Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

4 hours ago, goshan_che said:

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

இண்டைக்கு இரவு இருட்டடிக்கு இடமிருக்கு எண்டு கனவு கண்டன். இஞ்சை வாற ஆக்கள் டோர்ச் லைட் கைகாவலாய் கொண்டு வாறது நல்லம். 🤣

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இண்டைக்கு இரவு இருட்டடிக்கு இடமிருக்கு எண்டு கனவு கண்டன். இஞ்சை வாற ஆக்கள் டோர்ச் லைட் கைகாவலாய் கொண்டு வாறது நல்லம். 🤣

டோர்ச் லைட்டுக்கு பற்றி சார்ச் கூடுதலாக இருக்கட்டும். எல்லா திரியிலும் இருட்டடிக்கு இடமிருக்கு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னா நம்பமாட்டியள் - இப்பதான் இந்த வீக் எண்ட் கடும் மழை பொழிவால் கரண்ட் தடைபடலாம் டோர்ச்சை எடுத்து டெஸ்ட் பண்ணுங்கோ எண்டு எலெக்டிரிக் கொம்பனி டெக்ஸ்ட் போட்ட மெசேஜ வாசிச்சிட்டு வாறன். நீங்கள் இருவரும் இப்படி எழுதிறியள் 🤣.

#வாய் சொல்லு சூனியம்

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

2 hours ago, goshan_che said:

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

சேர்ட்டிற்கு முன் சால்வை இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஐரோப்பியர் வரும் முன் என்ன ஆடைகளை திருமணம் போன்ற சடங்குகளில் அணிந்து இருப்பர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

சேர்ட்டிற்கு முன் சால்வை இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஐரோப்பியர் வரும் முன் என்ன ஆடைகளை திருமணம் போன்ற சடங்குகளில் அணிந்து இருப்பர்?

வேட்டி சால்வை - உயர்த்தபட்டவர்.

தனியே வேட்டி தாழ்த்தபட்டவர்?

இப்போதும் சேட் போடாமல் சால்வையை விரித்து போர்த்தும் வழக்கம் உண்டு. 

ஊகம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

ஆறுமுக நாவலரின் காலம் தான் சாதீயம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உச்சம் பெற்ற காலம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் அனுமதி இல்லை. அதற்கு சற்று மேல்பட்ட சாதிகளுக்கு மூலஸ்தானத்திற்கு அனுமதி இல்லை.

பூணூல் அணியாதவர்களுக்கு கோவிலில் கருவறைக்கு வெளியே மட்டுமே அனுமதி, பூணூல் அணிந்தவர்களுக்கே கருவறைக்குள் அனுமதி.

இதிலே கண விடயங்கள் உண்டு நிழலி. வெறுமனே ஆறுமுக நாவலரை குறை சொல்ல முடியாது. நாம் அந்த காலத்தின் பின்புலத்தினை பார்க்கவேண்டும்.

இந்த சாதிய பிரச்சனை ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் மத சுதந்திரம் அறவே இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பலர் மதம் மாறினார்கள் அல்லது, சலுகைகள், பயமுறுத்துதல் காரணமாக மதம் மாத்தப்பட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில், புராடெஸ்ட்தாந்து மதத்தினை பரப்ப, முன்னர் ரோமன் கத்தோலிக்கத்தினை தழுவியவர்களை குழம்பினர். இவர்கள் காலத்தில், ஓரளவுக்கும், பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் முழுவதுமாக மத சுதந்திரம் கிடைத்தது.

இந்த காலப்பகுதியில், பைபிளை தமிழில் மொழிபெயர்த்த நாவலர், சைவத்துக்கு தொண்டாற்ற கிளம்பினார். செட்டிமார் போன்ற பல தனவந்தர்களின் உதவிகளுடன், அழிக்கப்பட்ட கோவில்களை புனரமைத்து, சிதம்பரத்திலும், யாழ்ப்பாணத்திலும், மடாலயங்களை நிறுவி, சைவப்பிரகாச பாடசலைகளை அமைத்து தொண்டு செய்தார்.

