Jump to content

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா

maxresdefault.jpg

யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே உருவாகியிருக்கும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பருத்தித்துறை கொத்தணி தொடர்பில் கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது மிக கட்டாயமான ஒரு விடயமாகும். ஆனால் பெரும்பாலானோர் அதை மதிப்பதில்லை.

அதற்கு யாழ்ப்பாணமும் விதிவிலக்கல்ல. கொரோனா 1ம், 2ம் அலைகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தபோது யாழ்.மாவட்ட மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். ஆனால் 3ம் அலையின்போது யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.

இதனால் யாழ்.மாவட்டத்தில் 3ம் அலையினால் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றது. பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகி அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் இருந்தும் தப்பி ஓடிய சிலர் வேறு பிரதேசங்களில் இரகசியமாக அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இராணுவம் மற்றும் பொலிஸார், சுகாதார பிரிவனரின் புலனாய்வு தகவல்கள் ஊடாக இந்த உண்மை அம்பலமாகியிருக்கின்றது.

எனவே யாழ்.மாவட்ட மக்கள் பெறுப்புடன் செயற்படவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுக்காக போராடிவரும் முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். யாழ்.மாவட்ட மக்களுக்கே அதிகளவான தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.

தொற்றாளர்கள் அதிகம் என்பதால் அதிகளவு தடுப்பூசியை வழங்கியுள்ளோம். மேலும் வழங்குவோம் என்றார்.

https://jaffnazone.com/news/27383

Link to comment
Share on other sites

13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதனால் யாழ்.மாவட்டத்தில் 3ம் அலையினால் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்திருக்கின்றது. பல இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகி அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தமிழர் பகுதிகளுக்கு கொரோனா நோயாளிகளை அனுப்பி அங்குள்ள மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து மரணங்களையும் ஏற்படுத்தும் திட்டமும், நன்றாகவே நிறைவேறி வருகிறது.

Link to comment
Share on other sites

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

இன்று எனது சிங்கள நண்பர் சொன்னார் ....இரட்டை குடியுரிமை  வைத்திருப்பவர்....
மச்சான் நாட்டுக்கு போய் அங்கு வாழலாம் என்று இருந்தனான்....வங்கியில் காசு இருக்கு இந்த அரசாங்கம் காசை எடுத்து போடுவாங்களோ தெரியவில்லை .....சீனாக்காரனின் கடனை கட்டுவதற்கு...பயமாக இருக்கு அந்த காசை மெல்லமாக அவுஸ்ரேலியாவுக்கு மாற்றவேணும் என்று ....சொன்னார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் பாரபட்சங்களை ஏன் இந்தத் தமிழ் அரசியல்வாதிகள்கூடப் புள்ளவிபரங்களோடு வெளிக்கொண்டு வருகிறார்களில்லை. வீட்டிலிருந்து சையிக்கிள் வரைக்கும் ஒரே நிலையாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,994 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசு ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிசுமா அதிபர் அயித் ரோன கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50,994 X 10 ஆயிரம் = ?????🧐 அரசுக்குத்தான் என்ன வருமானம்!!🤩 சீனாவின் கடன் விரைவில் அடைக்கப்படும். 🤣 

இது…. விகாரை கட்டுவதற்கு சேர்க்கும் பணம். 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

இது…. விகாரை கட்டுவதற்கு சேர்க்கும் பணம். 🤣

நான் சீனாக்காரனுக்கு என்று நினைத்தேன்..... பழசுகளை விட இளசுகளுக்கு புத்தி கூர்மை.😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்ட மக்களிடம் பொறுப்புணர்வில்லை.! மாவட்டம் இன்று ஆபத்தில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம் - சவேந்திர சில்வா

ஆரம்பம் முதல் சொல்கிறோம் சுகாதார திணைக்களம் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்வதால்த்தான் இலங்கையில் கொரனோ  இன்னும் கட்டுக்குள் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பணியாற்றிய பல தமிழ் வைத்தியர்களை பனாங்கொடைக்கு அனுப்பி.. இராணுவக கொவிட் தொற்றாளர்களை கவனிக்க வைச்சிருக்கினம். இப்படி பல விடயங்கள் உள்ளுக்கால ரகசியமாக நடத்தப்படுகுது. 

அங்கு சேவையாற்றிய வைத்தியதுறை சார்ந்தோரின் கூற்றுப்படி மக்களை விட இராணுவத்தால் இந்த வைரஸ் அதிகம் சமூகத்தொற்றாகி வருவதாக தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில் தான் வடக்குக் கிழக்கு பகுதிகளிலும் இராணுவத்தாலும்.. இராணுவம் முன்னெடுக்கும் கொவிட் தடுப்பு மையங்களாலும் தான் இந்த தொற்றே அதிகரித்தது.. என்றால் அதனை யாரும் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.மாவட்டத்தில் ஆங்காங்கே உருவாகியிருக்கும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும். என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலைவர் சொன்னா சரியாதானிருக்கும். இவரது பொறுப்பான செயலாற்த்தான் எம்மக்கள் வகை தொகையின்றி அழித்தொழிக்கப்பட்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.