Jump to content

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்


Recommended Posts

protest-4-750x375.jpg
மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

protest-6-600x338.jpg protest-5-600x338.jpg protest-4-600x338.jpg protest-7-600x338.jpg protest-3-600x338.jpg protest-2-600x338.jpg protest-1-1-600x338.jpg

https://athavannews.com/2021/1229275

 

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

 
11111-1-720x375.jpg
மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எமது சங்கம் தொடர்ந்து போராடும். இவ்விடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

குறித்த சிறுமி, தரகர் ஒருவர் ஊடாகவே வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். உண்மையை மூடிமறைக்க எவரும் முயற்சிக்க கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229263

 

 

ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

death-sanakiyan-720x375.png
 
 

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரிஷாட்டின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், ”15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

எனினும் எங்களுக்கு தெரியாமல் எங்கெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. அத்துடன் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன் அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர்.

எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1229247

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

protest-4-750x375.jpg

ரிஷாட்டின்.... வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட,  மலையக சிறுமியின்... மரணம் தொடர்பாக, உண்மை கண்டறியப்பட வேண்டும்.

 

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

protest-6-600x338.jpg

protest-7-600x338.jpg

protest-3-600x338.jpg

protest-2-600x338.jpg

protest-1-1-600x338.jpg

https://athavannews.com/2021/1229275

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்- கருப்பையா மைதிலி

மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எமது சங்கம் தொடர்ந்து போராடும். இவ்விடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

குறித்த சிறுமி, தரகர் ஒருவர் ஊடாகவே வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்.

அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். உண்மையை மூடிமறைக்க எவரும் முயற்சிக்க கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229263

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to ரிஷாட்டின்.... வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட, மலையக சிறுமியின்... மரணத்திற்கு, நீதி கிடைக்க வேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் முக்கிய காரணியாவான்....அதுதான் ஹாட் வருத்தம் வந்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த பெண் பாலியல் கொலையானாரா?

Rishad-Bathiudeen.jpg?resize=895%2C653&ssl=1

ரிஷாட் வீட்டில் எரிகாயத்துடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் இறந்து போன 16 வயது பெண், இசாலினி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருந்திருக்கிறார் என்று மருத்துவ அறிக்கை வெளிவந்து பெரும் அதிர்ச்சியினை கொடுத்துள்ளது.

தனது வீட்டில் நடந்த நிகழ்வுகளை கேள்விப்பட்ட, ரிஷாட், உடல் நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டும், ஹிஸ்புல்லாவும், அதாவுல்லாவையும் லோக்கல் லெப்பைமாறுகளை மீறி சவூதி வாகாபிசத்தினை புகுத்த நடவடிக்கைகளை எடுத்தார்கள். இதில், முதல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இயங்கினர்.

புலிகள் காலத்தில், மகிந்தா வலது கையாக இயங்கிய ரிஷாட், வில்பத்து காடு அழித்து தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன், இவர்களது ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 

சுதாகரித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, பெரும் பணத்தினை, கோடிக்கணக்கில், பசிலுக்கு கொடுத்து தனக்கு பிரச்சனை வராமல் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொண்டார். அதாவுல்லாவும், தேர்தலில் கோத்தாவுக்கு ஆதரவு என்று வேலை செய்து தப்பிக்கொண்டார்.

ரிஷாட் சிக்கிக்கொண்டார்.

இருவாரங்களுக்கு முன்னர், தன்னை வீட்டு சிறையில் வைக்குமாறு விடுத்த கோரிக்கையினை, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் கோத்தா நிராகரித்து இருந்தார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் 15 வயது முதல் இந்த சிறு பெண், இசாலினி,  வேலை செய்து வருகிறார் என்றும், அவர் 16 வயது ஆன நிலையில் மரணித்துள்ளார் என்றும் தெரிய வந்த போது, ஒரு முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சட்ட மீறலில் ஈடுபட்டமை குறித்து, பத்திரிகைகள் எழுதின.