அவர், சாதியத்துக்கு சார்பானவர் என்று சொல்லப்படுவது உண்மைதான் எனினும், அவர், சைவத்தினை விட்டு, வேறு மதத்தினை தழுவியவர்கள், (குறிப்பாக தாழ்த்தப்ட்டவர்கள்), மீண்டும் சைவத்துக்கு வருவது குறித்து கடும் நிலைப்பாடு எடுத்தார் என்று சொல்வோரும் உண்டு. அந்த நிலைப்பாடு சாதிய நிலையில் பார்க்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.

இது எனது கருத்து அல்ல. எனக்கு, சொல்லப்பட்ட ஒரு கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வேட்டி சால்வை - உயர்த்தபட்டவர்.

தனியே வேட்டி தாழ்த்தபட்டவர்?

இப்போதும் சேட் போடாமல் சால்வையை விரித்து போர்த்தும் வழக்கம் உண்டு. 

ஊகம்தான்.

எல்லாம் காலநிலை குடுத்த செல்லம்/செல்வம். :cool:

கனடா ஐரோப்பா மாதிரி மைனஸ் வெதர் அங்கையுமெண்டால் தனி வேட்டி,வேட்டிசால்வை, கோவணம் எண்டு எல்லாத்தையும் வைச்சு நாமள் வீரம் பேச முடியுமா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமி அச்சுவேலியிலைதான தேர் இழுத்தவன் எதுக்கு நாதமும் கோசானும் ஆவரங்காலுக்க நிண்டு சண்டை புடிக்கிரானுவ..?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் காலநிலை குடுத்த செல்லம்/செல்வம். :cool:

கனடா ஐரோப்பா மாதிரி மைனஸ் வெதர் அங்கையுமெண்டால் தனி வேட்டி,வேட்டிசால்வை, கோவணம் எண்டு எல்லாத்தையும் வைச்சு நாமள் வீரம் பேச முடியுமா? 😂

🤣 விண்டர் நாட்களில் ஒரு 30 நிமிசம் வெளியால நடக்காமல் ஒரே இடத்தில நிண்டா மூக்கு விறைச்சு, இருக்கோ எண்டு தொட்டு செக்பண்ணுற நிலை.  அப்ப வேட்டி கட்டினால்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இதிலே கண விடயங்கள் உண்டு நிழலி. வெறுமனே ஆறுமுக நாவலரை குறை சொல்ல முடியாது. நாம் அந்த காலத்தின் பின்புலத்தினை பார்க்கவேண்டும்.

நீங்கள் படிக்க விரும்பாத ஆய்வு.. “ஆய்ந்தவர்” தலைவர் பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இயக்கத்தை கட்டிய இராகவன் (பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் தலைவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்).

நாவலர் எவ்வாறு யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கத்தின் தூணாக இருக்கின்றார் என்பதை ஆய்வைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

நீங்கள் படிக்க விரும்பாத ஆய்வு.. “ஆய்ந்தவர்” தலைவர் பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இயக்கத்தை கட்டிய இராகவன் (பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் தலைவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்).

நாவலர் எவ்வாறு யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கத்தின் தூணாக இருக்கின்றார் என்பதை ஆய்வைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

 

இதை வாசிக்கிறதுக்கு, லொள்ளு சபா பார்க்கலாம்...🙏

என்ன விடயம் என்றால், வரலாறு என்பது, நாலு, ஐந்து தொடர்பில்லாத புள்ளிகளை, இணைப்பது.... 

இணைப்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தை காட்டுவார்கள்.

100% உண்மை இராது என்று தெரிந்து கொண்டே உள்ளே வாசிக்க தொடங்குவோம். கதை சொல்பவரின் திறமை எம்மை அப்படியே நம்ப, அல்லது நம்ப மறுக்க வைக்கும்.

