Jump to content

“பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக்கட்சியினுள் ஒன்றாக இருக்கும் ரெலோ பல விடயங்களை சகித்துக்கொண்டு தான் அதனுள் இருக்கின்றது என்று விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெலோவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக விக்னேஸ்வரன் தரப்பினை அவருடைய யாழ்.இல்லத்தில் ரெலோ சந்தித்திருந்தது.

இதன்போது, விக்னேஸ்வரன் தரப்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார்கள்.

குறிப்பாக, ஒன்பது கட்சிகளின் கூட்டு முன்னெடுக்கப்பட்டபோது அந்தக் கூட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் என்பதால் மீண்டும் அவர்கள் கூட்டமைப்பிற்குள்ளேயே வர வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்ட விடயத்தினை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழ்க் கட்சிகள் பொதுவான அரசியலமைப்பு தீர்வுத்திட்ட முன்மொழிவைச் செய்வதற்கு மாவை.சோ.சேனாதிராஜா இணக்கம் வெளியிட்டு பின்னர் அமைதி காத்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இதுகால வரையிலும் கூட்டமைப்பில் காணப்படுகின்ற குறைப்பாடுகளுக்கு தமிழரசுக்கட்சி காரணமாகியுள்ளமை தொடர்பான விடயங்கள் இன்னமும் சீர் செய்யப்படாத நிலையில் ரெலோவின் முயற்சி வெற்றி அளிக்குமா என்று கேள்வி எழுப்பபட்டது.

அதுமட்டுமன்றி, ரெலோ இவ்விதமான அனைத்து விடயங்களை மறந்தாலும் இறுதியாக பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனான கூட்டமைப்பின் சந்திப்பின் பின்னர் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் ரெலோவின் முயற்சி குறித்து கருத்துக்கள் எழுந்தபோது மாவை.சோ.சேனாதிராஜா அமைதி காத்தமையும் சுட்டிக்கட்டப்பட்டது.

இத்தருணத்தில் ரெலோவின் தலைவரும் பேச்சாளரும் “கூட்டமைப்பினுள் நீங்கள் குறிப்பிடுகின்ற பல விடயங்கள் காணப்பட்டாலும் நாம் சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக இருக்கின்றோம்.

தற்போது நாம் இதய சுத்தியுடனேயே ஒருமித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி வராது விட்டாலும் அக்கட்சியின் முழுமையான ஆதரவு இருப்பதாக தலைவர் கூறியுள்ளார்” என்று பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/109573

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

“பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ

நாங்கள் கைகழுவிக்கொண்டே இருக்கிறோம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.