Jump to content

நிராகரிப்பு


Recommended Posts

நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது

பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது

முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது

விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது

நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம்

நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது

நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று

யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது

யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது

நிராகரிக்கப்பட்டவர் என்றோ ஒருநாள் வான் முட்டும் பெரு விருட்சமாக ஆவார்!

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்பு வலி நிறைந்தது.. வலி அதிகமானால் மனம் மெளனமாகிவிடும்..  

 

Link to comment
Share on other sites

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நிராகரிப்பு வலி நிறைந்தது.. வலி அதிகமானால் மனம் மெளனமாகிவிடும்..  

 

உண்மை தான்...மிக்க நன்றிகள் அக்கா🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ்நிலா said:

நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது

பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது

முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது

விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது

நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம்

நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது

நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று

யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது

யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது

நிராகரிக்கப்பட்டவர் என்றோ ஒருநாள் வான் முட்டும் பெரு விருட்சமாக ஆவார்!

-தமிழ்நிலா.

பகிர்விற்கு நன்றிகள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான சந்தர்ப்பங்களில்  "இல்லை" என்று சொல்ல பழகிக் கொள்ளவது வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் ஒரு கருதுகோள் சொல்கின்றது ....

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள்..👍

மிக்க நன்றிகள்🙏

1 hour ago, சாமானியன் said:

தேவையான சந்தர்ப்பங்களில்  "இல்லை" என்று சொல்ல பழகிக் கொள்ளவது வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் ஒரு கருதுகோள் சொல்கின்றது ....

தேவையான சந்தர்ப்பங்களில் ஆம் என்று தான் சொல்ல வேணும்...தேவையில்லாத சந்தர்ப்பங்களில் தான் இல்லை என்று சொல்ல வேணும்..இது தான் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கின்றேன்😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்புதான் ஒருத்தனை முன்னேற்றும்......அவர்தான் வான் முட்டும் பெரு விருடசமாக ஆவார்.....!

நிராகரிப்பின்மை ஒருத்தனை அடிமையாக்கி விடும்......! 

நல்ல கவிதை தமிழ்நிலா .......இது வசனநடை கவிதைபோல் இருப்பதால் நிராகரிக்கிறேன்......எங்கே கவிதைபோல் ஒரு கவிதை எழுதுங்கள் அதை நிராகரிக்காமல் அடிமைமையாகிறேன்....!   😂

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நிராகரிப்புதான் ஒருத்தனை முன்னேற்றும்......அவர்தான் வான் முட்டும் பெரு விருடசமாக ஆவார்.....!

நிராகரிப்பின்மை ஒருத்தனை அடிமையாக்கி விடும்......! 

நல்ல கவிதை தமிழ்நிலா .......இது வசனநடை கவிதைபோல் இருப்பதால் நிராகரிக்கிறேன்......எங்கே கவிதைபோல் ஒரு கவிதை எழுதுங்கள் அதை நிராகரிக்காமல் அடிமைமையாகிறேன்....!   😂

இது புதுக்கவிதை...இப்படி வசன நடையில் தான் எழுத முடியும்..."நிராகரிப்பின்மை ஒரு மனிதனை அடிமையாக்கி விடும்" இந்த வரி என்னுடைய வரிகளிலே நான் குறிப்பிடவில்லையே...நீங்கள் முதலில கவிதையை வடிவாக வாசியுங்கோ அண்ணா/ஐயா(நகைச்சுவைக்கு சொல்கிறேன் கோவிக்காதையுங்கோ)🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ்நிலா said:

மிக்க நன்றிகள்🙏

தேவையான சந்தர்ப்பங்களில் ஆம் என்று தான் சொல்ல வேணும்...தேவையில்லாத சந்தர்ப்பங்களில் தான் இல்லை என்று சொல்ல வேணும்..இது தான் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கின்றேன்😊

மன்னிக்க வேண்டும்,   இங்கே இரண்டு விடயங்கள் இருக்கு .

ஒன்று எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொள்வது

அடுத்தது அதை வெளியே சொல்லக் கூடிய தைரியத்தை வரவழைத்து சொல்லியும் விடுவது

மற்றும் படி கருத்துக்கள் ஒரே திசை தான் ......

 

Link to comment
Share on other sites

59 minutes ago, சாமானியன் said:

மன்னிக்க வேண்டும்,   இங்கே இரண்டு விடயங்கள் இருக்கு .

ஒன்று எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொள்வது

அடுத்தது அதை வெளியே சொல்லக் கூடிய தைரியத்தை வரவழைத்து சொல்லியும் விடுவது

மற்றும் படி கருத்துக்கள் ஒரே திசை தான் ......

 

பதில் கருத்து எழுதுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே!

அதே மாதிரி தானே "ஆம்" என்ற சொல்லுக்கும்...? எப்போது ஆம் என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும் 

மற்றது அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆம் " என்ற உண்மையை சொல்லியும் விடுவது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ்நிலா said:

பதில் கருத்து எழுதுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே!

அதே மாதிரி தானே "ஆம்" என்ற சொல்லுக்கும்...? எப்போது ஆம் என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும் 

மற்றது அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆம் " என்ற உண்மையை சொல்லியும் விடுவது...

 

பொதுவாக "இல்லை" என்று சொல்வது கடினம் என்று சொல்வார்கள் .

தொடர்பாடல்கள் அறிமுகமானவர்களின் மத்தியில் தானே பெரும்பாலும் நடைபெறுகிறது .....

Link to comment
Share on other sites

9 hours ago, சாமானியன் said:

பொதுவாக "இல்லை" என்று சொல்வது கடினம் என்று சொல்வார்கள் .

தொடர்பாடல்கள் அறிமுகமானவர்களின் மத்தியில் தானே பெரும்பாலும் நடைபெறுகிறது .....

உண்மை தான்...பொதுவாக விருப்பம் "ஆம்" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "இல்லை"என்று சொல்லும் போதும்...விருப்பம் இல்லாத இடத்தில் "இல்லை"என்று சொல்ல வேண்டிய இடத்தில் "ஆம்"என்று சொல்லும் போதும் மிகவும் கடினமாக இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.