Jump to content

ஆரோக்கியம் கெட்ட ​ஆரோக்கியபுரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியம் கெட்ட ஆரோக்கியபுரம்

spacer.png

அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப்படும் வளங்கள்

முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட  கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள்  கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர்.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில்  2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள்   அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால், புத்து வெட்டுவான், பழைய முறிகண்டி, ஐயன்கன் குளம், மருதங்குளம் உள்ளிட்ட பல விவசாய கிராமங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், பலதரப்பட்ட நியாய பூர்வமான காரணங்களை அந்த மக்கள் முன்வைத்திருக்கின்றனர்.

 போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின்  அபிவிருத்தி என்பது, பிரதான நோக்கமாக இருந்தாலும் வளங்களை அழிப்பது என்ற விடயத்தில்,  அக்கறை காட்ட வேண்டிய இன்றைய சூழலில், அவிருத்தி என்ற போர்வையில் ஏராளமான வளங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த வளங்கள் மீள் உருவாக்கம்  அல்லது, அழிக்கப்படுகின்ற வளங்களுக்கு மாற்றீட்டு வளங்களை உற்பத்தி செய்தல் என்பது, இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

image_e80f61d13f.jpg

குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் காடுகள்  அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. கிராமிய போக்குவரத்துக்காகப் புனரமைக்கப்படும்  வீதிகள் எவையும்  கனரக வாகனங்கள் பயணிக்க கூடிய வகையில் பெரும்பாலும் புனரமைக்கப்படுவதில்லை. இவ்வாறான கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படும் பிரதேசத்துக்கு அண்மித்த  கிராமங்களில் இருக்கின்ற வீதிகள் எவையும், அவ்வாறு  புனரமைக்கப்படவில்லை.

அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தையும் பிரிக்கின்ற அக்கராயன் - முறிகண்டி வீதி, துணுக்காய் - கொக்காவில் வீதி என்பன  புனரமைக்கப்பட்ட போதும், இந்த வீதிகளினூடாகக்  கனரக வாகனங்களின் போக்குவரத்தின் காரணமாக, வீதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இதனால் வறுமைக்கோட்டின் கீழ்  அன்றாடம் இயற்கையோடும் வனவிலங்குகளோடும்  போராடித் தங்களுடைய  வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லுகின்ற  மக்கள்,  தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

அதாவது, குறித்த கிராமங்களுக்குச் செல்லும் இந்த வீதிகள்,  புனரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கூட உரிய முறையில் பயன்படுத்தப்படாத நிலையில், கனரக வாகனங்களின் போக்குவரத்துக் காரணமாக, முழுமையாகச் சேதமடைந்திருப்பதால், இந்தக் கிராமங்களுக்கான போக்குவரத்துகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்தப் பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டவரை உரிய காலத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இதைவிடக் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களும் ஏராளம்.

அதாவது, ஒரு பாடசாலைக்கு ஆசிரியர் செல்வதாக இருந்தால், ஏ-9 வீதியில் இருந்து  600 ரூபாய் ஓட்டோவுக்குக் கொடுக்கவேண்டும். மீளவும்  அந்த ஆசிரியர் ஏ9 வீதிக்கு வருவதற்கு 600 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்தப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர், தன்னுடைய சம்பளத்தின் பெரும்பகுதியை போக்குவரத்துக்கு செலவழிக்கிற ஒரு நிலைமையைக் காணமுடிகின்றது.

இதுபோன்று, தினக்கூலி செய்யும் மக்கள் படும் கஷ்டங்கள் ஏராளம். வளமான சமதரைகளாகவும் சோலைகளாகவும் காணப்பட்ட இந்தப் பகுதிகள்,  இன்று பல ஆயிரம் ஏக்கர் வரையான பகுதிகளில்  காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாரிய குன்றும் குழிகளுமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, ஆரோக்கியபுரம் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

 இந்த நிலையில், கடந்த வாரம் கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, முற்றுகையிடப்பட்டு கிரவல் அகழ்வில் ஈடுபட்ட  கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வனப்பகுதியிலேயே குறித்த முறையற்ற கிரவல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.  குறித்த விடயம் தொடர்பில், இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கொழும்பிலிருந்து வருகை தந்த  புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமலாக்கும் அதிகாரிகள், இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டு, சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன்,  நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது கிரவல் அகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக, அகழ்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மேலதிகமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டமை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 20 அடிக்குமேல் அகழ்வு மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், பாரிய கிரவல்  அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளும் வெளிக்கொண்டு வரப்பட்டன.

ஆனாலும், குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்ததுடன், அங்கு சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

  குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை, இதுவரை கண்டுகொள்ளாத பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வனவள பாதுகாப்பு பிரிவு, வனஜீவராசிகள் திணைக்களம், கனியவள திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள், அரசியல்வாதிகள் போன்ற பொறுப்புமிக்க பதவிகள் வகிப்போர் இந்த விடயங்கள் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது  தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆரோக்கியம்-கெட்ட-ஆரோக்கியபுரம்/91-277153

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.