Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

மேல்படியார் அடித்து விடுகிறேன் என்று வரக்கூடும். 

இதுதான் அடித்து விடுதலை கேள்வி கேட்பதால் வரும் நன்மை.

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுதான் அடித்து விடுதலை கேள்வி கேட்பதால் வரும் நன்மை.

நிதானமில்லா நிதானம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரி, நீங்கள் தானே இதில் விண்ணர், உங்கள் தொழில்துறை என்பதால் விளக்கப்படுத்துங்கலேன், பார்ப்போம். 

நிறைய செலவாகுமே🤣.

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

எந்த விடயத்தை விளங்கபடுத்துவது என்பது என் முடிவு. இதை நேரம் எடுத்து விளங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பது என் அனுமானம். ஆகவே தனியாருக்கு price fixing பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால் அதற்குரிய தொழில்சார் நிபுணர்களிடம் பெறலாம்🤣.

I am not running a legal advice charity here 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நிறைய செலவாகுமே🤣.

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

எந்த விடயத்தை விளங்கபடுத்துவது என்பது என் முடிவு. இதை நேரம் எடுத்து விளங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பது என் அனுமானம். ஆகவே தனியாருக்கு price fixing பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால் அதற்குரிய தொழில்சார் நிபுணர்களிடம் பெறலாம்🤣.

I am not running a charity here 🤣

You are giving us your time for free!!! :grin:

உங்கள் நோக்கம், எப்படியாவது நான் அடித்து விடுகிறேன் என்று நிறுவுவது, அதுக்கு தலையால கிடங்கு கிண்டுகிறீர்கள்.

Price Fixing என்பது, கணக்கியலில் ஒரு முக்கிய பாடம், அதனை விளங்கிட தொழில் சார் நிபுணர்கள் எனக்கு தேவையில்லை.

நீங்கள், இந்த திரியில் நான் அடித்து விடும் 'கொடுமைகளை' கடந்து வந்தேன் என்று வேறு திரியில்  அடித்து விட்டீர்கள். அதனை குறித்து கேட்ட போது, 'நெருக்கி விட்டீர்கள்' என்று வழக்கத்துக்கு மாறாக சடைந்தீர்கள்.

கடஞ்ச வந்த பின்னர், அதனுள் ஒரு விடயத்தினை பிடித்து, நீங்கள் சொன்னதை உண்மையாக்குவது போல உருக்கொண்டு ஆடுகிறீர்கள்.

உங்கள் பரிதாபகரமான நோக்கம் சகலருக்கும் புரியும். நகைப்புக்கு இடமளிக்காதீர்கள்.

எனக்கு முக்கியமான மீட்டிங் உள்ளது. வேறு எங்கு போகப்போகிறீர்கள், இங்கே தானே இருப்பீர்கள். முடித்து விட்டு வருகிறேன். சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

மருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல.

NHS  அரசின் அலகு அல்ல எனும் கருத்தை  உங்களிடம் இருந்து நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் அறியாமையா, அல்லது விதண்டா வாதமா?  

கட்டணத்தை பற்றி பின்பு பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

NHS  அரசின் அலகு அல்ல எனும் கருத்தை  உங்களிடம் இருந்து நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில் அறியாமையா, அல்லது விதண்டா வாதமா?  

NHS is an Employer is this context

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

You are giving us your time for free!!! :grin:

உங்கள் நோக்கம், எப்படியாவது நான் அடித்து விடுகிறேன் என்று நிறுவுவது, அதுக்கு தலையால கிடங்கு கிண்டுகிறீர்கள்.

Price Fixing என்பது, கணக்கியலில் ஒரு முக்கிய பாடம், அதனை விளங்கிட தொழில் சார் நிபுணர்கள் எனக்கு தேவையில்லை.

நீங்கள், இந்த திரியில் நான் அடித்து விடும் 'கொடுமைகளை' கடந்து வந்தேன் என்று வேறு திரியில்  அடித்து விட்டீர்கள். அதனை குறித்து கேட்ட போது, 'நெருக்கி விட்டீர்கள்' என்று வழக்கத்துக்கு மாறாக சடைந்தீர்கள்.

கடஞ்ச வந்த பின்னர், அதனுள் ஒரு விடயத்தினை பிடித்து, நீங்கள் சொன்னதை உண்மையாக்குவது போல உருக்கொண்டு ஆடுகிறீர்கள்.

உங்கள் பரிதாபகரமான நோக்கம் சகலருக்கும் புரியும். நகைப்புக்கு இடமளிக்காதீர்கள்.

எனக்கு முக்கியமான மீட்டிங் உள்ளது. வேறு எங்கு போகப்போகிறீர்கள், இங்கே தானே இருப்பீர்கள். முடித்து விட்டு வருகிறேன். சந்திப்போம்.

உங்களுக்கு தெரிதுள்ளதல்லவா பிறகென்ன மினெக்கெடு🤣

எனது நோக்கம் இதுதான் என நீங்கள் சொன்னாலும் எனக்கு கவலையே இல்லை. 

நீங்கள் என்ன நோக்கத்தில் யாழில் எழுதுகிறீகள் என நான் முன்னரே எழுதியது எல்லாருக்கும் தெரியும்தானே. ஆகவே எனது அணுகுமுறை யாருக்கும் புதிதல்ல.

நான் சில அடித்து விடுதல்களை விளங்கபடுத்துவேன் அது யாழ்கள உறுப்பினர்களின் விளக்கத்தை அதிகரிக்கும் என கருதினால்.

