Jump to content

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்


Recommended Posts

 

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

  • பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இது இப்போது வரை ஒரு கண்டுகொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது.

குறிப்பு: இந்த கட்டுரையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அதில் அவருக்கு தொடைப் பகுதியிலும், மணிக்கட்டிலும், வாய் பகுதியிலும் காயம் ஏற்பட்டது.

"எனக்கு அப்போது மாதவிடாய். நான் உடலுறவுக்கு அன்று இரவு தயாராகவில்லை" என்கிறார் சஃபா.

"என் கணவரோ, நான் அவரோடு ஒரு நெருக்கமாக உடலுறவு கொள்ளாமல் தவிர்ப்பதாகக் கருதினார். அவர் என்னை அடித்தார், கையில் விலங்கிட்டார், என் குரல்வளையை நெரித்தார், என்னை வன்புணர்ந்தார்".

இத்தனை நடந்த பிறகும், சமூக விழுமியங்களைக் கருதி சஃபா தன் கணவருக்கு எதிராக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மாற்றம் வந்தது. 'நியூட்டன்ஸ் க்ராடில்' என்கிற தொலைக்காட்சித் தொடரில், ஒரு கணவர், தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது.

இது பல பெண்களின் கொடூர நினைவுகளை நினைவுகூர வைத்தது. ஆனால் அக்காட்சிகள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசவும், பகிர்ந்து கொள்ளவும் வழிவகுத்தது.

பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில வாரங்களுக்குள் நூற்றுக் கணக்கான பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பகிர்ந்தனர். இதில் ஸ்பீக் அப் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் 700 பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் 27 வயதான சனாவும் ஒருவர்.

"அவன் என் தேவதூதனாக இருந்தான். திருமணமாகி ஓராண்டு காலத்துக்குள் நான் கர்ப்பமடைந்தேன். என் குழந்தையையும் பெற்றேடுக்கவிருந்தேன்" என அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகிறார்.

"எங்களுக்குள் ஒரு சிறிய சண்டை வந்தது. அவன் என்னை தண்டிக்கத் தீர்மானித்தான்"

"என் சம்மதமின்றி, என்னை வன்புணர்ந்ததால், என் கரு சிதைந்துவிட்டது"

சனா தன் விவகாரத்துக்காக தனியாக போராடினார். தற்போது பிரிந்து வாழ்ந்தாலும், தனக்குப் பிறக்காத குழந்தையை நினைத்து வருந்துகிறார்.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது அல்லது காட்டுமிராண்டித்தனமாக உடலுறவு கொள்வது இப்போதும் எகிப்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக திருமண இரவன்று இது நடக்கிறது.

ஒரு பெரிய பாடகரின் மனைவி திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்து கண்ணீரோடு பேசிய காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலானது. பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளானது.அதன் பிறகு இப்படிப்பட்ட திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்த விவாதம் அதிகரித்தது.

மேலும், இப்படிப்பட்ட வன்புணர்வுகளை சட்ட அமைப்புகள் குற்றமாகக் கருத வேண்டும் என குரல் எழுப்பினார்.

பெண்கள் மீதான வன்முறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்பாடகரோ அது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6,500 (திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமைகள் பாலியல் துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது) போன்ற சம்பவங்கள் பதிவாவதாக அரசின் தேசிய பெண்கள் கவுன்சில் கூறுவதாக கடந்த ஜனவரி 2015-ல் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

"எகிப்தில் இருக்கும் பொது கலாச்சாரத்தில், திருமணம் என்பது மனைவி 24/7 மணி நேரமும் உடலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற பொது புத்தியைத் உண்டாக்குகிறது" என்கிறார் வழக்குரைஞர் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையத்தின் செயல் இயக்குநர் ரெடா டன்போகி.

பெண்கள் தங்கள் கணவர்களோடு உடலுறவு கொள்ள மறுத்தால், அவர்கள் பாவிகள் ஆவர். அவர்களை தேவதைகள் இரவு முழுக்க சபிக்கும் போன்ற சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் எகிப்தில் நிலவுகின்றன என்றும் கூறிகிறார் ரெடா.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கில், டர் அல் இஃப்தா (Dar al-Ifta) என்கிற எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனைக் குழு அமைப்பிடம் கேட்ட போது "கணவன் வன்முறையைப் பயன்படுத்தி தன் மனைவி உடன் உடலுறவு கொள்ள விரும்பினால், அவன் (கணவன்) சட்டப்படி பாவியாகிறான். மனைவிக்கு நீதிமன்றம் செல்வதற்கான உரிமை உண்டு. கணவன் மீது புகார் கொடுக்கவும், அவனுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உரிமை உண்டு" என்கிறது.