ரிஷாட் மேல் இது குறித்த வழக்கும் பாயும் என்கிற நிலையில், மரணித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உள்ளார் என்ற தகவலும் வந்துள்ளது.

மலையகத்தில், பெண் இறப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்கள் நடந்த நிலையில், பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தார் என்ற செய்தி வந்துள்ளது.

பெண், பாலியல் வல்லுறவுக்கு பின்னர், தற்கொலை செய்ய, தீக்குளித்தாரா அல்லது, தடயங்களை அழிக்க எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ரிஷாட் வீட்டில் இருந்த ஆண்கள் யார், என்று விசாரணை செய்யும் பொலிசாரினால் இன்று ஒட்டு மொத்த ரிஷாட் குடும்பமுமே பெரும் சட்ட சிக்கலில் மாட்டி உள்ளது.

அவரது அரசியல் குறித்து பெரும், கண்டனங்கள் இங்கே பதிவு செய்திருக்கின்றோம். ஆயினும், இந்த மரணத்துக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையில், தனிப்பட்ட ரீதியில், பெரும் சட்ட சிக்கலில் சிக்கி இருக்கும் அவருக்கு மனிதாபிமான ரீதியில் அனுதாபத்தை தெரிவிப்பதை தவிர நாம் ஒன்றும் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவரது அரசியல் குறித்து பெரும், கண்டனங்கள் இங்கே பதிவு செய்திருக்கின்றோம். ஆயினும், இந்த மரணத்துக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையில், தனிப்பட்ட ரீதியில், பெரும் சட்ட சிக்கலில் சிக்கி இருக்கும் அவருக்கு மனிதாபிமான ரீதியில் அனுதா

என்ன நாதம் வர வர தலிபான் முல்லாக்கள் மாரி எழுதிறியள்😳.

ஒரு பிள்ளை செத்து கிடக்குது. ஏரிச்சு கொலை எண்டுறாங்கள். பாலியல் வன் புணர்வு எண்டுறாங்கள். சாக முதல் என்ன பாடு படுத்தினாங்களோ?

அதுக்கு ஒரு அனுதாபம் இல்லை.

மன்னார் பகுதியில் எமது மக்களை சுரண்டி, மிரட்டி கொழுத்த ரிசாட்டுக்கு அனுதாபம்?

 

பிகு: தமிழ் மக்கள் மீதும், தமிழ் அதிகாரிகள் மீதும் பலமாக உள்ள போது விசத்தை கக்கிய இனவாதி ரிசாத். ஹிஸ்புலா, அதவுலாவுக்கு நிகரானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்ன நாதம் வர வர தலிபான் முல்லாக்கள் மாரி எழுதிறியள்😳.

ஒரு பிள்ளை செத்து கிடக்குது. ஏரிச்சு கொலை எண்டுறாங்கள். பாலியல் வன் புணர்வு எண்டுறாங்கள். சாக முதல் என்ன பாடு படுத்தினாங்களோ?

அதுக்கு ஒரு அனுதாபம் இல்லை.

மன்னார் பகுதியில் எமது மக்களை சுரண்டி, மிரட்டி கொழுத்த ரிசாட்டுக்கு அனுதாபம்?

 

பிகு: தமிழ் மக்கள் மீதும், தமிழ் அதிகாரிகள் மீதும் பலமாக உள்ள போது விசத்தை கக்கிய இனவாதி ரிசாத். ஹிஸ்புலா, அதவுலாவுக்கு நிகரானவர்.

நான் இங்கே அவரை மிக மோசமாக கண்டித்து எழுதி உள்ளேன்.

சண்டே லீடர் பத்திரிகையில், அவரது வில்பத்து அடாவடி குறித்த ஆங்கில கட்டுரையினை முழு மொழி பெயர்ப்பு செய்து பதிந்தேன்.

