Jump to content

நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள் - பாப்லோ நெரூடா


Recommended Posts

 
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்,
நீங்கள் பயணம் செய்யாவிட்டால்,
நீங்கள் வாசிக்காவிட்டால்,
நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால்.
உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால்.
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்,
 
நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது,
பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது.
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்,
 
அதே பாதைகளில் தினமும் நடந்து…
நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகும்போது,
உங்களது வழக்கமான செயல்களை மாற்றாமல் இருக்கும்போது
வெவ்வேறு வண்ணங்களை நீங்கள் உடுத்தாதிருக்கும்போது
உங்களுக்குத் தெரியாதவர்களோடு நீங்கள் பேசாதிருக்கும்போது.
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்,
 
உங்கள் கண்களைப் பனிக்கவைக்கும்
உங்கள் இதயங்களைத் துடிக்கவைக்கும்
உங்கள் வேட்கையையும் உணர்ச்சியையும்
அவற்றின் கொந்தளிக்கும் மனவெழுச்சிகளையும்
நீங்கள் தவிர்க்கும்போது.
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்,
 
உங்கள் பணியோ உங்கள் காதலோ மனநிறைவு தராதபோது
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றாவிட்டால்,
உறுதியற்ற ஒன்றிற்காக பாதுகாப்பான ஒன்றை விடத் துணியாவிட்டால்,
நீங்கள் கனவைத் துரத்திச் செல்லாவிட்டால்
உங்கள் வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையாவது
அறிவார்ந்த அறிவுரையை விட்டு ஓட
நீங்கள் உங்களை அனுமதிக்காவிட்டால்..
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள்.
 
---- பாப்லோ நெரூடா
மொழிபெயர்ப்புக்கு நன்றி
Suresh Kathan
 
-----------------------------------------------------
அண்மையில் நான் வாசித்த கவிதைகளில் மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல் என் வாழ்வையும் தொட்டுச் செல்கின்றது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியற்ற ஒன்றிற்காக பாதுகாப்பான ஒன்றை விடத் துணியாவிட்டால்???
இதைத்தவிர மற்றவை  அனைத்தும் நன்று

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

உறுதியற்ற ஒன்றிற்காக பாதுகாப்பான ஒன்றை விடத் துணியாவிட்டால்???
இதைத்தவிர மற்றவை  அனைத்தும் நன்று

ஒருவர் வாழ்க்கையில் ஒரு தொழிலை பலவருடங்களாக செய்து கொண்டு வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்ல உறுதியாக நின்று நிலைத்து விட்டார் என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி தொடர்ந்து ஒரே செக்கில் சுத்திக் கொண்டு இருக்கும் போது ஒரு கட்டத்தில் அவருக்கு சலிப்பு வரும். அனேகமானோர் சலிப்பு வந்தாலும் பரவாயில்லை, இதுவே பாதுகாப்பானது என்று நிலைத்து விடுவர். சிலர் அதை தொடராமவிட்டுவிட்டு இன்னொரு விடயத்தில் ஈடுபடுவது கொஞ்சம் றிஸ்கானது (உறுதியற்றது) எனத் தெரிந்தும் இறங்குவர். 

அப்படி தொடங்குகின்றவர்கள் வாழ்வு ரசனையானது என்ற ரீதியில் இந்த வரிகளை நான் புரிந்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ஒருவர் வாழ்க்கையில் ஒரு தொழிலை பலவருடங்களாக செய்து கொண்டு வருகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்ல உறுதியாக நின்று நிலைத்து விட்டார் என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி தொடர்ந்து ஒரே செக்கில் சுத்திக் கொண்டு இருக்கும் போது ஒரு கட்டத்தில் அவருக்கு சலிப்பு வரும். அனேகமானோர் சலிப்பு வந்தாலும் பரவாயில்லை, இதுவே பாதுகாப்பானது என்று நிலைத்து விடுவர். சிலர் அதை தொடராமவிட்டுவிட்டு இன்னொரு விடயத்தில் ஈடுபடுவது கொஞ்சம் றிஸ்கானது (உறுதியற்றது) எனத் தெரிந்தும் இறங்குவர். 

அப்படி தொடங்குகின்றவர்கள் வாழ்வு ரசனையானது என்ற ரீதியில் இந்த வரிகளை நான் புரிந்து கொள்கின்றேன்.