சிலதை “கொடுமையே” என கடந்து போவேன் - அதை விளங்கபடுத்தி யாருக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை என கண்டால்.

இதே திரியில் ஒன்றை(price fixing) கடந்து போயுள்ளேன் இன்னுமிரெண்டை ( doctors’ pay, funding for medical degrees) விளங்கபடுத்தியுள்ளேன்.

இங்கேதான் இருப்பேன். மீட்டிங்கை முடிச்சிட்டு வாங்கோ🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

NHS is an Employer is this context

NHS செய்வது எதுவாகவும் இருக்கட்டும், அரசின் அலகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

NHS செய்வது எதுவாகவும் இருக்கட்டும், அரசின் அலகு. 

கடஞ்ச, இது குறித்த விளக்கத்தினை நீங்களே தேடி பெறுங்கள், எனக்கு விளக்க நேரமில்லை.

அரசின் அலகு என்றால், வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மருத்துவ மாணவர்களுக்கு, கடைசி வருட பல்கலைக்கழக கட்டணத்தினை NHS செலுத்தி விடுகிறது, அரசு அல்ல. (As a future employer)

இந்த சலுகையினை பெறுபவர்கள், NHS ல் வேலை செய்வதாகவே பெறுகிறார்கள். அவர்கள் குறித்த காலம் தம்முடன் வேலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும் என்றே பேச்சு எழுந்தது.

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/636527/Expansion_undergraduate_medical_education_consulation-response__2_.pdf

Page 7.

கட்டணத்துக்கான அரசின் பங்களிப்பை பற்றி, அரசின் காவலன் ஆனா அரசாங்கத்தின் வாயில் இருந்து.

வரியானதுடன், வரிப் பணம்  அரசின் உடமை, வரி கட்டுபவர்களின் அல்ல.

வெளிநாட்டு மருத்துவ பயிற்சியாளலருக்கு, நேரடியாக அரசு அளிக்கும் கட்டண தொகையை இல்லாமல் செய்வது பற்றியும் சொல்கிறது. இதன் அர்த்தம், அரசு  வெளிநாட்டு மருத்துவ பயிற்சியாளலருக்கு பகுதியாக கட்டணத்தை பொறுப்பேற்கிறது இதுவரையில்.

இதை மறுப்பதையின், FoI கீழ் அரசாங்கத்திடம் இருந்து பதிலை பெற்று இங்கு இணையுங்கள்.   

International students
2.9. The consultation outlined the Government’s intention to increase domestic supply and
charge international students the full costs of their course from 2018-19.
2.10. Following feedback provided through the consultation, these changes will commence in
2019-20 and not in 2018-19 as indicated in the consultation. This means the
Government will continue to fund clinical placements for international students
commencing study at English universities in 2018-19 while it undertakes further cross government work on implementing the change in 2019-20.

Return of service agreement
2.11. There was some agreement, particularly from organisations that responded, on the
principle of ensuring that the significant taxpayer investment in medical education is
maximised, but no general consensus on the mechanism by which to achieve this.
2.12. The Government will ask Health Education England to consider this in the context of
changes to medical education curricula in the wake of the Greenaway recommendations
on the Shape of Trainingii report, and report back by Spring 2018.
2.13. In doing so, we will ensure HEE considers all consultation responses on the minimum
number of years of service and its impact on those with protected characteristics.

 

1 hour ago, Nathamuni said:

ஆனாலும், இங்குள்ள வேறு சட்டங்கள் அதனை தடுத்துள்ளன என்று அறிகிறேன்.

 

சட்டங்களால் தடுக்கப்பட்டது என்பதை நான் நம்பவில்லை (ஆனாலும்  மேலேதிக ஆய்வு கொண்டே  முடிவை சொல்லலாம், Freedom of Information மூலமாக அறிவதற்கு முயதர்சி எடுக்கிறேன்). 

ஏனெனில், சட்டங்கள் இயற்றுவது பாராளுமன்றமும், House of Lords உம. 

பாராளுமன்றம் விரும்பி இருந்தால், தடுக்கும் சட்டங்களை திருத்தி சட்டம் இயற்றி இருக்கலாம்.  

ஆனால் தடுத்தது, BMA (BMA மிகுந்த செலவாக்கு உள்ளது) உம் மற்றும் மருத்துவ துறையில் உள்ள பெரும்பான்மை மருத்துவர்களும்.  இந்த Junior டாக்டர் போராட்டமும் நடைபெற்றதுக்கான முழு காரணத்தையும் ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 

அதன் ஆதாரங்கள்.

https://publishing.rcseng.ac.uk/doi/pdf/10.1308/rcsbull.2017.328

https://www.independent.co.uk/news/health/junior-doctors-nhs-quit-training-costs-repay-pay-back-health-department-medics-medical-school-a8172141.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

அரசின் அலகு என்றால், வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என்கிறீர்களா?

nhs வேலையைப் பற்றி (nhs as an employer)  எங்காவது சொன்னேனா?

வேண்டாம் மேலதிக வாதம். 

ஆனால், fulfilment  பிசினெஸ் மாடல் திரி, நல்ல விடயம்  தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல.

