Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான்.

நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.

 

சாதியத்தின் அடிப்படையில், கோவிலுக்குள் விடுவதில்லை என்பதனை ஏற்றுக் கொள்கிறேன், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள் மத்தியில் மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

அதையே தான், நிழலிக்கு சொன்னேன்.

1495ல் வந்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோட காமாவை சந்தித்த (தமிழ்) சேர சமூரிய மன்னன் அரியணையில் வெறும் மேலுடன் வீற்று இருந்தார் என்றே அவரது குறிப்புகளில் உள்ளன.

1280px-Vasco_da_Gama_perante_o_Samorim_de_Calecute.png

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆனால், அதுக்கும் மேலாடைக்கும் தொடர்பு இல்லை என்பதே எனது கருத்து. மேலே ஒரு உறவு சொன்னது போல, தமிழர்கள். மேலாடை அணியும் வழக்கம் இருக்கவில்லை. அது ஐரோப்பியர் காலத்தின் பின்னர் வந்தது. 

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

ஏன் மேலாடை அணியக்கூடாது என்பதற்கு போலி ஆன்மீகக் காரணங்களும் உள்ளன. சாம்பிளுக்கு ஒன்று..

 

“ஆலய விக்கிரகங்கள் கருங்கல்லாலேயே வடிவமைக்கப்படுகிறது. கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால் ஈர்த்து, தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு (🤔🤔🤔). எனவே தான் மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. "ஓம்" என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பலவகை அபிஷேகங்களை செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன(🧐🧐🧐🧐). அம்மின்னூட்டக் கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும், மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர். (🥸🥸🥸🥸)
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும். நாள்தோறும் 4,6 காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள் தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன. இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும் என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்(🤩🤩🤩🤩). பெண்களுக்கு அவர்களின் உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்(☹️☹️☹️☹️). இஃது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும்.”

 

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

காரணம் அந்தந்த  கிராமங்களில் வாழ்பவர்கள்   ஒவ்வொருவரையும்

ஒவ்வொருவரும் அறிந்த காலப்பகுதி  அது

அந்த  நேரத்தில் மேலாடையை  களட்டித்தான்  ஆட்களை  அறிய வேண்டும் என்ற நிலை  இருந்திருக்க  வாய்ப்பில்லை  என்றே  நினைக்கின்றேன்

உதாரணத்துக்கு எனது  ஊரில்  எல்லோரையம் எல்லோரும் அறிவர்

அப்படி  இல்லாது விட்டாலும் வட்டாரத்தை சொன்னாலே போதும்???

 

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இன்னுமொரு படமும் உள்ளது, இணைக்க விரும்பவில்லை. தென்பகுதியில், போர்த்துக்கேயர் வந்த போது இருந்த நிலையை படமாக கீறி ஒரு போர்த்துக்கேயர் போட்டிருந்தார்.

அங்கே பெண்கள் கூட, மேலாடை இல்லாமல், இருப்பதாக படம் உள்ளது. 

4 minutes ago, கிருபன் said:

மேலாடை என்றால் சால்வை, உத்தரீயம் என்பவையும் அடங்கும்.

*****

படுபாவியள் பெண்களுக்கும் அருட்கதிர்களை பாய விட்டிருந்தால், நான் கோயிலே கதியேன்று கிடந்திருப்பேனே!😜😜🤪🤪

no comments!!!!

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நீங்கள் ஒரு தரவுக்காக அல்லது சாட்சியாக இதனை குறிப்பிட்டால்அது தவறான சுட்டுதலாக  இருக்கும்

 

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது.

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நிழலி, குறித்து முன்னர் சொல்லி இருக்கிறேன்.

விசயம் இருந்தால் நிண்டு களமாடுவார்.... இல்லாவிடில் பிறகு வருவேன் என்பது போல போய் விடுவார். அலம்பறை பண்ணார். 😜😜 👍

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

2 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

சாரி. பாஸ். எனக்கு நீங்கள் சொன்ன இடங்கள் எல்லாம் கூகிள் மாப்பில்தான் தேடினால்தான் தெரியும். தெரிந்ததெல்லாம் வடமராட்சி மட்டும்தான். யாழ்ப்பாண ரவுண் கூட எட்டிப் பார்க்காமல் தன்னிறைவாக இருந்துவிட்டோம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