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறது. இதில் பெரும்பாலானவைகள் முதலிரவு குறித்த அச்சத்தில் ஏற்படுபவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கிறார் ரெடா.

எகிப்திய சட்டங்கள் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை குற்றமாகக் கருதுவதில்லை. மேலும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதும் சிரமமாகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்போ அதை ஒரு பாலியல் வன்முறையாகக் கருதுகிறது.

எகிப்து கொடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலான திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு வழக்குகளுக்கு, எகிப்தின் 60ஆவது தண்டனைச் சட்டத்தினால் தண்டனை கிடைப்பதில்லை.

"ஷரியா சட்டங்களின் பால் தீர்மானிக்கப்படும் உரிமைக்கு இணங்க, நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் காரியங்களுக்கு இந்த தண்டனைச் சட்டங்கள் பொருந்தாது" என்கிறது அச்சட்டம்.

ஆனால் ரெடாவோ, திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வை, பெண்களின் உடலில் காணப்படும் சிராப்புகள், காயங்கள், வாய் பகுதியைச் சுற்றி இருக்கும் காயங்களைக் கொண்டு நிரூபிக்கலாம் என்கிறார்.

எகிப்தில் மாற்றங்கள் மெல்ல வருகின்றன. இப்போதும் பழமைவாத மதிப்புகள் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள், மெல்ல கேட்கப்படத் தொடங்கி இருக்கின்றன.

சஃபா மற்றும் சனா ஆகியோரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டு இருக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-57857722

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழில் வரும் இது போன்ற பதிவுகள் குறித்து, பிபிசி தமிழ் Youtube சேனல் இல் திட்டி எழுதுகிறார்கள்.

ஒரு, இரு சம்பவங்கள் நடக்கலாம், அதுபோல ஆண்களும் சில பெண்களால் வேறு வகை பாதிப்புக்கு உள்ளாகலாம். உதாரணமாக, மாத விடாய் உள்ள நிலையிலும், மது போதையில், தயாராக இல்லாத ஆணினை, உறவுக்கு அழைப்பதும், மறுத்தால், நீயெல்லாம் ஒரு ஆண் மகனா என்று திட்டி அவமானப் படுத்தி, அதகளப்படுத்துவதும் பிரிட்டனில் நடக்கிறது. இதனால், உதவி கேட்டு ஆண்கள் போலீசாரை அழைத்து உள்ளனர்.

உதாரணமாக, domestic violence என்பது, பெண்கள் ஆண்களால் தாக்கப்படுவது என்ற கருத்து பிரிட்டனில் இருந்தது.

இப்போது,  ஆண்களும் பெரும் கோபக்கார பெண்களின், வன்முறைக்கு உள்ளாகி உதவி கேட்கிறார்கள். அது மட்டுமல்ல, ஓரின கலியாணம் செய்யும் ஆண்களில், ஒருவர், அடுத்தவரை தாக்குவதும், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் நடைபெறுவதாக எழுதுகிறார்கள்.

ஆக, இது இந்தியாவில் அல்லது இஸ்லாமிய உலகில் மட்டுமே நடப்பது போல, பிபிசி தமிழ் அடித்து விட்டுக்கொண்டிருப்பது தவறு.

போன வருடம் இதே பிரிட்டனில்தான் வீதியால் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை, போலீஸ்க்காரர் கடத்தி, வன்புணர்வு செய்து கொலை செய்தார்.

அந்த பெண், பீரியட் காலத்தில் இருந்தாரா, இல்லையா என்று அவர் கவலையா பட்டிருப்பார். சும்மா அடித்து விட கூடாது, டெல்லியில் இருந்து இயங்கும் பிபிசி தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'My husband was an angel - then he raped me'
- By Wael Hussein - BBC News, Cairo
முதலாவது இதுதான் BBC ஆங்கிலத்தில் வந்த தலைப்பு.. ஆங்கில தலைப்பில் எந்தவித கோளாறும் இல்லை.. BBC தமிழ்தான் இந்த மாதிரி தலைப்புகள் சில்லறைத்தனமாக போடுவதை நிறுத்தவேண்டும்..
அப்பொழுதுதான் தலைப்பிற்கு ஏற்ப கருத்துகளை கூறலாம்..

