Jump to content

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி உதவுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசி உதவுமா?

  • ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 வயதுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இல்லாத போது, அவர்களுக்கு இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த சில மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தை நல மருத்துவரும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வருமான தேரணிராஜன், இன்ஃபுளுயன்சா (ஃப்ளூ) வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27 ஆயிரம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மீது அதன் தாக்கம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக குறைவாக இருந்ததாக அந்த ஆய்வாளர்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். அதே சமயம் இந்த ஆய்வு அல்லது இது போன்ற ஒரு சில ஆய்வுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த முடிவுக்கும் எளிதில் வந்துவிட முடியாது என்று கூறிய தேரணிராஜன், "உலக அளவில் இது போன்ற பல ஆய்வுகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகும் போது தெளிவு கிடைக்கும்," என்றார்.

இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போக்கு சமீபத்தில் அதிக எழுச்சி கண்டுள்ளதாக சென்னை ரெயின்போ உமன்ஸ் அண்ட் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடலில் பணியாற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவ நிபுணர் ஷோபனா ராஜேந்திரன் கூறினார்.

 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2009 - 10ஆம் ஆண்டுளில் சர்வதேச அளவிலான பன்றிக் காய்ச்சல் தொற்று பரவல் அதிகம் இருந்த காலத்தில்தான் ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தும் வழக்கம் இந்தியாவில் தொடங்கியது," என்றார்.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன் பின்னர் இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு கட்டாயமாக செலுத்த பரிந்துரை வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் குழந்தைகள் ஃப்ளூ போன்ற காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு அதன் தீவிர தாக்குதல்களை தடுக்க முடியும் என்கிறார்.

ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியின் எதிர்ப்பாற்றல் சற்று குறைவாக இருப்பதாகவும், அதன் விலையும் சற்று அதிகமாக இருப்பதாலும் அதை இந்திய தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் இன்னமும் சேர்க்கவில்லை என ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் சூழலில், மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சாதாரண அல்லது ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் அறிகுறிகளும் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்பதால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இது போன்ற தடுப்பூசிகள் அவசியம் என்கிறது குழந்தை மருத்துவத்தின் இந்திய அகாடமி (Indian academy of Pediatrics).

ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை மட்டுமே எளிதில் தாக்கக் கூடியதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூலமாக அது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவும் என்பதால் இந்த தடுப்பூசி மிக அவசியமாக கருதப்படுகிறது.

ஆனால் அதே சமயம் இந்திய தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி இடம் பெறவில்லை.

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம்,TWITTER

 
படக்குறிப்பு,

சென்னை ராஜீவ் காந்த் அரசு பொது மருத்துவமனை

இது தொடர்பாக பேசிய சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன், இந்த இன்ஃபுளுயன்சா தடுப்பூசியை இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் செலுத்தியாக வேண்டும் என்கிற நிலை உண்டாகவில்லை என்கிறார். அத்தோடு இந்த தடுப்பூசி ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதும் என்கிற நிலையிலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த தடுப்பூசியை ஆண்டுதோறும் பருவ காலத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும் என்றார்.

இந்த இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியும் எதிர்காலத்தில் தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இன்று இந்தியாவில் இந்த ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/india-57818910

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.