Jump to content

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
 

கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 19 இன் பின்னர் ஆரம்பித்துள்ளது. உலக வல்லாண்மை நிலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இது தவிர்க்கப்பட முடியாத கால தேவையாகவும் உள்ளது.


 
இந்த ‘முதலீட்டால் வையத்தில் முந்தியிருத்தல்’ என்னும் புதிய அரசியல் வியூகத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாகத் திருகோணமலையை மையமாக வைத்து உலக அரசியலைத் தன்பக்கம் சுழற்றுவதற்கான ஒரு முயற்சியிலும் அமெரிக்கா இறங்கி யுள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலமாக ‘மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளுதல்’ என்பதற்கான பேரம் பேசுதல்கள், கோவிட் 19இற்குப் பின்னரான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டின் மௌன நாடகமாக பசில் ராசபக்ச என்ற சிறீலங்காத் தரப்புக் கதாநாயகனின் வழி இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இன்று அந்தக் கதாநாயகனான தனது தம்பி பசில் ராசபக்சவையே சிறீலங்காவின் நிதியமைச்சராக அண்ணன் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா  ராசபக்ச அமர்த்தி, “ஒரு புறம் சீனா மறுபுறம் அமெரிக்கா இரண்டுக்கும் நடுவே நான் இருக்கிறேன்” என்று சிவத்திற்கும் சக்திக்கும் நடுவில் தான் இருப்பதாகப் பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் பாடியது போல, புதிய பக்திப் பண்ணிசைத்து மகிழ்கின்றார். அண்ணன் காட்டிய வழியம்மா என “என் கடன் பணி செய்து கிடப்பதே” என பசில் ராசபக்ச இராமனுக்குப் பரதனாக, அண்ணா இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலும் வெற்றி பெற்று முடிசூடத் தன் குடும்பப் பணியினை அண்ணனின் கால் அணியைப் பரதனைப் போல் கண்ணில் ஒற்றித் தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெற்றிக் களிப்பில் “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற வீரத்துடன் அண்ணன் சிறீலங்கா அரச அதிபர்  கோத்தபாயா  ராசபக்ச இப்போது மூன்று ஆண்டு திட்டங்களாக உள்ள தனது அரச அதிபர் அலுவலகச் செயற்திட்டங்களின், மேற்கால எல்லை எட்டு வருடம் எனத், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே ஊடகங்களுக்கு முன்மொழியத் தொடங்கி விட்டார். இது குடும்ப ஆட்சி நீடிப்பு மகிழ்ச்சி அறிவிப்பாக மட்டும் அமையாது தனது அரசாங்கம் உறுதியான அரசாங்கமென உலக முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தி சிறீலங்காவுக்கான அனைத்துலக முதலீட்டைப் பெருக்கும் அரசியல் தந்திரேபாயமாகவும் அமைகிறது.

சீனாவிடம் இருந்து சீனப் பணமாகிய யுவானில் பெற்ற பெருங்கடன் தொகையை அமெரிக்க டொலர்களாக மாற்றி, உலகச் சந்தையில் திரவ நிலைக்குக் கொண்டு வந்து, நாளாந்த சந்தைக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய இயலாது ‘வங்குரோத்து’ அரசாகத் தன்னை அறிவிக்கும் அபாய நிலைக்குச் சென்று கொண்டிருந்த சிறீலங்காவுக்கு, 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவுக்குச் சமானமான மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய மாற்றம் செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சிறீலங்கா தவறவிடாது, தக்க வைத்துக் கொள்ள தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்யும் என்பது அனைவராலும் எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

