Jump to content

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது” - ஜனாதிபதி ஆணைக்குழு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

”இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது” - ஜனாதிபதி ஆணைக்குழு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆணைக்குழு

பட மூலாதாரம்,PMD

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையை இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (21) மாலை கையளித்திருந்தனர்.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையானக குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் மற்றும் குழுக்களினால் வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

கூட்டம்

பட மூலாதாரம்,PMD

இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையிலேயே, இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

 

பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இந்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு இடைகால அறிக்கையில் ஊடாக பரிந்துரை செய்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ம் சரத்துக்கள் குறித்து, இந்த ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் அமல்படுத்துவது தொடர்பிலான மூன்று முன்மொழிவுகளை, இந்த ஆணைக்குழு தமது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்வைத்துள்ளது.

இந்த சட்டத்தின் 9வது சரத்தின் ஊடாக தடுத்து வைத்தல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்குகளை விசாரணை செய்து நிறைவு செய்வது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சட்டத்தின் 11வது சரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

PMD

13வது சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்த பட்சம் மூன்று உறுப்பினர்களை கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ஆலோசனை சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, குறித்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைந்துக்கொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர் நிறுவனங்களோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை ஜனநாயக மற்றும் சட்ட செயல்முறைக்குள் தீர்ப்பதற்கு தேவையான நிறுவன திருத்தங்களை மேற்கொண்டு, நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-57930324

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுயாதீன ஆணைக்குழுவா.. இல்ல கோத்தாவின் ஆணைக்குட்பட்ட குழுவா..??! இதெல்லாம் சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகங்களே. இதை எல்லாம் நம்பிக்கிட்டு இன்னும் உலகம் இருக்கே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே கதை எழுதி தயாரிக்க, நடிகர் பாத்திரம்  அதை மறுப்பது. ஆகவே ஆசிரியர் மீறி செயற்பட முடியாது போலவும் நாடகம் முடியும். அதையும் மீறி நடவடிக்கை தொடர்ந்தால் சரணாகதிதான். அரசியல் வாதிகளுக்கு தங்கள் திட்டத்தை நிறைவேற்ற நல்ல சாட்டு மக்கள் சொல்கிறார்கள், ஆணை தந்தார்கள், ஆணைக்குழு, கத்தரிக்காய்க்குழு சொன்னது என்று பழியை  முடிப்பார்கள். ஆனால் மக்களே ஏமாந்து போய் உள்ளார்கள் இவர்களால் என்பதை யாரறிவார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

GSP + ??

அதுக்கு ஏற்ற மாதிரி.. பயங்கரவாத தடைச் சட்டம் வடிவமைக்க படும்!

Link to comment
Share on other sites

பழம் நழுவிப் பாலில் வீழந்தது பழமொழி.😋

சனநாயகம் நழுவிப் பயங்கரவாதத்தில் வீழந்தது புதுமொழி.👹 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.