இதை நானும் முன்னர் ஒரு திரியில் சொல்லியிருந்தேன் ( பல வருடங்களுக்கு முன்னர் மதிவதனன் தாத்தாவுக்கும் சொன்னதாக நினைவு 😁)

 

ஆனால் நான் தொடர்ந்தும் எழுதுவது (முன்னரை விடக் குறைவு) என்னுடன் விவாதிப்பவர்களுக்கு அறிவூட்ட அல்ல. வாசிக்கும் மற்றவர்களுக்கு தெளிவூட்டவே.”

 

 

எனது ஒரு நண்பர் அமேஸன் மார்க்கட் பிளேஸில் சீனாவில் இருந்து பொருட்களை இறக்கி, தனது பிராண்ட்டில் விற்கின்றார். இன்னொருவரும் சீனாவில் இருந்து இறக்கி ஈபேயில் விற்கின்றார். இருவருக்கும் விற்கும் பொருட்களைப் பற்றி அக்குவேறு, ஆணிவேறாகத் தெரியும் என்பதால் பிஸினஸ் நன்றாகப் போகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை பற்றி நேற்று எழுத யோசித்தேன். ஓவராக பிராண்ட வேண்டாம் என விட்டேன்.

ஆனால் அடித்து விடுதலுக்கு இது மிக சரியான உதாரணம் என்பதால் பதிகிறேன்.

 

Doctors in training

As a doctor in training you’ll earn a basic salary, plus pay for any hours over 40 per week, a 37 per cent enhancement for working nights, a weekend allowance for any work at the weekend, an availability allowance if you are required to be available on-call, and other potential pay premia.

In Foundation training, you will earn a basic salary of £28,808 to £33,345 (from 1 April 2021).

If you’re a doctor starting your specialist training in 2021 your basic salary will be £39,467 to £53,077.

Specialty doctors

If you’re working as a specialty doctor you’ll earn a basic salary of £45,124 to £77,519.

Consultants

As a consultant from 1 April 2020, you'll earn a basic salary of £82,096 to £110,683 per year, depending on the length of your service. You may apply for local and national Clinical Excellence Awards. This is a competitive process which takes into account work that you do over and above delivering your basic job requirements. In addition, if you take on extra responsibilities, for example in management or education, you may expect to be paid more.

Consultants can also supplement their salary by working in private practice if they wish. The opportunities available will depend on their specialty areas and the time they wish to spend on this outside of their NHS contracted hours.

General practitioners

There are two contractual options for GPs. They can be:

1) independent contractors who are in charge of running their own practices as business either alone or in partnerships. They have autonomy in how services are delivered according to their contract with the Clinical Commissioning Group. In England, these GPs have increasing responsibility for the commissioning of hospital services for the community

2) salaried GPs who are employees of independent contractor practices or directly employed by primary care organisations. From 1 April 2020, the pay range for salaried GPs is £60,455 to £91,228.

https://www.healthcareers.nhs.uk/explore-roles/doctors/pay-doctors

 

 

 

 

அதுதான் சொல்கிறேன். திரி நல்ல விடயமாக போகட்டும் என்றுதான் சில தரவு பிழைகளையும் கண்டும் காணாமல் போனேன். 

கடஞ்சா off the cuff ஆக சொன்ன ஒரு விடயத்தை நீங்கள்தான் எடுத்து விவாதித்து, மேலும் பிழையான தரவுகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக எழுதி, எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்🤣.

# சொந்த செலவில் சூனியம்

முக்கி முக்கி 6 வருஷம் படித்து இன்னும் பல வருஷங்கள் ஜூனியர் டொக்டராக வேலை செய்து இப்படிக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தால் பணமும், பெருமையும் குறியாக இருக்கும் சில டொக்டர்களுக்கு கடுப்பாக இருக்கும். ஆனால் “லோகம்” (Locum) டொக்டர்ஸாக வேலை செய்து குறைந்த நேரத்தில் கூட உழைத்து பொஷ்ஷாக வாழ்பவர்களையும் தெரியும். 

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2021 at 17:06, Kadancha said:

நீங்கள் வாங்கிய கடன் அல்ல. 

ஓர் டாக்டர் ஐ பயிற்றுவிக்க, அரசு பிறிம்பாக (அந்த டாக்டர் ஆக பயிற்றுவிக்க படுபவர், அவர் எடுக்கும் கடனை தவிர ) மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறது. 
 
இது ஓர் பிரதான கரணம், டாக்டர் பட்டபடிப்புக்கான பல்கலைக்கழக இடங்கள் தொகை மிகவும் இறுக்குகமாகவும், வரையறை பட்டும் இருபதற்கு.  

எனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது.

நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வேதனைப்பட்டிருப்பாய் ஏன் அழுதும் இருப்பாய் ஏன் நாம் அனைவரும் அழுதிருப்போம்  

ஆனால் உனக்கு இந்த இடம் கிடைத்ததால்  உன்னை போல் எம்மைப் போல் இன்னொரு பிள்ளை குடும்பம் இன்று அழுதபடி இருக்கும்.

இதை ஒரு போதும் நீ மறக்கக்கூடாது. இதற்குள் சென்ற நீ தோற்றவர்களின் கனவுகளையும் சுமந்தபடி படிப்பது மட்டும் அல்ல சேவைகளுக்கும் உன்னை தயாராக்கி கொள்ளணும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

முக்கி முக்கி 6 வருஷம் படித்து இன்னும் பல வருஷங்கள் ஜூனியர் டொக்டராக வேலை செய்து இப்படிக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தால் பணமும், பெருமையும் குறியாக இருக்கும் சில டொக்டர்களுக்கு கடுப்பாக இருக்கும். ஆனால் “லோகம்” (Locum) டொக்டர்ஸாக வேலை செய்து குறைந்த நேரத்தில் கூட உழைத்து பொஷ்ஷாக வாழ்பவர்களையும் தெரியும். 

