Jump to content

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

 

DSCN1080 1 730x438 1 சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன்

அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும்  என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்த அவர்,

சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களுக்கு தெரியாமல் நடந்து இருக்கின்றது, முறையான அனுமதி பெறப்பட வில்லை, இப்படி யெல்லாம் பார்க்கின்ற போது இன்று சீனா யாழ்ப்பாண குடாநாட்டு பக்கமாகச் சென்றால் அது இந்தியா இலங்கை மீது ஆத்திரம் அடையக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்.

ஆகவே இந்நிலையில் பார்த்தால் அவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் வருகின்ற போது இந்தியா தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனும் நிலைக்கு வரும். எனவே சீனாவும் இந்தியாவும் போட்டி போடுகின்ற மோதுகின்ற ஒரு போர்க் களமாக இந்து மா சமுத்திரத்தில் இலங்கை மாறப் போகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

எனவே இப்படியான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அண்மையில் உள்ள இந்தியா, ஜப்பான், சீனா போன்ற மற்றய நாடுகளோடு பொதுவான சமநிலையான முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆலோசனையாக இருக்கின்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்ற போது அது இந்தியாவிற்கு விடுக்கின்ற ஓரு சவாலாகத் தான் பார்க்கப் படுகின்றது, ஏன் என்றால் இன்று சீனா ஒரு முத்துமாலை வியூகத்தை அமைத்து வருகின்றது. பாக்கிஸ்தானாக இருக்கட்டும் நேபாளமாக இருக்கட்டும் மியன்மராக இருக்கட்டும் வங்காளதேசாக இருக்கட்டும் எல்லா நாடுகளிற்கும் அளவிற்கு அதிகமான கடன்களை கொடுத்து பொறிக்குள் விழுத்தி அந்த இந்தியாவை சுற்றி பெரிய தொரு முத்துமாலை வியூகத்தை அமைத்து இருக்கின்றது. அந்த முத்துமாலை வியூகத்தில் முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இப்போது இலங்கை மாறி இருக்கின்றது.

வட புலத்தில் அவர்கள் தங்களுடைய கால்களை தரிப்பார்களாக இருந்தால் இந்தியாவின் ஆயுத களஞ்சிய மென்பது தென்னிந்தியா பக்கமாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பங்களை வைத்துக் கொண்டு இந்தியாவை முழுமையாக அவதானிப் பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் நான் சொல்லக் கூடிய ஒரு விடயமாக இருப்பது நிச்சயமாக சீனா கிழக்கிலும் வடக்கில் கால் ஊன்றுகின்ற போது நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாக அது இருக்கும் அதன் மூலமாக இந்தியா மாத்திரம் அதனை எடுத்துக் கொள்ளாமல் யப்பானும் விரும்பாது, அமெரிக்கா விரும்பாது, மேற்குலக நாடுகளும் விரும்பாது, எனவே அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் சில வேளைகளில் கச்சதீவை கூட இந்தியா மீளப் பெறக்கூடிய நிலமை ஏற்படலாம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/chinasinfiltration-animosity-sri-lanka-india/

Link to comment
Share on other sites

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலும்புத் துண்டு கிடைத்தால் துள்ளிக் குதிக்க வேண்டியதுதான்...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சீனாவின் ஆதிக்கம் பெரும்பாலும் பொருளாதார ரீதியானது. 

தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அநாவசியமாக துள்ளிக் குதிக்கிறார்கள் ?

அரசியல் பாமரனாகிய எனது பார்வையில்

இந்தியாவை மீறி தமிழர்களுக்கு ஒரு துரும்பும் கிடைக்காது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. எதிர்பாராத வகையில் அது மாறிவிட்டது. பலம், வளம் இரண்டும் இல்லாத நாம் இரண்டு தரப்புடனும் சுமூகமாகச் செல்வதே நல்லது.

என்றாவது ஒரு நாள் சிங்களம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரும். அப்போது இளைய புதிய அரசியல்வாதிகள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

 

27 minutes ago, valavan said:

உண்மையாகவே இவர்கள் பிரச்சனை விளங்கவில்லை, 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகைமை வந்தால் இவர்கள் எதுக்கு பதறுகிறார்கள்?

இலங்கை என்பது தமிழர்களை தங்களது தேச பிரஜைகள் என்று மனதார ஏற்றுக்கொண்ட ஒருநாடா?

அல்லது இந்தியா என்பது என்றைக்காவது ஒருநாள் தமிழர்கள் நலனை மனதார கருதி செயல்பட்டநாடா?

எதிரியும் எதிரியும் மோதிக்கொள்ளும்போது இடையில் புகுந்து விலக்கிவிட நமக்கு என்ன தேவையிருக்கிறது?

பெயரளவில் இவர்கள் தமிழர்கட்சிகள் என்ற நாமம் சூடிக்கொண்டாலும்  சிங்கள தேசத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

விசயம் அதுவல்ல.... கையை மீறி விசயம் போட்டுது.... நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

அய்யாமாரே, இவர்களை, இந்த டெல்லிக்காரரை, நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. மாறாக சீனா நமது பிரதேசத்தில் முதலீடு செய்து, அமைதியை உருவாக்கினால், புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கையுடன் வந்து, அவர்களுடன் சேர்ந்து வணிகம் செய்வார்கள் என்று அடித்து விடுங்கள், துணிவுடன்....

அதுவே, இன்று சரியான அரசியல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

நீங்களாவது, இந்தியா.... இந்தியா என்று உருட்டிக்கொண்டிருங்கோ என்று சொல்லி இருக்கு... அந்தப்பக்கமா சிவாஜிலிங்கம் வேற உருட்டுறார். வேறு பக்கமா ஸ்ரீதரன்....

இவர்களை தூண்டி விடுவது, அண்மையில் சீனாவை கையாள்வது எவ்வாறு என்று தமக்கு  தெரியும் என்று  தம்பட்டம் அடித்த ஹிந்தியை தூதரகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியாவுக்கு எப்போதும் உருட்டி விளையாடுவதற்கு தறுகாயாக  தமிழ்த்தலைமைகள் இருக்கிறார்கள். எந்தப்பக்கம் உருட்டினாலும் உருண்டுகொண்டே இருப்பார்கள். அது அவர்களின் ராஜதந்திரம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் சீன அதிகார போட்டி இருக்கும் வரைக்கும்  ஈழத்தமிழர் பிரச்சனை மூடப்பட்டே இருக்கும். காரணம் எமது தமிழ் அரசியல் தலைவர்களின் தீவிரம் அப்படி.
சர்வதேச அரசியலில் தமது தேவைக்காக யாராவது ஈழத்தமிழர் பிரச்சனையை தூசு தட்டி நல்ல தீர்வு வந்தால் ஒழிய வேறு வழியில்லை.

எமது அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய சோத்து மட்டைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.