Jump to content

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1230038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

அவரது நெடுநாள் கனவாயிருக்குமோ? இவரைக்கேட்டு இவரது ஒப்புதலோடுதானாம் நாட்டை விக்கிறதெண்டால் விப்பினமாம். இவர்தான் நாட்டை காட்டிக்கொடுப்பதில்லை, விற்பதில்லை என்று சூளுறைத்துவிட்டாரே. இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

Link to comment
Share on other sites

6 hours ago, satan said:

இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

மாட்டு வண்டியிலயா? போயினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

கூட்டமைப்பினர் கூத்தாடிகளாக இருக்கும் வரையில் தோழர் டக்ளஸ் அவர்களின் காட்டில் மழை தான்.
மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

அபிவிருத்தியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர உரிமையை நிராகரிக்கவில்லை. மக்கள் உரிமைக்குரலை முன்கொண்டு செல்லத்தக்க தலைமையின்மையால்.. மக்கள் அந்தக் குரலை ஆக்கிரமிப்பு சூழலுக்குள் அடக்கி வாசிக்கிறார்களே தவிர..  அங்கு.. அபிவிருத்தியை நோக்கி உரிமையை கைவிட்டதாக அர்த்தப்பட வாய்ப்பில்லை.  பெரும்பான்மையான தமிழ் மக்கள் மனதில் உரிமை தொடர்பில்.. மண் தொடர்பில்.. ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

நெடுக்ஸ்... மிக அருமையான கருத்தை, 
ஆணித்தரமாக.... பதிந்து உள்ளமைக்கு நன்றி. 👏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொந்தளிப்போடு சூறாவளியும் சேர்ந்து கையில் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போக நடுக்கடலில்  நிர்க்கதியான ஒருவர் ஒரு துரும்பாவது கிடைக்காதா பற்றிக்கொண்டு கரையேறி விடலாம் என்று ஏங்கும் நிலையிலேயே மக்கள் இப்போதுள்ளனர். அநேரத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து வாக்கை கொள்ளையடிக்கின்றனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? எல்லா குள்ள நரிகளிடமும் ஏமாறுவதைவிட வேறு தெரிவு இல்லை. மக்களின் வாக்கை கொள்ளையடித்து கதிரை ஏறுபவர்கள் எல்லாம் யோக்கியர்கள் கிடையாது. வாக்கு போட்டவர் எல்லாம் நன்மை பெற்றவரும் கிடையாது. அவர்கள் குறைகளில் இவர்கள் இலாபம் அடைகின்றனர் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.