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

 

உண்மைதான். Locum நல்ல காசு பார்க்கலாம். ஆனால் என்ன கொஞ்சகாலம் அப்படியே நின்றுவிட்டால் பின்னர் மேலே அடுத்த நிலைகளுக்கு போவது முயல்கொம்பாகி விடும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

அதே நேரத்தில் மருத்துவத்தை பணம் சம்பாதிக்கும் துறையாகப் பாவிக்காமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி அதிக நேரம் வேலை செய்யும் இளைய மருத்துவர்களையும் தெரியும். ஒரு டொக்டராகப் படிக்கப் போனால், டொக்டராகவே வேலை செய்து, டொக்டராகவே ரிட்டையர் பண்ணவேண்டும்; இடையில் சில வருடங்களாவது மூன்றாம் உலகநாடுகளில் MSF போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யவேண்டும்.

எல்லாரும் உழைக்க வேண்டும் என்று ஆசைபடுவது இயல்புதான். ஆனால் சில படிப்புகளை நாம் படிக்க நமது திறமை மட்டுமே போதாது, அதற்க்கான வளங்கள் பெரும்பகுதி மக்கள் (அரசு) கொடுப்பதுதான். ஒவ்வொருவரும் அவரே மருத்துவ படிப்பின் முழு செலவையும் ஏற்பது என்றால் அவர்கள் பெற்றார் வீடு வளவு, இல்லாதவர்கள் கிட்னியையும் விற்க வேண்டி வரலாம்🤣.

ஆனால் இதில் நிச்சய வேலை, ஏனைய அரச வேலைகளை விட ஊதிய உயர்வு வீதம் அதிகம் போன்ற நன்மைகளும் உள்ளன. 

ஈயு நாடுகள், யூகே போன்ற நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் (அரசு) க்கும் ஒரு எழுதபடாத ஒப்பந்தம் உள்ளது என்பதே என் பார்வை. 

உங்களுக்கு படிப்பிப்போம். வேலை தருவோம். நடுங்கவிடாத செல்வமும் இதனால் வரும். பதிலுக்கு உங்கள் சேவையை தரவேண்டும்.

இதே போல் யூகேயில் அரச படையில் உள்ளவர்கும் அரசுக்கும் Armed Forces Covenant என்ற ஒரு ஒப்பந்தமும் உண்டு. 

எனக்கு தெரிந்த பலர், டாக்டர் ஆக கூடிய பெறுபேறுகள் இருந்தும் அதை படிக்க விரும்பவில்லை. Investment banking போன்ற செல்வம் கொழிக்கும் வேலைகளை  தரும் படிப்புகளை படித்து அந்த துறையில் போனார்கள்.

ஆகவே மருத்துவ படிப்பை படிக்க முதல், அதில் உள்ள கடப்பாடுகள், கடைமைகள் பற்றி முழுவதும் அறிந்து வாழ்நாள் மருத்துவ பணிக்கு தயார், மேலே சொன்ன எழுதபடாத ஒப்பந்தத்துக்கும் தயார் என்றால் போவதுதான் நல்லது.

சும்மா பெயருக்கு, பெற்றாரின் ஆசைக்கு அதை படித்துவிட்டு, வேறு தொழில் செய்வதால் - சமுதாயத்துக்கு இழப்புத்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பேராசிரியர் ஒருவர் சொன்னது: அவர் பார்வையில்; மூன்று தொழில்கள்தான் profession என அழைக்கப்பட வேண்டுமாம், medicine, law and theology (இறையியல் ?).

அப்போ எனக்கு இது கொஞ்சம் மேட்டிமையாக தெரிந்தாலும், பின்னாளில் இணையத்திலும் சிலர் இந்த கருத்தை முன் வைத்ததை கண்டுள்ளேன். 

இப்போ மேலே ஜி சொன்ன, டாக்டராக வே ரிட்டையர் ஆக வேண்டும் என்ற பதிவை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

எனது பேராசிரியர் ஒருவர் சொன்னது: அவர் பார்வையில்; மூன்று தொழில்கள்தான் profession என அழைக்கப்பட வேண்டுமாம், medicine, law and theology (இறையியல் ?).

அப்போ எனக்கு இது கொஞ்சம் மேட்டிமையாக தெரிந்தாலும், பின்னாளில் இணையத்திலும் சிலர் இந்த கருத்தை முன் வைத்ததை கண்டுள்ளேன். 

இப்போ மேலே ஜி சொன்ன, டாக்டராக வே ரிட்டையர் ஆக வேண்டும் என்ற பதிவை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

என்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் கூட வேலை செய்த பம்பாய் நண்பர் (இப்ப அவர் ஒரு சீன கமெரா சென்ஸர் தயாரிக்கும் பெரிய கம்பனி ஒன்றின் ஐரோப்பிய மார்க்கெற்றிங் டைரக்டர்) சொன்னதைத்தான் எழுதியிருந்தேன். ஒரு டொக்டர் டொக்டராக வேலையைத் தொடங்கி, டொக்டராகவும், லோயர், லோயராகவும் ரிட்டையர் பண்ணுவார்கள். ஆனால் மற்றைய துறைகளில் படிப்பவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் புரபெஷனல் வேலைக்கான ஸ்கில்களின் அடிப்படைகளைக் கற்று பிடித்த துறைகளுக்கு மாறுவார்கள். 