அதே வேளை அமெரிக்க சார்பான பொருளாதார முதலீட்டுப் பெருக்கம் என்பது உலக வங்கி, நாணயமாற்று வங்கி போன்றவற்றின் கடனுதவிகளையும், முதலீட்டு உதவிகளையும் மீளவும் பெறும் வழியாகவும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளு மன்றத்தின் வரிச் சலுகைக்கான முன் நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பதைச் செய்யாமலே தனக்கான நிதி வளத்தை சிறீலங்கா நிலை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,  சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சவும் அவரது ஆணையில் செயற்பட்ட படையினரும் இழைத்த அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கான  அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான உத்தியாகவும் அமைகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துப் பழகிய ராசபக்ச குடும்பத்தினர் இப்போது ஒரு கல்லில் நான்கு மாங்காய்களை வீழ்த்தும் அற்புத விற்பன்னர்களாகப் பரிணமித்து  ள்ளனர். முதல் மாங்காய், அமெரிக்க டொலர் பற்றாக் குறையையும் பஞ்சாகப் பறந்து போகச் செய்து ‘வங்குரோத்து’ நிலையிலிருந்து தப்பித்தல். இரண்டாவது மாங்காய், சிறீலங்காவில் சீனாவின் மேலாதிக்கம் நடை முறை வாழ்வாகிறது. தங்களின் பௌத்த சிங்கள மகாவம்ச சிந்தனைகள் தளர்கின்றன எனத் தவித்த பௌத்த பிக்குகளுக்கு, இனி சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் புத்தசாசனத்தின் பாதுகாப் பாளர்கள் என உறுதிப்படுத்தி, சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தப்புதல்.   மூன்றாவது மாங்காய், திருகோணமலையில் உள்ள இந்தியாவின் எண்ணெய்த் தாங்கி முதலீடுகளின் வருமானங்களைப் பலவீனப் படுத்தி, அங்கிருந்து தானாகவே ஒட வைப்பதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டின் இலங்கை வருகையின் போது திருகோண மலையை தெற்காசிய எண்ணெய்க் கேந்திர நிலையமாக்குவோம் என உலகுக்கு உரைத்த சூளுரையை கனவாக்கி, இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை இழக்க வைத்தல் என்னும் கனவை நனவாக்குதல். நான்காவது மாங்காய் ராசபக்ச குடும்பத்தினரதும் அவர்களது ஆணையில் செயற்பட்ட படையினரதும் அனைத்துலகக் குற்றச் செயல் விசாரணை களுக்குத் தப்பிப் பிழைப்பது என்பதாகிறது.

இந்த மகிந்த ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தின் மிக உயர் இராஜதந்திர வலைப்பின்னல் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழின அழிப்புக்களை நியாயப்படுத்தி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக இலங்கைத் தீவை மாற்றுவது என்பது எல்லா வகையிலும் தெளிவாகிறது. இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

 

 

https://www.ilakku.org/world-politics-revolving-around-trincomalee/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

எம்மை இந்த அவலத்திற்குள் இழுத்துவந்து வீழ்த்தியதே இந்தியாதான் என்கிறபோது, இந்தியா எவ்வாறு எமது வாழ்வினை மீட்டுத்தரும் என்று  இலக்கு நினைக்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

எம்மை இந்த அவலத்திற்குள் இழுத்துவந்து வீழ்த்தியதே இந்தியாதான் என்கிறபோது, இந்தியா எவ்வாறு எமது வாழ்வினை மீட்டுத்தரும் என்று  இலக்கு நினைக்கிறது? 

உண்மை. நானுமிந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டு வரும்போது யோசித்த கருத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள். 

நன்றி. 

இன்றைய பல ஊடகங்கள் ஏதோ கிந்தியா தமிழருக்காக எதையோ செய்யவந்ததுபோன்ற தொனியிலே எழுதி வருகின்றன. உண்மையிலே இவை சுயநினைவுடன்தான் எழுதுகின்றனவா? என்ற ஐயமே எழுகின்றது. தமிழரது இன்றைய துயரநிலைக்கு முதற்கரணியமே கிந்தியாதான் என்பதை உலகே அறியும். அறிந்தும் அறியாததுபோல் எழுதும் ஊடகங்களும், கட்டுரையாசிரியர்களும் சிந்திப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை பல்வேறு மட்டத்துக்குள்ளும் ஊடுருவி தனக்கான தளத்தை உருவாக்க பாடுபடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, உடையார் said:

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்
 

கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல் வழித் துறைமுக இணைப்பு வழி உலகைத் தனது மனித வளத்துடனும், இயற்கை வளத்துடனும் இணைத்து எழுதல் என்ற அற்புதமான திட்டத்தை இன்று கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய வடிவில் வெற்றிகரமாக முன்னெடுத்து, உலக நாடுகள் பலவற்றிலும் சீனா முதலீட்டு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த முதலீட்டு வழி அரசியல் இணைப்பு பெறும் அரசியல் தந்திரோபாயத்தை அமெரிக்கா தனது முதலீட்டாளர்கள் மூலம் செய்வித்துத் தான் சீனாவுக்குச் சமானமான வெற்றி யினைப் பெறுவதற்கான பயணத்தை கோவிட் 19 இன் பின்னர் ஆரம்பித்துள்ளது. உலக வல்லாண்மை நிலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அமெரிக்காவுக்கு இது தவிர்க்கப்பட முடியாத கால தேவையாகவும் உள்ளது.


 
இந்த ‘முதலீட்டால் வையத்தில் முந்தியிருத்தல்’ என்னும் புதிய அரசியல் வியூகத்தின் தொடக்க முயற்சிகளில் ஒன்றாகத் திருகோணமலையை மையமாக வைத்து உலக அரசியலைத் தன்பக்கம் சுழற்றுவதற்கான ஒரு முயற்சியிலும் அமெரிக்கா இறங்கி யுள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலமாக ‘மூவாயிரம் மில்லியன் டொலர்களுக்குத் திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளுதல்’ என்பதற்கான பேரம் பேசுதல்கள், கோவிட் 19இற்குப் பின்னரான புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தோற்றுவிக்கும் செயற்பாட்டின் மௌன நாடகமாக பசில் ராசபக்ச என்ற சிறீலங்காத் தரப்புக் கதாநாயகனின் வழி இயக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இன்று அந்தக் கதாநாயகனான தனது தம்பி பசில் ராசபக்சவையே சிறீலங்காவின் நிதியமைச்சராக அண்ணன் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா  ராசபக்ச அமர்த்தி, “ஒரு புறம் சீனா மறுபுறம் அமெரிக்கா இரண்டுக்கும் நடுவே நான் இருக்கிறேன்” என்று சிவத்திற்கும் சக்திக்கும் நடுவில் தான் இருப்பதாகப் பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் பாடியது போல, புதிய பக்திப் பண்ணிசைத்து மகிழ்கின்றார். அண்ணன் காட்டிய வழியம்மா என “என் கடன் பணி செய்து கிடப்பதே” என பசில் ராசபக்ச இராமனுக்குப் பரதனாக, அண்ணா இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக் காலத்திலும் வெற்றி பெற்று முடிசூடத் தன் குடும்பப் பணியினை அண்ணனின் கால் அணியைப் பரதனைப் போல் கண்ணில் ஒற்றித் தலையில் சுமக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த வெற்றிக் களிப்பில் “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்ற வீரத்துடன் அண்ணன் சிறீலங்கா அரச அதிபர்  கோத்தபாயா  ராசபக்ச இப்போது மூன்று ஆண்டு திட்டங்களாக உள்ள தனது அரச அதிபர் அலுவலகச் செயற்திட்டங்களின், மேற்கால எல்லை எட்டு வருடம் எனத், தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையிலேயே ஊடகங்களுக்கு முன்மொழியத் தொடங்கி விட்டார். இது குடும்ப ஆட்சி நீடிப்பு மகிழ்ச்சி அறிவிப்பாக மட்டும் அமையாது தனது அரசாங்கம் உறுதியான அரசாங்கமென உலக முதலீட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தி சிறீலங்காவுக்கான அனைத்துலக முதலீட்டைப் பெருக்கும் அரசியல் தந்திரேபாயமாகவும் அமைகிறது.

