Jump to content

டோக்கியோ ஒலிம்பிக்: மூன்று இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கை எட்டிப்பிடித்த கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: மூன்று இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கை எட்டிப்பிடித்த கதை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஒலிம்பிக் விளையாட்டு

பட மூலாதாரம்,AFP

டோக்கியோவிலிருந்து பதக்கங்களைக் கொண்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர்களின் சொந்த வாழ்க்கை, யுத்த களத்தின் போராட்டத்துக்கு சளைத்தது அல்ல.

பல தசாப்தங்களாக ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக் பதக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.

இந்த முறை இந்தியாவின் பல வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்களில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று மல்யுத்த வீரர்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

தீபக் புனியா (86 கிலோ, ஃப்ரீஸ்டைல்)

டோக்கியோ ஒலிம்பிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மல்யுத்த களத்தில் தீபக் புனியா

ஹரியாணாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தின் சாரா கிராமத்தில் பால் விற்பனையாளர் குடும்பத்தில் பிறந்த தீபக் புனியா, வெறும் 7 ஆண்டுகளில் ஒலிம்பிக்கை எட்டியுள்ளார்.

 

அவரது தந்தை சுபாஷ் , 2015 முதல் 2020 வரை ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் இருந்து பால், உலர் பழங்கள் மற்றும் பழங்களை எடுத்துக்கொண்டு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்திற்கு சென்று தீபக்கிற்கு அளித்துவந்திருக்கிறார். மழை, வெய்யில் அல்லது குளிர்காலம் என்று எதுவாக இருந்தாலும், இந்த நடவடிக்கை ஒருபோதும் தடைபடவில்லை.

சரியான உணவு இல்லாத காரணத்தால் தீபக்கிற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் விரும்பினர்.

தீபக் பூனியாவை அவருக்கு நெருக்கமானவர்கள் 'கேத்லி(கெட்டில்)பயில்வான்' என்றும் அழைக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு வேடிக்கையான சம்பவம் உள்ளது.

தீபக்கிற்கு 4 வயதாக இருந்தபோது அவருக்கு இந்த செல்லப்பெயர் கிடைத்தது.

கிராமத்தின் தலைவர் தீபக்கிற்கு ஒரு கெட்டிலில் (kettle) வைத்திருந்த பாலை குடிக்க கொடுத்தார்.. தீபக் பால் முழுவதையும் ஒரு நொடியில் குடித்தார். பின்னர் தலைவர் அவருக்கு இன்னொரு கெட்டிலைக் கொடுத்தார். தீபக் அதையும் குடித்து விட்டார். இது போல 5 கெட்டில் பாலையும் அவர் குடித்து முடித்தார்.

இவ்வளவு சிறிய குழந்தை எப்படி இவ்வளவு பால் குடிக்க முடியும் என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்றிலிருந்து எல்லோரும் அவரை 'கேத்லி பயில்வான்' என்று அழைக்கத் தொடங்கினர்.

தீபக் புனியா ஒரு வேலையைப் பெறுவதற்காக மல்யுத்த பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அவர் தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க விரும்பினார். ஆனால் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அவர் 2016 ல் கேடட் பிரிவு மற்றும் 2019 ல் ஜூனியர் பிரிவு ஆகிய இரண்டிலும் உலக சாம்பியனானார்.

2019 ஆம் ஆண்டில், கஜகஸ்தானின் நூர்-சுல்தானில் நடைபெற்ற சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

அன்ஷு மல்லிக் மற்றும் சோனம் மல்லிக்

டோக்கியோ ஒலிம்பிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அன்ஷு மல்லிக்

ஹரியாணாவின் நிடானி கிராமத்தைச் சேர்ந்த அன்ஷு மற்றும் மதீனா கிராமத்தைச் சேர்ந்த சோனம் இருவருக்குமே வயது 19. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய வீரர்களில் வயதில் சிறியவர்களில் இவர்கள் அடங்குவார்கள்.

இந்த இரு மல்யுத்த வீரர்களின் குழு உறுப்பினர்களும் , குடும்பத்தினரும், இவர்கள் 2020 ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கவில்லை.

2024 இல் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு அவரை தயார்படுத்த வேண்டும் என்று அன்ஷுவின் தந்தை தரம்வீர் மற்றும் பயிற்சியாளர் ஜகதீஷூம்நினைத்தனர். சோனமின் பயிற்சியாளர் அஜ்மீர் சிங்கும் இதே விஷயத்தைத்தான் சொல்கிறார். ஆனால் இரு வீரர்களிடமும் நீங்கள் டோக்கியோவுக்கு தகுதி பெற வேண்டும் என்று கூறப்பட்டது.