நானும் பல்வேறு வகையான technology களில் வேலை செய்து  jack of all trades but master of none ஆக இருக்கின்றேன்😉 அதுதான் எனது கருத்துக்களில் அகலங்கள் இருக்கும், ஆழங்கள் இருக்காது. ஆழமாகப் போகவேண்டும் என்றால் அதை delegate பண்ண ஆட்கள் இருக்கின்றார்கள்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

என்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் கூட வேலை செய்த பம்பாய் நண்பர் (இப்ப அவர் ஒரு சீன கமெரா சென்ஸர் தயாரிக்கும் பெரிய கம்பனி ஒன்றின் ஐரோப்பிய மார்க்கெற்றிங் டைரக்டர்) சொன்னதைத்தான் எழுதியிருந்தேன். ஒரு டொக்டர் டொக்டராக வேலையைத் தொடங்கி, டொக்டராகவும், லோயர், லோயராகவும் ரிட்டையர் பண்ணுவார்கள். ஆனால் மற்றைய துறைகளில் படிப்பவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் புரபெஷனல் வேலைக்கான ஸ்கில்களின் அடிப்படைகளைக் கற்று பிடித்த துறைகளுக்கு மாறுவார்கள். 

நானும் பல்வேறு வகையான technology களில் வேலை செய்து  jack of all trades but master of none ஆக இருக்கின்றேன்😉 அதுதான் எனது கருத்துக்களில் அகலங்கள் இருக்கும், ஆழங்கள் இருக்காது. ஆழமாகப் போகவேண்டும் என்றால் அதை delegate பண்ண ஆட்கள் இருக்கின்றார்கள்😁

 

ஆனாலும் இவ்வளவு அவையடக்கம் ஆகாது ஜி🤣. யாழ்களத்தில் ஆழமாக அதே நேரம் விளங்கும் படியும் எழுதும் ஒரு கருத்தாளரை சொல்லுங்கள் என்றால் பலருக்கும் உங்கள் பெயர்தான் நினைவுக்கு வரும் என்பது என் அனுமானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஆனாலும் இவ்வளவு அவையடக்கம் ஆகாது ஜி🤣. யாழ்களத்தில் ஆழமாக அதே நேரம் விளங்கும் படியும் எழுதும் ஒரு கருத்தாளரை சொல்லுங்கள் என்றால் பலருக்கும் உங்கள் பெயர்தான் நினைவுக்கு வரும் என்பது என் அனுமானம். 

நீங்களும் அவையடக்கத்திலை பேய்க்காய் எல்லோ  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் அவையடக்கத்திலை பேய்க்காய் எல்லோ  😂

🤣. ஓமோம் என்ர பணிவும், பவ்வியமும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் பின்னைய பதிவுகள் சில குழப்பங்களை தருகிறது. கடைஞ்ச தந்த லிங்குகளை பார்க்க, வாசிக்க நேரமும் இல்லை.

1. மான்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவர், 5 வருடத்தில் விட்டு விட்டு வெளியே வந்து பிசினஸ் செய்கிறார் என்றவுடன், அவர் போன்றவர்கள், படிக்க அரசு இவ்வளவு செலவு செய்கிறது என்ற ரீதியில் அது தவறு என்று கடஞ்ச சொல்ல விழைந்தார். அதனை தவிர்க்க பெட்டிசம் போட போகிறேன் என்றார்.

2. அது அவருக்கு உள்ள தனிமனித உரிமை, அதில் அரசு தலையிட முடியும் என்று நினைக்கவில்லை என்று சொன்னேன். மேலும், பல்கலைக்கழகம் இலவசமாக படிப்பிக்க வில்லை. கடன் அல்லது பெற்றவர் பணத்தில் முடித்து வெளியே வருகிறார், என்றேன்.

3. இல்லை, அரசு மேலதிகமாக மானியம் கொடுத்து செல்வழிகின்றது என்று, பல உதாரணங்களை கொண்டு வந்து காட்டினார்.

1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது. 

சரி, எனக்கு புரிகிறது.... புரியாததை புரிய வையுங்கள். 

முதலாவது கேள்வி:

இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?

இரண்டாவது கேள்வி:

ஒரு மாணவன் கல்வி பெற போகிறான். எவ்வளவு கட்டணம் என்று பல்கலைக்கழகம் சொல்கிறது. கட்டுகிறான், படிக்கிறான், வெளியேறுகிறான். அதனை விட,  பல்கலைக்கழக வருமானம், அரச மானியம், அரசு அறவிடும் வரி அல்லது வரி இன்மை குறித்து அவன் கவலைப்பட வேண்டுமா? (நேரடியான பதில் தாருங்கள், வேறு விபரங்கள் வேண்டாம்). அரசு மானியங்கள் கொடுக்காது விடின், இது தான் கட்ட வேண்டும் என்பார்கள், காசு இருந்தால் கட்டுவார், படிப்பார் அல்லது வேறு இடம் பார்ப்பார்அல்லது வேறு படிப்பு படிப்பார், சரியா?

மூன்றாவது கேள்விக்கு முன்னர் சிறு குறிப்பு.