சீனாவிடம் இருந்து சீனப் பணமாகிய யுவானில் பெற்ற பெருங்கடன் தொகையை அமெரிக்க டொலர்களாக மாற்றி, உலகச் சந்தையில் திரவ நிலைக்குக் கொண்டு வந்து, நாளாந்த சந்தைக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய இயலாது ‘வங்குரோத்து’ அரசாகத் தன்னை அறிவிக்கும் அபாய நிலைக்குச் சென்று கொண்டிருந்த சிறீலங்காவுக்கு, 60 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவுக்குச் சமானமான மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய மாற்றம் செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சிறீலங்கா தவறவிடாது, தக்க வைத்துக் கொள்ள தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்யும் என்பது அனைவராலும் எதிர் பார்க்கப்படக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

அதே வேளை அமெரிக்க சார்பான பொருளாதார முதலீட்டுப் பெருக்கம் என்பது உலக வங்கி, நாணயமாற்று வங்கி போன்றவற்றின் கடனுதவிகளையும், முதலீட்டு உதவிகளையும் மீளவும் பெறும் வழியாகவும், ஐரோப்பிய ஒன்றியப் பாராளு மன்றத்தின் வரிச் சலுகைக்கான முன் நிபந்தனையாக வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் என்பதைச் செய்யாமலே தனக்கான நிதி வளத்தை சிறீலங்கா நிலை நிறுத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,  சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சவும் அவரது ஆணையில் செயற்பட்ட படையினரும் இழைத்த அனைத்துலகக் குற்றச் செயல்களுக்கான  அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான உத்தியாகவும் அமைகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துப் பழகிய ராசபக்ச குடும்பத்தினர் இப்போது ஒரு கல்லில் நான்கு மாங்காய்களை வீழ்த்தும் அற்புத விற்பன்னர்களாகப் பரிணமித்து  ள்ளனர். முதல் மாங்காய், அமெரிக்க டொலர் பற்றாக் குறையையும் பஞ்சாகப் பறந்து போகச் செய்து ‘வங்குரோத்து’ நிலையிலிருந்து தப்பித்தல். இரண்டாவது மாங்காய், சிறீலங்காவில் சீனாவின் மேலாதிக்கம் நடை முறை வாழ்வாகிறது. தங்களின் பௌத்த சிங்கள மகாவம்ச சிந்தனைகள் தளர்கின்றன எனத் தவித்த பௌத்த பிக்குகளுக்கு, இனி சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் புத்தசாசனத்தின் பாதுகாப் பாளர்கள் என உறுதிப்படுத்தி, சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தப்புதல்.   மூன்றாவது மாங்காய், திருகோணமலையில் உள்ள இந்தியாவின் எண்ணெய்த் தாங்கி முதலீடுகளின் வருமானங்களைப் பலவீனப் படுத்தி, அங்கிருந்து தானாகவே ஒட வைப்பதன் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டின் இலங்கை வருகையின் போது திருகோண மலையை தெற்காசிய எண்ணெய்க் கேந்திர நிலையமாக்குவோம் என உலகுக்கு உரைத்த சூளுரையை கனவாக்கி, இந்தியாவின் பிராந்திய வல்லாண்மையை இழக்க வைத்தல் என்னும் கனவை நனவாக்குதல். நான்காவது மாங்காய் ராசபக்ச குடும்பத்தினரதும் அவர்களது ஆணையில் செயற்பட்ட படையினரதும் அனைத்துலகக் குற்றச் செயல் விசாரணை களுக்குத் தப்பிப் பிழைப்பது என்பதாகிறது.

இந்த மகிந்த ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தின் மிக உயர் இராஜதந்திர வலைப்பின்னல் என்பது சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழின அழிப்புக்களை நியாயப்படுத்தி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக இலங்கைத் தீவை மாற்றுவது என்பது எல்லா வகையிலும் தெளிவாகிறது. இதற்கு இந்தியாவும், ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்களும் என்னும் நான்கு பங்காளர்களும் ஒருமித்து எடுக்கக் கூடிய பதில் நடவடிக்கையே, ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைத் தக்க வைக்கக் கூடிய ஒரே ஆற்றலாக அமையும் என்பதே இலக்கின் கருத்து.

 

 

https://www.ilakku.org/world-politics-revolving-around-trincomalee/

 

 

என்னது இந்த இந்தியாக்காரனோட சேர்ந்து போக வேணுமோ... இதற்குப் பகரமா சிங்களவனோடே ஒத்துப்போகலாம்...