முல்லைத்தீவு மீள்குடியேறுதல் காடழிப்பு அடாவடி குறித்து எழுதி இருக்கிறேன்.

ஆனாலும், அவரது இன்றய நிலை, ஒரு எதிரிக்கு கூட வரக்கூடாது. 🙏

அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு அவர் பொறுப்பில்லை என்ற நிலை நிதர்சனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நான் இங்கே அவரை மிக மோசமாக கண்டித்து எழுதி உள்ளேன்.

சண்டே லீடர் பத்திரிகையில், அவரது வில்பத்து அடாவடி குறித்த ஆங்கில கட்டுரையினை முழு மொழி பெயர்ப்பு செய்து பதிந்தேன்.

முல்லைத்தீவு மீள்குடியேறுதல் காடழிப்பு அடாவடி குறித்து எழுதி இருக்கிறேன்.

ஆனாலும், அவரது இன்றய நிலை, ஒரு எதிரிக்கு கூட வரக்கூடாது. 🙏

அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு அவர் பொறுப்பில்லை என்ற நிலை நிதர்சனம். 

ஆனால் ஒரு சிறுமியை வேலைக்கு வைத்துள்ளார். 

அவருக்கு பாலியல் வன்கொடுமை பற்றி வழக்கு வராது (சிறைவாசம்) ஆனால் செய்தவர் அவர் குடும்பத்தில்/வீட்டில் உள்ள ஆண் என்றால் அதனால் அந்த குடும்பத்துக்கு வரும் சோதனையை ஏனைய குடும்பங்கள் போல அவர்களும் எதிர்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இனி ரிச்சர்ட் பட்டெனெ மாறி - இதை ஒன்றுமில்லாமல் ஆக்கவும் கூடும். 

இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுதான் எமது ஆதங்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, ரிசார்ட் எமக்கு செய்த கெடுதலுக்கு அவர் எக்கேடும் கெடட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுதான் எமது ஆதங்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, ரிசார்ட் எமக்கு செய்த கெடுதலுக்கு அவர் எக்கேடும் கெடட்டும். 

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். வராமல் விட்டால் மன்னார் பக்கம் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர் செய்த கெடுதலுக்கான தண்டனையை அல்லா கொடுப்பார்.

நாம், எமக்குரிய, மனிதாபிமானத்துடன் எழுதவாவது செய்வோம். 

ஏனெனில் அவர் இந்த சிக்கலில் இருந்து மீண்டு அரசியலுக்கு வருவது கடினம் என்றே நினைக்கிறேன். 🤔

இலங்கை கட்டிட நிர்மாணத்துறை அமைப்பின் Chairman  ஆக வருவதற்கான தகுதியை அவர் தற்சமயம் அடைந்திருக்கிறார்.

விரைவில் தகவல் எதிர்பார்க்கலாம் ...... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீனின்... வீட்டில் நடந்த,
இந்த  தமிழ்ச்  சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், தீயிட்டு கொன்றதும்...

ஒரு தமிழ் அரசியல் வாதியின்  வீட்டில்... முஸ்லீம் சிறுமிக்கு நடந்திருந்தால்,
காத்தான் குடியிலிருந்து... காலி முகத்திடல் வரை... ஊர்வலம் போய் எதிர்ப்பு காட்டியிருப்பார்கள்.

நாம தான்.... அவர் மறியலில் இருந்த போது, நடந்தது... 
என்று அனுதாபம் காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
குழந்தை தொழிலாளியை.... வீட்டில் வேலைக்கு எடுத்த, 
றிசாட் பதியுதீனும்...  இதற்கு பொறுப்பாளி ஆவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற நபரிடம் இன்று வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுமியின் தாய் மற்றும் ரிசாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடமும் நேற்று மேலதிக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229334

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

rishat.jpg

ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக்காயகங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணைகளை பொரளை பொலிஸாருடன் இணைந்து கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

குறித்த சிறுமியை பணிக்கு அழைத்து வந்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. மேலும் உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் தந்தை , தாய் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

https://www.virakesari.lk/article/109652

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ரிஷாட் பதியுதீனின்... வீட்டில் நடந்த,
இந்த  தமிழ்ச்  சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையும், தீயிட்டு கொன்றதும்...

