Jump to content

வாய்ஸ் குளோனிங்: வெறும் 10 நிமிட குரல் பதிவை வைத்துக் கொண்டு 15 மொழிகளில் பேச வைக்கலாம் - மனிதனை விஞ்சும் தொழில்நுட்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ஸ் குளோனிங்: வெறும் 10 நிமிட குரல் பதிவை வைத்துக் கொண்டு 15 மொழிகளில் பேச வைக்கலாம் - மனிதனை விஞ்சும் தொழில்நுட்பம்

  • கிட்டி பல்மாய்
  • வணிக செய்தியாளர்
37 நிமிடங்களுக்கு முன்னர்
டிம் ஹெல்லர்

பட மூலாதாரம்,TIM HELLER

 
படக்குறிப்பு,

டிம் ஹெல்லர்

தன் குரலின் ஒலிப் பிரதியைக் கேட்ட போது, அது அத்தனை துல்லியமாக இருந்ததாக ஆச்சர்யப்பட்டு போனார் டிம் ஹெல்லர்.

ஒரு கணினி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு ஒரு நபரின் குரலை பிரதி எடுப்பதுதான் வாய்ஸ் குளோனிங் என்கிறார்கள்.

ஒருவர் பேசும் போது அவரின் குரலைப் பதிவு செய்தபின், கீபோர்டில் நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அதே குரலில் மென்பொருளால் பேச முடியும். அந்த அளவுக்கு சமீபத்தைய தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

அம்மென்பொருள் வெறுமனே ஒருவரின் உச்சரிப்புகளை மட்டும் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் பேசும் வேகம், குரலின் ஒலிப் பண்புகள், சுருதி, சுவாசிக்கும் முறை போன்ற பல பண்புகளையும் மென்பொருள் உள்வாங்கிக் கொள்கிறது.

 

இப்படி பிரதி எடுக்கப்படும் குரல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும். கோபம், பயம், மகிழ்ச்சி, காதல் போன்ற உணர்வுகளை மாற்றி வெளிப்படுத்த வைக்க முடியும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த டிம் ஹெல்லர் ஒரு குரல் கலைஞராக இருக்கிறார். இவர் கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார், ஒலி வடிவப் புத்தகங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார், ஆவணப் படங்களில் குரல் வழி உயிர் கொடுத்திருக்கிறார்.

இவர் தன் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள சமீபத்தில் வாய்ஸ் குளோனிங் செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.

உதாரணமாக ஒரேநேரத்தில் இவருக்கு இரண்டு பணிகள் கிடைத்தால், ஓரிடத்தில் இவரும், மற்றோர் இடத்துக்கு இவர் தன் குரலையும் அனுப்பி பயன்படுத்திக் கொள்வார்.

ருபல் படேல்

பட மூலாதாரம்,RUPAL PATEL

 
படக்குறிப்பு,

ருபல் படேல்

தம் குரலை பிரதி எடுக்க டிம் ஹெல்லர் பாஸ்டனில் இருக்கும் வோகலிட் (VocaliD) என்கிற நிறுவனத்துக்குச் சென்றார். இது குரல் பிரதி எடுக்கும் தொழில்நுட்ப சேவையை வழங்கும் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று.

இந்நிறுவனத்தை நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ருபல் படேல் நிறுவியுள்ளார். அவரே இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த நிறுவனத்தை கடந்த 2014ஆம் ஆண்டு நிறுவினார்.

தானே கற்றுக் கொள்ளும், புதிய விஷயங்களை பழகிக் கொள்ளும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் முன்னேறி இருக்கின்றன. இது குரல் வளக் கலைஞர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்கிறார் ருபல் படேல்.

"நாங்கள் பலதரப்பட்ட உச்சரிப்பு பாணிகளைக் கொண்ட குரல்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறோம்" என்கிறார் ருபல்.

"நாங்கள் சில மூன்றாம் பாலினத்தவர்களின் குரல்களை உருவாக்கியுள்ளோம், சில பாலின சமநிலை கொண்ட குரல்களை உருவாக்கியுள்ளோம். நாம் பேசுவதைப் போல தொழில்நுட்பமும் பேச வேண்டும். நம் அனைவருக்கும் ஒரு தனித்துவமான உச்சரிபுப் பாணிகளும் குரல் வளமும் இருக்கின்றன" என்கிறார் ருபல்.

இந்த வாய்ஸ் குளோனிங் வசதியைப் பயன்படுத்தி, ஒரு நடிகர் பேசும் வார்த்தைகளை மற்ற மொழிகளுக்கு மாற்றலாம். உதாரணமாக அமெரிக்க சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், இனி படத்தை மொழியாக்கம் செய்ய கூடுதலாக ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டாம்.

