Jump to content

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

5 minutes ago, வாத்தியார் said:

Hochwasser in Köln: Stromausfälle und Verkehrschaos – das müssen Sie wissen. Lange Staus auf der A1 bei Erftstadt: Infolge des Unwetters waren mehrere Autobahnen in Nordrhein-Westfalen gesperrt. (Quelle: dpa/Marius Becker)

Erftstadt Unwetter DHL Wagen

DSC08434

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

என்னுடைய ஊரிலிருந்து 30  km  க்கு அப்பால்
பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும்.
ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70  பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதில் ஒரே நகரில் 60  பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள்.
போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

 

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் பெரும் மழையினால் பெரும் வெள்ளம் குறைந்தது 66 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 70 பேர் காணவில்லை என்று செய்தியில் சொன்னார்கள்.

50 minutes ago, Kandiah57 said:

நான் சுகமாகயிருக்கிறேன்

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

Link to comment
Share on other sites

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

54 minutes ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

Link to comment
Share on other sites

1300 பேரைக் காணவில்லை என்று காடியன் பத்திரிக்கை கூறுகின்றது.  கு. சா அண்ணா நலமுடன் இருப்பார் என நம்புகின்றேன்.

https://www.theguardian.com/world/2021/jul/16/western-germany-floods-angela-merkel-horror-catastrophe-deaths-missing-search-flooding-belgium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் (சி.என்.என்) ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை, ஒரு நூற்றாண்டில் பெய்த மழையால் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை பேரழிவு தரக்கூடிய கொடிய ஃபிளாஷ் வெள்ளம் ஏற்பட்டது, இது ஒரு பெரிய அளவிலான மீட்பு முயற்சியைத் தூண்டியது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் வேகமாக நகரும் நீரோடைகள் முழு நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து கட்டிடங்கள் இடிந்து விழுந்து குடியிருப்பாளர்களை சிக்கித் தவிக்கின்றன என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடுமையான வெள்ளத்தில் 55 பேர் இறந்துள்ளனர், ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் ஜெர்மனி 49 பேர் இறந்த நிலையில், 6 பேர் இறந்தனர். லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. "
சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இவ்வளவு மழைப்பொழிவை நாங்கள் காணவில்லை" என்று ஜெர்மன் வானிலை சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பிரீட்ரிச் சி.என்.என். "சில பகுதிகளில் மழையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக நாங்கள் கண்டிருக்கிறோம், இது வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக சில கட்டிட கட்டமைப்புகள் இடிந்து விழுகின்றன."

ஒரு ஜெர்மன் மாநிலத்தில் குறைந்தது 30 பேர் இறந்தனர்

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் இறந்து கிடந்ததாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சி.என்.என். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், குறைந்தது 19 பேர் இறந்து கிடந்தனர், ஆனால் "அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கோப்லென்ஸில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சி.என்.என். பேட் நியூனேஹர்-அஹ்ர்வீலர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் அவசரகால தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், வாஷிங்டன் டி.சி.க்கு தனது ஸ்வான்சோங் விஜயத்தில் இருக்கிறார், தனது நாட்டின் சில பகுதிகளை தாக்கியுள்ள கொடிய வெள்ளம் ஒரு "பேரழிவு" என்று கூறினார். "இங்கே வாஷிங்டனில், எனது எண்ணங்கள் எப்போதுமே நம் தாயகத்தில்தான் இருக்கின்றன" என்று மேர்க்கெல் வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பிடனுடனான சந்திப்புக்கு முன்னதாக கூறினார். "இந்த மணிநேரங்களில் அமைதியான இடங்கள் ஒரு பேரழிவைச் சந்திக்கின்றன, ஒரு சோகம் என்று ஒருவர் கூறலாம். கடுமையான மழை மற்றும் வெள்ளம் இதை விவரிக்க மிகவும் போதாத சொற்கள் - எனவே இது உண்மையில் ஒரு பேரழிவு." வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் உடனடி பதிலளிப்பதில் கவனம் செலுத்துவதாக மேர்க்கெல் கூறினார், ஆனால் மீட்புக்கு உதவ நீண்டகால நிதி உதவிக்கான ஒரு மூலோபாயத்தில் பணியாற்ற தனது நாட்டின் நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். .
"இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்காக நான் துக்கப்படுகிறேன் - இந்த எண்கள் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் பலர் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இரங்கல் தெரிவித்தார். "வெள்ளப் பகுதிகளில் ஏராளமான மக்கள் தாங்க வேண்டிய பேரழிவால் நான் அதிர்ச்சியடைகிறேன். இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள் தெரிவிக்கின்றன" என்று சீபர்ட் ட்விட்டரில் எழுதினார்.

https://www.cnn.com/2021/07/15/europe/germany-deaths-severe-flooding-intl/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

உறவுகள் நலமா?

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

 

 

 

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செய்தி.

ஒரு நாளில், ஒரு சதுர மீற்றருக்கு... 20 லீற்றர் மழை பெய்தமையால், 
இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவி அண்ணா பிரான்ஸ் என நினைகிறேன்.

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

6 hours ago, புங்கையூரன் said:

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

ஓம் ஒரு கண நேரத்தில் எல்லாம் மாறி விடும்.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

 

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

 

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

சாந்தி அக்கா சுகம் என அறிந்தது சந்தோசம். நானும் எழுதும் போது யோசித்தேன். அவவின் கட்டுரை ஒன்றில் ரைன் நதியை ரயிலில் கடப்பது போல வரும். வீணாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எழுதவில்லை. 

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி?

 

10 minutes ago, goshan_che said:

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

குமாரசாமி அண்ணைக்கு... தற்போது தொலைபேசி எடுத்து பார்த்தேன்.
மணி அடிக்கின்றதே தவிர, பதில் வரவில்லை.

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

இந்த வெள்ளம்...  கண நேரத்தில், 
தாம் சுதாகரிக்க முன்னம்... பாய்ந்து வந்தது என்று, 
பாதிக்கப் பட்டவர்கள்... தொலைக் காட்சியில் தெரிவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

32 minutes ago, தமிழ் சிறி said:

 

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

 

 

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

Link to comment
Share on other sites

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு யேர்மனியின் பகுதி.

Reinland-Germany1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பாதகாப்பாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் உறவுகள்.. ஒவ்வொருத்தரா வந்து சைன் வைத்துட்டு போனால் நன்று... அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

அந்தாளின்ரை... சுபாவமே அப்படித்தானே, நிழலி. :)
அதனால்... நாம், எல்லோரும்... அவரை விரும்புகின்றோம். 💓

 (கையோடை... அவரின் திண்ணை தடையை எடுத்து விடுங்களேன்.)  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும் சுகங்களை  அறியத்தந்தமைக்கும் நன்றி உறவுகளே

குமாரசாமியண்ணையின் சுகங்கள் அறிய  ஆவல்

சுவி அண்ணை பரிசில் நிற்பதாக சொன்னார்

எனவே  கவலைப்பட ஏதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

நாதம்ஸ்.... 
இங்கு, வெள்ளம் வந்த இடத்திலும்... 
சென்ற கிழமை,  பயங்கர வெய்யில் அடித்தது.
சனம் எல்லாம்.. சந்தோசப்பட,  இப்படி நடந்து விட்டது.

இந்த... வெள்ளம் வரப் போகுது என்று... ஏன் அறிவிக்கவில்லை என்று,
அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு.... 

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.