Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

எனது மகள் வைத்தியத்துறைக்கான தெரிவில் எடுபட்டதும் நான் அவளுக்கு சொன்னது.

நீ தெரிவானதால் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் சந்தோசம். இன்று நீ தெரிவாகாது ஒருசில புள்ளிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீ வேதனைப்பட்டிருப்பாய் ஏன் அழுதும் இருப்பாய் ஏன் நாம் அனைவரும் அழுதிருப்போம்  

ஆனால் உனக்கு இந்த இடம் கிடைத்ததால்  உன்னை போல் எம்மைப் போல் இன்னொரு பிள்ளை குடும்பம் இன்று அழுதபடி இருக்கும்.

இதை ஒரு போதும் நீ மறக்கக்கூடாது. இதற்குள் சென்ற நீ தோற்றவர்களின் கனவுகளையும் சுமந்தபடி படிப்பது மட்டும் அல்ல சேவைகளுக்கும் உன்னை தயாராக்கி கொள்ளணும் என்று.

விசுகு அண்ணா!!! இந்த மாதிரி சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு.. அதிகமான பெற்றோர் தங்களது பெருமைக்காகவும் safe side lifestyleற்காகவும் தங்களது விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிப்பவர்களே அதிகம்.. அதனால்தான் பெரும்பாலும் மருத்துவம் ஒரு உன்னதமான சேவை என்ற கரு அவர்களின் மனதில் பதிவதில்லை.. அதற்கு மனதளவில் தயாராகாமல் பெற்றோர் கவலைப்படுவார்கள் என்பதால் படித்து ஒரு வேலை என்ற ரீதியில் போய்வருபவர்கள் அதிகம்.. அவர்களால் முன்னேற முடிவதில்லை.. விதிவிலக்குகளும் இருக்கலாம்.. 

ஓரளவு வயதிலிருந்தே பிள்ளைகளின் குணாதியங்களை கவனித்து வந்தால் அவர்களை அவர்களால் திறமையாக செயற்படக்கூடிய துறைகளை தெரிவு செய்ய ஆதரவு அளித்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.. 

உங்களது மகளிற்கு வாழ்த்துக்கள்!!!

 

On 28/7/2021 at 22:58, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்.. 

உண்மைதான்.. இந்த திரியில் வரும் விடயங்களில் இந்த 3 விடயங்களை படித்திருப்பீர்கள்👇🏼
6803-D162-C80-B-4-B2-D-B27-D-B7160-B7-F2

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, Nathamuni said:

அதனை கிருபன் அய்யா தொட்டு சென்றார், நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை.

1997 ல் பதவிக்கு வந்த டோனி பிளேயர் தொழில் கட்சி அரசு மூன்று முறை வென்று 2010 வரை பதவியில் இருந்தது. கடைசி இரண்டு ஆண்டுகளை நட்புக்காக, கோர்டன் பிரௌன் இடம் கொடுத்து சென்றார்.

ஆகவே, நீங்கள், தவறு, மகா தவறு என்று சொல்லி, லிஸ்ட் பண்ணிய அனைத்துமே இந்த 13 ஆண்டு காலப்பகுதியில் நடந்தது.

அதனையே சுருக்கமாக, டோனி பிளேயர் பின்னான கால பகுதி என்றேன்.

 

2 hours ago, goshan_che said:

இப்படியான நேரங்களில், நீங்கள் சடைகிறீர்களா, அல்லது முதலில் எழுதியதை தெளிவில்லாமல் எழுதிவிட்டு பின்னர் விளக்கம் கொடுக்கிறீர்களா என நான் எப்போதும் யோசிப்பதுண்டு.

நாதமுனி,


நீங்கள் tony பிளேயர் இன் பின் என்பது  , நான் சொல்லிய உங்கள் மதியில் உருவாகி இருக்கும் "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"   என்பதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

அதன் ஆதாரம், உங்கள் மதியில்  இருந்தே, ஆரம்பத்தில் (கிருபன், டோனி Blair, 2010 வர முதல்)

"எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்."

"தனி அமைப்பான பல்கலைக்கழகங்களில், (அதாவது அரசுக்கு சொந்தமில்லாத), பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?" 

அது அரச மானியம் அல்ல.

தர்மஸ்தாபன status. இங்குள்ள secondary independant ஸ்கூல் அனைத்துக்கும் இதே ஸ்டேட்டஸ் தான்.

அதாவது, லாபத்துக்கு வரி இல்லை. ஆனால் லாபம் ஒரு அளவுக்கு மேல் போகாதவாறு, ஸ்காலர்ஷிப், பர்சரி கொடுத்து விட வேண்டும், என்ற நிபந்தனையுடன்"

 "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது"  என்பதில் இருந்து உங்களால் விடு பட முடியவில்லை (வேறு புள்ளி விபரங்கள் தரப்பட்டும்,  அதில் எனது நண்பர்களுடன் அடைந்த  தனிப்பட்ட அவதான  குறைபாடுகளை நான் ஏற்றுக் கொண்டும், கோசானும் அந்த புள்ளி விபரத்தின் ball park ஆக சரியாக இருக்கிறது என்று அவரது வட்டத்தின் வழியாக அடைந்த தரவுகளை கொண்டு சொல்லியும்).  

 அதுவே, மறுபடியும் Tony Blair  ஐ நீங்களாவே கொண்டு வந்த போது, மறு படியும், உங்களை அறியாமலே 

"1997ம் ஆண்டு டோனி ப்ளாயர் அரசின் பின்னர் தான், பல்கலைக்கழக இலவசக்கல்வி முறை ஒழிந்து, கட்டணம் செலுத்தும் முறை வந்தது."  

குறிப்பாக, Tony Blair ஐ நீங்களாவே கொண்டு வந்ததே,  உங்களின்    "கட்டணம்,  பல்கழலை under graduate  செலவுகள் முழுவதையும் செலுத்தி விடுகிறது" மதி பிம்பத்தை (state of mind) தெளிவாக வெளிக்காட்டியது, நான் சந்தேகித்ததை மீள் உறுதிப்படுத்தியது.   

மருவளமாக, Tony Blair ஐ  நீங்கள் கொண்டு வந்து இருக்க விட்டால், நீங்கள் சொல்லும் இப்பொது சொல்லும் விளக்கமும் ஓரளவு பொருந்தி வரும். Tony Blair இதில் முற்றுமுழுதான reference point  என்பதை (இப்போது கூட) நீங்கள் உணரவில்லை.

நாதமுனி, மனித discrepancies ஐ திட்டமிட்டாலும் தடுக்க முடியாது. 

