Jump to content

டயகம சிறுமியின் மரணம் - இது ஒன்றும் மலையகத்துக்கு புதிதல்ல!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டயகம சிறுமியின் மரணம் - இது ஒன்றும் மலையகத்துக்கு புதிதல்ல! 

ஜூலை 19, 2021

குமார் சுகுணா

spacer.png

மூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவுகள்,  அரசியல் வாதிகளின் அறிக்கைகள்… பல அரசியல் வாதிகள் வீதியில் இறங்கி போராட்டம் என  தற்போது  பேஸ்புக் பக்கங்களிலும் மலையக அரசியல் வாதிகளினதும் பேசுப்பொருளாக மாறியுள்ள விடயம் டயகம சிறுமியின் மரணம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிக்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் இம்மாதம் 03 ஆம் திகதி தீ காயங்களுடன் சிறுமி  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி  கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  மிக பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஆனால் இது மலையகத்தின் முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன.

எத்தனையோ விடயங்கள்  வெளி உலகுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது. அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால் சில வேலைகளில் மறைக்கப்பட்டிருக்கலாம்.

கசப்பு என்றாலும் சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கொழும்புக்கு  வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு என்று மலையக சிறுமிகள் , சிறுவர்கள் அழைத்து செல்லப்படுவது அல்லது பெற்றோர்களினால் விரும்பி  அனுப்பப்படுவது என்பது புதிய விடயம் அல்ல.

மலையகத்தை பொருத்தவரையில் 70களில் இருந்து இன்று வரை இருக்கின்ற மாறா  நிலைத்தான் கொழும்பு வேலை. 10, 12 வயது நிரம்பியவுடன்  அல்லது அதற்கு குறைந்த வயதுடைய பிள்ளைகள்  கொழும்புக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவது வழமை. ஆண் பிள்ளைகள் கடைத்தெருக்களில் ஹோட்டல்களில்  சாப்பிட்ட கோப்பைகளை கழுவுவது.. மேசைகளை துடைப்பது… பொட்டளம் கட்டுவது போன்ற வேலைகளிலும் பெண்பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதும் வழமை. அது போல படிப்பை இடைநடுவே விட்டு விட்டு கொழும்பை  நோக்கி குறிப்பாக ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்கு செல்லுபவர்களும் அதிகம். இது போன்ற சம்பவங்களுக்கு  தரகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு பணம் மட்டுமே  ஆசை. இதனை ஒரு தொழிலாக செய்பவர்கள்.

பெற்றோர்கள்தான்  தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு  முழு காரணம். பொறுப்புக்குரியவர்கள். ஆனால் அந்த பொறுப்பை பலரும் சரிவர செய்வதில்லை என்பதே உண்மை.

spacer.png

டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் ஆர்ப்பாட்டம்

இந்த சிறுமியின் மரணத்திற்கு பின் மலையக அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் வறுமை காரணமாக பிள்ளைகள் வேலைக்கு அனுப்படுவதாக கூறுகின்றனர். இந்த வறுமையை மூன்று தலைமுறையாக மாற்ற முடியாது உள்ளமை அரசியல்வாதிகளின் தவறுதான்.

தேயிலைத்  மட்டுமே  தொழில் என்று இருந்தவர்களின் பிள்ளைகள் படிக்காமலா இருக்கின்றனர். அல்லது சாப்பிட கூட முடியாத வறுமையிலா இருக்கின்றனர். யோசித்து பார்க்க வேண்டும் .

100 வருடத்துக்கு முன்னர் நமது பாட்டன் உழைப்பதற்காக  இந்த நாட்டுக்கு வந்தான். அவன் வந்த போது இருந்த ஒரு ஆரோக்கிய மனநிலைக்கூட இன்று இருப்பவர்களிடம் இல்லை.  

குடும்ப வறுமை என்பதை இக்காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னைக்கேட்டால்  மலையக மக்களுக்கு விழிப்புணர்வு என்பது மிக குறைவு. இதனை ஏற்படுத்தக் கூடிய கட்டமைப்பு மலையகத்தில் இல்லை என்றே கூறுவேன்.

பாடசாலை செல்ல வேண்டிய வயதில் ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோருக்கு இருக்க வேண்டிய சராசரி அறிவாகும். பெற்றோராக ஒரு உயிரை உருவாக்குவது என்பது வெறும் கடமை அல்ல. அந்த உயிரை இந்த சமூகத்திற்கு மிக சிறந்த பொக்கிசமாக கொடுக்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையானதை செய்து கொடுக்க கூடிய திறனை முதலில் வளர்க்க வேண்டும். அதை விடுத்து கல்யாணம்.. பிள்ளைகள் அவ்வளவுதான்பா வாழ்க்கை என்று வாழ்வது நன்றல்ல.6 பிள்ளைகளை பெற்றால் அந்த ஆறு பேரையும் வளர்க்கும் திறன் இருக்க வேண்டும். தமது ஆசைக்கு பிள்ளைகளை பெற்று அவர்களை பலிகடாவாக்க கூடாது.

