Jump to content

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

211145238_576048060221738_84212961901729

கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன்,

வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

216932237_351480039815380_24542985533447

வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி  இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை.

217302018_363722678483091_82374901281373

தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில்  பணிப்பெண்ணாக வேலைசெய்த  ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த ஜூட் குமார் இஷாலினியின் நீதிமன்ற வைத்திய  அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால், உடல் 72 சதவீதம் எரிந்துள்ளதென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுமி கர்ப்பமடையாது, நேரம் கிடைக்காத போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த, ஜூட் குமார் இஷாலினிக்கு (வயது 16) நீதி கோரி, அவருடைய சொந்த ஊரான டயகமவில், இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

Tamilmirror Online || ‘தொடர்ச்சியாக பல தடவைகள் இஷாலினி வன்புணர்வு’

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த  நாசங்கள்  தெரியவரக்கூடாது என்பதற்காகவே  எரித்து இருக்கிறார்கள்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் தீக்காயம் வந்தும் உடனடியாக ஆஸ்பத்திரி கூட்டிப்போகவில்லை?

**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுமி மரணம் குறித்து , இரண்டு போலீஸ் குழுக்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். காரணமானவர்கள், சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர், அந்த பெண் மீதான பாலியல் வன்முறை இறந்த தினத்தில் நடந்ததாக தெரியவில்லை, முன்னரும் பல தடவை நடந்திருக்கலாம் என்று சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை தந்திருப்பதாக சொல்கிறார்.

முன்னர் என்னும் போது, ரிஷாட் கைதுக்கு முன்னர் என்றால், இந்த விசாரணை வேறு பரிமாணம் எடுக்கும்.

அப்படி நிலையில், நான் மேலே கூறிய ரிஷாட் குறித்த கருத்துக்களை வாபஸ் வாங்க தயாராகவே உள்ளேன்.  

11 hours ago, Paanch said:

போனில் ஒரு தகவல் வந்தால்.... அந்தத் தகவல் முக்கிய தகவலா! அன்றிச் சாதாரண தகவலா!! என்பதைப்  போனை எடுத்துக் கேட்பதற்குமுன்னரே தெரியப்படுத்தும் தொழில் நுட்பம் கொண்ட போன்கள் எங்கே விற்கப்படுகின்றன? அதன் விலை என்ன.??   

அப்படி வர சாத்தியம் இல்லை. அப்படி வந்தாலும், வாங்க மாட்டீர்கள்.

முன்பு தந்தி, இருந்த போது, துர் செய்திகளை கொண்ட தந்திகள், சிவப்பு நிறத்தில் இருந்தனவாம்.

சிவப்பு நிற தந்தியுடன் ஊருக்கு டெலிவரிக்கு வந்தால், ஊரே அழுது கொண்டு ஓடுமாம்.... எந்த வீட்டுக்கு தந்தி போகிறது என்று. அவர் போக, போக, தமக்கு இல்லை என்று சிலர் நிக்க, புதிதாக, அழுபவர்கள், சேர ஊரே அல்லோலகல்லோலப்படுமாம்......

அதன் காரணமாக, கையில் வைத்திருக்காமல், மறைத்து வைக்க வேண்டும் என்று ஆர்டர் வந்ததாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, பிழம்பு said:

இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த,

அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மரணித்து இருப்பதால், அவரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பார்களே? அதுபற்றிய செய்திகள் ஏன் வெளிவரவில்லை.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 21:28, nunavilan said:

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

அவர் சிறையில் இருந்தமையாலேயே இது வெளியில் தெரிய வந்துள்ளது.

On 19/7/2021 at 07:47, Nathamuni said:

புலிகள் காலத்தில், மகிந்தா வலது கையாக இயங்கிய ரிஷாட், வில்பத்து காடு அழித்து தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய இனவாதம் என்ன? சுரண்டிச் சேர்த்த சொத்து எவ்வளவு? எல்லாம் இழந்து உடுக்கை இழந்தவன் கைபோல ரிஷாட் இன்று வைத்திய சாலையில். தர்மம் நின்று கொல்லும். எவருடைய அதிகாரத்தில் இருந்துகொண்டு துள்ளினாரோ அவருடைய அதிகாரத்திலேயே சிக்கி சின்னா பின்னமாகி தவிக்கிறார். இப்பவாவது புரிய வேண்டும் இழந்தவர்களின் வலி. 