இந்த மாதிரி ஒரு தலைப்பைப்போட்டால் வேறுவிதமாகத்தான் கருத்தை எழுதுவார்கள்..

இரண்டாவது ஒப்பீட்டளவில் உடல்ரீதியான வன்முறை மற்றும் பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், அதிலும் இஸ்லாமிய நாடுகள், ஆசிய நாடுகளில் அதிகம்..சிறுவயது திருமணங்கள், கூட்டு பாலியல் வன்முறை , இன்னமும் நடைபெறுகிறது.. 
இந்த கட்டுரை சொல்வது பழைமைவாத கருத்துகளை உடைய எகிப்து போன்ற நாடுகளில் மாற்றங்கள் உடனடியாக நிகழாது, இந்த மாதிரி வன்புனர்வு செயல்களிலிருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே.. 

மூன்றாவது, இது அவுஸ்ரேலியாவில் ஆண்கள் எதிர்கொள்ளும் உடல், உள ரீதியான வன்முறைகள், மற்றும் பாலியல் வன்முறைகளைப்பற்றி கூறுகிறது(Male victims of domestic violence have few places to turn or services to call)

https://www.google.com.au/amp/amp.abc.net.au/article/12495738

எங்களது சமூகத்தில் ஆண்களை, அவர்களது மனைவி/காதலி/தாய், எப்படி மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைபடுத்துகிறார்கள் என்பதும், அதிலிருந்து மீள அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் வேறு கதை 

இறுதியாக இந்த செய்தி “ சமூக சாளரத்திற்குள்” இருந்தால் நன்று என நினைக்கிறேன்!!

BBC ஆங்கில இணைப்பு

https://apple.news/AXTYLrWOoQEaxYaxW6oqY0Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

'My husband was an angel - then he raped me'
- By Wael Hussein - BBC News, Cairo
முதலாவது இதுதான் BBC ஆங்கிலத்தில் வந்த தலைப்பு.. ஆங்கில தலைப்பில் எந்தவித கோளாறும் இல்லை.. BBC தமிழ்தான் இந்த மாதிரி தலைப்புகள் சில்லறைத்தனமாக போடுவதை நிறுத்தவேண்டும்..
அப்பொழுதுதான் தலைப்பிற்கு ஏற்ப கருத்துகளை கூறலாம்..

இந்த மாதிரி ஒரு தலைப்பைப்போட்டால் வேறுவிதமாகத்தான் கருத்தை எழுதுவார்கள்..

இரண்டாவது ஒப்பீட்டளவில் உடல்ரீதியான வன்முறை மற்றும் பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், அதிலும் இஸ்லாமிய நாடுகள், ஆசிய நாடுகளில் அதிகம்..சிறுவயது திருமணங்கள், கூட்டு பாலியல் வன்முறை , இன்னமும் நடைபெறுகிறது.. 
இந்த கட்டுரை சொல்வது பழைமைவாத கருத்துகளை உடைய எகிப்து போன்ற நாடுகளில் மாற்றங்கள் உடனடியாக நிகழாது, இந்த மாதிரி வன்புனர்வு செயல்களிலிருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே.. 

மூன்றாவது, இது அவுஸ்ரேலியாவில் ஆண்கள் எதிர்கொள்ளும் உடல், உள ரீதியான வன்முறைகள், மற்றும் பாலியல் வன்முறைகளைப்பற்றி கூறுகிறது(Male victims of domestic violence have few places to turn or services to call)

https://www.google.com.au/amp/amp.abc.net.au/article/12495738

எங்களது சமூகத்தில் ஆண்களை, அவர்களது மனைவி/காதலி/தாய், எப்படி மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைபடுத்துகிறார்கள் என்பதும், அதிலிருந்து மீள அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் வேறு கதை 

இறுதியாக இந்த செய்தி “ சமூக சாளரத்திற்குள்” இருந்தால் நன்று என நினைக்கிறேன்!!