இதுவே crime scene இல் கூட செய்த நபர்களை  எதோ ஓர் வழியில் தொடர்பு படுத்துவது (implicate). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இப்ப புரிகிறது உங்கள் கோபம்: சொந்த அனுபவம்.

 

5 hours ago, Kadancha said:

சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்ல மறந்து விட்டேன்.

உறவினரின் மகனுக்கு, அவரின்  தந்தையார் guarantor ஆக கையெழுத்து வைத்தார்.

 அதை வைக்க முதல், ஏறத்தாழ 3-4 நாட்கள் மகனுடனும், என்னுடனும் பல கோணங்களில் ஆராய்வு. மகனை பல scenario க்கள் வைத்து தந்தை கேள்வி (இல்லாத girl friend ஐ இருப்பது என்று உருவகப்படுத்தி). மகன் தந்தையை, "am  I that dumb?" , "am  I that thick?" என்று கேட்கும் அளவுக்கு  scenario.  

 

நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?  

அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது. 

நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

 

 

நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?  

அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது. 

நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.

 

 

என்னைப்பொறுத்தவரை சில துறைகளை(பொதுவாக மக்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட,  சேவை சார்ந்த)  தேர்ந்தெடுக்க முன்பு சரியான தெளிவு இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு ஏனெனில் அவற்றிற்கான கேள்வி அதிகம், வழங்கல் குறைவு (உ+ம் doctors , nurse, social worker) .அதில் முழுமையான மனதோடு ஈடுபடாமல் மற்றவர்களின் வற்புறுத்தல், social statusற்காக தேர்ந்தெடுத்து இடையில் குழப்புவதாலோ அல்லது படித்து முடிந்த பின் வேறு துறையை தேர்ந்தெடுப்பதால் இன்னொருவரின் இடத்தினை வீணாக்குவதுடன் சமுதாயத்திற்குத்தான் இழப்பு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் இதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்பதால் இதில் நான் “விளங்கப்படுத்த வேண்டும்/தெளிவுபடுத்த வேண்டும என்ற ஆதங்கம்/அக்கறை”இருப்பதையே அவதானித்தேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

 

 

நான் சொல்லியதில் "எனது" கோபத்தை யாராவது உணர்கிறீர்களா?  

அப்படி இருந்தால், நாதமுனியும் "எனது" கோபம் என்று புரிவதில் நியாயம் இருக்கிறது. 

நாதமுனியை தவிர்த்து இன்னொருவர் பதில் அளித்தாலே, இத பற்றி என்னால் தொடர முடியும்.

 

எனக்கு நீங்கள் கோபப்படுவதாக தெரியவில்லை.  

ஆனால் நாதத்தை தேவைக்கு அதிகமாக சீரியசாக எடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை 😎

 

கோதாரிவிழ 

இப்ப நானும் தவிக்கிறேன்  தவழ்கிறேன்

புகுந்து  விளையாடி???🤣

On 28/7/2021 at 14:58, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சண்டை புடிக்கிறதால எங்களுக்குதான் நன்மை.. நாங்கள் நிறைய விடய்ங்களை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.. வெல்டன்.. கீப் இற்.. 

நானும் இதைத்தான் நினைத்தேன்

ஏனெனில்  வாதிடுபவர்கள் பலமானவர்கள்

வாழ்த்துக்கள் 

தொடருங்கள்

உலகம்  ஆயிரம்  சொல்லட்டுமே.....???

நாலு பேருக்கு உதவும் என்றால் ?????????

இது  நம்ம பாணி..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கல்வி சம்பந்தமாய் படித்தவர்கள் கதைக்கினம் போல கிடக்குது........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை 

அமேசான்  பிரித்தானியாவில் படிக்கும்
மருத்துவ மாணவர்களுக்கு இலவசக் கல்வி ஏற்பாடு செய்யுதாம்.🤣
நாம தான் இங்காலிப்   பக்கம் ஆச்சே
வாய் பாத்துக் கொண்டிருக்கிறோம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஆனால் இந்த மனநிலையில் உள்ளவர் இந்த படிப்பை தேரும் முன் யோசிக்க வேண்டும். இதையே இவர் 350,000£ (இது ஒரு எழுந்தமானமான எண்ணிகைதான்) போல ஒரு பெருந்தொகையை வங்கியில் கடன் வாங்கி படித்திருப்பார் என்றால் வாங்க முதல் இது எனக்கு ஏற்ற தொழில்தானா? என யோசித்திருப்பார் அல்லவா?

இங்கேதான் @விசுகுஅண்ணா படிப்பை தொடங்கும் முன் மகளுக்கு கொடுத்த அறிவுரை அதி முக்கியம் பெறுகிறது.

 

இதில் எனது  அனுபவத்தை  குறிப்பிடலாம்  என  நினைக்கின்றேன்...

1 - எனது  அறிவுரை இவ்வாறு  இருந்தபோது

அவள் வகுப்புக்கு சென்றபோது அங்கு  அறிவுரை வேறாக இருந்தது

உடனடியாக  காசு  உழைக்க விரும்புபவர்கள்  இந்த  துறையை விடுத்து

வேறு உதாரணமாக எஞ்சினியரிங் படித்தால் 3வது  வருடத்திலிருந்தே  நீங்கள்  பணத்தை  பார்க்கமுடியும்

ஆனால்  இங்கு  அப்படியல்ல. என்றே அறிவுரை சொல்லப்பட்டது

எனது  மகள் இதையும் என்னிடம் சொன்னாள்

ஆனால்  எனது  வீட்டில்  ஏற்கனவே 3 பேர் காசு சார்ந்த  துறையில் இருப்பதால் 

அவளுக்கு  அது  முதலிலேயே தெரிந்திருந்தது

 

2 - வைத்தியத்துறையில்  படிக்கும்  எனது  மகளுக்கு படிப்பிக்கோ அல்லது தொழில் பயிற்சிக்கென்றோ நான்  இதுவரை  ஒரு  சதமேனும் செலவளித்ததில்லை.  முழுக்க  முழுக்க இலவசம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை

 

2 hours ago, விசுகு said:

இப்ப நானும் தவிக்கிறேன்  தவழ்கிறேன்

புகுந்து  விளையாடி???

 

1 hour ago, suvy said:

ஏதோ கல்வி சம்பந்தமாய் படித்தவர்கள் கதைக்கினம் போல கிடக்குது.

 

1 hour ago, வாத்தியார் said:

வாய் பாத்துக் கொண்டிருக்கிறோம்

பார்த்தது போதும், இறங்குங்கள்.