உதாரணம் பொன்னியின் செல்வன். 

மேலும், ராஜ ராஜ சோழன் தமிழகத்தில் சாதி ரீதியான ஒடுக்குதலை செய்தான் என்று ஒரு சாராரும், அதுக்கு ஆதாரம் இல்லையே என்று வேறு சாராரும் சொல்கிறார்கள்.

யாரும் சமகாலத்தில் பார்த்து, எழுதவில்லை, அவரவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என்று பார்த்தால், தலையால் போகும்....

நான் நாவலர், அவ்வாறு செய்யவில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், நான் இன்னும் நம்பிக்கையான ஆவணம் எதுவும் வாசிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை  ஒவ்வொரு உயிரினங்களும்   அவரவர் வாழும் இடங்களுக்கேற்ப வசதிகளை செய்து கொடுத்துள்ளது. மாறாக இல்லாத ஒன்றுக்கு மீறி ஆசைப்படும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

100% உண்மை இராது என்று தெரிந்து கொண்டே உள்ளே வாசிக்க தொடங்குவோம். கதை சொல்பவரின் திறமை எம்மை அப்படியே நம்ப, அல்லது நம்ப மறுக்க வைக்கும்.

உதாரணம் பொன்னியின் செல்வன். 

அங்கைதான் நிற்கின்றார் நாதம்ஸ்😂

ராகவன் எழுதினது ஆய்வு. கல்கி எழுதியது புனைவு. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

யாழ்ப்பாணத்தவர்கள் சிங்களவர்களை திருமணம் செய்வதற்கு  வேறு சில காரணங்களும் உண்டு....யாழ்ப்பாணத்தில் பல கலாச்சார மாற்றங்கள் நடந்துள்ளது...

எனது பாடசாலை காலத்தில் சக மாணவியுடன் நான்  பேசவே இல்லை...இன்று அந்த சூழ்நிலை இல்லை (வரவேற்க்ப்பட வேண்டிய ஒன்று)பெண்கள்/ஆண்கள் பழகும் வாய்ப்புக்கள் அதிகம் .இதை தட்டி கேட்கும் நிலையில் இன்றைய இளைஞர்களும் இல்லை ...அன்று அண்ணன் ,மாமான் எல்லாம் பெண்களின் மெய் பாதுகாவலர்கள் ....இன்று அண்ணன் வெளிநாடு மாமா வெளிநாடு ஊரில் உள்ளவர்களும் அடுத்தவன் பிரச்சனைக்குள் தலையிடுவதை குறைத்து விட்டார்கள் வெளிநாட்டு தமிழர்களை போல்... 
இராணுவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றால் சமுகத்தில் உள்ளவர்கள் துணிந்து செல்லமாட்டார்கள் ....
புலம்பெயர்ந்தநாடுகளில் 10 திருமண‌த்தில்  5 பேர் தான் தமிழ் தம்பதிகளாக இருப்பார்கள்.மிகுதி ஐந்தும் கலப்பு(வெள்ளை,ஆபிரிக்கா,சீனா) திருமணமாக இருக்கும்.அந்த ஐந்திலும் ஒன்று இரண்டு சிங்கள கலப்பு.
இங்கு யாழ்ப்பாணததவருக்கு  சீதனம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை . இருந்தும் சிங்கள இனத்தில் திருமணம் முடிக்கின்றனர்.
கலாச்சார மாற்றம் முக்கிய பங்கு வகிக்கின்றது சீதனத்தை விட....

இராணுவம் சேர்ட்டுடன் கோவிலுக்குள் செல்வதையோ,சாமி காவுவதையோ தட்டி கேட்க முடியாத நிலையில் உள்ள யாழ்ப்பாணத்து மக்கள், சிங்கள இராணுவம் தமிழ் பெண்ணை காத‌லிச்சா தட்டி கேட்கும் துணிவு வருமா?