பிரதி எடுக்கப்பட்ட ஆங்கில குரல்களை 15 வேறு மொழிகளில் மாற்ற முடியும் என கனடாவைச் சேர்ந்த ரிசெம்பிள் ஏஐ (Rsemble AI) என்கிற நிறுவனம் கூறுகிறது.

ஒரு தரமான குரல் பிரதியைத் தயாரிக்க, தங்கள் மென்பொருளுக்கு சுமார் 10 நிமிடம் பேசும் பதிவு போதுமானது என்கிறார் அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சோஹைப் அஹ்மத்.

சோஹைப் அஹ்மத்

பட மூலாதாரம்,ZOHAIB AHMED

 
படக்குறிப்பு,

சோஹைப் அஹ்மத்

"உங்கள் குரல் பதிவை உள்வாங்கும் போது செயற்கை நுண்ணறிவு ஒரு குரலின் தீவிரத் தன்மை, பேசும் வேகம், குரலின் ஒலிப் பண்புகள் என ஆயிரக் கணக்கான பண்புகளை உள்வாங்கிக் கொள்கிறது" என்கிறார்.

டீப் ஃபேக் குற்றங்களுக்கு உதவலாம்

வாய்ஸ் குளோனிங்கில் பல்வேறு வணிக ரீதியிலான வாய்புகள் இருக்கிறதென்றாலும், இது போன்ற வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பங்கள் சைபர் குற்றங்களுக்கு வழி வகுக்கலாம் என்கிற கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது போன்ற குரல் பிரதிகளில் மிகப் பெரிய சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் எட்டி பாப்ரிட்ஸ்கி. கணினியில் உருவாக்கப்படும் போலி காணொளிகளைப் போல, வாய்ஸ் குளோனிங்குகளும் டீப் ஃபேக்தான்.

"மின்னஞ்சல் அல்லது எஸ் எம் எஸ் போன்றவைகளில் எளிதாக ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டம் செய்யலாம்" என்கிறார் மினர்வா லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர்

"நீங்கள் நம்பிக்கையோடு ஒருவரிடம் தொலைபேசியில் பேசுவது, அவரைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்வதுதான் இப்போது வரை ஒருவரை அடையாளம் காண்பதற்கான வழியாக இருக்கிறது."

இப்போது இது மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார் பாப்ரிட்ஸ்கி. "உதாரணமாக ஓர் ஊழியரை அழைத்து நிறுவனம் தொடர்பான முக்கிய விவரங்களை கேட்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த ஊழியர் தன் முதலாளியின் குரலை அடையாளம் கண்டு கொண்டார் என்றால், அவர் கூறுவதை அப்படியே செய்வார். எனவே இது சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும்".

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படி ஒரு குற்றம் சம்பவம் 2019ஆம் ஆண்டு நடந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தியாக வெளியானது. பிரிட்டனைச் சேர்ந்த மேலாளர் ஒருவருக்கு, ஜெர்மனியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரின் குரல் பிரதியை வைத்து 2,60,000 அமெரிக்க டாலரை தங்கள் கணக்குக்கு அனுப்பும் படி மோசடிக்காரர்கள் கூறினார்கள்.

இது போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் விதத்தில் உலகம் முழழுக்க பல நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. வெஞ்சர் பீட் என்கிற நிறுவனம் அதில் ஒன்று.

இவர்களைப் போன்ற நிறுவனங்களால் ஒரு குரல் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய முடியும். ஒரு குரல் பதிவில் இருக்கும் டிஜிட்டல் இரைச்சல்கள், சில சொற்களின் பயன்பாடுகள் போன்றவைகளைக் கண்காணிக்கிறார்கள்.

அரசாங்கங்கள், சட்ட ஒழுங்கு அமைப்புகளும் இந்த பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு, டீப் ஃபேக்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்ய அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்தி இருக்கிறது யூரோபோல். அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் டீப் ஃபேக்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரி மீண்டும் டெக்சாஸுக்குச் செல்வோம். டிம் ஹெல்லர் இன்னும் தன் குரல் பிரதியை யாருக்கும் விற்கவில்லை. ஆனால் சிலர் அதைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி இருக்கின்றனர் என்கிறார் டிம்.

இது போன்ற குரல் பிரதிகளால், நீண்ட காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் என பயப்படுகிறாரா அவர்?

"இது போன்ற தொழில்நுட்பங்கள் என் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என நான் கவலைப்படவில்லை" என்கிறார். "எப்போதும் உண்மையான மனித குரல்களுக்கு இடமிருக்கும் என கருதுகிறேன். குரல் பிரதிகள் இருப்பது என்னை அல்லது எவரையும் மாற்றுவதற்கானதல்ல, என் தொழிலில் அதை ஒரு கூடுதல் சாதனமாகக் கருதுகிறேன்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/science-57811458

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.