ஒரு தமிழ் அரசியல் வாதியின்  வீட்டில்... முஸ்லீம் சிறுமிக்கு நடந்திருந்தால்,
காத்தான் குடியிலிருந்து... காலி முகத்திடல் வரை... ஊர்வலம் போய் எதிர்ப்பு காட்டியிருப்பார்கள்.

நாம தான்.... அவர் மறியலில் இருந்த போது, நடந்தது... 
என்று அனுதாபம் காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
குழந்தை தொழிலாளியை.... வீட்டில் வேலைக்கு எடுத்த, 
றிசாட் பதியுதீனும்...  இதற்கு பொறுப்பாளி ஆவார்.

உங்கள் ஆதங்கம் புரிகிறது....

மனிதர் வெளியில் இருந்தால்.... போட்டுத்தாக்கலாம்.

அவரும் உள்ளுக்கு.... குடும்பமோ சிக்கலில்.... அந்த ஒரு கோணத்தில் ஒரு அனுதாபம் வருகிறது.

அதனை தவிர்த்து பார்க்கும் போது, பெண்ணும், பெண்ணின் குடும்பமும் மிகப்பெரும் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

மேலும், மலையக பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறதே... அந்த அப்பாவி பெண்ணுக்கு, தாய், தந்தை பாதுகாப்பு இல்லாத நிலையிலும் வேறு வீட்டில் அநியாயம் நிகழ்ந்துள்ளது.

ரிஷாட்டின் மனைவியின் தந்தை, அதாவது, மாமனார் தான் வீட்டில் இருந்த இன்னுமொரு ஆண் என்ற ரீதியில், பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உங்கள் ஆதங்கம் புரிகிறது....

மனிதர் வெளியில் இருந்தால்.... போட்டுத்தாக்கலாம்.

அவரும் உள்ளுக்கு.... குடும்பமோ சிக்கலில்.... அந்த ஒரு கோணத்தில் ஒரு அனுதாபம் வருகிறது.

அதனை தவிர்த்து பார்க்கும் போது, பெண்ணும், பெண்ணின் குடும்பமும் மிகப்பெரும் அனுதாபத்துக்கு உரியவர்கள்.

மேலும், மலையக பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறதே... அந்த அப்பாவி பெண்ணுக்கு, தாய், தந்தை பாதுகாப்பு இல்லாத நிலையிலும் வேறு வீட்டில் அநியாயம் நிகழ்ந்துள்ளது.

ரிஷாட்டின் மனைவியின் தந்தை, அதாவது, மாமனார் தான் வீட்டில் இருந்த இன்னுமொரு ஆண் என்ற ரீதியில், பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பது இப்படியான உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது .ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்காகி கொலை செய்யப்பட்டு இருக்கிறால்..ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு சிறுமியை துடிக்க ,துடிக்க  எரித்து கொலை செய்து இருக்கிறார்கள் 
  .   நீங்கள் றிசாத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . அனுதாபப்படுகிறீர்கள்.
அந்த சிறுமி நாட் பட்ட பாலியல் வன்புணவுக்காளாகி இருக்கிறால் என வைத்திய அறிக்கை கூறுகிறது .
அதை விட ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு, மன்னாரில் எவ்வளவு தமிழ் காணிகளை இவர் ஆட்டையை போட்டு இருப்பார் இருவருக்கு பரிதாபம் பார்க்க உங்களால் எப்படி முடியுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு

கேள்வியின் அடிப்படை பிழை என்றால் வரும் அத்தனை பதில்களும் பிழையாகவே இருக்கும்.

