தமிழர்-தேசத்திற்கு-இப்போ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.