 ஒரு சிக்கலும் இல்லாத விஷயம்.

உங்களுக்கு அனேமாக பலமான கருத்தும் இருக்கலாம்.

விடயம் இது தான். ஆழமாக இறங்க முதல் சிறு பின்னூட்டம் 

இப்பொது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு, மாணவர் கடன் எடுத்து கட்டணம் கட்டுகிறார்கள்.

இதனால், மாணவர் படிப்பை இடையில் முறித்தாலும் அல்லது படித்து விட்டு துறையை விட்டு விலத்தினாலும், அது மாணவரின் பிரச்சனை, ஏனெனில் ஈற்றில் மாணவரே கடனை கட்டப் போகிறார் என்பதால்.      

இங்கே அலசபப்டுவது, மருத்துவ துறையில் ஒருவரை பயிற்சி அளிப்பதற்கன செலவு தொகை. அது பெ ப்படும் விதம், அதனால் மாணவருக்கு உருவாக கூடிய கடப்பாடுகள். 


 1) நாதமுனி சொன்னார் மாணவரர் கடனாக எடுத்து கட்டும் கட்டணம் மட்டுமே, மருத்துவ பயிற்சிக்கான முழு செலவு, அதை  தவிர்த்து வேறு ஒரு செலவும் இல்லை என்று.  இதனால், மாணவர்  மருத்துவ பயிற்சியை  இடையில் முறித்தாலும் அல்லது முடித்து  விட்டு மருத்துவ துறையை விட்டு விலத்தினாலும், அது மாணவரின் பிரச்சனை, ஏனெனில், ஈற்றில் மாணவரே கடனை கட்டப் போகிறார் என்பதால். 

2) அநேகமான துறைகளுக்கு வகுப்பறையில் படிப்பிக்கும் (teaching  / lecturing) செலவை மாத்திரமே கட்டணம்  பூர்த்தி செய்தாலும், . மருத்துவத்தில் அதை கூட (வகுப்பறையில் படிப்பிக்கும் செலவை)  மாணவரர் கடனாக எடுத்து கட்டும் கட்டணம் பகுதியாகவே பூர்த்தி செய்யும்.  இது நாதமுனிக்கு தெரியாது அல்லது புரிந்து வைத்து இருக்கவில்லை.  

 3) மருத்துவ பயிற்சின் மிகுதி செலவை , நேரடி அரச மானியம்,  மறைமுகமான அரச உதவிகள் (உ.ம். Hospital, விசேட பரிசோதனை கூடங்கள்  போன்றவற்றில்  மாணவரை பயிற்றுவிப்பது),  வரி விலக்கு, ஆராய்ச்சிக்கான நிதி உதவி,  தொண்டு நிறுவங்களின், தனியார் நிறுவங்களின், பழைய மாணாக்கரின் உதவி  என்று பல வேறு உதவைகள் மூலமாக மிகுதி செலவு நிரப்பப்படுகிறது.

4) குறிப்பாக, UK இல்,   மருத்துவ பயிற்சிக்கான அரசின் உத்தியோக பூர்வ செலவு மதிப்பீடு £230,000. இந்த மதிப்பீடு நேரடி செலவை மாத்திரம் கருத்தில் கொண்டு. மருத்துவ துறைக்கு, மறைமுகமான திறமை சார் வல்லுநர்கள், ஆரசிச்சியாளர்கள், நுண் திறனுள்ள பரிசோதனை  கூடடங்கள், மருத்துவத்தை பயிற்றுவிப்பற்கு என்று சிறப்பாக உருவாக்கப்படும் மூலப் பொருட்கள் என்று பல மறைமுகாமநானா  செலவுகள் உண்டு. இவையெல்லாவற்றையும் கூடினால்,  பயிற்சிக்கான செலவு மதிப்பீடு இன்றைய நிலையில் £400, 000 - £500,000. இந்த மதிப்பீடு, எனது மருத்துவ துறை நணப்ர்களோடு ஆராய்ந்து பெறப்பட்ட தனிப்பட்ட முடிவு. கோசானும், அவருடைய நட்பு மருத்துவ வட்டத்தின் வழியாக இந்த £400, 000 - £500,000 ஏறத்தாழ சரியாக இருப்பதாக ஆமோதிக்கிறார்.  

5) இந்த இதர வசதிகளும் (திறமை சார் வல்லுநர்கள், ஆரசிச்சியாளர்கள், நுண் திறனுள்ள பரிசோதனை  கூடடங்கள், மருத்துவத்தை பயிற்றுவிப்பற்கு என்று சிறப்பாக உருவாக்கப்படும் மூலப் பொருட்கள்) அநேகமாக அரசிடம் இருப்பதால், அரசு அந்த செலவையும் மறைமுகமாக  பொறுப்பேற்றுக்கொள்கிறது. இது எனது மற்றும் கோசானின்  மருத்துவ வட்டங்களில் இருந்து அறியப்பட்ட முடிவு.            

6) UK இல் மருத்துவ  மாணவர்கள் அநேகமாக கடனாக பேராக் கூடிய  கூடிய தொகை, 60, 000 - 70, 000.

7) எனவே, UK அரசின் உத்தியோக பூர்வ செலவு மதிப்பீடு £230,000 ஐ கருத்தில் எடுத்தாலும்,    மருத்துவ துரையின் முக்கியத்துவத்தை அரசு கருத்தில் கொண்டு,  உத்தியோக பூர்வ மதீப்பிட்டில் பெரும்பகுதியை UK அரசு  பொறுப்பேற்றுக் கொள்கிறது.

😎 வெளி நாட்டு மாணவரின் மருத்துவ பயிற்சியின் செலவின் ஒரு பகுதியை கூட, UK அரசு பொறுப்பேற்று கொள்ளகிறது. £20,000 என்பது ஆரம்ப மதிப்பீடு, அனால், யதார்த்தத்தில் இதை விட கூடாவாக இருக்கும். ஏனெனில் அரசு சொல்கிறது, வெளிநாட்டு மாணவரின் hospital இல் பெறும் பயிற்சியின் செலவை பொறுப்பேற்று இருப்பதாக. ஆனல், அதை நிறுத்துவதற்கும்  அரசு சிந்திக்கிறது. 

