Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

100% 

இணங்குகிறேன்...

E-on உடன் ஒரே புடுங்குப்பாடு....

தண்ணில கதைக்குது ஆள் எண்டு தெரியுது.... கொடுக்கிற மீட்டர் ரீடிங்கை வாங்கி, 127ஐ, 1027 எண்டு அடித்து பில்லும் வந்து, பிறகு, போன் ரெகார்ட் பார் எண்டு அடிச்சு சொல்லி, £20 goodwill எண்டு தந்திருக்கினம்.... (அதாவது, உந்த கேவலத்தை வெளிய சொல்லவேணாமாம்).

செப்டம்பர், furlough முடிய இருக்குது விளையாட்டு. அங்க பழைய முதலாளியே இல்லை.... வேலைக்கு எங்கை போறது?

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கமுடியாமல் இருந்ததுக்கு ஒரே காரணம், அது உருமாறிக் கொண்டே இருப்பது.

கோவிட் 19 க்கு வீரியம் அதிகம் என்பதால், அதிவேகத்தில் மருந்தை கண்டு பிடித்தார்கள்.

அதுவும் இறைவன் தந்த வரம் எனலாம்.

கொரோனாவின் வீரியம், இந்த உருமாறுதல்களினால் குறையும். கோவிட் 19 என்பதன், மறுபக்கம் கோவிட்  1 இல் இருந்து 18 வரை ஆபத்து இல்லாமல் வந்து போய் இருக்கினம்.

இனி, சாதராண காச்சல் மாதிரி தான் வந்து போகும்.

இப்போதுள்ள பயம், அடுத்த உருமாறுதல்கள் வீரியமுள்ளதாக இருக்க கூடாது என்பதுதான்.

இந்தியாவில் வந்ததும் டெல்டா உருமாறல்.... இலங்கையில் வேறு உருமாறல் என்கிறார்கள்.... ஆனால் எதுவுமே ஆரம்பத்தில் வந்தது போன்ற கோவிட் 19 வீரியத்தில் இராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில்லை.

இருந்தாலும்... அதிக risk உள்ள ஆக்களை அதிக மருத்துவக் கவனிப்போடு தனிநபர் பாதுகாப்போட்டு நடந்து கொள்ள கேட்டுக் கொள்வது நல்லது.

இங்கிலாந்தை பொறுத்தவரை... தற்போது கொரோனா மரணங்களை விட மற்றைய நோய் மரணங்கள் அதிகம். கணக்கை வெளில காட்டாததால் ஆக்கள் கம்மென்று கொரோனாவை பார்த்து வெருண்டப்பட்டுக்கிட்டு இருக்கினம். தட் ஸ் ஆல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....

நீங்கள்  சொல்வது போல் சில இடங்களில் நடக்குது சில இடங்களில் உபர்  தான் உணவு கொண்டு போகும் தேவ தூதன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கண்டது சந்தோசம்.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள் 

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

பயந்து சாகவில்லை.

சொல்லப்போனால் எனக்கு பெப்ரவரி 2020 வாக்கில் வந்து போய் இருக்கோ எண்டு ஒரு சந்தேகமும் உண்டு.

அதே போல் குடும்ப உறவு ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து, அவரை 2ம் அலை உச்சத்தில் இருந்த சமயம் A&E க்கும் கூட்டிப்போனேன். அந்த பெரிய வார்டில் நானும் அவரும் மட்டும்தான்😳. ஆகவே தேவைப்படும் போது தேவாரம் பாடினால் தைரியம் தானாய் வரும்🤣.

சியாமா செட்டி, புக்காரா, அவ்ரோ, மண்ணணை குண்டு, மோட்டார் செல், ஆட்டிலறி எல்லாம் தாண்டித்தானே வந்தம். என்ன கடைசியில் அடிச்ச பொஸ்பர்சஸ் குண்டை மட்டும்தான் காணேல்ல. ஆகவே சாவுக்கு பயம்தான் (யாருக்கு இல்லை) ஆனால் இப்படி முடங்கி கிடக்க அது மட்டுமே காரணம் அல்ல.

ஆனால் ஏன் தேவையில்லாத ரிஸ்க்?

அத்தோடு இது நான் மட்டும் சம்பந்த பட்ட விடயமும் அல்ல. இதில் ஒரு சமூக கடைப்பாடும் உண்டு. நான் உடம்பில் வலு இருப்பதால், வக்சீனும் அடித்ததால் தாக்கு பிடித்தாலும், ஒரு கருவியாக, காவியாக இருந்து இன்னொருவரின் மரணத்துக்கு காரணம் ஆகலாம்.

எனது வீரத்தால் இன்னொரு உயிருக்கு ஏன் வீணான ஆபத்தை கொடுப்பான்?

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை.

கொவிட் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பருவகால ப்ளூ போல வரலாம் என்பது எனக்கும் புரிகிறது.

ஆனால் நிச்சயமாக அந்த நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

1 hour ago, ரதி said:

இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

 

55 minutes ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

 

51 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

 

45 minutes ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

என்னோட கன பேருக்கு காண்டு என்று வடிவாய் தெரியுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

முடிஞ்சா வெற்றிலை பாக்கு கிடைச்சா போட்டு மெல்லுங்கோ சாமியார். இல்லாட்டியும் பரவாயில்லை சும்மா பாசாங்கு செய்யலாம் வேண்டும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

இங்கே மற்றைய மாநிலங்களில் முக்கியமாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்ரேலியா எல்லாம் lockdown இருந்த பொழுது NSWல் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மாநில Premier குறை கூறி வந்தார்கள்.. இப்பொழுது NSW lockdown.. 

இந்த மாதம் தொடக்கம் ஒரு நாள் அலுவலகம் வரலாம் என்றிருந்தார்கள்.. இப்போ எல்லாம் பழையபடி WFH ஆயிற்று.. 

உண்மையில் WFH மெடல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்றால் மிகவும் நன்று.. 

மின்சார கட்டனம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல மனச்சோர்வு, எடை அதிகரிப்பு என நிறைய. 

அதைவிட வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சமூகத்திடமிருந்து ஒரு ஒதுக்கம் என்பனவும் அதிகரித்துக்கொண்டே போகிறது..

இந்த கொரோனா எங்களை விட்டு போகுமா தெரியவில்லை, ஏதோவொரு வடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

4 hours ago, goshan_che said:

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

இதற்காகத்தான் எங்களது அலுவலத்திலும் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. திரும்பவும் lockdownற்குள் போனதால் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

..

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

உங்கட அனுதாபத்தை வைத்து நான் என்ன செய்யிறதுtw_lol: ...என் மீதான அக்கறைக்கு நன்றி😉 ...எனக்கு கொரோனா வந்து போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன் 😂
 

2 hours ago, goshan_che said:

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

பதிலுக்கு நன்றி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.