ஒரு தென் இலங்கை மருத்துவர், லண்டனில் ஒரு சோமாலிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். பிள்ளை பெரிதாக இருக்கிறது. ஆகவே, வெட்டி பிள்ளையினை எடுக்கிறார். அவர் தடை செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பு விருத்த சேதனம் செய்தார் என்று அவரது சக வெள்ளை தாதி சொல்ல, அதனை முறைப்பாடாக எடுத்து, வழக்கு தொடர்ந்து, நீதிமன்று போய் சீரழிந்தார். அந்த பெண், தான் அந்த கோரிக்கை வைக்கவில்லை என்றும், அவர் செய்த ஒப்பரேஷன் தனதும், பிள்ளையினதும் நலனுக்கானது என்று புரிந்து கொள்வதாக சொல்லியும், வழக்கு நடாத்தி, பின்னர் மருத்துவ கவுன்சில் தலையிட்டு, தேவையில்லாத வழக்கு என்று சொல்லி, அவர் விடுதலை ஆனார். வேண்டாம் என்று இலங்கை போய் விட்டார்.

அதே வைத்தியசாலையில் பயிலுனராக வேலை செய்தவரே இந்த மான்செஸ்டர் டாக்டர். முடிந்தளவு விரைவாக வெளியேறி விட்டார் இந்த இஸ்லாமியர். (ஏன் இஸ்லாமியர் என்று சொல்கிறேன் என்று புரியும்)

மூன்றாவது கேள்வி:

இனவாதமும், மகிழ்வின்மையும் (வருபவர்கள் அனைவருமே கவலையுடன் வரும் நோயாளிகள்) தாராளமாக உள்ள இடத்தில், ஒருவரது தனிநபர் பிரச்சனை தெரியாமல், அவர் தொடர்ந்து அதே வேலையை செய்ய வேண்டும் என்று அரசோ, மக்களோ அழுத்தம் கொடுக்க முடியுமா?

தேவையில்லாத விபரங்கள் இல்லாமல், தயவுடன் இதற்க்கான பதில்கள் தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?

ஓம். இதைதான் brain drain என்பார்கள்.  நிச்சயமாக இது இலங்கைக்கு பாதிப்புத்தான். ஆனால் மேற்படிப்பு படித்தபின் சிலர் திரும்பியும் போகிறார்கள். அது brain gain. 

இதனால் இலங்கை மட்டும் அல்ல. இங்கிலாந்தும் பாதிப்பு அடைகிறது. இவர்கள் இங்கே மருத்துவ கல்லூரிகள், இதர வசதிகளில் முதலிடாமல், இங்கே இருக்கும் மாணவரை பயிற்றாமல், ready made ஆக வெளியில் இருந்து இறக்குவதால் இங்கே படிக்கும் வாய்ப்புகள் குறைகிறது. தாதிகள் மட்டத்தில் இது இன்னும் பெரிய பிரச்சனை. இங்கே பிறந்தவர்கள் சோசல் காசில் ஊதாரிகளாக இருக்க வெளியில் இருந்து தாதிகளை இறக்குமதி செய்யாமல், இங்கே இருப்பவர்களை தாதிகளாக பயிற்ற நீண்ட கால நோக்கில் grant அதிகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

நிச்சயமாக இலங்கையில் பல்கலைகழகம் போய் படித்துவிட்டு, வெளியேறிய கையோடு வெளிநாட்டில் வந்து செட்டில் ஆனால் இலங்கைக்கு நட்டம்தான். வெளிநாட்டில் வேலை செய்தபடி, ஆனால் பின்னர் ஊரில் செட்டில் ஆவவர்களால் பாதிப்பு குறைவு ஏனென்றால் அவர்கள் அந்நிய செலாவணியால் இந்த இழப்பை ஈடு செய்வார்கள். 

ஆகவே நடைமுறை சிக்கல்களுக்கு அப்பால், கடஞ்சா சொன்னதில் நியாயம் இருக்கிறது.

1 hour ago, Nathamuni said:

ஒரு மாணவன் கல்வி பெற போகிறான். எவ்வளவு கட்டணம் என்று பல்கலைக்கழகம் சொல்கிறது. கட்டுகிறான், படிக்கிறான், வெளியேறுகிறான். அதனை விட,  பல்கலைக்கழக வருமானம், அரச மானியம், அரசு அறவிடும் வரி அல்லது வரி இன்மை குறித்து அவன் கவலைப்பட வேண்டுமா? (நேரடியான பதில் தாருங்கள், வேறு விபரங்கள் வேண்டாம்). அரசு மானியங்கள் கொடுக்காது விடின், இது தான் கட்ட வேண்டும் என்பார்கள், காசு இருந்தால் கட்டுவார், படிப்பார் அல்லது வேறு இடம் பார்ப்பார்அல்லது வேறு படிப்பு படிப்பார், சரியா?

இங்கேதான் வேறு வேறு டிகிரிகளுக்கும் அவற்றுகுண்டாகும் செலவு பற்றியும் தெரிந்திருப்பது அவசியமானது. பெரும்பாலான டிகிரிகளை செய்ய டியூசன் பீஸ் மட்டுமே போதுமானதாக இருக்காவிடிலும், மேலதிகமாக அரசு கொடுக்கும் பணம் அவ்வளவு பாரியது அல்ல. ஆனால் மருத்துவ படிப்பின் செலவு மிக அதிகம், இதில் பெரும் பகுதியை அரசே செலவழிகிறது. இதை தெளிவு படுத்தவே கடஞ்சா அவ்வளவு இணைப்பையும் கொடுத்தார். இப்படி அரசு செலவு செய்வதால்தான் மருத்துவ

 மாணவருக்கும் சமூகத்துக்கும் இடையே ஒரு எழுதப்படாத covenant இருப்பதாக எழுதினேன்.