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளரின் மகன்  .....சிங்கள இராணுவத்தின் பிரிகேடியரின் மகளை திருமணம் செய்துள்ளார் ....இது தப்பு என்று சொல்ல வில்லை ....நடைமுறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தவரை அது காரணமாக இ ருக்க வாய்பில்லை...பிராமணர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு அத்துடன் ....கோவிலுக்கு அருகில் பிராமணர் குடும்பம் இருக்கும்,அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தெரியும் இவர்தான் ஐயர் பரம்பரை என்று...

சேர்ட் அணிந்து செல்வதால் ஒரு தீங்கும் நடக்காது என ஊர்மக்களுக்கு பாடம் சொல்லிகொடுப்பதற்கு கோவில் தர்மகத்தாக்கள்  இப்படி புரட்சிகர நடவடிக்கை எடுத்திருக்கலாம்...

நல்லூர் கோவிலை இடித்து  .....கட்டுவேன் என சொல்லும் புரட்சி சிந்தனையாளர்கள் உள்ள இடமாக மாறிவருகிறது ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அங்கைதான் நிற்கின்றார் நாதம்ஸ்😂

ராகவன் எழுதினது ஆய்வு. கல்கி எழுதியது புனைவு. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமில்லை😃

நான், உங்களவுக்கு இந்த விடயங்களை வாசிப்பதில்லை ஆகையால், எனது கருத்துக்கள் அல்ல, எனக்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று சொன்னேன்.

நீங்கள் இதனை விளக்கினால், வேறு யாருக்கும் சொல்லும் போதும், கிருபன் என்று ஒரு அன்பர் சொன்னார் என்றே சொல்வேன்.

ஆகவே, இதில் என்ன கருத்து சொல்வது என்று தெரியாது, கிருபன் அய்யா. 🙏

தெரியாத விடயங்களில். அடித்து விட்டு, நின்று ஆடும் வேலையும் தெரியாது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்தியாவில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தவரை அது காரணமாக இ ருக்க வாய்பில்லை...பிராமணர்களின் எண்ணிக்கை இலங்கையில் குறைவு அத்துடன் ....கோவிலுக்கு அருகில் பிராமணர் குடும்பம் இருக்கும்,அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தெரியும் இவர்தான் ஐயர் பரம்பரை என்று...

சேர்ட் அணிந்து செல்வதால் ஒரு தீங்கும் நடக்காது என ஊர்மக்களுக்கு பாடம் சொல்லிகொடுப்பதற்கு கோவில் தர்மகத்தாக்கள்  இப்படி புரட்சிகர நடவடிக்கை எடுத்திருக்கலாம்...

நல்லூர் கோவிலை இடித்து  .....கட்டுவேன் என சொல்லும் புரட்சி சிந்தனையாளர்கள் உள்ள இடமாக மாறிவருகிறது ....

நிழலிக்கு நான் சொன்ன கருத்தினை அவர், கவனிக்க வில்லை என்றே நினைத்தேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போக முடியாத நிலையில், மேலாடை தான் பிரச்சனை என்று சொல்ல முடியாதே என்றேன். மாறி சொல்வதானால், மேலாடை அணிந்து இருந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போகலாம் என்று இருக்கவில்லையே.

ஆகவே இது சாதி அடிப்படையிலானது என்ற நிழலியின் கருத்துக்கு வலு இல்லை.

இன்று தாழ்த்தப்பட்டவர் என்று வாசலில் பார்த்து யாருமே தடுப்பதில்லையே.

விடயம் அதுவல்ல. நல்லூர் போன்ற கோவில் உள்ளே இன்றும் கூட போகும் அனைவருமே, சிங்களவராக இருந்தாலும், மேலாடை இல்லாமே போக வேண்டும். மகிந்தா, பசில், சரத் பொன்னர் அனைவருமே அப்படி தான் உள்ளே போனார்கள்.

