Jump to content

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. - சிவசக்தி

 

 

breaking

தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதேவேளை இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

தமிழ்மக்ககளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகும் சிங்கள அரசின்மீது பெருங்கோபங் கொண்டிருந்த தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உள்ளுராட்சித்தேர்தல்களைப் புறக்கணித்தனர். நல்லூரில் தேர்தல் வாக்களிப்பு நிலையம்மீதும் போராளிகளின் தாக்குதல் நடந்தது.
 
சீற்றங்கொண்ட சிங்கள அரசு தமிழ்மக்களின்மீது தனது தாக்குதல்களைத் தொடுத்து, உயிர்களையும் உடைமைகளையும் சேதமாகமாக்கியது. தமிழ்மக்களின் வாழ்மனைகளும், வழிபாட்டுதத்தலங்களும் சிதைக்கப்பட்டன. சிங்கள ஆயுதப்படையினர் தமிழ் இளைஞர்களுக்கெதிராக ஏவிவிடப்பட்டனர்.
 
 
இதன் தொடர்ச்சியாக 1983 யூலை 15 அன்று சாவகச்சேரியின் மீசாலைக்கிராமத்தில் மறைந்திருந்த போராளிகளைக் குறிவைத்து சிங்களப்படைகள் பாய்ந்தன. எதிர்த்துப்போராடிய நிலையில்,எதிரிப் படையின் குண்டை நெஞ்சில் தாங்கிகிக் கொண்ட போராளி சீலன்,தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச்செல்லுமாறு தோழர்களைப் பணித்தான். தாக்குதற் தளபதியின் கட்டளை அது. கனத்த மனதோடு , சீலனைச் சுட்டுவிட்டு ஏனையோர் முற்றுகையிலிருந்து வெளியேறுகின்றனர்.
 
 
 
qGzAiOZfviBktso5yEeG.jpg
 
 
சீலன். தேசியத் தலைவரின் நெருக்கமான தொடக்ககால நண்பன். அமைப்பின் முதலாவது தாக்குதற் தளபதி. சீலனின் இழப்பு தேசியத்தலைவரையும் ஏனையபோராளிகளையும் உசுப்பிவிடுகிறது. தான் நேசிக்கும் தமிழ்மக்களின்மீதும் போராளிகள் மீதும் தாக்குதல் தொடுக்கும் சிங்களப் பேரினவாதத்திற்குப் பாடம் புகட்ட தலைவர் தேதிகுறித்தார்.
 
அந்தநாள்தான் யூலை 23. மாதகல் படைமுகாமிலிருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்துகொண்டிருந்த படையினரின் ஊர்திகள் இலக்குவைக்கப்பட்டன. நிலக்கண்ணிவெடி அதிர்ந்தது. இலக்குத்தவறாத அந்த வெடிப்பில் 13 படையினர் கொல்லப்பட்டார்கள். ' அவலத்தை தந்தவனுக்கு அதையே பரிசளிப்போம்' என்ற செய்தி சிங்களப் பேரினவாதத்தின் முகத்தில் அறைந்தது.
 
vVTaJJwfE0Xd5Lt3Ihea.jpg
 
 
அன்றைக்கு தன்னை சிங்கள பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழர்களை அடக்கிஒடுக்கி ஆட்சிபீடத்திலிருந்த ஐனாதிபதி  ஜெ.ஆர். ஜெயவர்த்தனவுக்கு இச்செய்தி பெரும் அவமானத்தை கொடுத்தது. தமிழ் இனத்தை இலங்கைத்தீவிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்த  ஜெயவர்த்தனா அந்தப் 13 படையினரின் இழப்பை ஊதிப் பற்றவைத்தார்.
 
இலங்கையின் தென்பகுதிமுழுவதும் காட்டுத்தீயாகச் செய்திகள் புனையப்பட்டன. ' சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் இலங்கைத்தீவில் வாழும் உரிமையற்றவர்கள் ' என்ற துட்டகைமுனுவின் எண்ணத்தை ஜெயவர்த்தனா படையினரின் செவிகளில் உரத்து ஓதினார். இலங்கை அரசின் ஏவற்பேய்கள் தமிழர்களின் கூரைகளை நோக்கிப் பாய்ந்தன.
 
மறுநாள், யூலை 24 ஆம்நாள் திருநெல்வேலியிலும் கந்தர்மடத்தடியிலும் 60 இற்கும் மேலான தமிழர்கள் படையினரால் கொல்லப்பட்டார்கள். அதேநேரம் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரை, வீராதிவீரர்களாக அறிவித்து, சிங்கள மக்களையும் இனவாதிகளையும் தூண்டிவிட்டார் ஜெயவர்த்தனா.
 