BBC ஆங்கில இணைப்பு

https://apple.news/AXTYLrWOoQEaxYaxW6oqY0Q

https://www.mankind.org.uk/

We receive calls from male victims of domestic abuse across all age ranges and professions:

• From dustmen and doctors, to, bankers and builders

• From men in their 20s to men in their 80s

• From men in England, Northern Ireland, Scotland and Wales.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு எதிராக எழுதுவது நோக்கம் அல்ல.

ஆனால் சில பெண்கள், தமக்கு பெண் என்பதற்காக, சமூகம் தந்துள்ள சில, அடிப்படை உரிமைகளை தவறாக பயன்படுத்துவதை கவனிக்க முடியும்.

அது ஏனைய உண்மையாகவே பாதிக்கப்படும் பெண்களுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்பதை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள்.

ஒரு ஆண் ஆசிரியர், தனக்கு போட்டியான இன்னோரு மாணவிக்கு கூடுதல் புள்ளிகள் அளித்தார் என்று, பாலியல் சீண்டுதல் செய்தார் என்று போலியாக முறைப்பாடு செய்து, அந்த ஆசிரியரின் வாழ்வினை 5 வருடம் சீரழித்த சிறுமியையும் பிரிட்டனில் பார்த்தோம். 5 வருசத்தில் மனைவி,, குடும்பம், பிள்ளைகளை, வேலையை இழந்து.... கடைசியில், அந்த பெண்ணின் தாயார் பழைய notebook ஒன்றை கிளறிய போதே, மகள் எழுதி வைத்திருந்த குறிப்பை பார்த்து, கேள்வி கேட்டு, அதிகாரிகளிடம் சொல்லி, ஆசிரியர் வெளியே வந்தார்.

அதே பாடசாலை, மீண்டும் வேலை கொடுக்க முன்வந்த போது, கடவுளே, இந்த ஆசிரியர் தொழிலே வேண்டாம் என்று கும்புடு போட்டு விட்டு போய் விட்டார் அந்த நல்ல ஆசிரியர்.

உண்மையில் இன்னுமொரு பெண்ணின், அதாவது அந்த தாயாரின், மனசாட்சி உறுத்தி இருக்காவிட்டால், அந்த அப்பாவி ஆசிரியர், ஒரு அவல வாழ்வே வாழ்ந்திருப்பார். 

2018 ஜனவரியில், மூன்று வாரங்கள் தொடர்ந்து நான்கு பாலியல் வன்முறை வழக்குகள், விசாரணைக்கே எடுக்க முடியாதவை  என்று நீதிமன்றம் தூக்கி வீசியது. 

அந்த வழக்குகளை போட்டிருந்த போலீசாரையும், அரச வழக்கு தொடரகத்தினையும் நீதிமன்றம் கண்டித்தது. ஒரு வழக்கில், முக்கியமான சான்றினை மறைத்த போலீஸ் அதிகாரிக்கு தண்டனையும் கொடுத்தது.

உடலுறவின் போது, நிறுத்து என்று சொன்னபின்னும் தொடர்ந்து இயங்கிய ஒருவர், அந்த கணத்தில் இருந்து பாலியல் வன்முறையாளர் ஆகினார் என்று நீதிமன்றில் நிறுத்தப்பட, போலீசாரையும், அரச வழக்கு தொடரகத்தினையும் நீதிமன்றம், உங்களுக்குத்தான் வேலை இல்லை என்றால் எங்களுக்கும் இல்லை என்று நினைக்கிறீர்களா என்று, வாங்கு, வாங்கு என்று வாங்கியது.

டாக்ஸி டிரைவர் கூடுதலாக பணம் கேட்க்கிறார் என்று, பாலியல் புகார் கொடுத்தார் ஒரு பெண்.... நல்ல வேலை, அவர்கள் உரையாடலை அந்த டிரைவர் பதிவு செய்ய, பெண் சிறை சென்றார்.

இதுவே பிபிசியின் உலகளாவிய இயக்கத்துக்கு லைசென்ஸ் பணம் செலுத்துபவர்கள் நாட்டில் இன்றய நிதர்சனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

 

அக்கோய், நான் ஒன்றும் தவில் வாசிக்கவில்லை.... முதலில் என்ன விசயம் என்று புரிந்து பேசுங்கோ...

பிபிசி தமிழ் டெல்லியில் இருந்து இயங்குகிறது.

