Jump to content

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

July 23, 2021

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ்

இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போர்  ஆரம்பித்த காலம் முதல் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்படுவதும், கடத்திச் செல்லப்படுவதுமாக இருக்கின்றனர்.

இலங்கை அரச படைகள், ஏன் தமது உறவினர்களைக் கைது செய்தார்கள், ஏன் கடத்திச் சென்றார்கள் என்ற காரணம் அறியாமல் இன்று வரையிலும் பலர் தமது உறவுகளைத் தேடியலைந்து  கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை.

தொடரும் போராட்டம்

இலங்கை அரச படைகளினால் காணாமல்  ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தமிழர் தாயகம் முழுவதும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதில் ஒரு பகுதியினர் வவுனியா நகரில் சிறிய கொட்டகை அமைத்து,  இரவு பகல் பாராது  தம் உறவுகளை மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

இராணுவத்திடம் விசாரணைக்காக பிள்ளையைக் கையளித்து விட்டு, பல வருடங்களாகியும் தன் பிள்ளை எங்கே எனத் தெரியாது, பிள்ளையைத் தேடியலையும் செல்வராசா பவளநாயகி என்ற அன்னையும்  போராடிக் கொண்டிருக்கின்றார்.

“எனது பெயர் செல்வராசா பவளநாயகி. ஓமந்தை விளக்குவைத்த குளத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில்  மூத்த மகன் செல்வராசா அச்சுதன்.  2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் போர் காரணமாக இடம் பெயர்ந்து வருகையில்,   விசாரித்து விட்டு விடுவோம் என இராணுவத்தினர் என் மகனைத் தம்மிடம் கையளிக்கும் படி கூறினார்கள். அவர்களுக்கு அஞ்சி மகனை  ஒப்படைத்தோம். ஆனால் என்ரை பிள்ளையை அவர்கள் எம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வில்லை. என் பிள்ளை  இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.

2009 ஆம் ஆண்டு   யுத்த நேரம். கனகராயன் குளத்தில் இருந்து  இடம் பெயர்ந்து வட்டுவாகலுக்குச் சென்றோம்.  பின் அங்கே இருந்து  எல்லா மக்களையும்  இராணுவப் பகுதி நோக்கி பேருந்து மூலம் இராணுவத்தினர் கொண்டு  சென்றனர்.

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்
 

எல்லா மக்களையும் பதிவு செய்த னர். அப்போது என்னுடைய மகனையும் பதிவு செய்தார்கள். அந்த நேரம் என்ரை மகனுக்கு  14 வயது தான். 1995ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தான் அவர் பிறந்தார். ஆனால்  அவர் தோற்றம் கூடியவர் . அப்போது  இராணுவத்தினர் பதிவு செய்த எல்லாரையும் விசாரிக்க வேண்டும். உங்கடை மகனையும்  விசாரிச்சிட்டு விடுவம் என்று சொல்லி மகனை மறித்து வைத்துக் கொண்டு, எங்களை செட்டிகுளம் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்கு   அனுப்பி வைத்தனர். ஆனாலும் என்ரை பிள்ளைய அவர்கள் விடுவிக்க வில்லை.

அதன் பிறகு வவுனியாவிற்கு வந்து ICRC நிறுவனத்திலும், மனித உரிமை ஆணைய கத்திலும் என்ரை மகனை இராணுவத்தினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்த னாங்கள். ஆனால் இதுவரை இராணுவத்தினர் மகனை விடுவிக்க வில்லை என  முறைப்பாடு ஒன்றை  பதிவு செய்தோம்.  ஆனால் அவர்கள் எந்தத் தகவலும் சொல்ல வில்லை.

ஓவ்வொரு நாளும் மகன் வருவான்.. வருவான்…என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால்  என்ரை பிள்ளை வரவேயில்லை.

தொடரும் துன்பம்

பின்னர் சொந்த இடங்களுக்கு மக்களை  மீளக் குடியமர்த்தும் போது முகாமில் இருந்து  எங்களை ஏற்றிக் கொண்டு வந்து சொந்த ஊருக்கும் விடாமல் இடையில் இறக்கி விட்டார்கள்.  ஓமந்தைபன்றிக்கெய்த குளத்தில் ஒரு வருடம் இருந்தோம். அதுவரை பிள்ளையின் எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை. 2019.08.20 ஆம் திகதி என்னுடைய கணவரும் நோய் காரணமாக திடீரென இறந்து விட்டார்.

