Jump to content

எண்பத்தி மூன்றினிலே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

<iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

 

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்தி மூன்றினிலே

எண்பத்தி மூன்றினிலே -ஆ
இலங்கைத் தீவினிலே

எண்பத்தி மூன்றினிலே
இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி
ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர்
இலங்கைத் தீவினிலே

கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென
கண்டவர் யாரும் வருந்திட எங்களைப்
புண்படச் செய்தனரே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாக்கியே
எண்பட்ட யாவரையும் தமிழ்
என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ
(எண்பத்தி...)

நெஞ்சங் குமுறிடவே-கற்பு
நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப்
பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும்
பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட
அஞ்சிய பாலகர்கள் - தங்கள்
அன்னையர் மார்பில் அமுதமருந்தியே
துஞ்சிய செய்திகளும் - பல
துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...)

தேயிலைத் தோட்டத்திலே - அந்தத்
தெற்கு இலங்கையிலே
ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர்
அன்று இனவெறியாற் கொலையுண்டதும்
நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை
நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும்
காயும் இனவெறியால் - எம்மேல்
காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

வெலிக்கடைச் சிறையில்-மனம்
வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே...
சிலிர்க்குதேயுடலம்...அந்தோ!
சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே...
பலிக்கு வெட்டினரே...
பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே
படையலிட்டனரே - அந்த
பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

ஆண்ட அரச படை - எங்கள்
அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும்
மூண்ட பெருந்தீயில் - செல்வம்
முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும்
மாண்டவர் கண்களையே - அந்த
மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும்
மீண்டும் நினைவலையில் - வந்து
மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)

சிங்கள பௌத்தவெறி - எங்கள்
செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை
எங்கு முறையிடுவோம் - எமக்(கு)
ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ!
தங்கையர் தம்பிகளே! - தமிழ்
ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர்
பொங்குக பொங்குகவே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)

ஆற்றல் இழந்தவராய்- எங்கள்
அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங்
காற்றிற் கலந்தவராய் - கலாச்
சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம்
மாற்றினமாகுவதோ - இல்லை
மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ
சாற்றிடுவாய் தாயே - ஹே!
சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)

1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம்.

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950/

 ஈழத்தமிழரின் நிகழ்கால வரலாற்று கவிதை.

ஈழத்தமிழரின் நிகழ்கால வரலாறு தெரியாதவர்கள் இக்கவிதையை மனப்பாடம் பண்ணவும்.

இணைப்பிற்கு நன்றி உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950

மிக்க நன்றி குமாரசாமி.  முடிந்தால் இதன் தலைப்பை முகப்பில் போட்டுவிடுங்கள்.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
பாடலை முழுமையாகப் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றிகள் வாத்தியார்.
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

இந்தியா உணவுப்பொதி போட்டதா...? எப்போது....?? வாய்கரிசிதானே போட்டது.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

இந்தியா உணவுப்பொதி போட்டதா...? எப்போது....?? வாய்கரிசிதானே போட்டது.

 

நன்றி பாஞ்ச்.  எனக்கு அந்த நேரம் அப்படி வாயில் வரவில்லை.  அதனால் உணவுப்பொதியென்று போட்டுவிட்டேன்.  ஆஹா வாய்க்கரிசியே சிறப்பான உவமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2021 at 00:08, வாத்தியார் said:

எண்பத்தி மூன்றினிலே

எண்பத்தி மூன்றினிலே -ஆ
இலங்கைத் தீவினிலே

எண்பத்தி மூன்றினிலே
இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி
ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர்
இலங்கைத் தீவினிலே

கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென
கண்டவர் யாரும் வருந்திட எங்களைப்
புண்படச் செய்தனரே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாக்கியே
எண்பட்ட யாவரையும் தமிழ்
என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ
(எண்பத்தி...)

நெஞ்சங் குமுறிடவே-கற்பு
நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப்
பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும்
பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட
அஞ்சிய பாலகர்கள் - தங்கள்
அன்னையர் மார்பில் அமுதமருந்தியே
துஞ்சிய செய்திகளும் - பல
துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...)

தேயிலைத் தோட்டத்திலே - அந்தத்
தெற்கு இலங்கையிலே
ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர்
அன்று இனவெறியாற் கொலையுண்டதும்
நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை
நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும்
காயும் இனவெறியால் - எம்மேல்
காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

வெலிக்கடைச் சிறையில்-மனம்
வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே...
சிலிர்க்குதேயுடலம்...அந்தோ!
சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே...
பலிக்கு வெட்டினரே...
பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே
படையலிட்டனரே - அந்த
பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...)

ஆண்ட அரச படை - எங்கள்
அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும்
மூண்ட பெருந்தீயில் - செல்வம்
முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும்
மாண்டவர் கண்களையே - அந்த
மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும்
மீண்டும் நினைவலையில் - வந்து
மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...)

சிங்கள பௌத்தவெறி - எங்கள்
செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை
எங்கு முறையிடுவோம் - எமக்(கு)
ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ!
தங்கையர் தம்பிகளே! - தமிழ்
ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர்
பொங்குக பொங்குகவே - ஒரு
போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...)

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...)

ஆற்றல் இழந்தவராய்- எங்கள்
அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங்
காற்றிற் கலந்தவராய் - கலாச்
சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம்
மாற்றினமாகுவதோ - இல்லை
மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ
சாற்றிடுவாய் தாயே - ஹே!
சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...)

1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம்.

பாடியோர்: மாட்டின் சோபியா
பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா)
இசை: சதீஸ் குழுவினர்

 
 
 
 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2021 at 06:32, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

நன்றி தமிழ்த்தேசியன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 20:38, வாத்தியார் said:

மேற்குலகந்தனிலே - பொருள்
மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின்
நாட்டை மறப்போமோ! - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை
வீட்டை மறப்போமோ! - என்று
விம்மியழுது புலம்பிடும் எம்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - அந்த
கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில்
மீட்டு முரையாயோ - நாங்கள்
விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம்

கவிதைக்கு நன்றி அங்கிள்
உங்கள் இலக்கிய ஆர்வத்தை உங்களுடன் வாழ்ந்தபோதே அறிந்து கொண்டேன்.
இன்னும் பல ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி வாத்தியார் அவர்களே!  என்னால் உங்களை யூகித்தறிய முடியவில்லை, மன்னிக்கவும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.