Jump to content

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

 

கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. 

ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். 

E6-zIwZWQAEJ9_n.jpg

இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்கனைகளைக் கூட ஒரு அணியக உருவாக்கி ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குபற்ற செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு.

இத்தனை சிறப்புக‍ளைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக சற்று தொய்வு நிலையை அடைந்துள்ளது. 

E6-u_OeXIAE7IqK.jpg

கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் வீர வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு நேற்று ஆரம்பமானது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக ஆரம்பமானாலும் ஆரவாரமாக இருக்கவில்லை. காரணம் அதனை கண்டு களித்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மைதானத்தில் பார்வையாளர்கள் எவரும் இல்லை.

கடும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆர்பமான ஒலிம்பிக் விழாவை நிறுத்தக் கோரி. தொடக்க விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே மைதனத்திற்கு வெளியே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றுக்கொண்டிருந்தமையும் அவதானிக்கூடியதாக இருந்தது.

E6-vAMGWEAQjKYV.jpg

மூடிய மைதானத்திற்குள் வீரர்களும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் மட்டுமே இருந்தனர். கிட்டத்தட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு 206 நாடுகளிலிருந்து 11 ஆயித்து 300 வீர வீராங்கனைகளோடு பயிற்சியாளர்கள் அதிகாரிகள் போட்டி மத்தியஸ்தர்கள் என எண்ணிக்கை இன்னும் நீள்கிறது. அத்தோடு 2000 ஆயிரத்திற்குமான ஊடகவியலாளர்களும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை செய்தியிட வருகை தந்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு எப்போதுமே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஜப்பான் நடத்தும் டோக்கியோ ஒலம்பிக்கின் ஆரம்பமாக நிகழ்வும் ஜப்பானின் தொழில்நுட்பத்தையும் அவர்களின் புதுமையையும் பறைசற்றி நின்றது.

ஆனால் அதனை நேரடியாகக் காண ஜப்பான் நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு முன்னமே கொரோனா பாதுகாப்புக்காகென டோக்கியோ நகரல் அவசரகால நிலைப் பிரகடனப்டுத்தப்பட்டது. 

முழு நகரமும் வெறிச்சோடிக் காணப்படும் நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்கள்தான் ஆங்காங்கே நின்றதை அவதானிக்க முடிந்தது. 

ஆனாலும் அவர்களும் தங்கள் விருப்பப்படி எங்கும் செல்ல முடியாது. அவர்களுக்கான மைதானம் அவர்கள் தங்கியுள்ள ‍ஹோட்டலைத் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதியில்லை, பொதுப் போக்குவத்தை பயன்படுத்தவும் அனுமதியில்லை.

கொரோனாவால் துவண்டுபோயுள்ள ஒட்டுமொத்த உலகிற்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒரு புது பிரவேசத்தைக் கொடுத்துள்ளது எனலாம். 

இதனையே ஒலிம்பிக் தொடக்க விழாவிலும் அவர்களின் தொனிப்பொருளாக இருந்தது. புதிய நம்பிக்கை ஒட்டுமெத்த உலகின் நாளைய இலக்கு என்பவற்றை வலியுறுத்தின.

இன்று களம் காணும் நம்மவர்கள்

1b7b4802-11ba-4bdc-b5e9-843ced92f140.jpg

ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளான இன்று இலங்கை வீரர்கள் மூன்று போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

அதன்படி முதலாவது மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெஹானி 10 மீற்றர் எயார் ரைவல் பிரிவில் போட்டியிடுகிறார்.

75ac4358-72a3-4c2a-9fc0-c36a081d6bc9.jpg

அடுத்ததாக நீச்சல் போட்டியில் மெத்தியூ அபேசிங்க மற்றும் அனிகா கபூர் ஆகியோர் போட்டியிடுகின்றார். பட்மின்டன் போட்டியில் நிலூக கருணாரத்ன பங்கேற்கின்றார்.
 

https://www.virakesari.lk/article/109961

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.