9) இப்படி அரசு செலவழிக்கும் போது, மாணவர் இடையில் விரும்பி முறித்தாலோ (தவிர்க்க முடியாத காரணங்கள், உடல், உள  நலம், முடியாமை போன்றவற்றை தவிர்த்து)   அல்லது முடித்த பின் விலத்தினாலோ (தவிர்க்க முடியாத காரணங்கள், உடல், உள  நலம் போன்றவற்றை தவிர்த்து), அரசுக்கும், வரி செலுத்தும் பொது மக்களுக்கும் நட்டம்.      

10) இதனால், UK அரசு சொல்கிறது (அதை நானும் பலமாக ஆதரிக்கிறேன்), மருத்துவ பயிற்சியை  முடித்தால், குறிப்பிட்ட காலாம் (4 வருடங்கள்) வரைக்கும் அரச மருத்துவ சேவையில் வேலை செய்ய வேண்டும், விரும்பி விலத்துவதாயின். அனால், என் மனதில் மமுதல்  இருந்த கால எல்லை 10 வருடங்கள். UK பாராளுமன்றத்துக்கு தனிப்பட்ட நபரின் கோரிக்கையை, பெட்டிஷன் ஆக பாராளுமன்றில் சமர்ப்பிக்கலாம் வாதத்துக்கு எடுக்குமாறு. அதை, பாராளு மன்ற இணையத்தில் பிரசுரித்து, பொது மக்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படும். குறிப்பிட்ட வாக்குகள் 6 மாதத்துக்குள் சேருமாயின், வாதத்துக்கு எடுக்கப்படும். இதை தவிர வேறு இணைய தளங்களும் உள்ளது, இது பற்றியவிழிப்புணர்வு மற்றும் அழுத்ததை ஏற்படுத்துவதற்கு (உ.ம். change.org)           

11)  நாதமுனி சொல்கிறார்,   மருத்துவர்கல் விலத்துவதும், வேலை செய்வதும் அவரரின் தனிப்பட்ட தெரிவுக்கு  விடப்பட வேண்டும். விரும்பி விலத்தும்  போது கூட 4 வருட கட்டாய சேவை தேவை இல்லை என்று. இதுவே வாதத்தின் கருப்பு பொருள்.

12) இதில், எனது அவதானத்தில், நாதமுனி சுளிக்க முற்றப்படுவதை இங்கு நான் விலா  வாரியாக எழுத முடியாது. 

13) முக்கியமாக, இந்த கடன் எடு கட்டணம் கட்டுவதை பற்றி நாதமுனியின் விளக்கம் (நான் புரிந்த வரைக்கும், அதை சுட்டி காட்டும் வரைக்கும்), மாணவர் கடன் எடுத்து கட்டும்  கட்டணம் மட்டும்  எந்த இளமானி பட்டப் படிப்பினதும் (மருத்துவம் உட்பட)  முழு செலவுகளையும்  அடைக்க போதுமானது.

ஆனால், 4, 5)  இது முடியாது என்றாகிறது (மறைமுகமான திறமை சார் வல்லுநர்கள், ஆரசிச்சியாளர்கள், நுண் திறனுள்ள பரிசோதனை  கூடடங்கள், மருத்துவத்தை பயிற்றுவிப்பற்கு என்று சிறப்பாக உருவாக்கப்படும் மூலப் பொருட்கள் என்று பல மறைமுகாமநானா  செலவுகள்.)  

சில, விடயத்துக்கு தொடர்பில்லாத கேள்விகளும் கேட்டார்.          
உ.ம்.
 
"இலங்கையில் மருத்துவம் இலவசக்கல்வி. நீங்கள் சொல்வதன் படி பார்த்தால், அங்கே படித்து முடித்து, வெளியேறி, இங்கே வேலை செய்யும் அனைவரும் தவறு இளைத்தவர்கள், என்பது சரியானதா?"

13) இனி நீங்களும் விளாசலாம், விரும்பியபடி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இங்கே அலசபப்டுவது, மருத்துவ துறையில் ஒருவரை பயிற்சி அளிப்பதற்கன செலவு தொகை. அது பெ ப்படும் விதம், அதனால் மாணவருக்கு உருவாக கூடிய கடப்பாடுகள். 

நிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் .
ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும்
அதற்கான விருப்பும் சேவை மனப்பான்மையும் கொள்ளவேண்டும்.

உதவித் தொகை பெற்றுப் படிப்பவர்கள் கட்டாயம் சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மருத்துவராகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதவர்கள் ( வேலையழுத்தம், குடும்பம், மன அழுத்தம் ) இவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மற்றையவர்கள் வேறு தொழில்களை பணம்  ஈட்டும் குறிக்கோளுடன்
நாடும்போது கடனையும் அவர் பெற்ற  உதவித்  தொகையையும் திருப்பித் தருவதே முறை.

மருத்துவத் துறையில் கட்டணமாகக் கட்டப்படும் தொகையை விட அதிகமான தொகை பராமரிப்பு மற்றும் இன்னபிற செலவுகள்... நீங்கள் கூறியது சரியே.

முடிவாக ஒரு வைத்தியராக தனது கடமையைத் தொடங்கி  
நாடுவிட்டு நாடு சென்று பணமீட்ட முயற்சிப்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பது தவறல்ல.

இலங்கை  போன்ற நாடுகளில் மட்டும் அல்ல இலவசக் கல்வியைப் பெற்ற மருத்துவர்கள் குறைந்த பட்ஷம் சில  வருடங்கள் அந்த அந்த நாடுகளிலேயே  சேவையாற்ற வேண்டும் என்ற கருத்தை நானும் வலியுறுத்துகின்றேன்.

மருத்துவத்துறை பணமீட்டும் ஒரு தொழில் என்பதை விடுத்து அது ஒரு சேவை என நினைப்பவர்கள் தொடர்ந்தும் அந்தத் தொழிலிலேயே நிற்பார்கள். அப்படியானவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தல்
ஒரு சிறப்பான அம்சம். 

    .
   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் எழுப்பபட்ட இன்னொரு விடயம் பிரித்தானிய பல்கலைகழகங்கள் தனியார் நிறுவனங்களே - என்பது.

பக்கிங்ஹாம், ரீஜெண்ட், யூனிவர்சிட்டி ஒப் லோ, இன்னும் ஐந்து ஆறு யூனிகள்தான் முழுக்க முழுக்க தனியார் யூனிகள் (இவற்றில் மருத்துவம் கற்பிப்பதில்லை என உறுதியாக நம்புகிறேன் - ஆராயவில்லை). 

மிகுதி எல்லாம் சுயாட்சி கட்டமைப்புகள். தனியார் பகுதியின் (private sector) சில பண்புகளை கொண்டும் (பலதை கொள்ளாமலும்). அரசாங்க பகுதியின் (public sector) பல பண்புகளை கொண்டும் (சிலதை கொள்ளாமலும்) இயங்குவன.