எந்தக் காலத்திலையும் எங்கட இனத்தினர அழிவுக்குக் காரணமான இந்தியனோட சேர்ந்து போகக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித் @நன்னிச் சோழன் @nochchi 

இந்திய எதிர்ப்பில் உங்கள் நிலைதான் என் நிலையும். இதையே @Kapithan. உம் எழுதுவார்.

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அல்லது இவற்றில் எது உள்ளதில் நல்லது?

@Kadanchaவும் இது பற்றி அதிகம் எழுதுபவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

@ரஞ்சித் @நன்னிச் சோழன் @nochchi 

இந்திய எதிர்ப்பில் உங்கள் நிலைதான் என் நிலையும். இதையே @Kapithan. உம் எழுதுவார்.

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அல்லது இவற்றில் எது உள்ளதில் நல்லது?

@Kadanchaவும் இது பற்றி அதிகம் எழுதுபவர்.

 

இந்தியா தவிர்ந்த வேறு எந்தத் தெரிவையும் பரிட்சித்துப்பார்ப்பதில் தவிறில்லை. இந்தியாலை நம்பி ஏமாந்தது போதும்.(தமிழ்நாடு வேறு இந்தியா வேறு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அல்லது இவற்றில் எது உள்ளதில் நல்லது?

ஒரு காலத்தில் இலங்கை என்ற நாடு அங்கு வாழ்ந்த தமிழர்களின் கல்வி அறிவினால் உலகத்தின் பார்வையை ஈர்த்தது
அதே போல சில காலங்களின் பின்னர்
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம் சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.. அப்போது எல்லாமே மாறும் ஒரு நிலை வரச் சாத்தியங்கள் உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

 

இந்தியா தவிர்ந்த வேறு எந்தத் தெரிவையும் பரிட்சித்துப்பார்ப்பதில் தவிறில்லை. இந்தியாலை நம்பி ஏமாந்தது போதும்.(தமிழ்நாடு வேறு இந்தியா வேறு)

நீங்கள் சொல்வதில் ஒரு தர்க்க நியாயம் உள்ளது. இந்தியாவை நம்ப முடியாது, கூடாது என்று தெரிந்த பின் ஏனையோரை பரீட்சித்து பார்ப்பதுதான் முறை.

ஆனால் இலங்கை, சீனாவும் எம்மை ஏமாற்றும் (இலங்கை ஏலவே பலதடவை செய்ததுதான்) என்றே தோன்றுகிறது.

11 minutes ago, வாத்தியார் said:

ஒரு காலத்தில் இலங்கை என்ற நாடு அங்கு வாழ்ந்த தமிழர்களின் கல்வி அறிவினால் உலகத்தின் பார்வையை ஈர்த்தது
அதே போல சில காலங்களின் பின்னர்
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரம் சிங்கள மக்களின் கண்களைத் திறக்கும்.. அப்போது எல்லாமே மாறும் ஒரு நிலை வரச் சாத்தியங்கள் உள்ளன

இது ஒரு நம்பிக்கையான பார்வைதான் அண்ணா. மருதரும் அடிக்கடி சொல்லுவார். புலம் பெயர் சமூகம் அந்த நிலைக்கு வருவற்குள் ஊரில் முடிந்தளவு அடையாள அழிப்பை செய்துவிடுவார்கள் என்ற பயமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் அதன் நலன் சார்ந்த (திருகோணமலை துறைமுகம்) குத்தகை திட்டத்துடன்  மறைமுக பேச்சுவார்த்தை நடாத்திப்பார்க்கலாம்.