 

Link to comment
Share on other sites

<எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள்>
<இந்த விசாரணையில் இருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை.>
<புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்.>
<கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை நேரடியாக சந்தித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், வேலு குமார் எம்பி, உதய குமார் எம்பி ஆகியோர் வலியுறுத்து>
பிரதி பொலிஸ் மாஅதிபரிடம், தமுகூ எம்பிக்கள் மேலும் கூறியதாவது,
“இது தமிழ், முஸ்லிம். சிங்கள இனப்பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை."
"மரணமான இஷாலினியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் மேலதிக விபரங்களை இந்த புதிய பொலிஸ் குழு கண்டு பிடித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.”
“வீட்டுப்பணியில் ஈடுபட இஷாலினியின் வயது உகந்ததா? அவரது மரணம் ஏன் சம்பவித்தது? தற்கொலை என பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய எப்படி அதற்குள் முடிவுக்கு வந்தார்?"
"அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதற்கான காரணம் என்ன? அவர் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் நடைமுறைக்கு அவர் உள்ளாக்கப்பட்டாரா?"
"அவர் பணியில் இருந்த இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாக்குமூல, விசாரணை விபரங்கள் என்ன? அவர்கள் அனைவரும் முழுமையாக விசாரிக்கப்பட்டனரா? இஷாலினிக்கும், அவர் வசித்த வீட்டு உறுப்பினர்களுக்கும் இடையில், இவரது தொழிலை தவிர வேறு உறவுகள் இருந்தனவா?"
"நெருப்புக்காக பயன்படுத்தப்பட்ட லைட்டர் எவருடையது? மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறும் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய, தற்கொலை செய்து கொள்பவர் இயல்பாக தலையில் மண்ணெண்னையை ஊற்றிக்கொள்ளாமல், ஏன் தனது காலில் ஊற்றிக்கொண்டார் என்பதற்கு தரும் விளக்கம் என்ன?"
இக்கேள்விகளுக்கான விடைகளை பொலிஸ் விசாரணை குழு கூடிய விரைவில் நாட்டுக்கு பெற்றுத்தர வேண்டும்.”
“குற்றம் நிகழ்ந்து இருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்கள ஆலோசனை பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் நாம் கண்காணிப்போம்.”
217511733_10215542132545586_241538467082
 
 
218290072_10215542131905570_370829705144
 
 
214004442_10215542132105575_520108300917
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு வருமான வரித்துறையும் கொஞ்சம் விசாரணையில் இறங்கினால் இன்னும் அதிகமான விபரங்கள்  வெளிவரலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக, கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், குறித்த குழுக்கள் சிறுமி முன்னதாக தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்ற அவிசாவளை, புவக்பிட்டி – கிரிவந்தல பிரதேசத்தில் நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டயகம பகுதிக்கு சென்று, சிறுமியின் தாயாரிடம் இன்று மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளதுடன், ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் வீட்டிலிருந்த இளைஞர் தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்தார் ! - ஆர்.ரஞ்சினி

 

188274731_520639402580014_347615656082802527_n.jpg
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த ஹிஷாலினியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். 

தான் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காகவே ஹிஷாலினி, ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு பணிப் பெண்ணாக சென்றார் என்றும் அவரது தாயார் ரஞ்சினி குறிப்பிட்டார்.

ரிஷாட் எம்.பியின் வீட்டிலுள்ள இளைஞர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருவதாக, தனது மகள் தொலைபேசியூடாக தெரிவித்துக் கொண்டிருந்தபோது, தனது மகளிடமிருந்து தொலைபேசியைப் பறித்த அந்த இளைஞர், ரிஷாட் பதியூதீனின் மனைவியை ஹிஷாலினி எதிர்த்துப் பேசுகிறார் என்று தன்னிடம் கூறியதாக ஹிஷாலினியின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளை அடிக்க வேண்டாம் என ரிஷாட் பதியூதீனின் மனைவியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
 

http://www.battinews.com/2021/07/blog-post_413.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன ரீதியில் பார்த்தால்.....

நான் ஆரம்பத்தில், ஒரு சிறு அனுதாபத்தில் எனது பதிவுகளை இட்டு இருந்தேன். சில கள உறவுகள் கூட அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள்.

எனினும், தமிழர், இஸ்லாமியர் என்ற கோணத்தில், வரும் சில பதிவுகளை பார்த்தால், இந்த அதிருப்திகள் சரியானவை என்றே தோன்றுகிறது.

அதாவுல்லாவும், மனோ கணேசனும் ஒரு டிவி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அதாவுல்லா மலையக சமூகம் தொடர்பில், ஒரு இழிவான வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். வெகுண்ட மனோ, கண்ணாடி குவளையில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசி எறிகிறார்.