கீழே ஒரு துணைவேந்தரின் பதிவு.

https://www.theguardian.com/education/2006/jun/20/highereducation.comment

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

9) இப்படி அரசு செலவழிக்கும் போது, மாணவர் இடையில் விரும்பி முறித்தாலோ (தவிர்க்க முடியாத காரணங்கள், உடல், உள  நலம், முடியாமை போன்றவற்றை தவிர்த்து)   அல்லது முடித்த பின் விலத்தினாலோ (தவிர்க்க முடியாத காரணங்கள், உடல், உள  நலம் போன்றவற்றை தவிர்த்து), அரசுக்கும், வரி செலுத்தும் பொது மக்களுக்கும் நட்டம்.

ஜெர்மனியில் ஒரு சில புள்ளிகளால் இலவச மருத்துக்கல்வியைப் பெற முடியாமல்....  காத்திருக்கவும் விரும்பாமல்.... அதைத்தான் கற்பேன்... என்று விடாப்பிடியாக நின்ற ஒருவருக்கான..... 

மருத்துவத்தை படிப்பதற்கான ஒரு வருடக்  கட்டணம் 12.௦௦௦ யூரோ
7 வருடங்கள்  84.௦௦௦ யூரோ ( 6 வருடம் தான் பொதுவானது )
வாழ்க்கைச் செலவு, வாடகை  ஒரு மாதம் 1000 யூரோ
ஏழு வருடங்கள்  84  மாதம் 84.௦௦௦ யூரோ
அதில் அரச உதவித் தொகை 42.௦௦௦ யூரோ( அதுவும் அவர்  திருப்பித் தரவேண்டும் அரசுக்கு ) சொச்சம் போனால் மிகுதி 112.௦௦௦ யூரோ
இத்தனை காசைக் கட்டிப் படித்த மருத்துவத் துறையைக் கை விட்டால்
 ( அப்படி நடக்கக்கூடாது என்று இப்போதும் நினைப்பேன் ) கட்டியவர்கள்  மனம் என்ன பாடுபடும்.
இது  நாடுகளுக்கும் பொருந்தும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

2 - வைத்தியத்துறையில்  படிக்கும்  எனது  மகளுக்கு படிப்பிக்கோ அல்லது தொழில் பயிற்சிக்கென்றோ நான்  இதுவரை  ஒரு  சதமேனும் செலவளித்ததில்லை.  முழுக்க  முழுக்க இலவசம்.

விசுகு நீங்கள் மிகவும் அதிஸ்டசாலி.

இங்கு நல்ல பல்கலையில் எந்தப் படிப்பு என்றாலும் பணமுள்ளவர்கள் என்றால் குறைந்தது ஒரு லட்சம் பள்ளிக்கு மட்டும்.(ஒரு வருடத்துக்கு)வசதி குறைவானவர்கள் என்றால் 70-80 ஆயிரம்.

வீடு வாங்குவதற்கு குறைந்த வட்டியும் படிப்பதற்கு இரண்டு மடங்காகவும் அறவிடுகிறார்கள்.படிப்பு முடிந்து 6 மாதமாகினால் வேலை செய்தால் என்ன விட்டால் என்ன வட்டியுடன் கட்ட தொடங்க வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டு பேர் எற்கனவே உங்களுக்கு உத்தரவாதமாக கையெழுத்து போட்டிருப்பார்கள் அவர்களுக்கு கடிதம் போகும். 
  இத்தனைக்கும் நல்ல கிரடிற் இருந்தால்த் தான் இத்தனையும் நடக்கும்.இல்லாவிட்டால் வட்டி வீதம் கூடும்.
   இதனாலேயே கறுப்பினத்தவர் பலர் மேல்படிப்பை படிக்க முடியாமல் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு நீங்கள் மிகவும் அதிஸ்டசாலி.

இங்கு நல்ல பல்கலையில் எந்தப் படிப்பு என்றாலும் பணமுள்ளவர்கள் என்றால் குறைந்தது ஒரு லட்சம் பள்ளிக்கு மட்டும்.(ஒரு வருடத்துக்கு)வசதி குறைவானவர்கள் என்றால் 70-80 ஆயிரம்.

வீடு வாங்குவதற்கு குறைந்த வட்டியும் படிப்பதற்கு இரண்டு மடங்காகவும் அறவிடுகிறார்கள்.படிப்பு முடிந்து 6 மாதமாகினால் வேலை செய்தால் என்ன விட்டால் என்ன வட்டியுடன் கட்ட தொடங்க வேண்டும்.இல்லாவிட்டால் இரண்டு பேர் எற்கனவே உங்களுக்கு உத்தரவாதமாக கையெழுத்து போட்டிருப்பார்கள் அவர்களுக்கு கடிதம் போகும். 
  இத்தனைக்கும் நல்ல கிரடிற் இருந்தால்த் தான் இத்தனையும் நடக்கும்.இல்லாவிட்டால் வட்டி வீதம் கூடும்.
   இதனாலேயே கறுப்பினத்தவர் பலர் மேல்படிப்பை படிக்க முடியாமல் உள்ளனர்.

இது தான் முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்குமான வித்தியாசம் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா!!! இந்த மாதிரி சிந்திப்பவர்கள் மிகவும் குறைவு.. அதிகமான பெற்றோர் தங்களது பெருமைக்காகவும் safe side lifestyleற்காகவும் தங்களது விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிப்பவர்களே அதிகம்.. அதனால்தான் பெரும்பாலும் மருத்துவம் ஒரு உன்னதமான சேவை என்ற கரு அவர்களின் மனதில் பதிவதில்லை.. அதற்கு மனதளவில் தயாராகாமல் பெற்றோர் கவலைப்படுவார்கள் என்பதால் படித்து ஒரு வேலை என்ற ரீதியில் போய்வருபவர்கள் அதிகம்.. அவர்களால் முன்னேற முடிவதில்லை.. விதிவிலக்குகளும் இருக்கலாம்.. 

ஓரளவு வயதிலிருந்தே பிள்ளைகளின் குணாதியங்களை கவனித்து வந்தால் அவர்களை அவர்களால் திறமையாக செயற்படக்கூடிய துறைகளை தெரிவு செய்ய ஆதரவு அளித்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன்.. 

உங்களது மகளிற்கு வாழ்த்துக்கள்!!!

