Jump to content

நிராகரிப்பு


Recommended Posts

நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது

பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது

முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது

விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது

நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம்

நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது

நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று

யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது

யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது

நிராகரிக்கப்பட்டவர் என்றோ ஒருநாள் வான் முட்டும் பெரு விருட்சமாக ஆவார்!

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்பு வலி நிறைந்தது.. வலி அதிகமானால் மனம் மெளனமாகிவிடும்..  

 

Link to comment
Share on other sites

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நிராகரிப்பு வலி நிறைந்தது.. வலி அதிகமானால் மனம் மெளனமாகிவிடும்..  

 

உண்மை தான்...மிக்க நன்றிகள் அக்கா🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ்நிலா said:

நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது

பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது

முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது

விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது

நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம்

நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது

நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று

யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது

யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது

நிராகரிக்கப்பட்டவர் என்றோ ஒருநாள் வான் முட்டும் பெரு விருட்சமாக ஆவார்!

-தமிழ்நிலா.

பகிர்விற்கு நன்றிகள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான சந்தர்ப்பங்களில்  "இல்லை" என்று சொல்ல பழகிக் கொள்ளவது வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் ஒரு கருதுகோள் சொல்கின்றது ....

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள்..👍

மிக்க நன்றிகள்🙏

1 hour ago, சாமானியன் said:

தேவையான சந்தர்ப்பங்களில்  "இல்லை" என்று சொல்ல பழகிக் கொள்ளவது வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் ஒரு கருதுகோள் சொல்கின்றது ....

தேவையான சந்தர்ப்பங்களில் ஆம் என்று தான் சொல்ல வேணும்...தேவையில்லாத சந்தர்ப்பங்களில் தான் இல்லை என்று சொல்ல வேணும்..இது தான் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கின்றேன்😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்புதான் ஒருத்தனை முன்னேற்றும்......அவர்தான் வான் முட்டும் பெரு விருடசமாக ஆவார்.....!

நிராகரிப்பின்மை ஒருத்தனை அடிமையாக்கி விடும்......! 

நல்ல கவிதை தமிழ்நிலா .......இது வசனநடை கவிதைபோல் இருப்பதால் நிராகரிக்கிறேன்......எங்கே கவிதைபோல் ஒரு கவிதை எழுதுங்கள் அதை நிராகரிக்காமல் அடிமைமையாகிறேன்....!   😂

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

நிராகரிப்புதான் ஒருத்தனை முன்னேற்றும்......அவர்தான் வான் முட்டும் பெரு விருடசமாக ஆவார்.....!

நிராகரிப்பின்மை ஒருத்தனை அடிமையாக்கி விடும்......! 

நல்ல கவிதை தமிழ்நிலா .......இது வசனநடை கவிதைபோல் இருப்பதால் நிராகரிக்கிறேன்......எங்கே கவிதைபோல் ஒரு கவிதை எழுதுங்கள் அதை நிராகரிக்காமல் அடிமைமையாகிறேன்....!   😂

இது புதுக்கவிதை...இப்படி வசன நடையில் தான் எழுத முடியும்..."நிராகரிப்பின்மை ஒரு மனிதனை அடிமையாக்கி விடும்" இந்த வரி என்னுடைய வரிகளிலே நான் குறிப்பிடவில்லையே...நீங்கள் முதலில கவிதையை வடிவாக வாசியுங்கோ அண்ணா/ஐயா(நகைச்சுவைக்கு சொல்கிறேன் கோவிக்காதையுங்கோ)🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ்நிலா said:

மிக்க நன்றிகள்🙏

தேவையான சந்தர்ப்பங்களில் ஆம் என்று தான் சொல்ல வேணும்...தேவையில்லாத சந்தர்ப்பங்களில் தான் இல்லை என்று சொல்ல வேணும்..இது தான் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நான் நினைக்கின்றேன்😊

மன்னிக்க வேண்டும்,   இங்கே இரண்டு விடயங்கள் இருக்கு .

ஒன்று எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொள்வது

அடுத்தது அதை வெளியே சொல்லக் கூடிய தைரியத்தை வரவழைத்து சொல்லியும் விடுவது

மற்றும் படி கருத்துக்கள் ஒரே திசை தான் ......

 

Link to comment
Share on other sites

59 minutes ago, சாமானியன் said:

மன்னிக்க வேண்டும்,   இங்கே இரண்டு விடயங்கள் இருக்கு .

ஒன்று எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொள்வது

அடுத்தது அதை வெளியே சொல்லக் கூடிய தைரியத்தை வரவழைத்து சொல்லியும் விடுவது

மற்றும் படி கருத்துக்கள் ஒரே திசை தான் ......

 

பதில் கருத்து எழுதுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே!

அதே மாதிரி தானே "ஆம்" என்ற சொல்லுக்கும்...? எப்போது ஆம் என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும் 

மற்றது அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆம் " என்ற உண்மையை சொல்லியும் விடுவது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ்நிலா said:

பதில் கருத்து எழுதுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே!

அதே மாதிரி தானே "ஆம்" என்ற சொல்லுக்கும்...? எப்போது ஆம் என்று சொல்ல வேண்டும் என்று உய்த்துணர்ந்து கொண்டு சொல்ல வேண்டும் 

மற்றது அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஆம் " என்ற உண்மையை சொல்லியும் விடுவது...

 

பொதுவாக "இல்லை" என்று சொல்வது கடினம் என்று சொல்வார்கள் .

தொடர்பாடல்கள் அறிமுகமானவர்களின் மத்தியில் தானே பெரும்பாலும் நடைபெறுகிறது .....

Link to comment
Share on other sites

9 hours ago, சாமானியன் said:

பொதுவாக "இல்லை" என்று சொல்வது கடினம் என்று சொல்வார்கள் .

தொடர்பாடல்கள் அறிமுகமானவர்களின் மத்தியில் தானே பெரும்பாலும் நடைபெறுகிறது .....

உண்மை தான்...பொதுவாக விருப்பம் "ஆம்" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "இல்லை"என்று சொல்லும் போதும்...விருப்பம் இல்லாத இடத்தில் "இல்லை"என்று சொல்ல வேண்டிய இடத்தில் "ஆம்"என்று சொல்லும் போதும் மிகவும் கடினமாக இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.