மலையக தமிழர்களை அந்தளவு கேவலமாக நினைக்கிறார்கள், இந்த இஸ்லாமியர்கள் என்று ஒரு பதிவும், தமிழர்களுக்கு எதிராக மோசமான, இன ரீதியான வேலைகளை செய்த ரிசாடின் குடும்பத்தின், இந்த வேலையும் அதே வகையில் பார்க்கப்படவேண்டும் என்ற பதிவும் பார்த்தேன்.

சரியோ, தவறோ, ஒரு விடயம் சாதரண குற்றமாக  பார்க்கப்படுவதுக்கும், இன  ரீதியில் பார்க்கப்படுவதுக்கும் உள்ள வித்தியாசத்தினை நான் உணர்கின்றேன்.

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

எனது மேலேயுள்ள பதிவுகள் சிலரை நெளிய வைத்திருக்கும், பொறுத்தருள வேண்டுகின்றேன்.

மனோ கணேசன், களத்தில் இறங்கி உள்ளார் போல தெரிகிறது. கூத்தமைப்பு தமிழ் உறுப்பினர்கள், வழக்கம் போல, பிட்டுக்கு, தேங்காய் பூ தேவைதானா என்று அமைதியாக இருக்கிறார்க்ளோ என்று நினைத்தாலும், சாணக்கியன் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

இன ரீதியில் பார்த்தால்.....

நான் ஆரம்பத்தில், ஒரு சிறு அனுதாபத்தில் எனது பதிவுகளை இட்டு இருந்தேன். சில கள உறவுகள் கூட அதிருப்தி தெரிவித்து இருந்தார்கள்.

எனினும், தமிழர், இஸ்லாமியர் என்ற கோணத்தில், வரும் சில பதிவுகளை பார்த்தால், இந்த அதிருப்திகள் சரியானவை என்றே தோன்றுகிறது.

அதாவுல்லாவும், மனோ கணேசனும் ஒரு டிவி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அதாவுல்லா மலையக சமூகம் தொடர்பில், ஒரு இழிவான வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். வெகுண்ட மனோ, கண்ணாடி குவளையில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசி எறிகிறார்.

மலையக தமிழர்களை அந்தளவு கேவலமாக நினைக்கிறார்கள், இந்த இஸ்லாமியர்கள் என்று ஒரு பதிவும், தமிழர்களுக்கு எதிராக மோசமான, இன ரீதியான வேலைகளை செய்த ரிசாடின் குடும்பத்தின், இந்த வேலையும் அதே வகையில் பார்க்கப்படவேண்டும் என்ற பதிவும் பார்த்தேன்.

சரியோ, தவறோ, ஒரு விடயம் சாதரண குற்றமாக  பார்க்கப்படுவதுக்கும், இன  ரீதியில் பார்க்கப்படுவதுக்கும் உள்ள வித்தியாசத்தினை நான் உணர்கின்றேன்.

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

எனது மேலேயுள்ள பதிவுகள் சிலரை நெளிய வைத்திருக்கும், பொறுத்தருள வேண்டுகின்றேன்.

மனோ கணேசன், களத்தில் இறங்கி உள்ளார் போல தெரிகிறது. கூத்தமைப்பு தமிழ் உறுப்பினர்கள், வழக்கம் போல, பிட்டுக்கு, தேங்காய் பூ தேவைதானா என்று அமைதியாக இருக்கிறார்க்ளோ என்று நினைத்தாலும், சாணக்கியன் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.

நன்றி நாதமுனி. உங்களது சுய விளக்கம் கண்டு… உங்கள் மீதான மதிப்பை உயர்த்தி விட்டீர்கள். 🙂

செய்த தவறை ஏற்றுக் கொண்டு… அதற்காக வருத்தம் தெரிவிப்பதற்கும்.. உயர்ந்த உள்ளம் வேண்டும். 👍🏼

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

 

முதலில், சாதாரணமாகவே பார்த்தேன். இப்போது இனரீதியில் பார்க்கும் போது, கடும் கோபமும் வருகிறது.

 

இன ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

தமிழ் அரசியல்வாதியொருவர் இதை செய்திருந்தாலும் கள உறவுகள் இதைக் கண்டித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆகவே தவறுகளைச் சுட்டிக்காட்ட இன ரீதியான பார்வை அவசியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

இன ரீதியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

தமிழ் அரசியல்வாதியொருவர் இதை செய்திருந்தாலும் கள உறவுகள் இதைக் கண்டித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். ஆகவே தவறுகளைச் சுட்டிக்காட்ட இன ரீதியான பார்வை அவசியமில்லை.