இதன் எழுத்துக்கள், கட்டுரைகளின் தரம் குறித்து பலர் கரிசனை கொள்கிறார்கள். பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு. இங்கே இது போன்ற அபத்தங்கள் வந்தால், உடனே முறைப்பாடுகள் போகும். 

இன்னும் பல உறவுகள் கூட, பிபிசி தமிழுக்கு என்ன நடந்தது என்று பதிந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் தலைப்பினையும், தமிழில் தலைப்பினையும் பாருங்கள். இலங்கை மித்திரன் லெவலில் போடுகிறார்கள்.

பிபிசி தமிழ் என்ற பெயரில் யாரோ ஒருவர், இஸ்லாமிய உலகில் மட்டுமே நடப்பதாக பண்ணும் அலம்பரைக்கு, பதிலாக, இங்கேயும் நடக்கின்றது என்று எனது பதிவு தனித்தவிலாக போகிறது.

உண்மையில் இது, (இஸ்லாமியர் மீதான) இன வன்மம்.... 

சரி, அதில் என்ன குறை கண்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கட்டுரை சொல்வது பழைமைவாத கருத்துகளை உடைய எகிப்து போன்ற நாடுகளில் மாற்றங்கள் உடனடியாக நிகழாது, இந்த மாதிரி வன்புனர்வு செயல்களிலிருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்கவேண்டும் என்பதே..

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு.

இதுக்கு ஒரு அருமையான விவேக் கொமடி சீன் போடலாம்….வேண்டாம் நாதம்ஸ் கோபிப்பார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எகிப்தில் பஸ்சில் பயணிக்கும் பெண்கள் அடையும் துனபுறுத்தல்கள் பற்றி நான் ஒரு எகிப்தியர் எழுதிய கட்டுரை முன்பு படித்தனான் 😟

அது கொழும்பில் மோசமாக உள்ளதே....

30 minutes ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

நண்பி சும்மா உங்களுக்கு இறுக்கி இருப்பா.... தல.... 😁

அட.... நம்ம தலயா கொக்கா... நண்பியை அனுப்பி விட்டு..... சரிதான் இந்த இறுக்கு இறுக்குதே என்று என்று தலையில் அடித்து இருப்பார்..... 😜

இதுக்கு வடிவேலு காமெடி சீன் போட்டு தலயை சிரிக்க வைக்கலாம் தான்.... வேணாம்.... 

தல... சிரிச்சு சிரிச்சே.... மட்டையாயிரும்.... :grin: 

***

அது சரி என்ன லேட்டா வந்திருக்கிறியள்..... நேத்தே எதிர்பார்த்தேனே.... ஐ சே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

ஓம் மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் சொன்னதாக அவர்களை பற்றிய கதைகள் கேள்விபட்டுள்ளேன். அவர்கள் சிந்தனை முறை அப்படி மோசமாக தான் உருவாக்கபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் மாதவிடாய் ஒரு மேட்டரே இல்லையே.😂

கேடு கெட்ட தமிழ் பிபிசிக்கு செய்திகளுக்கு பஞ்சம் போல் தெரிகின்றது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கட்டுரை இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதை விட BBC தமிழிற்குதான் இஸ்லாமியர் மீதான வன்மம் எனக்கூறவேண்டும். 

மேலும் இந்த மாதிரி குடும்ப வன்முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான(ஆண், பெண் மீதான) என்பதால் அவற்றிற்கான தீர்வுகளும் வேறாக இருக்கும்.

சமூகம், சமூக அந்தஸ்து, சமய பழக்கவழக்கங்கள், ஆண் பெண் உடல்வலிமை பற்றிய எண்ணம், 
இவை பற்றிய சமூக விழிப்புணர்வு, அரசியல், உதவும் நிறுவனங்களின் நிலை போன்றவற்றால் இந்த குடும்பவன்முறை தீர்வுகளில் சமமின்மை நிலவுகிறது.. 

சரி அது போகட்டும், இங்கே ஆண்கள் மீதான அடக்கமுறைகள் வெளியே வருவதில்லை, அவர்களைப்பற்றி அக்கறையில்லை, இப்பொழுதெல்லாம் பெண்கள் பொய்புகார் செய்கிறார்கள் என்றால் ஆண்கள் ஏன் தமது பிரச்சனைகளை வெளியே வந்து கூறுவதில்லை?

