Jump to content

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை - எம். சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. 

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாகரசபை முதல்வர் ரி.சரவணபவான் மாநகசைபை ஆணையாளருக்கு எதிரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாணைக்கு இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் நாங்கள் தான் ஆரம்பித்து வைத்தோம். ஆகவே மக்களுடைய போராட்டங்கள் அனைத்துக்கும் எங்களுடைய ஆதரவு இருக்கின்றது அரசாங்கம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவசரமாக மக்களிடம் இருந்த செல்வாக்கை முழுமையாக இழந்து நிற்கின்றது. 

நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல எதிரானவர்களும் அல்ல ஆனால் இலங்கைவாழ் தமிழ் மக்களை பெறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம் ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. 

அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய அரசும் தொடர்சியாக அதிலே உள்ள விடையங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை  30 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம். 

அதேவேளையில் சீனா இலங்கைக்குள் வந்து காலடி எடுத்து வைக்கும் விடையமாக மற்றைய நாடுகள் விசேடமாக ஜனநாயகத்தை பேணுகின்ற மனித உரிமையை மதிக்கின்ற நாடுகள் இங்கே வந்து இலங்கை அரசாங்கத்தோடு நட்புறவு பேணி தங்களுடைய விழுமியங்களை பரப்புவது நல்ல விடையம்.

ஆனால் சீனாவை பெறுத்தவரையில் அங்கு ஜனநாயகம் இருப்பது எவருக்கும் தெரியாத விடையம் ஒரு கட்சி ஆட்சி. மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை மனித உரிமைகள் என்றால் அது என்னவென்று கேட்கின்ற அளவுக்குதான் சீனாவினுடைய நிலைப்பாடு. 

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக 2012 இருந்து  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா அந்த தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. 

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் மனித உரிமை மீறல்களுக்கு அதிகமாக முகம் கொடுக்கின்றவர்கள் என்ற வகையில். ஜனநாயகம் பேனப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையில். சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை 

ஆகவே நாங்கள் உயரியதாக கருதுகின்ற விழுமியங்களை கொண்ட நாடுகள் இலங்கைக்கு அறிவுரை கூறுவது இலங்கையில் ஈடுபடுவது வரவேற்க தக்கவிடையம் என்றார். 

சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை - எம். சுமந்திரன்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்  அவ்வப்போது தான் யாருடைய ஆள் என்பதை இப்படியான அறிக்கைகள் மூலம் தமிழ் மக்களுக்கு சொல்லுவது உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிழம்பு said:

ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல் கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். 

2009இல் தமிழருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா முறியடித்து இலங்கைக்கு ஆதரவு வழங்கியதாலேயே இன்றுவரை எமது பிரச்சனை நீள்கிறது.

இதைப்பற்றி எல்லாம் மூச்சுவிடாமல் சதா சீனனையை பேசிக் கொண்டிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியாவால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சிங்களவனுக்கு தெரிந்தது, இந்த பிரகிராசியருக்கு தெரியவில்லை.

சும்மா இருந்து பினாத்தாமல், ஒரு எட்டு போய், சீன தூதரை சந்தித்து, எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று தந்தால், எங்கள் ஆதரவும் உங்களுக்கே என்று சொல்லி வைத்தால், இந்தியாவுக்கு செக் வைத்த மாதிரி இருக்குமே. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இன்று வியாழக்கிழமை (22) ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இவர்கிட்ட எல்லாம் ஏன் இன்டர்வியு எடுக்கீங்க.? ☺️

585230710.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த இந்தியாவால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சிங்களவனுக்கு தெரிந்தது, இந்த பிரகிராசியருக்கு தெரியவில்லை.

சும்மா இருந்து பினாத்தாமல், ஒரு எட்டு போய், சீன தூதரை சந்தித்து, எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று தந்தால், எங்கள் ஆதரவும் உங்களுக்கே என்று சொல்லி வைத்தால், இந்தியாவுக்கு செக் வைத்த மாதிரி இருக்குமே. 🤔

உங்கடை கதையை பார்த்தால் திருவாளர் சுமத்திரன் தமிழர்களுக்கு  விடிவு ஏற்படுத்தி கொடுக்க வந்த தேவ தூதன்  போல் அல்லவா  இருக்கு !!!!!!🤣

அவரே  தமிழர் தமிழ் என்று பிழைக்க வந்த பிழைப்பு வாதி அரசியலில் வருமானம் பார்க்க வந்தவர்கள் இவர்கள் சீனா காரரை என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும் என்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

தமிழ் மக்களை பெறுத்தவரையில் . சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை நாங்கள் விரும்பவில்லை

பயபுள்ள எப்படி நேக்கா மஹிந்த குரூப்போட தமிழ்மக்களை மறுபடியும் கொழுவிவிடுது பார். ஏற்கனவே எங்களை அவங்களுக்கு பிடிக்காது,  சீனா என்றால் அவர்களுக்கு உயிர்.

தமிழர்கள் எப்போ சொன்னார்கள் சீனா ஸ்ரீலங்காவில் செல்வாக்காக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லையென்று?

வடகிழக்கில் சிங்கள ஆக்கிரமிப்பு அதிகரிப்பதை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்று பேச துப்பில்லை சீனாவுக்கு போயிட்டார் மானிக் பாட்ஷா.

தமிழர் நிலங்கள் படிப்படியாக சிங்களவர்களிடம் பறிபோகும்போது, சிங்களவர் நிலம் சீனாக்காரனிடம் பறிபோவதுபற்றி தமிழர்கள் எதுக்கு கவலைபட போகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

தமிழர்கள் எப்போ சொன்னார்கள் சீனா ஸ்ரீலங்காவில் செல்வாக்காக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லையென்று?

இவர் எப்போ தமிழரிடம் அதைக்கேட்டார் என்று முதலில்  கேளுங்கோ அவரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எல்லைக்குள்ளே உள்ள சீனாவை ஒன்றும் செய்ய முடியவில்லை இந்தியாவால், இலங்கையில் சீனாவின் தலையீட்டை என்ன செய்ய முடியும்? ஆனால் தாம் போகுமிடமெல்லாம் ஆக்கிரமிக்கும் சீனாவை எந்த நாடாலும் இதுவரை எதுவும் செய்யமுடியவில்லை அண்மைய உதாரணம் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியா. இலங்கை சீனாவிடம் பொல்லைக்கொடுத்து அடி வாங்கப்போகிறது வெகு விரைவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vasee said:

இலங்கையில் சீனாவின் தலையீட்டை என்ன செய்ய முடியும்?

இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதாலேயே தனது  முகவர்களை உசுப்பிவிட்டுக்கிடக்கு அவையளும் கதறுகினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.