 

சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில்...???😭

இங்கே  தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

சாதாரணமாகப் பார்த்தாலே சமூகத்தில் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவரின் வீட்டில் இத்தனை உரிமை மீறல்களும் கொலையும் நடந்துள்ளது. அனுதாபப்பட எக் காரணமும் இல்லை.

மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்தவர்கள் மீது கோபம் வருவது மனிதத்தன்மை. இதில் இனப்பார்வை தேவையில்லை.

அதுவும் பாதிக்கப்பட்டவர் எமது இனத்தை சேர்ந்த ஒரு அபலை சிறுமி எனும் போது இதில் எந்த மனிதனுக்கும், எந்த தமிழனுக்கும் ரிசாட்டின் மீது அனுதாபம் வராது.

அப்படி அந்த சிறுமிக்கு ஒரு அனுதாப வார்த்தை கூட முதல் பதிவில் போடாமல், ரிசார்ட்டுக்கு எமது மனம் உருகிறது என்றால். 

ஒன்றில் நம் கண்ணை ரிசாட்டுக்கும் நமக்கும் இடையான ஏதோ ஒரு இணைப்பு (மதம், இனம், நட்பு) மறைக்கிறது என்று அர்த்தம் 

அல்லது

நாமும் அந்த துஸ்பிரயோகி போல் வக்கிர எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதில் ரெண்டாவது காரணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒன்றில் நம் கண்ணை ரிசாட்டுக்கும் நமக்கும் இடையான ஏதோ ஒரு இணைப்பு (மதம், இனம், நட்பு) மறைக்கிறது என்று அர்த்தம் 

அல்லது

நாமும் அந்த துஸ்பிரயோகி போல் வக்கிர எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதில் ரெண்டாவது காரணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்.

மீண்டும், மீண்டும், ஊகத்தில் கம்பு சுத்துதல்...

இதுக்கு தானே தல என்று சொல்கிறோம், எத்தனை நியானி வந்து, நியாயம் சொன்னாலும் அசராது.

தவறு என்றால், அதை உடனே ஏற்றுக்கொள்வதே, நான் கற்ற அறம்.

ஏற்றுக்கொண்ட பின்னும், அலம்பறை பண்ணுவதே உங்கள் அறம்...

🐎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் படுவதை சொல்வதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மனதில் படுவதை சொல்வதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே.

 

மனதில் வரும் எல்லாவற்றையும் எழுத்தில் போட்டு, அவலத்தை சுமந்தவர்கள் பலர், பராபரமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)
சிறிய தீயைக் கண்டால் கூட அச்சப்படும் என்னுடைய மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளுமளவிற்கு தைரியமானவர் அல்ல. எனவே அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என்று நூறுவீதம் சந்தேகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவித்தனர்.

59682616_2359056400820686_45143166230410

தங்களின் மகள் தொலைபேசியில் தம்முடன் பேசும்போது, தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

கண்டியில் நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜெயராஜ் ஜூட்குமார் - சிறுமியின் தந்தை

தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார். ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண்பிள்ளை அவர். அவருக்கு என்ன நடந்தது என்று எமக்குத் தெரியாது. எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.

இவ்வாறு அச்சப்படுபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனுமொருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும். அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கின்றோம். கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது.

ஆர்.ரஞ்சனி - சிறுமியின் தாய்

கொவிட் நெருக்கடி நிலைமையால் நான் பெரும் கடன் சுமைகளுக்கு உள்ளானேன். என்னுடைய கணவர் மற்றும் மகன் ஆகிய இருவருமே தொழில் இன்றியே காணப்பட்டனர். இதன் காரணமாகவே நான் கடன் சுமைக்கு உள்ளானேன். மகளை அனுப்பி வைப்பதற்காக தங்க நகையை அடகு வைத்து 30,000 பணம் வைத்திருந்தேன்.

நீங்கள் பணிக்கு சென்றால் பிள்ளைகளை பராமறிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மகளை பணிக்கு அனுப்பி வைக்குமாறு, அவரை அழைத்துச் சென்ற நபர் கூறினார். அதன் போது வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் வீட்டு முற்றத்தில் வந்து கூச்சலிடுவார்கள். எனவே நான் தொழிலுக்குச் சென்று கடனை மீள செலுத்த உதவுவதாகவும் சகோதரனுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது என்று கூறியே என்னுடைய மகள் தொழிலுக்குச் சென்றார்.

