Jump to content

டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த

Published by T. Saranya on 2021-07-21 15:27:57

 
 

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய யாழ். வேலனையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஜீலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர்,  காங்கேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதித்  திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.

பின்னர், வேலனைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலனையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

பின்னர், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸின் பரிந்துரையில் வேலனையில் 100 நகரத் திட்டம் - ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு நகரத்துக்கும் விகாரையின் பெயரும் தயார்  போலத்தான்  இருக்கு???

அது  சரி  கேட்க  நாதியற்றவர்களின் தலையில் எதை அரைத்தாலென்ன???😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வேகமாக சீனா உள்ளே வருகிறதோ அதே வேகத்தில் எமக்கு நன்மை நடைபெறலாம்.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு சிங்கப்பூராகிட்டுது. எனி வேலணை.. ரொரான்டோ லெவலுக்கு ஆகப் போகுது.. சாரி சாரி.. பீஜிங் லெவலுக்கு ஆகப் போகுது இருந்து பாருங்கள் மக்களே.

முதலில தீவகத்தில போடுற ரோட்டுகளை ஒழுங்கா.. போட்டு முடியுங்கப்பு. 

அதிலும் ரென்டர் லஞ்சம்... சலுகை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலனையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இவர் முகவர். வேலைத்திட்டம்  சீனா,  இதோடு நூறு விகாரை புதிதாய் முளைக்கும் அது மகிந்தாவின் திட்டம். எதிர்ப்பில்லாமல் மக்களை ஏமாளிகளாக்கி எதிரிகளை உள்வீட்டுக்கழைக்கும் குள்ளநரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.