மாற்றங்கள் என்பது உடனடியாக நிகழாது என்றால் ஏன் அதைப்பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பகிர முன்வருவதில்லை.. பெண்கள் தமது “ பெண்கள்” என்ற அடையாளத்தை பயன்படுத்தி இந்தமாதிரி விடயங்களில் அனுகூலங்களை அடைகிறார்கள் என்று கூறுவதை விடுத்து, ஆண்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படையாக கதைக்க முன்வரவேண்டும்.. பிரச்சனைகளை உரிய நிறுவனங்களை அனுகி கூறும் பொழுது இதனால் இந்தமாதிரி குடும்ப வன்முறைகளிலிருந்து ஆணோ பெண்ணோ மீள உதவும். தற்கொலைகள்/கொலைகள் முற்று முழுவதாக நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்கலாம். 

இன்னொன்றையும் கவனித்தேன், இங்கே இந்த பதிவில் மட்டுமல்ல, பொதுவாக நான் கவனித்த ஒன்று, ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் கருத்து எழுதுவதாக நினைத்து எழுதும் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது, இடம், பொருள், பதிவின் தன்மை, பதிவின் நோக்கம் எல்லாம் மறந்து  எழுதும் கருத்துக்களால் மற்றவர்கள் (உதாரணத்திற்கு இங்கே யாழ்  இணைய வாசகர்கள்) முன் அவர்களது நிலையை/மதிப்பை குறைத்துக்கொண்டு போகிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுவதுண்டு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

தலைப்பும் ,செய்தியும் ஒன்றை சொல்ல நாதம் இன்னொரு பக்கத்தால் தவில் வாசிக்கிறார் 

 

நாதம்ஸ் தான் வழமையாக வாசிக்கும் ரப்லொயிட் செய்திகளைத்தானே தந்திருக்கின்றார்! இதில் ஏன் குறைகாண்கின்றீர்கள்?😁

13 hours ago, Nathamuni said:

இதன் எழுத்துக்கள், கட்டுரைகளின் தரம் குறித்து பலர் கரிசனை கொள்கிறார்கள். பிபிசிக்கு லைசென்ஸ் கட்டணம் செலுத்துபவன் என்ற முறையில் எனக்கு சில கரிசனங்கள் உண்டு. இங்கே இது போன்ற அபத்தங்கள் வந்தால், உடனே முறைப்பாடுகள் போகும். 

உங்கள் கரிசனைகளையும் அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோனால் நல்லது.😎

https://www.bbc.co.uk/contact/complaints

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

பெண் அதிகாரியிடம் பதில் சொல்ல முடியாது என சொல்லும் ஆட்களை மத்தியகிழக்கில் வேலை செய்பவர்கள் நிச்சயம் கண்டிருப்பர்.

மிகவும் உண்மை. நான் எத்தனையே சந்தர்பங்களில் கண்டுள்ளேன்

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

சரி அது போகட்டும், இங்கே ஆண்கள் மீதான அடக்கமுறைகள் வெளியே வருவதில்லை, அவர்களைப்பற்றி அக்கறையில்லை, இப்பொழுதெல்லாம் பெண்கள் பொய்புகார் செய்கிறார்கள் என்றால் ஆண்கள் ஏன் தமது பிரச்சனைகளை வெளியே வந்து கூறுவதில்லை?

 

பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்ணின் கண்ணீர் வலிமையானது.
இதனால் பெண்கள் பிரச்சினகள் முதன்மை படுத்தப்படுகின்றான. 
ஆண்கள் அப்படியல்லவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் தான் வழமையாக வாசிக்கும் ரப்லொயிட் செய்திகளைத்தானே தந்திருக்கின்றார்! இதில் ஏன் குறைகாண்கின்றீர்கள்?😁

அது வாசித்தது, broadsheet பேப்பரில்.....😁

மின்னம்பலம், தமிழ்மிரர் பதிவுகாரர்..... பொல்லு கொடுத்து அடிவாங்க கூடாது.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தக்கட்டுரை இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதை விட BBC தமிழிற்குதான் இஸ்லாமியர் மீதான வன்மம் எனக்கூறவேண்டும். 

 

அதனை தான், எனது பதிவுகள் மூலம் டெல்லியில் உள்ளவர்கள், பிபிசியின் சொந்த நாட்டில் ஒரு பிரச்சனையுமே இல்லை என்பது போல, அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்கிறேன். 