திருக்கேஸ்தீஸ்வரம் கோவிலில், தகப்பனுக்கு திதி கொடுக்க போயிருந்தார், இந்திய தூதர். அவர் கூட, உள்ளே போகும்போது, மேலாடை இல்லாமல் தான் போனார். 

இங்கே சாதியம் இல்லை. ஒரு ஈழத்துக்குரிய கலாசாரம்.

****

புலால் உண்பவர்கள், வெளியே நில்லுங்கள் என்று ஆரம்பித்து, சாதியமாக முடிந்திருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.

இன்னமும் சொல்வதானால், (இதுவும் தமிழகத்தில், ஒருவர் கூறிய கருத்து, எனது அல்ல) ஊர் பண்ணையார்கள் வீடுகளில் இறந்து போகும் கால்நடைகளை புதைக்க வேலையாட்களுக்கு சொன்னால், அதனை கொண்டு போய், பசிக்கொடுமையால், சுட்டு, தமது வீடுகளின் முன்னர் தொங்க விட்டு, சில நாட்களுக்கு அதனை சாப்பிட்டு கொண்டிருப்பார்களாம்.

அந்த பக்கமாக வரும் பண்ணையாரின் ஆட்கள், ஈ, மொய்த்து கொண்டிருக்கும்  (சில நாட்களின் பின்னர் சிறு புழுக்கள்) அந்த மாமிசத்தினை கண்டு, நோய் தொற்று உண்டாகலாம் என்று, அவர்கள் வேலைக்கு வரும் போது, அங்கேயே தூரத்தில் நில் என்று சொல்லி, அதன் மூலம் வந்ததே தீண்டாமையும், சாதியமும் என்கிறார்.

எது சரி என்று தெரியாது.

***

ஆனால் சாதியம் என்னும் வகுப்புவாதம் இங்கே பிரித்தானியாவில் இருந்துள்ளது. இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் சமூக பாதுகாப்பு (social security )மாறுதல்கள் நடந்த பின்னர் சமநிலை உண்டாகி உள்ளது. அடிப்படை காரணம் பொருளாதாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆமி அச்சுவேலியிலைதான தேர் இழுத்தவன் எதுக்கு நாதமும் கோசானும் ஆவரங்காலுக்க நிண்டு சண்டை புடிக்கிரானுவ..?🤔

 

அவை இரண்டு பேரையும் முதலில் தங்களுக்க  சுட்டு  காயங்காட்ட சொல்லியிருக்காம்😜

அதுக்கு பிறகு  தான்  களம்  அதாவது அச்சுவேலி???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

அவை இரண்டு பேரையும் முதலில் தங்களுக்க  சுட்டு  காயங்காட்ட சொல்லியிருக்காம்😜

அதுக்கு பிறகு  தான்  களம்  அதாவது அச்சுவேலி???🤣

அவர்கள் இருவரும் கத்தரிக்கோல் போல வெட்டுற மாதிரித்தான் வேகமாய் வருவினம் ஆனால் குறுக்க இருக்கிறவைதான் கவனமாய் இருக்க வேணும்..... களம் சோர்வின்றி செல்வதற்கும் அவர்களின் பங்களிப்புதான் காரணம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அவர்கள் இருவரும் கத்தரிக்கோல் போல வெட்டுற மாதிரித்தான் வேகமாய் வருவினம் ஆனால் குறுக்க இருக்கிறவைதான் கவனமாய் இருக்க வேணும்..... களம் சோர்வின்றி செல்வதற்கும் அவர்களின் பங்களிப்புதான் காரணம்.....!   😁

நாம அப்பவே  உசார்  அண்ணா

குகதாசனா  கொக்கா???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நாம அப்பவே  உசார்  அண்ணா

குகதாசனா  கொக்கா???🤣

உங்கள 5லாம்பு சந்தியில பங்கர் வெட்ட வரட்டாம் அண்ணை🤣

Link to comment
Share on other sites

46 minutes ago, Nathamuni said:

நிழலிக்கு நான் சொன்ன கருத்தினை அவர், கவனிக்க வில்லை என்றே நினைத்தேன்.