அவரின் இலக்கு மெல்லமெல்லப் பெரிதானது. அவரே எண்ணியதுபோல தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள்மீது சிங்கள இனவாதம் பாய்ந்தது. தமிழர்களின் வீடுகள், வணிகநிலையங்கள், தொழிலகங்கள், எரிபொருள்நிரப்பு நிலையங்கள் என எல்லாம் நொடியில் அடித்து நொருக்கப்பட்டன. இனவாதத்தீ பற்றி எரிந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள்மீது பாலியல்வன்முறைகளும் இடம்பெற்றன.
 
KzhO5DJPtaH1tokhEpeP.jpg
 
 
 
சிங்கள அரசின் காவல்படையினர் தமிழ்மக்களுக்கு உதவிபுரியாது , இனவாதிகளுக்கும் காடையர்களுக்கும் உறுதுணை செய்தனர் என்பதை அப்போது ,வெளி ஊடகங்கள் பதிவுசெய்தன.
 
இந்த இனவெறியாட்டம் வீடுகளில் இருந்த தமிழர்களை மட்டுமல்ல, சிறையில் இருந்த தமிழர்களையும் இலக்குவைத்தது. யூலை 25 இல் 25 தமிழ்க்கைதிகளும், யூலை 27 இல் 17 தமிழ்க் கைதிகளும் மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைபெறும் தமிழீழத்தை தம்கண்களாற் பார்க்கவேண்டும் என்று விருப்புற்றுச் சொல்லியிருந்த காரணத்துக்காகவே குட்டிமணி, ஜெகன் என்கின்ற இரு தமிழ்க்கைதிகளின் கண்களை தோண்டியெறிந்தனர் இனவாதிகள். தன்னுடைய மூக்குக்கண்ணாடியை உயர்த்திவிட்டவாறே ' தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் யாவும் சிங்கள மக்களின் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடுதான்' என்றார் ஜெயவர்த்தனா. அத்தோடு அவர் நிறுத்திவிடவில்லை. ஒரு ஐனாதிபதியாக இருந்துகொண்டு ' தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பாளியல்ல' என்றும் கூச்சமின்றிச் சொன்னார் என்பதும் வரலாறே.
 
இத்தகைய இனப்படுகொலைகளும், இனவாதச் செயற்பாடுகளுமே தமிழ்மக்களை தனிநாட்டுக்கான போராட்டத்தில் ஈர்ப்புக்கொள்ளச் செய்தன. முறைக்குமுறை தமிழர் சொத்துக்களை அழிப்பதும், தமிழ்மக்களை கொன்றுகுவிப்பதும் இளைஞர்களை
 
கைதுசெய்துசிறையிலடைத்து துன்புறுத்துவதுமெனச் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த செய்துகொண்டிருக்கின்ற சூழல்தான் இன்னமும் தமிழர்களை விடுதலையின் பாதையில் இணைத்துச் செல்கிறது.
 
 
AgvnsgtQlLzcDPtDAgqq.jpg
 
 
 
உலகம் முழுவதும் பரந்துவாழ்ந்தபோதிலும், தாயகம் என்னும் தன்னுணர்வுமிக்கோராய், தேசிய இனமாகத்திகழும் ஈழத்தமிழர்களாகிய எங்களை பல்வேறுவகையில் பிரித்து வரலாறற்றவர்களாக்கிவிட இன்னமும் துடிக்கிறது சிங்களப் பேரினவாதம். தமிழர்களை ஒன்றுபடவிடாது பலவகையிலும் முயற்சித்துநிற்கும் பேரினவாதத்தின் முகத்திரையைக் கிழித்து  எமது அடுத்த தலைமுறையினரிடம் உண்மையான வரலாற்றைக் கையளிக்கவேண்டிய பாரிய பொறுப்புமிக்கவர்களாக இன்றைய தலைமுறையினர் வேகங்கொள்ளவேண்டும்.
 
oodLZhIBApt9KYPJULRC.jpg
 
 
ஈழத்தமிழினத்தவர்கள் மீது சுமத்தப்படுகின்ற வீண்பழிகளையும், குற்றச்சாட்டுகளையும் உடைத்தெறிய உண்மையானவரலாறு எங்களிடம் சான்றாக இருக்கிறது. மானம் பெரிதென்று உயிரீந்து சென்ற மறவர்களின் கனவுகள் எம்வரலாற்றின் பக்கங்களில் பாடங்களாக விரிந்து கிடக்கின்றன. எமது இனத்தையும் போராட்டத்தையும் பழித்தும் இழித்தும் நிற்பவர்களுக்கு  எமது வரலாற்று நிகழ்வுகளையே பதிலாக்குவது எமது பணியாகிறது.
 
எமது இனமும் நிலமும் விடுதலைபெறும் வரை ஓயாதபுயலாய் வீசி, உரத்துக்குரல் எழுப்பி, வெற்றிபடைப்போம். வரலாறு எப்பொழுதும் எமக்கு வழிகாட்டிநிற்கும்.

https://www.thaarakam.com/news/b2fd626e-69e8-4f80-b281-5a3b4a136fc0

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.