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் கவனித்தேன், இங்கே இந்த பதிவில் மட்டுமல்ல, பொதுவாக நான் கவனித்த ஒன்று, ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் கருத்து எழுதுவதாக நினைத்து எழுதும் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது, இடம், பொருள், பதிவின் தன்மை, பதிவின் நோக்கம் எல்லாம் மறந்து  எழுதும் கருத்துக்களால் மற்றவர்கள் (உதாரணத்திற்கு இங்கே யாழ்  இணைய வாசகர்கள்) முன் அவர்களது நிலையை/மதிப்பை குறைத்துக்கொண்டு போகிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுவதுண்டு.. 

அது யாழின் தனித்தன்மை.....

வெறுமனே வாசித்து விட்டு போகாமல், வேடிக்கையான விவாதம் மூலம், விசயங்களை பகிர்கிறோம், புரிகிறோம்.

பெண்களே அருவருக்கும், இந்த தலைப்பில், கருத்துக்களை அவ்வாறு தான் பகிர முடியும். வெறுமனே.... ஒரு டாக்டர் போல... சுகாதாரம் அது இது என்று பேசி, வாசிப்பவர் முகம் சுளிப்பை இன்னும், மோசமாக்க கூடாது அல்லவா.

44 minutes ago, colomban said:

மிகவும் உண்மை. நான் எத்தனையே சந்தர்பங்களில் கண்டுள்ளேன்

எது? கணவன் முன்னால், மனைவிக்கு ரேட் பேசுவதை நேரில் பார்த்து விட்டு, பேசாமல் போய் இருக்கிறீர்களா?

என்ன கொழும்பான் இதெல்லாம்? 😁

ஒரு பெண் அதிகாரத்துக்கு வருவது, முக்கிய தகுதியால்.... அவருக்கு பதில் சொல்ல முடியாது என்றால், வேலையை விட்டு தூக்க மாட்டார்களா?

ஆனாலும், அந்த பெண் அதிகார தோரணையில், நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காவிடில், இதுக்கு போய் ஊரிலை ஆடு, கோழி மேய்க்கலாம்... சரிதான் போம்மா, என்று சொல்லும் சுஜ மதிப்பு இருந்தால் மட்டும், எதிர்க்கலாம்.

***

எனது நினைவு சரியானால், முடிக்காத தனது மத்திய கிழக்கு வேலை வரலாற்றினை எழுதிய நிழலி, ஒரு பெண் boss உடன் வாக்குவாதம் செய்ததாக எழுதி இருந்தார், என்று நினைக்கிறேன் ..... (தவறாக இருக்கலாம், இருந்தால், நிழலி திருத்தவும்) 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அது கொழும்பில் மோசமாக உள்ளதே....

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விளங்க நினைப்பவன் said:

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

விளங்க நினைப்பவரே, நீங்கள் விளங்க வேண்டியது என்ன எண்டால், எங்கட ஊரிலேயே மட்டுமல்ல, நாம் வாழும் ஊரிலேயே பெண்களுக்கு பெரிய பிரச்சனை...

அதுக்குள்ள, அடுத்த ஊரிலை தான் அந்த பிரச்சனை என்று குளற கூடாது எண்டதை...

அதுக்கு போய், வழுக்கை ஆறு, மகாவலி ஆறு..... அப்புறம் நைல் ஆறு....

இந்த டெல்லியில், பஸ்சில் ஒரு பெண்ணை எப்படி நாசம் பண்ணி, கொலையும் செய்து, தூக்கில் தொங்கினார்கள் என்று உலகே அறியும். அந்த டெல்லியில் இருந்து கொண்டு, எகிப்பில் இப்படி நடக்குறதாம் என்று சொல்லும் கொடுமை.... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வழுக்கை ஆறு என்று யாழ்பாணத்தில் ஒரு ஆறு உள்ளதாம் நான் அதை பார்க்கவில்லை. இலங்கை சென்ற போது மகாவலி ஆறு பார்த்துவிட்டேன்.
இங்குளளவர்கள் நைல் நதியை பற்றி பேசினால் நான் யாழ்பாணத்திலும் ஒரு ஆறு உள்ளது என்று சொல்வது போன்று இருக்கிறது.