டோக்கியோவில், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் , 62 கிலோ எடை பிரிவில் சோனமும் பங்கேற்பார்கள். அவர்கள் இருவருமே தேசிய அளவில் 60 கிலோ எடை பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் பலமுறை அவர்கள் மல்யுத்த களத்தில் மோதியுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சோனம் மல்லிக்

இருவரும் சிறந்த மல்யுத்த வீரர்கள் என்பதால் சில நேரங்களில் சோனம் வென்றார். சில சமயங்களில் அன்ஷு வெற்றிபெற்றார். இருவரும் ஒரே பிரிவில் தொடர்ந்து விளையாடினால், அவர்களில் ஒருவர் பாதிப்புக்கு உள்ளாவார் என்று கருதப்பட்டது. எனவே இருவரின் எடை பிரிவும் மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து 62 கிலோ எடை பிரிவில் சோனமும், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் வைக்கப்பட்டனர். இதன் விளைவாக இருவரும் தங்கள் எடை பிரிவுகளில் மூத்த மல்யுத்த வீரர்களை தோற்கடித்து ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றனர்.

அன்ஷுவின் தந்தை தரம்வீர் தனது மகனை ஒரு பெரிய மல்யுத்த வீரராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டதாகவும், அவரை நிடானி விளையாட்டுப் பள்ளியில் சேர்த்ததாகவும் கூறுகிறார்.

பின்னர் ஒரு நாள் அன்ஷு தனது பாட்டியிடம் தானும் மல்யுத்தம் செய்து இந்தியாவுக்கு பதக்கங்களைக் கொண்டு வரப்போவதாகக் கூறினார். அதன் பின்னர் தரம்வீர், அன்ஷுவையும் அதே பயிற்சி மையத்தில் சேர்த்தார். அப்போது அன்ஷுவுக்கு 12 வயதுதான்.

பயிற்சியில் சேர்ந்த பிறகு அன்ஷூ, 3-4 ஆண்டுகளாக பயிற்சிபெற்றுவந்த மல்யுத்த வீரர்களை வெறும் 6 மாதங்களில் தோற்கடிக்கத் தொடங்கினார். இதையடுத்து அவரிடம் பெருமளவு மல்யுத்த திறமை இருப்பதை அனைவருமே ஒப்புக் கொண்டனர்.

மறுபுறம், சோனமின் பயணம் மிகவும் கடினமானது. 2016 ஆம் ஆண்டில் சோனம் மல்லிக்கின் வலது கையில் முடக்குவாதம் ஏற்பட்டது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் படிப்படியாக பக்கவாத வடிவத்தை எடுத்தது.

அவர் வாழ்நாள் முழுவதும் மல்யுத்தத்தில் ஈடுபட முடியாது என்று கூட நரம்பியல் நிபுணர் கூறியிருந்தார். ஆனால் சோனம் பக்கவாதத்தை வென்று 2017 ல் பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வென்றிபெற்றார். இப்போது அவர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் மல்யுத்த அணிக்கு தலைமை தாங்குவார்.

(பி.டி.ஐ செய்திமுகமையின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் அமன்பிரீத் சிங்குடனான உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டது)

https://www.bbc.com/tamil/sport-57832299

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோக்கியோ ஒலிம்பிக்: தேஜிந்தர் வீசும் குண்டு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்குமா?

  • ஆதேஷ் குமார் குப்தா
  • மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த வாரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும். இந்தியா 120 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் முழு உற்சாகத்துடன் இந்த விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்கும்.

இந்திய குழுவில், 26 தடகள விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தடகள போட்டிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும்.

இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள குண்டு எறிதல் வீரரான தேஜிந்தர் பால் சிங் தூர்,கடைசி நிமிடத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

கடந்த மாதம் பட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்சில் தேஜீந்தர் பால் சிங் தூர் 21.49 மீட்டர் குண்டு எறிந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். டோக்கியோ செல்லும் அணியில் இடம்பெற 21.10 மீட்டர் தூரம் எறிய வேண்டியது அவசியமாக இருந்தது.