 

Link to comment
Share on other sites

ஒரு பாராளுமன்ற உறுப்பினர்  18 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுக்க முடியாமல் ஒரு 16 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருக்கின்றார் என்பதை நம்பமுடியாது.   கண்டிப்பாக மோசமான உள் நோக்கத்துடன் தான் அவர் வேலைக்கு அமர்த்தி இருப்பார். அத்துடன் அச் சிறுமி 16 வயதுக்கும் குறைவானவராக இருக்க சந்தர்ப்பங்களும் அதிகம். வயது குறைந்தவர்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் வயதை குறைத்தே சொல்வர்.

அரசியலில் அறம் இல்லாத ஒருவர் தன் வாழ்க்கையிலும் அறத்தை பேணியிருக்க சந்தர்ப்பங்கள் இல்லை. 

கொலைக் குற்றவாளிக்கு மன்னிப்பு கொடுத்து உயர் பதவிக்கு நியமிக்கும் அரசு ஆட்சியில் இருக்கும் நாட்டில் சிறுமிகளை பாலியலுக்கு பெற்றோரே விற்பதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறுமிகளை பாலியல் தேவைகளுக்காக வேலைக்கு அமர்த்துவதும் நிகழத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் எப்படிப்பட்டவராய் இருப்பீர்கள் என்பது இப்படியான உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது .ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வுக்காகி கொலை செய்யப்பட்டு இருக்கிறால்..ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு சிறுமியை துடிக்க ,துடிக்க  எரித்து கொலை செய்து இருக்கிறார்கள் 
  .   நீங்கள் றிசாத்திற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் . அனுதாபப்படுகிறீர்கள்.
அந்த சிறுமி நாட் பட்ட பாலியல் வன்புணவுக்காளாகி இருக்கிறால் என வைத்திய அறிக்கை கூறுகிறது .
அதை விட ஒரு  தமிழனாய் இருந்து கொண்டு, மன்னாரில் எவ்வளவு தமிழ் காணிகளை இவர் ஆட்டையை போட்டு இருப்பார் இருவருக்கு பரிதாபம் பார்க்க உங்களால் எப்படி முடியுது?

நீஙகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவதில் தயக்கமில்லை.

மேலே சொல்லியபடி, மிக கடுமையாக இங்கே இந்த மனிதர் அரசியல் குறித்து கண்டித்து எழுதி இருக்கிறேன் என்பதால், நடந்த விடயம் கேள்வி்ப்பட்ட, அவர் தீடீர் இதய நோயால் வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டதால், சிறு அனுதாபமே, அவ்வாறு எழுத வைத்திருக்கலாம். அது நடிப்பாக இருக்க முடியாது. காரணம், சிறையில் நடந்தது.

என்னைப் பொறுத்த வரை, அவர் இந்த சட்ட சிக்கலில் இருந்து மீள்வது கடினம், ஆகவே நாம் திட்டுவதால் ஆகப்போவது எதுவும் இல்லை.

இன்னும் தெளிவாக சொல்வதானால், செத்த அல்ல செத்துக் கொண்டிருக்கும் (விச) ஜந்தை மேலும் தாக்குவது அறமன்று என நினைத்தேன். அது தவறான பார்வை என்று நீஙகள் சொல்னால், மறுக்கப் போவதில்லை.

எனது பார்வை எப்படி இருந்தது என்றால், ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

இந்த ஓட முடியாத பரிதவி்ப்பை, ஒரு முறை நிலக்கீழ் இரயில் 55 நிமிடம் சிக்கிய போது உணர்ந்தேன். அந்த பீதி தந்த உணர்வே வந்தது, அதுவே சிறு அநுதாபத்துக்கு காரணமாக இருக்கலாம்.

