Jump to content

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

5 minutes ago, வாத்தியார் said:

Hochwasser in Köln: Stromausfälle und Verkehrschaos – das müssen Sie wissen. Lange Staus auf der A1 bei Erftstadt: Infolge des Unwetters waren mehrere Autobahnen in Nordrhein-Westfalen gesperrt. (Quelle: dpa/Marius Becker)

Erftstadt Unwetter DHL Wagen

DSC08434

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

என்னுடைய ஊரிலிருந்து 30  km  க்கு அப்பால்
பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும்.
ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70  பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதில் ஒரே நகரில் 60  பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள்.
போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

 

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் பெரும் மழையினால் பெரும் வெள்ளம் குறைந்தது 66 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 70 பேர் காணவில்லை என்று செய்தியில் சொன்னார்கள்.

50 minutes ago, Kandiah57 said:

நான் சுகமாகயிருக்கிறேன்

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

Link to comment
Share on other sites

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

54 minutes ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

Link to comment
Share on other sites

1300 பேரைக் காணவில்லை என்று காடியன் பத்திரிக்கை கூறுகின்றது.  கு. சா அண்ணா நலமுடன் இருப்பார் என நம்புகின்றேன்.

https://www.theguardian.com/world/2021/jul/16/western-germany-floods-angela-merkel-horror-catastrophe-deaths-missing-search-flooding-belgium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் (சி.என்.என்) ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை, ஒரு நூற்றாண்டில் பெய்த மழையால் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை பேரழிவு தரக்கூடிய கொடிய ஃபிளாஷ் வெள்ளம் ஏற்பட்டது, இது ஒரு பெரிய அளவிலான மீட்பு முயற்சியைத் தூண்டியது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் வேகமாக நகரும் நீரோடைகள் முழு நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து கட்டிடங்கள் இடிந்து விழுந்து குடியிருப்பாளர்களை சிக்கித் தவிக்கின்றன என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடுமையான வெள்ளத்தில் 55 பேர் இறந்துள்ளனர், ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் ஜெர்மனி 49 பேர் இறந்த நிலையில், 6 பேர் இறந்தனர். லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. "
சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இவ்வளவு மழைப்பொழிவை நாங்கள் காணவில்லை" என்று ஜெர்மன் வானிலை சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பிரீட்ரிச் சி.என்.என். "சில பகுதிகளில் மழையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக நாங்கள் கண்டிருக்கிறோம், இது வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக சில கட்டிட கட்டமைப்புகள் இடிந்து விழுகின்றன."

ஒரு ஜெர்மன் மாநிலத்தில் குறைந்தது 30 பேர் இறந்தனர்

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் இறந்து கிடந்ததாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சி.என்.என். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், குறைந்தது 19 பேர் இறந்து கிடந்தனர், ஆனால் "அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கோப்லென்ஸில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சி.என்.என். பேட் நியூனேஹர்-அஹ்ர்வீலர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் அவசரகால தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், வாஷிங்டன் டி.சி.க்கு தனது ஸ்வான்சோங் விஜயத்தில் இருக்கிறார், தனது நாட்டின் சில பகுதிகளை தாக்கியுள்ள கொடிய வெள்ளம் ஒரு "பேரழிவு" என்று கூறினார். "இங்கே வாஷிங்டனில், எனது எண்ணங்கள் எப்போதுமே நம் தாயகத்தில்தான் இருக்கின்றன" என்று மேர்க்கெல் வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பிடனுடனான சந்திப்புக்கு முன்னதாக கூறினார். "இந்த மணிநேரங்களில் அமைதியான இடங்கள் ஒரு பேரழிவைச் சந்திக்கின்றன, ஒரு சோகம் என்று ஒருவர் கூறலாம். கடுமையான மழை மற்றும் வெள்ளம் இதை விவரிக்க மிகவும் போதாத சொற்கள் - எனவே இது உண்மையில் ஒரு பேரழிவு." வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் உடனடி பதிலளிப்பதில் கவனம் செலுத்துவதாக மேர்க்கெல் கூறினார், ஆனால் மீட்புக்கு உதவ நீண்டகால நிதி உதவிக்கான ஒரு மூலோபாயத்தில் பணியாற்ற தனது நாட்டின் நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். .
"இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்காக நான் துக்கப்படுகிறேன் - இந்த எண்கள் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் பலர் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இரங்கல் தெரிவித்தார். "வெள்ளப் பகுதிகளில் ஏராளமான மக்கள் தாங்க வேண்டிய பேரழிவால் நான் அதிர்ச்சியடைகிறேன். இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள் தெரிவிக்கின்றன" என்று சீபர்ட் ட்விட்டரில் எழுதினார்.

https://www.cnn.com/2021/07/15/europe/germany-deaths-severe-flooding-intl/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

உறவுகள் நலமா?

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

 

 

 

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செய்தி.

ஒரு நாளில், ஒரு சதுர மீற்றருக்கு... 20 லீற்றர் மழை பெய்தமையால், 
இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவி அண்ணா பிரான்ஸ் என நினைகிறேன்.

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

6 hours ago, புங்கையூரன் said:

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

ஓம் ஒரு கண நேரத்தில் எல்லாம் மாறி விடும்.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

 

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

 

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

சாந்தி அக்கா சுகம் என அறிந்தது சந்தோசம். நானும் எழுதும் போது யோசித்தேன். அவவின் கட்டுரை ஒன்றில் ரைன் நதியை ரயிலில் கடப்பது போல வரும். வீணாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எழுதவில்லை. 

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி?

 

10 minutes ago, goshan_che said:

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

குமாரசாமி அண்ணைக்கு... தற்போது தொலைபேசி எடுத்து பார்த்தேன்.
மணி அடிக்கின்றதே தவிர, பதில் வரவில்லை.

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

இந்த வெள்ளம்...  கண நேரத்தில், 
தாம் சுதாகரிக்க முன்னம்... பாய்ந்து வந்தது என்று, 
பாதிக்கப் பட்டவர்கள்... தொலைக் காட்சியில் தெரிவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

32 minutes ago, தமிழ் சிறி said:

 

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

 

 

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

Link to comment
Share on other sites

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு யேர்மனியின் பகுதி.

Reinland-Germany1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பாதகாப்பாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் உறவுகள்.. ஒவ்வொருத்தரா வந்து சைன் வைத்துட்டு போனால் நன்று... அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

அந்தாளின்ரை... சுபாவமே அப்படித்தானே, நிழலி. :)
அதனால்... நாம், எல்லோரும்... அவரை விரும்புகின்றோம். 💓

 (கையோடை... அவரின் திண்ணை தடையை எடுத்து விடுங்களேன்.)  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும் சுகங்களை  அறியத்தந்தமைக்கும் நன்றி உறவுகளே

குமாரசாமியண்ணையின் சுகங்கள் அறிய  ஆவல்

சுவி அண்ணை பரிசில் நிற்பதாக சொன்னார்

எனவே  கவலைப்பட ஏதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

நாதம்ஸ்.... 
இங்கு, வெள்ளம் வந்த இடத்திலும்... 
சென்ற கிழமை,  பயங்கர வெய்யில் அடித்தது.
சனம் எல்லாம்.. சந்தோசப்பட,  இப்படி நடந்து விட்டது.

இந்த... வெள்ளம் வரப் போகுது என்று... ஏன் அறிவிக்கவில்லை என்று,
அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு.... 

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.