இது  பற்றி எழுதுவதென்றால் அது புத்தகமாகிவிடும்

மூத்தவள் சாதாரண  படிப்பாளி 

தனக்கு  தேவையானவற்றை  மட்டும் படித்துக்கொள்வாள் 

தற்பொழுது RH ஆக இருக்கிறாள்

மூத்தமகன் கடுமையாக  படித்து தான் புள்ளிகள் எடுப்பான்

எஞ்சினியரிங் முடித்து

இப்போ வங்கியில் Business Analyst ஆக இருக்கிறான்

அடுத்த  மகன்

வீட்டில் படிக்கவே  மாட்டான் ஆனால்  நல்ல  புள்ளிகள் எடுப்பான் (என்னைப்போல)

எஞ்சினியரிங் முடித்து

business management முடித்து

இப்போ வங்கியில்  Control Manager  ஆக இருக்கிறான்

அடுத்தவள்

வீட்டில் இருந்தாலும் காரில்  போனாலும் யாருடைய  வீட்டுக்கு  போனாலும் கையில் புத்தகம் இருக்கும்

கடுமையாக  முன் தயாரிப்பு மற்றும்  ஊக்கம்

உயர்  தரப்பரீட்சையில்  விஞ்ஞான பாடத்தில்  20 க்கு 19.6 எடுத்தாள்

வைத்தியம் படிக்காதே என்று  சொல்லவா  முடியும்???

ஒரே  ஒரு விடயம்  தான் நான் கேட்பது அதுவும் அவர்களுக்காக.

படிக்கணும் அதில் மட்டும்  செல்லம் கிடையாது மற்றும்படி  அவர்களின் நல்ல  நண்பன்

10  பாடம் என்றால் அவர்கள் என்ன  துறையில் போக விரும்புகிறார்களோ அதில் மட்டும் நல்ல  புள்ளிகள் எடுத்தால்  எனக்கு  சரி. 10 இலும் பிரகாசிக்கணும் என்பதெல்லாம் கிடையாது

சிலவேளைகளில் அவர்களுக்கே அதிசயமாக  இருந்ததுண்டு. என்ன இந்த  பாடத்தில்  இவ்வளவு  மட்டமான  புள்ளி  எடுத்தும் அப்பா  ஒன்றுமே  சொல்லவில்லையே என்று.

போன கிழமை  இங்குள்ள லூர்து மாதா  கோயிலுக்கு போயிருந்தேன்

1985 இல்  முதன் முதலில்  இங்கே போயிருந்தேன்

கொழும்பில்  இனக்கலவரத்தால் பறிக்கப்பட்ட எனது கல்வியை

லண்டனுக்கு சென்று Chartered Accountant ஆகும் எனது  கனவை  கலைத்து தொடங்கிய  வாழ்வு

இன்று எங்கே  நிற்கின்றேன் என்று கண்களை  மூடி நினைத்தபோது.........???

எனது  கனவை  தொலைத்ததை  நினைத்தபோது கண்கள் கலங்கினாலும்  மக்கள் அதை  முடித்து தந்த பேருணர்வு அமைதி  தந்தது.   முதன்முதலாக கடவுளுக்கு நன்றி சொல்லி  புறப்பட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

இது  பற்றி எழுதுவதென்றால் அது புத்தகமாகிவிடும்

மூத்தவள் சாதாரண  படிப்பாளி 

தனக்கு  தேவையானவற்றை  மட்டும் படித்துக்கொள்வாள் 

தற்பொழுது RH ஆக இருக்கிறாள்

மூத்தமகன் கடுமையாக  படித்து தான் புள்ளிகள் எடுப்பான்

எஞ்சினியரிங் முடித்து

இப்போ வங்கியில் Business Analyst ஆக இருக்கிறான்

அடுத்த  மகன்

வீட்டில் படிக்கவே  மாட்டான் ஆனால்  நல்ல  புள்ளிகள் எடுப்பான் (என்னைப்போல)

எஞ்சினியரிங் முடித்து

business management முடித்து

இப்போ வங்கியில்  Control Manager  ஆக இருக்கிறான்

அடுத்தவள்

வீட்டில் இருந்தாலும் காரில்  போனாலும் யாருடைய  வீட்டுக்கு  போனாலும் கையில் புத்தகம் இருக்கும்

கடுமையாக  முன் தயாரிப்பு மற்றும்  ஊக்கம்

உயர்  தரப்பரீட்சையில்  விஞ்ஞான பாடத்தில்  20 க்கு 19.6 எடுத்தாள்

வைத்தியம் படிக்காதே என்று  சொல்லவா  முடியும்???

ஒரே  ஒரு விடயம்  தான் நான் கேட்பது அதுவும் அவர்களுக்காக.

படிக்கணும் அதில் மட்டும்  செல்லம் கிடையாது மற்றும்படி  அவர்களின் நல்ல  நண்பன்

10  பாடம் என்றால் அவர்கள் என்ன  துறையில் போக விரும்புகிறார்களோ அதில் மட்டும் நல்ல  புள்ளிகள் எடுத்தால்  எனக்கு  சரி. 10 இலும் பிரகாசிக்கணும் என்பதெல்லாம் கிடையாது

சிலவேளைகளில் அவர்களுக்கே அதிசயமாக  இருந்ததுண்டு. என்ன இந்த  பாடத்தில்  இவ்வளவு  மட்டமான  புள்ளி  எடுத்தும் அப்பா  ஒன்றுமே  சொல்லவில்லையே என்று.

போன கிழமை  இங்குள்ள லூர்து மாதா  கோயிலுக்கு போயிருந்தேன்

1985 இல்  முதன் முதலில்  இங்கே போயிருந்தேன்

கொழும்பில்  இனக்கலவரத்தால் பறிக்கப்பட்ட எனது கல்வியை

லண்டனுக்கு சென்று Chartered Accountant ஆகும் எனது  கனவை  கலைத்து தொடங்கிய  வாழ்வு

இன்று எங்கே  நிற்கின்றேன் என்று கண்களை  மூடி நினைத்தபோது.........???

எனது  கனவை  தொலைத்ததை  நினைத்தபோது கண்கள் கலங்கினாலும்  மக்கள் அதை  முடித்து தந்த பேருணர்வு அமைதி  தந்தது.   முதன்முதலாக கடவுளுக்கு நன்றி சொல்லி  புறப்பட்டேன். 

கனவுகள் தொலைவதில்லை அவை கடத்தப்படுகிறன. உங்கள் பிள்ளைகள் யாரும் சார்டட் எக்கவுண்டன் இல்லை (?) என்பதில் நீங்கள் உங்கள் கனவை திணிக்கவில்லை, கடத்தி இருக்கிறீகள் என்பது தெளிவாகிறது.