Put yourself in the other person’s shoes and see, என்பார்கள். மனிதம் உணர்வுகளால் ஆனது. அதை தான் மேலே சொன்னேன். அவர் அரசியல் செயல்பாடு தவறு, ஆனாலும் அவரது இன்றைய பரிதவிப்பு, அவரது எதிரிகளுக்கு கூட வரக்கூடாது.

அந்த தங்கைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறுமிகளை.. பெண்களை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்துவதும் கொலை செய்வதும்.. இந்த முஸ்லிம் கும்பல்களுக்கு புதிதல்லவே.

செம்மணி படுகொலை புகழ் கிருசாந்தி குமாரசாமி முதல் பலரை இந்த இஸ்லாமிய கடும்போக்கு பயங்கரவாத முஸ்லிம்காடைகள் கொன்றிருக்கிறார்கள். அவர்களின் வழியில் வந்தவர் தான் இந்த ரிசாட்டும்.. இப்ப சுருதி மாற்றி வாசிச்சாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ரதி சரியான கண்டணங்களை தெரிவித்திருக்கிறீர்கள்.என்னிடம் விருப்பு புள்ளிகள் முடிவடைந்து விட்டன.

**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் இந்தப் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகி நிற்கின்றது .
அதைவிட ஒரு அரசியல்வாதியின் குடும்பம்  இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நிலைமையை  இன்னும் மோசமாக்கலாம்.

இரு தரப்பினராலும் அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில்
சிறுமியின் இழப்பை  அரசியலாக்கி விடுவார்கள்.

நீதி கேட்பவர்கள் கையில் தான் சிறுமியின் மரணத்திற்கான தண்டனை தங்கியுள்ளது.


வருத்தமான செய்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

எனது பார்வை எப்படி இருந்தது என்றால், ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

சில சமயங்களில் உங்களுடைய logic விளங்கமுடிவதில்லை..

நீங்கள் நிலக்கீழ் இரயில் 55 நிமிடங்கள் பரிதவித்து இருந்தீர்கள் ஏனென்றால் உங்களை நம்பி வீட்டில் இருப்பவர்களுக்காக - it’s pure and genuine concern 

ஆனால் ரிசாட் போன்றவர்களுக்கு வரும் இந்த heart attack.. ஜயோ குற்றம் செய்த குடும்ப உறுப்பினர் காப்பாற்றமுடியவில்லை என்பதாகவே இருக்கும்.. it’s not pure concern.. 

நீங்கள் இந்த இடத்தில் உங்களது பரிதவிப்பையும் ரிசாட் போன்றவர்களின் பரிதவிப்பையும் ஒன்றாக கருத்தினால் அது உங்கள் மீதான அபிப்பிராயத்தைத்தான் குறைக்கும்.. 

மனிதாபிமானம் இருப்பதில் தவறில்லை, ஆனால் இந்த இடத்தில் உங்களது மனிதாபிமான உணர்வு சரியா தெரியவில்லை

please don’t point out the quote  “Put yourself into other’s shoes”.. in this situation.. it’s not right 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையக சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது மலையகச் சிறுமியின் மரணம் – நீதிமன்றின் உத்தரவு

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த சம்பவத்தில் சிலரின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன்போது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளையும், குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229559

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

ஒருவர் வேலையில் பிசியாக இருக்கிறார். மிக முக்கிய தகவல் போனில் வந்தால், என்ன வேலையாயினும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவார் அல்லவா. இந்த மனிதருக்கு அப்படி தகவல் வந்த போது, ஓடமுடியாத சிறையில்.... பரிதவிப்பு..... இதய தாக்குதல்... வைத்தியசாலை....

போனில் ஒரு தகவல் வந்தால்.... அந்தத் தகவல் முக்கிய தகவலா! அன்றிச் சாதாரண தகவலா!! என்பதைப்  போனை எடுத்துக் கேட்பதற்குமுன்னரே தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் கொண்ட போன்கள் எங்கே விற்கப்படுகின்றன? அதன் விலை என்ன.??   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.