மலையகத்தை பொறுத்த வரையில் கொழும்புக்கு சிறுவர்கள் வேலைக்கு சென்று திருவிழா, தீபாவளி போன்ற நாட்களில் ஊர்களில் செய்யும் அலப்பறைகளை நாம் பார்த்திருப்போம். இது நமக்கு அலப்பறையாக தெரிந்தாலும் சக சிறுவனுக்கோ இளைஞனுக்கோ ஈர்ப்பையும் ஆசையையும் தூண்டிவிட்டுவிடும். அவனும் இவர்களை போல கலர் கலராக புத்தாடை .. கையில் கைப்பேசி  என்று வலம் வர விரும்பி கொழும்பை நோக்கி ஓடுவர். கொழும்பில் படிக்க வேண்டிய வயதில் எச்சில் கோப்பை  கழுவும் சிறுவர்கள் ஊருக்கு வரும் போது பிரமிப்பாக தெரிவார்கள். இதனை பார்த்து சக சிறுவர்களும் அவர்களது பாணியை பின் தொடர்ந்து கொழும்பை நோக்கி செல்வது வழமையானதாகிவிட்டது.

பெற்றோர்களுக்கு நம்மால்  மூளைச்சளவை செய்ய முடியாவிடினும் கூட இந்த சமூகத்தின் நாளைய தூண்களான அந்த பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உண்டு அல்லவா… இலவச கல்வியான அரச கல்வியை பிள்ளைகள் தொடரமுடியாமல் இடைவிடுவதற்கு யார் காரணம் என்று யோசித்து பார்த்தால் சமூகத்தின் அத்தனை பேரும்தான்.

 அடுத்தது அரசியல் வாதிகள், வாய்வலிக்க பேசுவார்கள் கைவலிக்க அறிக்கை விடுவார்கள். இத்தனை வருட அரசியலில் கல்வியின் முக்கியத்துவத்தை ஏன் அவர்களால் மலையகத்துக்கு  புகுத்த முடியாமல் போனது… இதனை விட மலையகம் மலையகத்தின் படித்த சமூகம் என்று ஒருசாரார். புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள்  பின் தங்கிய நிலையில் உள்ள  மலையக மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுண்டா… அல்லது கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தியதுண்டா…

எனவே இது போன்ற சம்பவங்கள் மலையகத்தில் ஏற்படுவதற்கு காரணம் அந்த சமூகமே தவிர வேறு யாரும் அல்ல. கொழும்பில் பல இடங்களில் நீங்கள் பார்க்கலாம். ரிஷாத்தின் மட்டும் அல்ல தமிழர்களின் விட்டில் கூட மலையக சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள்.

spacer.png

அங்கேயே  சிறுமிகள் பூப்பெய்த எத்தனை சம்பவங்கள் பார்த்திருகிக்றோம். அதே வயது சிறுமி தன் வீட்டில் உள்ளபோதிலும் அவளுக்கு வேலைக்கார பெண்ணாக இந்த சிறுமி இருக்க வேண்டும். அந்த வீட்டு எஜமானர்களின்  வக்கிரத்தனமான மனம் சிறுவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்கிறது.

அதுமட்டும் அல்ல அந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்ற சந்தர்பங்களும் உள்ளன. தற்போது ரிசாத் வீட்டில் உயிரிழந்த சிறுமியும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பு மிக்க மக்களுக்கான பதவியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாத் வீட்டில்  ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். ஆனால் ரிஷாத்தோ தற்போது மருத்துவமனையில்  நெஞ்சு வலி என்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

தனக்கு எதிராக ஒரு பாலியல் துஷ்பிரயோகம் ஏற்படும் போது அதனை எதிர்கொள்ள கூடிய அறிவுக்கூட  சிறுமிக்கோ, யுவதிக்கோ இல்லாமல் இருப்பது எத்தனை வேதனைைான விடயம்.

 இது தொடர்பில் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் பேசுவதால் எந்த பயனும் இல்லை. தீர்வுகள்தான் முக்கியம். அந்த தீர்வை நோக்கி மலையக சமூகத்தை இழுத்துச்செல்லுங்கள். நூறுவருடமாக  வறுமையை பேசுகின்ற அரசியல் தலைமைகள் அதனை மாற்றும் வழியை ஏற்படுத்த வேண்டும்.

spacer.png

இன்று படித்து விட்டு வேலையின்றி எத்தனை மலையக இளைஞர் , யுவதிகள் இருக்கின்றனர். எந்த பட்டதாரிக்காவது படித்ததற்கான பிடித்த வேலை கிடைக்கின்றதா.. மலையக்தின்  சில அரசியல் வாதிகள் தமது இலாபத்திற்காக   உயர்தர கல்வி தகுதியை சரிவர பூர்த்தி செய்யாதவர்களை கூட ஆசிரியர்கள் ஆக்கினார்கள். 

பல்கலைக்கழகம் சென்று பட்டம் படித்தவர்களுக்கும் இன்று மலையக்கதில்  இருக்கின்ற  ஒரே தொழில் ஆசிரியர் தொழில்தான். அதனை தாண்டி அவர்களுக்கான வேறு தொழில் வாய்ப்பினை மலையகத்தில் பெற்றுக்கொடுக்காதது யாருடைய குற்றம். சுயதொழில் வாய்ப்பை கூட பெற்றுக்கொடுப்பதில்லை.

படி படி என்று கல்வியை திணிக்க முடியாது. வெறுமனே வாயால் கூறவும் முடியாது. படித்து அவன் தேர்ந்தெடுக்க வேண்டிய துறை.. அந்த இலக்கு அவனது கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அந்த இலக்கு தன்னையும் தனது சமூகத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கும் வர வேண்டும். அப்படி ஒரு மாற்றம் மலையகத்தில் ஏற்பட்டால் மாத்திரமே சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும்  நிலை மாறும். இறந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை விட இனி இவ்வாறான சம்பவம் நடக்காது தடுக்க முயற்சியுங்கள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.