 

கவனித்தனான், ஆனால் அது பதில் சொல்வதற்கு ஏற்றதாக தோன்றவும் இல்லை இல்லை, அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு

 

51 minutes ago, Nathamuni said:

 

இன்னமும் சொல்வதானால், (இதுவும் தமிழகத்தில், ஒருவர் கூறிய கருத்து, எனது அல்ல) ஊர் பண்ணையார்கள் வீடுகளில் இறந்து போகும் கால்நடைகளை புதைக்க வேலையாட்களுக்கு சொன்னால், அதனை கொண்டு போய், பசிக்கொடுமையால், சுட்டு, தமது வீடுகளின் முன்னர் தொங்க விட்டு, சில நாட்களுக்கு அதனை சாப்பிட்டு கொண்டிருப்பார்களாம்.

அந்த பக்கமாக வரும் பண்ணையாரின் ஆட்கள், ஈ, மொய்த்து கொண்டிருக்கும்  (சில நாட்களின் பின்னர் சிறு புழுக்கள்) அந்த மாமிசத்தினை கண்டு, நோய் தொற்று உண்டாகலாம் என்று, அவர்கள் வேலைக்கு வரும் போது, அங்கேயே தூரத்தில் நில் என்று சொல்லி, அதன் மூலம் வந்ததே தீண்டாமையும், சாதியமும் என்கிறார்.

எது சரி என்று தெரியாது.

 

உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள், தீண்டாமைக்கு இந்தளவுக்கு முண்டு கொடுக்க வேண்டாம் என்று. வர்ணம், வர்ணாசிரமம் போன்றவற்றை அறிந்த பல ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் கூறி வையுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போக முடியாத நிலையில், மேலாடை தான் பிரச்சனை என்று சொல்ல முடியாதே என்றேன். மாறி சொல்வதானால், மேலாடை அணிந்து இருந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போகலாம் என்று இருக்கவில்லையே.

ஆகவே இது சாதி அடிப்படையிலானது என்ற நிழலியின் கருத்துக்கு வலு இல்லை.

 

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

ஆய்வில் இருந்து ஒரு மேற்கோள்.

தலித் மக்களின் உரிமை சம்பந்தமான குரல் எழும் போது தற்போது சாதி இல்லை என்ற மறைப்பு அரசியல். ஒருவகையில் சாதியம் இல்லை என்பதன் பின்னால் உள்ள ஆதிக்க அரசியல் மிகவும் நுணுக்கமானது. தலித் மக்கள் தாங்கள் சாதிய ரீதியாக புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எதிர்ப்பு குரலை செயலிழக்கச் செய்யும் சாதுர்யமான ஆதிக்க சாதி அரசியல் இது. இந்த கருத்தியல் பின்புலத்தில் தான் சாதியம் தனது ஆதிக்கத்தை தற்சமயம் நிலை நாட்டுகிறது. ஆதிக்க சாதியின் நவீன நாவலர்கள் சாதிய ஆதிக்கத்தை பாதுகாப்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். சாதி ஒழிந்து விட்டதென்று கூறிக்கொண்டு சாதியை பாதுகாக்கும் அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள்”

 

1 hour ago, Nathamuni said:

இன்று தாழ்த்தப்பட்டவர் என்று வாசலில் பார்த்து யாருமே தடுப்பதில்லையே.