ஊர்க்கோவில் என்றால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். உள்ளே அனுமதி இல்லாதவர்கள் வரவே மாட்டார்கள். ஆனால் பெரிய கோயில்களுக்கு, உதாரணம் வல்லிபுரக்கோவில், சாதாரண காலத்திலும், திருவிழாக் காலங்களிலும் பல பகுதிகளிலும் இருந்து வருவார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண மேலாடை இல்லை என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஆனால் காரணங்களை ஆன்மீகத்தோடு தொடுத்துச் சொல்லும்போது சிறிய ஊர்க்கோவில்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

சேர்ட் போன்ற மேலாடை பிற்காலத்தில்  வந்தபோது, அதை தாழ்த்தப்பட்ட மக்கள் அணியத் தடைவிதித்ததும், மேல் சாதியினர் நாகரீகத்தை பறை சாற்ற எல்லா இடமும் அணிந்திருந்தும் ஏன் கோவிலுக்கு மட்டும் அணியக்கூடாது என்று “மரபை” தொடர்கின்றார்கள்? இது சுத்தம், சுகாதாரத்திற்கும் எதிராக இருந்தும் அதற்கு அருட்கதிர் விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்!😂

நீங்கள், மீண்டும், மீண்டும், சாதியம் என்ற ஒரு விடயத்தினை, மக்களிடம் வழக்கமே இல்லாத ஒரு விடயத்துடன் இணைக்க முனைகிறீர்கள் என்பதே எனது கருத்து.

பெண்களே மேலாடை இல்லாத நிலையில், ஆண்கள், சால்வை போட்டு இருப்பார்கள் என்பது சரியானது அல்ல.

பெண்களின் மார்புக்கச்சையே ஐரோப்பியர் அறிமுகம். ஐரோப்பியர் காலத்தின் பின்னரே மேலாடை பழக்கம் வந்தது. பிரித்தானியருக்கு முன்னான 300 வருட ஐரோப்பியர் ஆட்சியில் இலங்கை தீவில் உண்டாகி இருந்த இந்த மாறுதல் காரணமாகவே, 18 மைல் தூரத்தில் இருந்த இலங்கை, இந்தியாவுடன் இணைத்து ஆளப்படவில்லை. 1400 மைல் தொலைவில் இருந்த, அந்தமான், நிக்கோபார் இந்தியாவுடன் சேர்த்து ஆளப்பட்டது.

பிரித்தானியார் காலத்தில், தமிழகத்தில், முலை வரி வழக்கம் இருந்தது. ஆகவே மேலாடை வழக்கம் இல்லை. (மேலாடை போட்டால் வரி)

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சிவா சின்னப்பொடியர் மக்கள் மத்தியில் இல்லாத ஒரு பழக்கத்துக்கு பெரு விளக்கம் கொடுத்துள்ளார் போன்று தெரிகிறது.

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

மேலாடை அணியாமல் இருந்த சமூகம், ஏன் மேலாடை புழக்கத்திற்கு வந்தபோது அதை கோயிலுக்கு மட்டும் தடை செய்தது என்ற கேள்வி உங்களுக்கு இன்னமும் வரவில்லை.  வரும்போது விளக்கம் கிடைக்கும்.

👆🏿

2 minutes ago, Nathamuni said:

ஆகவே, இருக்காத ஒரு விடயத்தினை இருந்ததாக சொல்லி, அதனை சாதியத்துடன் தொடர்பு படுத்துவது தவறானது என்பது, அடியேன் கருத்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

அதாவது நிழலியும், நாதமுனியும் புத்திசீவிகள்😃அப்படியே இருக்கட்டும்.

நமக்கு தெரிந்ததைத்தானே நாம எழுதலாம்😃

இல்லை கிருபன் அய்யா... உங்கள் லெவலே வேறை...

நிழலியர் சத்தத்தையே காணவில்லை.... என்று ஒரு தூண்டில் போட்டேன். அவ்வளவுதான்....  😜

5 minutes ago, கிருபன் said:

இல்லாத பழக்கம் இல்லை. தடை செய்யப்பட்ட வழக்கம்.

வழக்கம் இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இருந்தால் தானே, தடை செய்ய முடியும்.... லாஜிக் உதைக்குதே....

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

மேலாடையை ஐரோப்பியர் அறிமுகப்படுத்தியபோது அதை நாகரீகமாகக் கருதி தங்களைக் கனவான்களாகக் காட்ட, வேலை செய்யும் இடங்கள், கல்விக்கூடங்கள் எங்கும் உடுத்தியவர்கள் கோயிலுக்கும் உடுத்திக்கொண்டு போய் இருப்பார்கள்தானே. அப்படி போகும்போது தடுக்காமல் இருந்திருந்தால் இப்போது எல்லோரும் மேலாடையுடன் போயிருப்பார்களே. ஏன் அந்த மாறுதல் வரவில்லை? 

குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

இப்போது அதனை கடந்து குழப்புகிறோம், இல்லையா? 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

விடயம், ஐரோப்பியர் காலத்துக்கு முன்னர், இருந்த சாதியமும், மேலாடை அணித்தலுமாக இருந்தது....

 

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

மானிப்பாய் வீதி, 5லாம்பு சந்தி, கொட்டடி, நாவந்துறை இவற்றால் எல்லையிடபட்ட பகுதியில் இருக்கும் இந்து கோவில்களில் என்ன நடைமுறை என்று எனக்கு விளக்குவீர்களா?

தெளிவடையத்தான் கேட்கிறேன்.

நான் சொன்ன பகுதியை தெரியாதா கிருபன். என்னப்பா நீங்கள். 

தெற்கு எல்லை பொம்மைவெளி 🤣

இப்ப விளங்கி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஆமாம். இப்போது சாதியம் இல்லை. மேலாடையும் இல்லை😜

கொரோனா முடிய இரண்டுபேரும் யாழ்ப்பாணம் போய் மேலாடையுடன் கோயிலுக்குள் போக நல்லூர்க்கோவிலுக்கு முன்னால் போராட்டம் நடாத்துவோம்😃

 

அப்படி சொல்லுங்கோ... நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை... அதுக்காக, வேலைக்கு ஆள் வைத்திருக்க மாட்டார்கள். சக பக்தர்களே சொல்வார்கள்.

ஆட்டோவில் போனால், சேர்ட்டை கழட்டி உங்க விட்டுட்டு போங்கோ என்பார் ஆட்டோக்காரர்.

அது தெய்வ குத்தம் என்ற படியால், நான் போராட மாட்டேன்... 😜

பொருளாதார நிலைமை கூடுவதால், சாதியம் நாளடைவில் இல்லாமல் போகும் என்றே நினைக்கிறேன். புலம் பெயர் நாடுகளில், இன்னும் இரு தலைமுறையின் பின்னர் இல்லாது போய் விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்லூர் கோவில் வாசலில், இப்போதும் கூட, சேட்டினை கழட்டுங்கோ என்பார்கள்.... சாதி கேட்பதில்லை...

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

உல்லாசப்பயணிகள், சிங்களவர் எல்லோருமே. 

இந்தாள் சேட்டு போடவில்லை, ஏன் எண்டு நினைக்கிறியள்? சாதியம்?

large.Temple.jpg.bd67ed3c4da23ff10b373bf74feb631a.jpg

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 1K devotees to be allowed into Kerala's Guruvayur temple from September 10-  The New Indian Express

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நல்லூரில் ஏன் சேர்ட்டைக் கழட்டக் கேட்கின்றார்கள் என்பதற்கு பழைய மரபு என்பதைத் தவிர வேறு ஏதாவது விளக்கம் இருக்கா? நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪 எதற்கும் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை ஒரு தடவை சரி பார்க்கின்றேன்😃

சாதி பார்த்து உள்ளே அனுமதிக்கும் கோவில்களில்கூட சாதியை யாரும் கேட்பதில்லை. நேரடியாக கேட்காமல் கண்டுபிடிக்கத்தான் மேலாடை அணியாமல் வரவேண்டும் என்று சட்டம் வைத்துள்ளனர். இந்த அனுகூலத்தை கைவிட ஆசாரவாதிகளுக்கும், நுணுக்கமாக சாதியத்தை கடத்துபவர்களுக்கும் ஒருபோதும் மனம் வராது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு  கிருபன் ஜி,

ஒரு தடவை பெரியாரும் அம்பேத்கரும் சந்தித்து கொண்டார்களாம். அப்போ அம்பேத்கர் பெளத்தத்தை தழுவும் படி பெரியாருக்கு கூற அவர் சொன்னாராம், இந்த மதத்தை விட்டு வெளியேறிய மறு நிமிடம் இதில் உள்ள குறைகளை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறேன். ஆகவே மாற முடியாது என்று.

ஒரு மதத்தில் உள்ள பிற்போக்கான கூறுகளை விமர்சிக்க அந்த மதம் சார்ந்தவர்களாக், இடம் சார்ந்தவர்களக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பிழைகள் விளங்கும்.

2009 க்கு பிறகு சுற்றுலாவில் நல்லூருக்கு போய் - ஆட்டோகாரனிடம் தலவரலாறு படித்தவர்களிடம் எல்லாம் நீங்கள் விவாதிப்பது நேர மினெக்கேடு.