உண்பதற்கு கூட உணவின்றி கஷ்டப்பட்டோம். எனினும் அங்கு சென்றதன் பின்னர் எனது மகள் என்னுடன் பேசும் போது, 'அம்மா என்னால் இங்கிருக்க முடியாது. என்னை அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ளவர்கள் என்னை தும்புதடியால் தாக்குகின்றனர்.' என்று கூறினார். ' ஏன் அவ்வாறு செய்கின்றார்' என்று நான் மகளிடம் வினவிய போது , அங்கிருந்தவர்கள் என்னுடைய மகள் வீட்டாரிடம் (மெடம்) மரியாதையின்றி நடந்து கொள்வதாகக் கூறினார்கள். அத்தோடு ' உங்களுடைய மகள் பணிப்பெண் அல்லவா? எனவே வீட்டாரிடம் மரியாதையாக பேசுமாறு உங்கள் மகளிடம் கூறுங்கள் ' என்றும் தெரிவித்தனர்.

என்னுடைய மகள் சிறியவர். அவரை தாக்க வேண்டாம் என்று அந்த வீட்டாரிடம் நான் கூறினேன். அவ்வாறிருக்கையில் இம்மாதம் 3 ஆம் திகதி மாலை 3 மணியளவில் என்னுடைய மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். 4 ஆம் திகதி சென்று நாம் மகளைப் பார்த்த போது அவர் மோசமான நிலையில் இருந்தார்.

மேலதிகமாக பணம் பெற்றுள்ளதால் நான் தொழிலுக்கு வருவதாகக் கூறினேன். 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் காலை அங்கு இருப்பேன் என்று கூறினேன். என்னுடைய மகள் அவராகவே ஏதேனும் செய்து கொண்டிருப்பார் என்றால் அந்த வீட்டில் ஏதேனும் நடந்திருக்க வேண்டும். இவ்வாறு மற்றொரு பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது. வறுமையின் காரணமாகவே என்னைப் போன்ற தாய்மார் இவ்வாறான தவறை இழைக்கின்றனர். எனவே குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி : உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதா ?

பதில் : இல்லை. அவ்வாறு செய்து கொள்வதற்கான காரணிகள் காணப்பட்டாலும் தொலைபேசியில் அவர் யாருடனாவது பேசியிருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் தாய் என்ற ரீதியில் எம்மிடம் ஏதேனும் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.

கேள்வி : 'மெடம் ' என்று யாரைக் கூறுகின்றீர்கள் ?

பதில் : ரிஷாத் பதியுதீனுடைய குடும்பத்தார்.

'மகளின் மரணத்தில் நூறுவீதம் சந்தேகம் நிலவுகிறது': சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு வேலைக்காரர்களில் ஒருவர் பலிக்கடாவாக்கப்படுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

வீட்டு வேலைக்காரர்களில் ஒருவர் பலிக்கடாவாக்கப்படுவார் 

ஒரு ஏழ்மையான தமிழ் குடும்ப பிள்ளையை சட்ட விரோதமா, வேலைக்கு எடுத்து, தும்புத்தடியால் அடித்து மட்டுமல்லாது, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்கள், பாவிகள்....

இவரை வேலைக்கு எடுத்த வீட்டின் புண்ணியவான், சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.

இவர்கள் மேல் அல்லாவின் சாபம் விழுவதாக.... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

தன்னை அங்குள்ளவர்கள் தும்புதடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

 

8 hours ago, பிழம்பு said:

கொரோனாவினால் எனக்கு தொழில் இல்லை. தொழில்புரிவதற்கு இடமில்லை. எனக்கு காலில் உபாதை காணரமாக கஷ்டப்பட்டு தொழில் செய்ய முடியாது.

அந்த பெற்றோரின் இயலாத் தன்மை இவர்களுக்கு சாதகமாய் போய்விட்டது. எத்தனை கனவுகளோடு வாழவேண்டியவள்? இப்படி அலங்கோலமாய் இறக்க வேண்டியதாய் விட்டது. இப்படி எத்தனை இளம் பெண் பிள்ளைகள் வெளியில் சொல்லமுடியாமல் இதற்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ? அரசியல் வாதிகளின் கூச்சல் இன்னும் இரண்டொரு நாளில் அடங்கி தங்கள் வேலையை பாக்கப் போய் விடுவார்கள். ஆனால் இந்த ஏழைகளின் கண்ணீர் மட்டும் துடைக்கப்படாது. அது அவர்களுக்கு மட்டும் நிரந்தரம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.