 

தேஜீந்தர் இந்த தடையை எளிதில் தாண்டியது மட்டுமல்லாமல், தனது சொந்த மற்றும் ஆசிய சாதனையையும் முறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவருக்கு முன் ஆசிய சாதனையை, செளதி அரேபியாவின் சுல்தான் அப்துல் மஜீத் அல் ஹெப்ஷி நிகழ்த்தியிருந்தார். அவர் 2009 இல் 21.13 மீட்டர் எறிந்து இந்த சாதனையை படைத்தார். பட்டியாலாவில் சாதனை படைக்கும் முன் தேஜிந்தரின் அதிகபட்ச எறிதல் தூரம் 20.92 மீட்டராக இருந்தது.

தேஜிந்தர் பால் சிங் தூர் ,இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒலிம்பிக் அணியில் இடம் பெற முயற்சித்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மார்ச் மாதத்தில் பட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்சில் அவர் பங்கேற்றார். ஆனால் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியவில்லை.

ஆசிய விளையாட்டுகளில் தங்கம்

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20.75 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றபோது தேஜிந்தர் பால் சிங் பெயர் பிரபலமானது. இந்த வெற்றியை அவர் ஒரு தேசிய சாதனையுடன் அடைந்தார்.

2018 காமன்வெல்த் போட்டிகளில் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் 19.42 மீட்டர் மட்டுமே எறிந்து அவர் 8 வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்த நாட்களில் புற்றுநோயுடன் போராடி வந்த தனது தந்தையின் நிலை அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம்.

தேஜிந்தர் 2017 ஆம் ஆண்டிலிருந்து வெற்றிப்படிகளில் ஏறத்தொடங்கினார். பட்டியாலாவில் நடைபெற்ற, ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டிகளில் அவர் 20.40 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்தார். இருந்தாலும், உலக சாம்பியன்ஷிப்பில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில் அதில் தகுதி பெறுவதற்கான தூரம் 20.50 மீட்டர் ஆகும்.

2017 ஆம் ஆண்டில் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தேஜிந்தர் பால் 19.77 மீட்டர் குண்டெறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அங்கு அவர் 0.03 மீட்டர் சிறிய வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றார்.

தந்தை கண்ட கனவு

அவரது பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லோன், தேஜிந்தரை குண்டு எறிதலில் வல்லுநராக மாற்றும் பணியை செய்தார்.

முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதை தனது தந்தையால் பார்க்க முடியவில்லையே என்று தேஜிந்தர் வருத்தப்படுகிறார். ஏனெனில் அவரது தந்தை இப்போது இந்த உலகத்தில் இல்லை.

அவரது தந்தை கர்ம் சிங், குண்டு எறிதலில் இறங்குமாறு தேஜிந்தரை ஊக்குவித்தார். அந்த நேரத்தில் தேஜிந்தரின் முதல் தேர்வு கிரிக்கெட் விளையாடுவதாகும். அவர் மோகாவில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.

தேஜிந்தர் பாலின் சித்தப்பாவும் ஒரு குண்டு எறிதல் வீரர். எனவே, அணி விளையாட்டுக்கு பதிலாக தனிப்பட்ட விளையாட்டை தேர்வு செய்வதை தந்தை கர்ம் சிங் விரும்பினார்.

கை காயம் மற்றும் கொரோனா பயம்

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டோக்கியோவுக்கு தகுதி பெற்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக தேஜிந்தர் ஒப்புக்கொள்கிறார்.

கடைசி நிமிடத்தில் டோக்கியோவுக்கு தகுதி பெற்றது குறித்துப்பேசிய அவர், கையில் காயம் ஏற்பட்டதால் இரண்டு மூன்று மாதங்களுக்கு குண்டுஎறிய முடியவில்லை என்று கூறுகிறார்.

இந்தக் காரணத்தினால் மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் ஃபெடரேஷன் கோப்பையில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

காயத்திலிருந்து மீள அவர் கையில் பிளாஸ்டர் போட வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெளிப்பட்ட ஏமாற்றமளிக்கும் செயல்திறன் மனதில் அழுத்தத்தை உருவாக்கத் தொடங்கியது.

கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு போன்றவை இந்த அழுத்தத்தை மேலும் கூட்டியது.. சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டன.

அந்த காலகட்டத்தில், இந்திய தடகள கூட்டமைப்பு மற்றும் இந்திய விளையாட்டு அதிகார அமைப்பும் தொடர்ந்து அவருக்கு உதவின. இரானில் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால், டோக்கியோவுக்கு செல்ல முடியுமா முடியாதா என்று தேஜிந்தர் கவலை கொண்டார்.