இன்றைக்கும், அதாவது இன்று, இந்தக் கொரோனா கெடுபிடிக்குள்ளும் திருவிழா நடக்கும் ஊர்க்கோவிலுக்குள் உள்ளே போகமுடியாது. புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலத்தில், ஐயர்மாரைத் தவிர ஒருவரும் உள்ளே போகமுடியாது என்று புனிதத்தை பேணினார்கள். புலிகள் 1995/96 இல் யாழைக் கைவிட்ட பின்னர் பழைய நடைமுறை வந்து, அப்படியே தொடர்கின்றது.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

கவனித்தனான், ஆனால் அது பதில் சொல்வதற்கு ஏற்றதாக தோன்றவும் இல்லை இல்லை, அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு

 

உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள், தீண்டாமைக்கு இந்தளவுக்கு முண்டு கொடுக்க வேண்டாம் என்று. வர்ணம், வர்ணாசிரமம் போன்றவற்றை அறிந்த பல ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் கூறி வையுங்கள்.

நன்றி

1.  நுனிப்புல் மேய்கின்றவர்களின் கருத்தாக தோன்றியது எனக்கு: உங்கள் கருத்தும் அப்படியே தான் தெரிகிறது, நிழலியர். இன்றும் கூட யாருமே மேல் ஆடை போட்டு உள்ளே போக முடியாது என்று இருக்கும் போது, சாதியம் அங்கே எவ்வாறு வந்திருக்க முடியும் என்று நீங்கள் விளக்கவில்லையே.

2. முண்டு அல்ல, கருத்து..... நான் கேட்டதை பகிர்ந்தேன் அன்றி, சமுக வெளியில் பரவலாக உள்ள கருத்து அல்ல. 

11 minutes ago, கிருபன் said:

யாழ் களத்தில் உறுப்பினராக இருந்த சிவா சின்னபொடி “நினைவழியா வடுக்கள்” என்ற நூல் எழுதியிருந்தார். அதில் தெளிவாக மேலாடை போடாமல் கோயிலுக்கு உள்ளே போவதற்கான காரணம் சொல்லப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கடினமாக வேலை செய்யபவர்கள். ஏறுபட்டி,  இயனக்கூடு, தளைநார் கட்டி மரம் ஏறுபவர்கள் உடலில் சிராய்ப்புக்கள் எப்பவும் இருக்கும். யாரென்று விசாரிக்காமல் மேலுடம்பைப் பார்த்தே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளம் காணவே மேலாடை அணிவது யாழில் உள்ள கோவில்களில் தடுக்கப்பட்டது. அதை மரபு என்று இன்றும் தொடர்கின்றார்கள்.

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

இங்கே நான் விளக்கம் பெறவே கேள்விகளை கேட்க்கிறேன். நன்றி.

ஒரு விளக்கம் தாருங்கள். இன்றும் கூட மேலாடை அணிந்து உள்ளே யாருமே போக முடியாது என்ற நிலையில், நீங்கள் சொன்ன சிவா சின்னப்பொடியரின் விளக்கம் சரியானதா?

**

இருவருக்கும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இது மிகவும் சென்சிட்டிவ் என்று புரியும்.

எனது புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஒரு விளக்கம் தாருங்கள். இன்றும் கூட மேலாடை அணிந்து உள்ளே யாருமே போக முடியாது என்ற நிலையில், நீங்கள் சொன்ன சிவா சின்னப்பொடியரின் விளக்கம் சரியானதா?

ஆம். ஒருவரும் மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு சாதியத்தை இறுக்கமாகக் கடைபிடிக்கும் மரபில் இருந்து வந்ததுதான்.

நீங்கள் யாழ் நகரப் பகுதியில் வசித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள பல கோயில்களுக்கு சின்ன வயதில் போன அனுபவம் (அப்பா ஒரு சைவபக்தர்), குறிப்பாக சிவா சின்னப்பொடி குறிப்பிட்ட வல்லிபுரக்கோவிலில் எப்படி “பார்த்து” உள்ளே விடுவார்கள் என்பதை நேரடியாகவே கண்டிருக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.