எமக்கும் இந்தியாவுக்குமான பகையை நிச்சயமாக சீனா அறிந்திருக்கும், ஆனால் எங்களின் பிரதிநிதியாக யாருடன் பேசுவது, நான் மேற்சொன்ன திட்டத்திற்கோ அல்லது வேறு திட்டதிற்கோ உறுதியளிக்கும் பிரதிநிதிகள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களின் தொழில் நுட்ப அபிவிருத்தியினால் திருகோணமலை மையமும் முக்கியமில்லாமல் போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

@goshan_che

கோசான் அண்ணை, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என்னுடைய கண்ணோட்டத்திலான மறுமொழிகள்:-

 

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

புறம்தள்ளுவது கூடாது என்பது என் கருத்து. நாம் அவனிடம் "எம்மை ஒரு இனமாக, பேந்து தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பா மோனே" என்று துவங்க வேண்டும். (தேசிய இனமெண்டால் தானே மிச்சத்தைக் கதைக்கலாம். எம்மை ஒரு இனமாகவே 2009 இற்குப் பின் மதிக்காத மேற்குலகில் எடுத்தவுடனே வேண்டியதைக் கேட்டால் 5 ஏக்கர் காணிகூட தர மாட்டான், அரசிற்கு) பேந்து மிச்சத்தை கதைக்கலாம்.

இந்தக் கூட்டில் நாம் அமெரிக்காக்காரனோடு எமது நிகராளிகளைக்(பிரதிநிதி) கொண்டு கதைக்கலாம், அப்போது அவனோடு வரும் இந்த இந்திய நரிக்கூட்டத்தை முடிந்தளவு விலத்தி தனியே அமெரிக்காக்காரனோடு கதைக்க வேண்டும்; அதுவே நல்லம். அப்போது அவன் இந்தியனோடு ஏதேனும் ஒப்பந்தம் போடச் சொன்னால் முடிந்தளவு வெட்டி ஆடப் பார்க்க வேண்டும்... இந்தியனை நம்பி கதைக்கப்போனால் எம்மினத்தை எங்கேனும் புதைகுழிக்குள் தள்ளி மூடிவிட்டுப் போய்விடுவான். எல்லாம் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று திரும்ப சிங்களவனோடு ஒட்டிக் கொள்வான்.

(இந்தியாக்காரனை செத்து ஆவியானாலும் நம்பக்கூடாது. முந்தைய காலங்களின் இவனுடைய படிப்பினைகள் எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மேற்கண்ட கட்டுரையே கண்முன் சாட்சி. எங்களுக்கு இவ்வளவு பேரழிவுகளையும் ஏற்படுத்திவிட்டு, இப்ப எப்படி அமுசடிக்கிப் பூனை மாதிரி வாரான் எண்டு. கழிசடை நரி அவன்! )

 

 

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ

சிங்களவன் நேரடியாக எமக்கு தீர்வு தருவான் என்பது இலகு காத்த கிளிக்குச் சமனானது. ஜெனீவா ஒப்பந்தம் ஞாபகம் இருக்குத்தானே... 

 

அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

ம்ம்ம்ம்... சீனாக்காரன் இதுவரையிலும் உலகில் எங்கேனும் சமாதான உடன்படிக்கைக்கு யாருக்கேனும் நடுநிலை வகித்திருக்கானா? நானறிந்த வரை இல்லை. எனவே இக்கேள்விக்கு அவன் எப்படி செயல்படுவான் என்று தெரியாது.
 

ஊகத்தில்:
இதுகால் வரை சிங்களவனோடுதான் கொடுக்கல்வாங்கல் வைத்திருந்தவன். முந்தி இயக்கத்திட்ட கொடுக்கல்வாங்கலிற்கு கேட்ட போது, இயக்கம்,  திருகோணமலையில் அவனுடைய ஆய்வுக் கப்பலை(?) மூழ்கடித்து துரத்தியடித்தது. இப்போது அவன் வடக்கு தெற்கு மேற்கு என்டு மூண்டு திசையிலையும் ஒற்றை அரசாங்கத்தின் கீழ் நிறைய அனுபவிக்கிறான். இந்த நேரத்தில் எமக்கு ஏதேனும் வேணும் எண்டு கேட்கப்போனால் அவன் கண்டிப்பா வரமாட்டான். ஏனெனில் அவனுக்கு வேண்டியதில் 85 வீதம் கிடைத்தாயிற்று, ஒற்றைக்குக்கீழ். அப்ப பிரிச்சு அனுபவிக்கிறதை விட ஒறையாயே அனுபவிப்பதையே எல்லா நாடும் விரும்பும். அப்படிப் பார்க்கும்போது எமக்கு ஏதும் கிடைக்காது என்பது என்ர கருத்து.