இப்போதுதான் கிருபன் பகிந்த்த சக்ரவர்தியின் கதையை வாசித்து கனத்த நெஞ்சோடு வந்தேன். 

அந்த கதை மாந்தாரோடு ஒப்பிடும் போது நாம் (ஒவ்வொருவருக்கும் இந்த இன மோதல் ஒவ்வொரு இழப்பை தந்துதானே இருக்கும்) இழந்தது அதிகமில்லை என்று ஆசூவாசப்படத்தான் முடியும்.

பிகு:

RH என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனவுகள் தொலைவதில்லை அவை கடத்தப்படுகிறன. உங்கள் பிள்ளைகள் யாரும் சார்டட் எக்கவுண்டன் இல்லை (?) என்பதில் நீங்கள் உங்கள் கனவை திணிக்கவில்லை, கடத்தி இருக்கிறீகள் என்பது தெளிவாகிறது.

இப்போதுதான் கிருபன் பகிந்த்த சக்ரவர்தியின் கதையை வாசித்து கனத்த நெஞ்சோடு வந்தேன். 

அந்த கதை மாந்தாரோடு ஒப்பிடும் போது நாம் (ஒவ்வொருவருக்கும் இந்த இன மோதல் ஒவ்வொரு இழப்பை தந்துதானே இருக்கும்) இழந்தது அதிகமில்லை என்று ஆசூவாசப்படத்தான் முடியும்.

பிகு:

RH என்றால் என்ன?

Ressource humaine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

Ressource humaine

தெளிவூட்டலுக்கு நன்றி🙏🏾

நாங்கள் HR என்போம். Human Resources 🤣.

இந்த இடம் வலம் மாறுவது மட்டும் மாறாது நமக்கிடையே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

தெளிவூட்டலுக்கு நன்றி🙏🏾

நாங்கள் HR என்போம். Human Resources 🤣.

இந்த இடம் வலம் மாறுவது மட்டும் மாறாது நமக்கிடையே🤣

தயாரிப்புச்செலவு எவ்வளவு  செலவானாலும்

எங்களுக்காக  ஒரு  பக்கம்

உங்களுக்காக  ஒரு  பக்கம் ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கனவுகள் தொலைவதில்லை அவை கடத்தப்படுகிறன. உங்கள் பிள்ளைகள் யாரும் சார்டட் எக்கவுண்டன் இல்லை (?) என்பதில் நீங்கள் உங்கள் கனவை திணிக்கவில்லை, கடத்தி இருக்கிறீகள் என்பது தெளிவாகிறது.

இப்போதுதான் கிருபன் பகிந்த்த சக்ரவர்தியின் கதையை வாசித்து கனத்த நெஞ்சோடு வந்தேன். 

அந்த கதை மாந்தாரோடு ஒப்பிடும் போது நாம் (ஒவ்வொருவருக்கும் இந்த இன மோதல் ஒவ்வொரு இழப்பை தந்துதானே இருக்கும்) இழந்தது அதிகமில்லை என்று ஆசூவாசப்படத்தான் முடியும்.

பிகு:

RH என்றால் என்ன?

இந்த  திரி பிள்ளைகளின் படிப்பு மற்றும் பணம்  சம்பாதிப்பது பற்றி அதிகம்  பேசியதால் தான் இவை  பற்றி  எழுதவேண்டி  வந்தது.  எனது  அனுபவங்களும் பிள்ளைகளின் படிப்பும் அதன் இன்றைய  பெறுபேறுகளும் சிலருக்கு  உதவக்கூடும்.

அதிக பணம்  சம்பாதிப்பதற்காக  அல்லது  மேலும் வசதிகளுக்காக நாடுகளை  மாறுவதற்கு  ஏதிரானவன் நான்.  அதையும் எனது  மக்களுக்குள் ஊட்டி  வைத்துள்ளேன்.  

மற்றது என்னைத்தொடர்ந்து  பிள்ளைகளின் பழக்க  வழக்கங்கள்  உதவிகள் அல்லது நன்கொடைகள் சேமிப்புக்கள் ..................  சார்ந்தும்  இங்கே பதியணும்

ஏனெனில்  வீட்டில்  இருந்தே நாட்டுக்கான  நற்பிரசை உருவாகிறது.  அதை உருவாக்குவதும் நமது  கடமை  அதிலும்  தமிழருக்கு அது மிகமிக அவசியம்.

நேரம்  தான்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தயாரிப்புச்செலவு எவ்வளவு  செலவானாலும்

எங்களுக்காக  ஒரு  பக்கம்

உங்களுக்காக  ஒரு  பக்கம் ....🤣

🤣

 

57 minutes ago, விசுகு said:

இந்த  திரி பிள்ளைகளின் படிப்பு மற்றும் பணம்  சம்பாதிப்பது பற்றி அதிகம்  பேசியதால் தான் இவை  பற்றி  எழுதவேண்டி  வந்தது.  எனது  அனுபவங்களும் பிள்ளைகளின் படிப்பும் அதன் இன்றைய  பெறுபேறுகளும் சிலருக்கு  உதவக்கூடும்.

அதிக பணம்  சம்பாதிப்பதற்காக  அல்லது  மேலும் வசதிகளுக்காக நாடுகளை  மாறுவதற்கு  ஏதிரானவன் நான்.  அதையும் எனது  மக்களுக்குள் ஊட்டி  வைத்துள்ளேன்.  

மற்றது என்னைத்தொடர்ந்து  பிள்ளைகளின் பழக்க  வழக்கங்கள்  உதவிகள் அல்லது நன்கொடைகள் சேமிப்புக்கள் ..................  சார்ந்தும்  இங்கே பதியணும்

ஏனெனில்  வீட்டில்  இருந்தே நாட்டுக்கான  நற்பிரசை உருவாகிறது.  அதை உருவாக்குவதும் நமது  கடமை  அதிலும்  தமிழருக்கு அது மிகமிக அவசியம்.

நேரம்  தான்????

நிச்சயம் நீங்கள் எழுதும் பலது என்னை போல் பலருக்கு நடைமுறை வழிகாட்டியாய் அமைகிறது. மேலே பிரபா சொன்னது போல, படிப்பு தேர்வில் நீங்கள் கொடுத்த சுதந்திரம், எல்லாரும் செய்யாதது, செய்ய வேண்டியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வாத்தியார் said:

நிச்சயமாக ஒருவர் மருத்துவம் படிக்கச் செல்லும் பொது அவரின் பின்னால் இன்னொருவர் காத்திருக்கின்றார் .
ஆகவே முன்யோசனையுடன் செல்ல வேண்டும்

மருத்துவ துறையில், இடையில் முறித்தால், முறிக்கப்பட்ட இடம் வீணாவதை தவிர வேறு வழியில்லை.