1 hour ago, Nathamuni said:

இனவாதமும், மகிழ்வின்மையும் (வருபவர்கள் அனைவருமே கவலையுடன் வரும் நோயாளிகள்) தாராளமாக உள்ள இடத்தில், ஒருவரது தனிநபர் பிரச்சனை தெரியாமல், அவர் தொடர்ந்து அதே வேலையை செய்ய வேண்டும் என்று அரசோ, மக்களோ அழுத்தம் கொடுக்க முடியுமா?

NHS இல் அப்படி ஒன்றும் ஏனைய அமைப்புகளை விட இனவாதம் தலை விரித்து ஆடுவதாக தெரியவில்லை. ஆகவே இனவாததுக்கு பயந்து தொழிலை விடுவதென்றால் NHS இல் வேலை செய்பவர்களில் ஒரு பெரும் விழுக்காடு வேலையை விட்டு விட்டுத்தான் இருக்க முடியும்.

எப்போதும் கவலையுடன் வர தயங்குபவரை சந்திக்க விருப்பம் இல்லாவிடின் அவர் டாக்டருக்கு படித்திருக்க கூடாது. ஒரு சர்கசில் வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும். அப்போ எப்போதும் சிரிப்பவர்களோடு பழகலாம்.  அல்லது டாக்டருக்கு படித்தாலும், மேல்படிப்பை நோயாளிகளோடு தொடர்புபடா துறைகளில் படித்திருக்கலாம்.

ஆனால் இந்த மனநிலையில் உள்ளவர் இந்த படிப்பை தேரும் முன் யோசிக்க வேண்டும். இதையே இவர் 350,000£ (இது ஒரு எழுந்தமானமான எண்ணிகைதான்) போல ஒரு பெருந்தொகையை வங்கியில் கடன் வாங்கி படித்திருப்பார் என்றால் வாங்க முதல் இது எனக்கு ஏற்ற தொழில்தானா? என யோசித்திருப்பார் அல்லவா?

இங்கேதான் @விசுகுஅண்ணா படிப்பை தொடங்கும் முன் மகளுக்கு கொடுத்த அறிவுரை அதி முக்கியம் பெறுகிறது.

இவ்வளவும் சொன்னபின்.

Rule என்று இருந்தால் அதற்கு exception உம் இருக்கும். விதி என்றால் விலக்கும் இருக்கும்ழ்

கடஞ்சா சொன்னது போல் ஒரு விதியை கொண்டு வந்தாலும் ஏனைய தனிநபர் பிரச்சனைகள், மன அளுத்தம், இதர தக்க காரணங்களை காட்டி விலக்கு கொடுக்கும் முறையையும் அதனுடன் கூடவே சேர்க்கலாம்.

ஆகவே கடஞ்சா முன்வைத்த கருத்து மிக நியாமானது. அவர் பெட்டிசன் போடுவதாக சொல்லவில்லை. Change . Org அல்லது பாராளுமன்ற தளத்தில் ஒரு மக்கள் மயப்பட்ட பெட்டிசனனை தொடங்கலாம் என நினைகிறேன் என்றார் என்றே நான் விளங்கி கொண்டேன். 

அதை நடைமுறைபடுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

தவிரவும் இந்த நாட்டில் liberty, individual freedoms என்பதை பற்றி எந்த அறிவும் இன்றி, மாஸ்க் போடுவது முதல், ஊசி அடிப்பதுவரை எதிர்க்கும் ஒரு மொக்கு கூட்டம் உள்ளது. இந்த கூட்டம் வாசிப்பது டெய்லிமிரர், டெய்லிமெயில், சன் போன்ற டேப்லாயிட்களை. இந்த கூட்டத்தில் யாருக்கும் மருத்துவம் பற்றி மருந்துக்கும் தெரியாது போகினும் பேப்பர்கள் உசுபேத்தி விட இந்த கூட்டம் பெரும் எதிர்ப்பை கிளப்பும்.

அதே போல் இந்த தீவிர வலதுசாரி கூட்டத்துக்கு சரி எதிரே இருக்கும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் தமது உறுப்பினர் நலன்கருதி இதை எதிர்க்கும்.

அதே போல் GMC யும் இதை எதிர்க்கும் (உறுப்பினர் நலன் பேணல்) என்றேபடுகிறது.

ஆகவே இந்த திட்டம் சரிவர, அமுலாக வாய்புகள் குறைவு.

எல்லாவறையும் விட,

Using a sledgehammer to crack a nut என்பார்கள். இப்படி டாக்டர் தொழிலை/நாட்டை விட்டு போபவர்கள் மிக சிறிய எண்ணிக்கை என்றால் இதில் அதிகம் மினகெட்டு ஒரு பிரியோசனமும் இல்லை.