வழுக்கைஆறு சண்டிலிப்பாய் சங்கானை ஊடாக ஓடுகின்றாது, இது கூட தெரியாதா? நல்லா விளங்க வேண்டும் விளங்க நினைப்பவரே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கையாறு ......!   😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

எது? கணவன் முன்னால், மனைவிக்கு ரேட் பேசுவதை நேரில் பார்த்து விட்டு, பேசாமல் போய் இருக்கிறீர்களா?

 

கணவன் முன்னால் அல்ல. கணவனிடமே. இதை நீங்கள் வட ஆபிரிக்காவில் கொஞ்ச காலமாவது செலவழித்து இராவிட்டால் விளங்கி கொள்வது கடினம்தான். நிச்சயம் எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் இந்த நெருக்குவாரம் குறிப்பாக மேற்கைதேய பாணியில் உடையணிந்து செல்லும் வெள்ளை தோல் அல்லாத பெண்கள் மீது உண்டு. ஜீன்ஸ், டீசேற் போட்ட ஆசிய பெண் என்றால் அவர் போகப்பொருள் என நினைக்கும் அவர்கள் மனநிலையே காரணம்.

டுபாய், கட்டாரில் இப்படி அல்ல ஆனால் அங்கே இவை வேறு விதமாக வெளிப்படும்.

இதைதான் கொழும்பானும் உறுதி செய்கிறார்.

59 minutes ago, Nathamuni said:

ஒரு பெண் அதிகாரத்துக்கு வருவது, முக்கிய தகுதியால்.... அவருக்கு பதில் சொல்ல முடியாது என்றால், வேலையை விட்டு தூக்க மாட்டார்களா?

மீண்டும் தவறான புரிதல் - நான் சொல்லுவது கஸ்டம்ஸ், பாங்க் போன்ற இடங்களில். கஸ்டமராக வரும் அரபிக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர் பெண் என்றால் - கூப்பிடு ஆம்பிளையை என கேட்பவர் பலர் உள்ளனர். இந்த நாடுகளில் அந்த கோரிக்கை ஏற்கவும் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தில் ஒரு புரட்சி நடந்தது நினைவுண்டா? அதில் கூட பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடந்தது. ரோட்டுக்கு வந்து போராடாடும் பெண் எதுக்கும் தயாராயிருப்பார் என்ற மனநிலைதான் காரணம்.

ஆனால் எவ்வளவு கட்டுபாடான சமூகம் ஆயினும் ஈரானிய போராட்டங்களில் இவை குறைவு. 

வட ஆபிரிக்க அரபிகளின் கலாச்சாரத்துக்கும், இரானிய பாரசீகர் கலாச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசம் இது.

அதுக்காக ஈரானில், டெல்லியில், யூகேயில் இது நடப்பதே இல்லை என்றல்ல. ஆனால் எகிப்தில் இது அதிகம்.

பிபிசி தமிழ் ஆனந்தி அக்காவிற்கு பின் முழுக்க முழுக்க ரோ வசம் ஆகி விட்டது. இது படி படியாக 90 களின் இறுதியில் தொடங்கி இப்போ டெல்லி போனதுடன் முழுமை அடைந்து விட்டது.

ஆனால் பிபிசி தமிழ் டெல்லி, யூகேயில் நடப்பதை பற்றி எழுதாமல் இதை ஏன் எழுதுகிறது என்பதும், இது இஸ்லாமியர் மீதான வன்மம் என்பதும் சிறு பிள்ளைதனமானது.

இங்கே முஸ்லீம் என்பதற்காகவே குட்டு வேண்டும் கொழும்பான் கூட இதை இப்படி பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று, இங்கே பலர் சொன்னது போல, பி பி சி உலக சேவையின் ஆங்கில நிருபர், கெய்ரோவில் இருக்கும் வாகீல் உசேன் இதை எழுது உள்ளார். அதை பிபிசி தமிழ் உலக சேவை, தமிழ் மொழி பெயர்த்து போட்டுள்ளது. உலக சேவை என்பதால் இப்படி பல உலக விடயங்களை போடுவார்கள்தானே? 

பெண்கள் மீதான பாலியல் சீண்டல் எகிப்தில் endemic (வாழ்கையோடு ஒன்றியது?) என்கிறது இந்த கட்டுரை.

https://www.bbc.com/news/world-middle-east-54643463 

எகிப்தின் வீதிகளில் பாலியல் தொந்தரவு 👇

https://www.sat7uk.org/sexual-harassment-on-the-streets-of-egypt/?cn-reloaded=1 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.