 

உண்மை தான்

ஆனால் தலைப்பு  சாகத்தொடங்குகிறீர்கள்  என்பது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்
நீங்களும் கறுப்பு கண்ணாடி போட்டு குட்டி கருணாநிதியாகி விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ம்
நீங்களும் கறுப்பு கண்ணாடி போட்டு குட்டி கருணாநிதியாகி விட்டீர்கள்.

இதை நாம்   வன்மையாக  கண்டிக்கின்றோம்😜

நாம்  அவர் போலில்லை

முதலாவது  இடத்துக்கே நிரந்தர  இடம்

இரண்டாவது  இடத்தை  நாங்கள் எப்பொழுதும்  காலியாகவே  வைத்திருப்போம்??🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் சொன்ன அத்தனையும் நிஜமாக இருக்கின்றது.......நல்ல கவிதை.......நன்றி நிழலி பகிர்வுக்கு.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதை நாம்   வன்மையாக  கண்டிக்கின்றோம்😜

நாம்  அவர் போலில்லை

முதலாவது  இடத்துக்கே நிரந்தர  இடம்

இரண்டாவது  இடத்தை  நாங்கள் எப்பொழுதும்  காலியாகவே  வைத்திருப்போம்??🤣

 

போற வண்டியில் போட்டுவிடுற பிளானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

உண்மை தான்

ஆனால் தலைப்பு  சாகத்தொடங்குகிறீர்கள்  என்பது??

எவராக இருந்தாலும் பிறக்கும் போதே சாவை நோக்கித்தான் நகர்கின்றார்கள். வாழ்க்கை முறை  தான் காலத்தை  நிர்ணயிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

உறுதியற்ற ஒன்றிற்காக பாதுகாப்பான ஒன்றை விடத் துணியாவிட்டால்???
இதைத்தவிர மற்றவை  அனைத்தும் நன்று

சிலரது வாழ்க்கை, அன்பற்றது/ஆதரவற்றது/உறுதியற்றது என தெரிந்தும் “சமூகத்தின் வாய்கள்” என்பதிலிருந்து ஒரு பாதுகாப்பு(?) என நினைத்து துணிந்து முடிவுகளை எடுக்காது இருக்கும் அங்கே நீங்கள் மெல்ல மெல்ல சாகத்தொடங்குகிறீர்கள்.. என்றுதான் நான் பார்க்கிறேன்..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தும் வாசிப்பும் இசையும் தேடலும் இல்லாமல் போனால் மனிதர் என்ன இந்த பூமி கூட அமைதியாய் அடங்கிவிடும்.அழகான செய்தியை சொல்லி இருக்கிறார் நெரூடா.நன்றிகள் பகிர்வுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 17:33, விசுகு said:

உண்மை தான்

ஆனால் தலைப்பு  சாகத்தொடங்குகிறீர்கள்  என்பது??

 

உடம்பில், மனதில், மூளை (அவற்றின் பகுதிகள் கூட) தொழிற்படுவது - use it or loose it என்ற அடிப்படியில். 

 

பாலியல் ஈடுபாடு கூட இதில் விதி விலக்காக இல்லை என்று நினைக்கிறன்.

 

உ.ம். முறிவுக்கு நீண்ட நாள் தொடர்ச்சியாக பற்று போட்டிருந்தால், பற்றை அகற்றியவுடன் முறிவடைந்த பகுதி ஏதோ தேவை இல்லாத, புதிதாக தோன்றிய  பகுதியான உணர்வும் , அதன் அசைவை மாற்ற அங்ககங்களின் அசைவோடு ஒருங்கு படுத்துவதற்கு, ஓரளவு காலா இடைவெளியும் தேவைப்படும். 

 

ஒரே தொழிலில், ஒரே பொறுப்பில்  இருக்கும் போது, இதற்கான வாய்ப்புகள் ஏதோ ஒரு வகையில்  அதிகம் என்று நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 22/7/2021 at 08:55, விசுகு said:

உறுதியற்ற ஒன்றிற்காக பாதுகாப்பான ஒன்றை விடத் துணியாவிட்டால்???
இதைத்தவிர மற்றவை  அனைத்தும் நன்று

 Risk   எடுக்கட்டாம்..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நம் உடலையும் மனசையும்  சூழ்ந்துவருகிற விதிகளிடமும் சதிகளிடமும்   இறுதிவரை சராணாகதியாகாமல் விரும்பியதை விரும்பியடி அவுபவிக்க உழைப்பதுதானே வாழ்க்கை.  நெடுங்காலத்தின்முன்னே படித்த எனக்குப்பிடித்தெ நெடாவின் கவிதையை மீண்டும் படிக்க வாய்ப்பு தந்த நிழலிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.