இது தவிர ஜூன் மாதத்தில் கஜகஸ்தானுக்கு செல்வதும் ரத்து செய்யப்பட்டது. பட்டியாலாவில் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் நடக்குமா என்றும் தேஜிந்தர் சந்தேகிக்கத் தொடங்கினார். எல்லாம் சரியாக நடந்ததற்காக இப்போது அவர் கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

22 மீட்டர் எறிவதே இலக்கு

தரவரிசை அடிப்படையில் டோக்கியோவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தனிப்பட்ட முறையில் தகுதி பெற தான் விரும்பியதாக தேஜீந்தர் பால் கூறுகிறார். நடப்பு சாதனையோடு கூடவே ஒரு மீட்டர் கூடுதலாக எறிய அவரால் முடிந்தால் டோக்கியோவில் அவர் பதக்கத்தை வெல்லமுடியும்.

அத்தகைய வாய்ப்பு குறித்துப்பேசிய அவர், 22 மீட்டர் எறியமுடிந்தால் பதக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் அனைவருக்கும் அழுத்தம் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

டோக்கியோவில் 22 மீட்டர் எறிவாரா அவர்? பிப்ரவரி மாதத்தில் பயிற்சியின்போது இதை எளிதாக செய்ய முடிந்தது என்று தேஜிந்தர் கூறுகிறார். அந்த நாட்களில் போட்டி இருந்திருந்தால், இந்த இலக்கை அவர் அடைந்திருக்கலாம்.

ஆசிய போட்டி தங்கம் வாழ்க்கையை மாற்றியது

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெறப்பட்ட தங்கப் பதக்கத்தை தனது வாழ்க்கையின் திருப்புமுனையாக தேஜிந்தர் பால் கருதுகிறார். இதன் காரணமாக அவர் பிரபலமானார். அவருக்கு நிதி உதவியும் கிடைத்தது. அதன் அடிப்படையில் அர்ஜுனா விருதையும் அவர் பெற்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு தனது தந்தையின் நோய் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என்று தேஜிந்தர் கூறினார். தந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனையே அவரது மனதில் எப்போதும் இருந்தது. தேஜிந்தர் பால் ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவரது தந்தை காலமானார்.

அந்த நாட்களில் குடும்பத்தினர் ஒருபோதும் தந்தையின் உடல்நிலை குறித்து முழு விஷயத்தையும் தன்னிடம் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பயிற்சியை இடையில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று அவர்கள் அஞ்சினர் என்று தேஜிந்தர் கூறுகிறார்.

அந்த நாட்களில் குடும்பத்தின் நிதி நிலை சரியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லோன் ,பெரிதும் உதவியதுடன், தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்கமும் அளித்தார்.

தேஜிந்தர் பால் சிங் தூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா காரணமாக உள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் டோக்கியோவில் அவரது செயல்திறன் எப்படி இருக்கும் என்பது பற்றிப்பேசிய தேஜிந்தர் பால், அங்கு சென்றடைந்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும் என்றார். முககவசம் அணிந்து விளையாடுவது எளிதானதாக இருக்காது அவர் கருதுகிறார்.

அவர் பட்டியாலாவில் பயிற்சி செய்கிறார், ஆனால் அதிகரித்து வரும் வெப்பத்தைப் பற்றியும் அவர் கவலைப்படுகிறார். இருப்பினும் தனது உடற்தகுதி குறித்து அவர் திருப்தியுடன் உள்ளார்.

இன்று வரை ஒலிம்பிக்கில் தடகளப்பிரிவில் இந்தியா எந்த பதக்கமும் பெறவில்லை என்பது குறித்து பேசிய அவர், இந்த முறை பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தினமும் காலையில் மூன்று மணி நேரமும், மாலை மூன்று மணி நேரமும் அவர் பயிற்சி செய்கிறார்.

ரியோ ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில், அமெரிக்காவின் ரியான் க்ரூசர் 22.52 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்கரான ஜாய் கோவாக்ஸ் 21.78 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கமும், நியூசிலாந்தின் தாமஸ் வால்ஷ் 21.10 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், தேஜிந்தர் பால் சிங் தூரின் தற்போதைய சாதனை டோக்கியோவில் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

https://www.bbc.com/tamil/india-57857634

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.