இது, உண்மையில் மாணவரின் தவறு அல்ல; மருத்துவ துறை பயிற்சியில் இருக்கும் பயிற்சி  திட்ட தொடர்ச்சியில்  இருக்கும் நெகிழ்வு அற்ற தன்மை.  ஒரு பல்கலை கழகத்தில் இருந்து இனொரு பல்கலை கழகத்துக்கு மாறுவது கூட மிக மிக கடினம், அல்லது  முடியாது  பயிற்சி  திட்ட தொடர்ச்சியை பொறுத்தவரையில்.

மாற எத்தனிக்கும்  பயிற்சியளர் மீதும் பல கேள்விகள், அவரின் நடத்தை கூட சந்தேகிக்கப்படும்.   

மிகவும் ஆரம்பத்தில், அதாவது முதல் மாதத்தில் முறித்தால், வேறு யாருக்காவது கொடுக்க இடம் இருக்கும் என்று நினைக்கிறன். ஆனால், தகமை உள்ள இன்னொருவரை தேடிப்பிடிப்பதற்குள் காலம் கடந்து  விடும்; ஏனெனில், மேற்கு நாடுகளை பொறுத்தவரை, முறிக்கப்பட்ட அந்த இடம்  எதிர்பார்த்து இருக்கும் எல்லருக்கும் சமமாக தெரியப்படுத்த வேண்டும், முறித்தவர் எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டாரோ,எ து மாரு படியும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.      

மருத்துவ துறையில், மாற இயலுமானால்,  பயிற்சி  தொடர்ச்சியில் மறு இருப்பது இன்னோரு பிரச்சனை.  

இந்த பிரச்னைகள்  இன்ஜினியரிங், விஞ்ஞான,  மற்ற துறைகளுக்கு உண்டாயினும், மருத்துவ துறையில் மிகவும் கூர்மையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 11:36, Nathamuni said:

இப்ப புரிகிறது உங்கள் கோபம்: சொந்த அனுபவம்.

நல்ல காலம் என் சிறு முடிவை அவசரத்தில் அந்த கருத்தோடு எழுதாமல் விட்டது.

இருவர் (கோசான், பிரபா) கோபத்தை உணரவில்லை. இவர்கள் எதை உணர்ந்தார்கள் என்பது அவர்களுக்கும், எனக்கும் முக்கியம் ஆயினும், உங்களுக்கும், எனக்கும் இடைப்பட்ட அலசல், வாதத்தில் முக்கியம் அல்ல.

அந்த கருத்து, தனித்து, அது மட்டும் தான் என்றால்,  அந்த கருத்துக்கு  முன்பு   ஒன்றுமே  சொல்லாமால்  என்றால், "எனது"  கோபம் என்பதற்கு ஒரு வாய்ப்பாவது இருக்கிறது.

 நான் சொன்னதை "தனித்து" எடுப்போம்.  

1) அதில்  அந்த மகன் தந்தை மீது  எரிச்சலடைந்தார், கோபமடைந்தார்   என்பது  வெளிப்படையாக இருக்கிறது.  

2) தந்தை எனது உறவினர், அந்த மகனும் எனது உறவினர். 

3) அவர்களுக்கிடையில் நடந்த காரசாரமான உரையாடலில், எனது கோபத்தை எங்கிருந்து உய்த்துணர்ந்தீர்கள் அந்த பதிவை தனித்து ஆராய்ந்தால். 

அனால், அந்த பதிவை, முன்பு பதிந்த கருத்துக்களின் பின்னணியுடன் எடுக்கும் போது, அதில் சொல்லப்படும் செய்தியை உங்களால் உணர முடியாது இருந்தது, உங்களின் விளக்கத்தின் மீது வெளிப்டையான தெளிவில்லாத அல்லது புரியாத தன்மையை நீங்களாவே எடுத்தியம்புவதாக உள்ளது.

சுருக்கமாக,  அந்த பதிவில் இரு செய்திகள்.    

ஒருவருக்கு (எனது உறவினர் மற்றும் அவரின் மகன்) நன்மை (Russel group university இல் குறிப்பிட்ட துறைக்கு  எடுபடுவது) தரக்கூடிய வாய்ப்பாக இருந்தும், அந்த நன்மை தன் (என் உறவினர்) மகனுக்கு கிடைதபதற்கு சாத்திய கூறுகள் ஒப்பீட்டளவில் அதிகம் ஆயினும்,, தன் (என் உறவினர்) மகனாலும் அந்த வாய்ப்பை தன் மகன் பெறுவதற்கு பின்துணை இருக்க (guarantor), அவர் (என் உறவினர்) மகனுக்கு அந்த வாய்ப்பின் நிபந்தனைகள் மீதுள்ள அர்ப்பணிப்பை பலவாறு சோதனைக்கு உட்படுத்துகிறார் (என் உறவினர்); ஏனெனில், நிபந்தனைகள் மீறப்பட்டால், ஈற்றில் அவரே ( னது உறவினர்) அந்த கட்டணமான £4500 க்கு பொறுப்பு என்பதால். 

மருத்துவ பயிற்சி வாய்ப்பை கிடைத்த பின், அதை முற்றாக அடைவதற்கு, மாணவருக்கு சுமையை உணர்த்தாமல் , ஏறத்தாழ £130,000 க்கு மேல் கொடுக்கும் அரசு, மாணவர்  இடம் இருந்து வரையறுக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் (4 வருடம்); மாணவருக்கும், அரசுக்கும் ஒரு தனிப்பட்ட உறவு இல்லை என்பதால் கடப்பாடாக உறுதியையும்  (Return of Service க்கு ஒப்பந்த அல்லது சட்ட அடிப்படியில் இணக்கம்)  எதிர்பார்ப்பதில் எந்த தார்மீக தவறும் இல்லை.  

நாதமுனி, நீங்கள் அடிப்படை தத்துவம்  ஓரளவு தெரிந்து  இருந்தால், எனது தனிப்பட்ட தார்மீக பிரச்னை என்று வேறு ஒரு பதிவில் சொல்லி இருக்க மாட்டீர்கள்.    

உங்களுக்கு எது வேண்டுமாக  இருக்கிறதோ, அதுவே மற்றவருக்கும் வேண்டப்படும் - அடிப்படை தத்துவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.