அதன் பின்னர்  எங்கடை சொந்த இடமான ஓமந்தை, விளக்குவைத்த குளம் வந்து,  எங்கடை காணியில் வீடு அமைத்து இருந்தோம். என்ரை கணவர் தான் கூலி வேலைக்குப் போய்   குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். ஆனால் திடீரென்று கணவர் இறந்ததனால் சரியான கஸ்டம். இப்போது கணவரும் இல்லை. என்ரை மூத்த மகனும் இல்லாமல் நானும் எனது பிள்ளைகளும்  தினமும் கஸ்டப்படுகிறம்.

என்ரை பிள்ளை வருவான் என்ற நம்பிக்கையில் தான் வவுனியா காணாமல் போனோர்  போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட பந்தலில் இருந்து நானும்   போராடுறன். என்ரை வீட்டை பார்க்காமல் இரவு பகலாக கண்முழிச்சு போராட்டக் களத்திலை என்ரை பிள்ளைக்காக தொடர்ந்தும்  போராடி  வாறன்.

என்ரை பிள்ளையை இராணுவத்தினரிடம் கையளிக்கும் போது அவனுக்கு 14 வயது.  இன்றைக்கு 12 வருடங்கள் போயிட்டுது. என்ரை பிள்ளை எதுவுமே அறியாத அப்பாவிப் பிள்ளை. என்ரை பிள்ளை இருக்கிறானா? இல்லையா? என  இப்போது ஒரு பதிலுமே கிடைக்கவில்லை.

எனது குடும்பத்தை பார்ப்பதா? அல்லது என் மகனைத் தேடுவதா என எனக்குத் தெரியவில்லை.  என்ரை பிள்ளை எங்கே இருந்து எவ்வளவு கஸ்டப்படுறானோ தெரிய வில்லை. என்ரை மகன் எனக்கு வேணும். எப்பிடியாவது என்ரை பிள்ளையை மீட்டுவிட வேண்டும்.  யாருமே எமது காணாமல்  ஆக்கப்பட்ட பிள்ளைகளை மீட்க  உதவி செய்யவில்லை. ஆகவே வெளி நாடுகள் தான் எமக்கான நீதியைப் பெற்றுதர வேண்டும்.” என்று அந்தத் தாய் ஏக்கத்துடன் தனது துயரைப் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு போரின் போது எவ்வளவு தமிழ் அப்பாவி மக்கள் கடத்தப் பட்டுள்ளார்கள். விசாரணைக்காக உறவுகளால் இராணுவத்தினரிடம் கையளிக்கப் பட்டுள்ளார்கள். காணாமலாக்கப் பட்டிருக்கின்றார்கள்.  இவர்களின் நிலை என்ன?  எங்கே இருக்கிறார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? அல்லது இறந்து விட்டார்களா?  அரசாங்கமே!    காணாமல் ஆக்கப் பட்டவர்களின் இருப்பை அல்லது அவர்களின் இறப்பை உறுதிப்படுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடு.

தமது உறவுகளை   இழந்து  தவிக்கும் இந்த அன்னையைப் போல்  இன்று எத்தனையோ பெண்கள் தம் உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை தாமதமின்றிப் பெற்றுக் கொடுங்கள். இதுவரை அவர்கள் உறவுகளை தொலைத்து விட்டு அனுபவித்த துன்பங்களும், வேதனைகளும் போதும். அவர்கள் இறுதிக் காலத்திலாவது நிம்மதியாக இருக்கட்டும்.

தாய் பெயர் : செல்வராசா பவளநாயகி
மகன் பெயர்: செல்வராசா அச்சுதன் (கைது  : 2009.05.19)
இடம் – ஓமந்தை விளக்குவைத்தகுளம்
தந்தை இறப்பு : 2019.08.20
 

https://www.ilakku.org/12-yearsthe-mother-is-also-searching-for-her-son/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை மகனை காணாமலே, விபரம் தெரியாமலே இறந்து போயிருக்கிறார்😭.

ஒரு closure க்காகவாவது - ஆட்கள் உயிருடன் இல்லை என்றால் அதை சொல்லிவிடலாம். இப்படி அந்தரிக்க விடாமல்😔.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.