இது தம்மை தமிழர்களாக முன்னிறுத்த போடப்படும் போலி ஆசாரவாதி வேடம்.

பிற்சேர்க்கை

Lunar calendar எனும் நிலவு ஓட்டத்தை இஸ்லாமியர்கள் பின் பற்றுவார்கள். இப்போதான் உறைத்தது 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இப்பதான் பார்த்தேன்.... நேற்று முழு நிலவு, வானில்.... 

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

 

இதுதான் உண்மை.

அண்ணை,

இப்போ நல்லூரில் இருக்கும் நடைமுறை இதுதான். எங்கள் ஊரிலும் இப்படி ஒரு நடைமுறைதான் இருக்கிறது.

அத்தோடு சேர்ட் வர முதலே - சால்வையை போட்ட படி கோவிலுக்குள் வர கூடாது என்ற நடை முறையும் இருந்திருக்கலாம். 

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மானிப்பாயில் இருக்கும் சந்தைக்கு பெயர் ரவிக்கை சந்தை. முதன் முதலில் தாழ்தபட்ட பெண்கள் ரவிக்கை அணிந்து வர அனுமதிக்கபட்ட சந்தை என்பதால்.

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

ஆகவே மேலாடைக்கும் சாதியத்துக்கும் உள்ள தொடர்பு பொய்யல்ல.

இப்போ குறிப்பாக நல்லூர் போன்ற தெற்கில், வெளிநாட்டில் இருந்தெல்லாம் ஆட்கள் வரும் கோவில்களில் இது ஒரு வழமையான நடைமுறைதான். 

இப்போ மகிந்தவை சேர்ட் கழட்ட வைக்க சாதி காரணம் இல்லை. 

ஆனால் இந்த நடைமுறை ஆதியில் வர சாதி காரணமா?

எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் கிருபனின் கேள்வியின் நியாயம் விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அதே போல், உயர் சாதிகாரரை கண்டதும், தலையில், தோளில் கட்டிய துண்டை இறக்கும் நிலையும் இருந்தது.

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முழுநிலவை சிங்களவரும் கொண்டாடுகிறார்களே.
முன்னர் பாடசாலை விடுமுறையும் விட்டதாக ஞாபகம்.

அது புத்தர் ஞானம் அடைந்தது பெளர்ணமியில் என்பதால். 

ஆனால் முஸ்லீம்களின் முழு வாழ்க்கையுமே நிலவை வைத்துத்தான்.

அடிகடி நிலவின் நிலைகளையும் செக் பண்ணி அதன்படி சமய அனுஸ்டானக்களை செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்துக்கு முன்பு எமது ஊரில் இருந்தது.

உண்மைதான். 80/90 களின் போதே ஒரு மூக்கொழுகும் சிறுவனாக எனக்கு சிலது என் பெற்றாரின் பெற்றாரால் ( ஒரு பகுதி) சொல்லப்பட்டிருக்கிறது.

யார் வளவுக்குள் வரலாம், யார் கிணற்றில் தண்ணி அள்ளலாம், யார் சமயலறை வரை வரலாம். எப்படி, எங்கே வைத்து தேனீர் குடிக்கலாம். எத்தனையாவது பந்தியில் யார் உட்காரலாம்.  இப்படி வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் இது இருந்தது.

மேலே விசுகு அண்ணா சொன்னது போல, குறிச்சி, வட்டாரம் தெருப்பெயர்…நாரந்தனையில் வடக்கா, தெற்கா என கேட்பார்கள்.

இங்கே வெளிநாட்டில், எவ்விடம் தம்பி? யாழ்பாணம். ஓம் எல்லாரும் யாழ்பாணம்தான், யாழ்பாணத்தில் எவ்விடம்? ஊர் பேரை சொன்னால் - கோவிலுக்கு இடமோ, வலமோ? இப்படி உங்களை சில குறியீடுகள் மூலம் சாதி அறிவது யாழில் எப்போதும் நடப்பதுதான்.

இந்த பிண்ணனியில் மேலாடை விடயத்தையும் பார்க்லாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நல்லவேளை முருகன் கோமணத்துடன் நிற்கும்போது அடியவர்கள் அதற்கு மேல் போடக்கூடாது என்று சட்டம் வைக்கவில்லை🤪

உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, 🙏

சும்மா விசயமே இல்லாமல், திரியை கடத்தி, உருட்டிக்கொண்டு அலம்பறை பண்ணாமல், நிதானத்துடன் யாரும் பேசினால் பேசலாம்.

பச்சை... சா...சா... நேரம் முடிந்து விட்டது.... வெளியால போகவேணும்... சந்திப்போம்... 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.