ஆனால் நிச்சயம் வெளிநாட்டு மாணவர் விடயத்தில் கரிசனம் கொள்வார்கள் என்றே படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு தென் இலங்கை மருத்துவர், லண்டனில் ஒரு சோமாலிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். பிள்ளை பெரிதாக இருக்கிறது. ஆகவே, வெட்டி பிள்ளையினை எடுக்கிறார். அவர் தடை செய்யப்பட்டுள்ள பெண் உறுப்பு விருத்த சேதனம் செய்தார் என்று அவரது சக வெள்ளை தாதி சொல்ல, அதனை முறைப்பாடாக எடுத்து, வழக்கு தொடர்ந்து, நீதிமன்று போய் சீரழிந்தார். அந்த பெண், தான் அந்த கோரிக்கை வைக்கவில்லை என்றும், அவர் செய்த ஒப்பரேஷன் தனதும், பிள்ளையினதும் நலனுக்கானது என்று புரிந்து கொள்வதாக சொல்லியும், வழக்கு நடாத்தி, பின்னர் மருத்துவ கவுன்சில் தலையிட்டு, தேவையில்லாத வழக்கு என்று சொல்லி, அவர் விடுதலை ஆனார். வேண்டாம் என்று இலங்கை போய் விட்டார்.

அதே வைத்தியசாலையில் பயிலுனராக வேலை செய்தவரே இந்த மான்செஸ்டர் டாக்டர். முடிந்தளவு விரைவாக வெளியேறி விட்டார் இந்த இஸ்லாமியர். (ஏன் இஸ்லாமியர் என்று சொல்கிறேன் என்று புரியும்)

உங்கள் இஸ்லாமிய நண்பரின் சிங்கள நண்பர் டாக்டர் தர்மசேனவா?

அப்படியாயின் அந்த வழக்கு பற்றிய விபரம் கீழே.

https://www.theguardian.com/society/2015/feb/04/doctor-not-guilty-fgm-dhanuson-dharmasena

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த பதில். நன்றி, 

நான், நீட்டி முழக்காமல் மிக சிம்பிள் ஆன பதிலை, இங்கே பதிவிட்ட, கடஞ்ச, கிருபன், விசுகர் இடம் இருந்து அறிய விரும்புகிறேன்.

முடிந்தால் எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.

நான்காவது கேள்வி:

இந்த மருத்துவத்துக்கு உரியதாக சொல்லப்படும் கடமைப்பாடு, நம்பி ஏறி, உயிருடன் போய் சேருவோம் என்று ஒரு விமானத்தினுள், ரயிலில் உள்புகும், பயணிகள் விடயத்தில், விமானத்தினை, ரயிலை இயக்கும், பைலட், டிரைவர் ஆகியோருக்கு இருக்க கூடாதா? நான் சொல்லவருவது என்னவென்றால், மருத்துவர்க்ளுக்கு உள்ள அதே பொறுப்பும், கடப்பாடும் சமூகத்தின் ஏனைய துறைகளில் உள்ள இவர்களுக்கு இருக்க கூடாதா? மேலும், பல்வைத்தியர், மயக்கமருந்து கொடுப்போர், ஸ்கேனிங் செய்வோர், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் போன்றோருக்கும் இல்லையா? 

நாட் டினைக் காக்கும் படையினருக்கும் அதே போன்ற கடமை உள்ளது. ஆனால், அவர்கள் இடையே ஓடினால், கோர்ட் மார்சல் மூலம், சிறை. போர்க்களத்தில் இருந்து ஓடினால் சூடு. அதனை தெரிந்தே போகின்றனர்.

  ***

லண்டனில் பஸ்சில் ஏறினால், அடுத்த பஸ் ஸ்டாப் ஆயினும் 12 வது பஸ் ஸ்டாப் ஆயினும் ஒரே கட்டணம்.

ஒரு சமத்துவம். நான் ஒரு ஸ்டாப் தான் போகிறேன், அவர் 11 ஸ்டாப் போகிறார், இருவருக்கும் எப்படி ஒரே கட்டணம் என்று யாரும் சொல்வதில்லை.

அதேபோல, கல்வி செலவை அரசு ஓரளவுக்கு சமத்துவமாக வைத்துள்ளது. இம்பீரியலில் மருத்துவ கல்விக்கு என்ன செலவோ, அதே தான், ஈஸ்ட் ஆங்கிலியாவிலும் லண்டன் ஸ்கூல் ஒப் எகானாமிசில்  அல்லது கேம்பிரிட்ஜ்ல் எகானமி படிக்கவும் உள்ளது.

மாணவர்கள், வருடாந்த கட்டணம், பல்கலைக்கழக வாழ்க்கை செலவு, பார்ட் டைம் உழைப்பு, பரீட்சை, சித்தி குறித்தே கவலை கொள்வார்கள் அன்றி அரச மானியம், தமது கடமைப்பாடு என்று கவலைப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சும்மா நாம் பேசலாம். They will just take it for granted!! 

ஒரு பெற்றோராக, விசுகு போல பிள்ளைகளுக்கு சொல்லாம். 

மாணவர்களுக்கு அரச அமைச்சரோ அல்லது வேறு யாராவது பிரசங்கம் செய்ய வெளிக்கிட்டால், சொல்பவருக்கு கைவிரலை காட்டி விட்டு போகும் மனநிலை தான் இங்கே.

****
பிரிட்டனில் படித்து முடித்த வெள்ளைகள், மத்திய கிழக்கு, அமேரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஓடுவதால் தான், இங்கே இந்தியா, இலங்கையில் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியதாக உள்ளது. அவர்களை கேட்டால், அங்கே அதிக வருமானம், கல்விக்கடனை விரைவாக கட்டி முடிக்க அங்கே போகிறோம் என்கிறார்கள்.

அதனை தடுக்க முடியுமா? இலவசமாக கொடுத்தால் மட்டுமே முடியும். ஆனால், இலங்கை தடுக்க முடியவில்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.