 

 

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

ஆ.. ஓமோம். சாயலாம்.

ஏன்னென்டால், அவனுக்கு பிடிக்காதவன் நல்லா காலூண்டிட்டான், அவனுக்கு வேண்டிய இடத்தில். அப்ப அவனுக்கு வேண்டியதை கொடுத்து எமக்கு வேண்டியதை நாம் பெற்றுக்கொள்வோம். தனிய நிண்டு எடுக்க முடியாமல் போயிட்டது. அப்ப இனி கூட்டணி போட்டு முயற்சி செய்வம். அதான் இனி வழி.

ஆனால் அதற்கு கதைக்கப்போக, இப்போது ஊரில் இருக்கின்ற சக்கட்டை அரசியல்வாதிகள் இல்லாமல், பாலா மாமா மாதிரியான நல்ல ஞானிகள் போய்க் கதைத்தால் ஏதேனும் இல்லை முழுப் பலாப்பழமும் கிடைக்க வாய்ப்புண்டு.  இவங்களை விட்டால் ஒற்றையாட்சிக்குள் கூட ஒன்டையும் வாங்கிக்கொண்டு வரமாட்டாங்கள்.

 

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

போலாம்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

🤬

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

மேலே சொல்லிப்போட்டன்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

இலவு காத்த கிளியாக விருப்பமில்லை!

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

மேலே சொல்லிப்போட்டன்

 

 

 

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அமெரிக்காவோட கதைத்து, எம்மை ஒரு தேசிய இனமாக உலகப்பரப்பில் அறிவித்து, (சம நேரத்தில்) அவனும் ஏதேனும் கேட்டான் எண்டால் அவனையும் கொஞ்சம் கவனித்து(இனி அப்படித்தான் செய்ய வேணும்), அப்படியே ஐநாவோடையும் கதைத்து, வாக்கெடுப்பு நடத்தி, அரிவு வெட்டுவதுதான் என்ட திட்டம்.

 

 

அல்லது இவற்றில் உள்ளதில் எது நல்லது?

தெரிவு ஒன்று

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நன்னிச் சோழன் said:

@goshan_che

கோசான் அண்ணை, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என்னுடைய கண்ணோட்டத்திலான மறுமொழிகள்:-

 

ஆனால் அமெரிக்கா + இந்தியா கூட்டாக வரும் என்றால் இந்த கூட்டை நாம் புறம் தள்ளுவது சரிதானா?

புறம்தள்ளுவது கூடாது என்பது என் கருத்து. நாம் அவனிடம் "எம்மை ஒரு இனமாக, பேந்து தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பா மோனே" என்று துவங்க வேண்டும். (தேசிய இனமெண்டால் தானே மிச்சத்தைக் கதைக்கலாம். எம்மை ஒரு இனமாகவே 2009 இற்குப் பின் மதிக்காத மேற்குலகில் எடுத்தவுடனே வேண்டியதைக் கேட்டால் 5 ஏக்கர் காணிகூட தர மாட்டான், அரசிற்கு) பேந்து மிச்சத்தை கதைக்கலாம்.

இந்தக் கூட்டில் நாம் அமெரிக்காக்காரனோடு எமது நிகராளிகளைக்(பிரதிநிதி) கொண்டு கதைக்கலாம், அப்போது அவனோடு வரும் இந்த இந்திய நரிக்கூட்டத்தை முடிந்தளவு விலத்தி தனியே அமெரிக்காக்காரனோடு கதைக்க வேண்டும்; அதுவே நல்லம். அப்போது அவன் இந்தியனோடு ஏதேனும் ஒப்பந்தம் போடச் சொன்னால் முடிந்தளவு வெட்டி ஆடப் பார்க்க வேண்டும்... இந்தியனை நம்பி கதைக்கப்போனால் எம்மினத்தை எங்கேனும் புதைகுழிக்குள் தள்ளி மூடிவிட்டுப் போய்விடுவான். எல்லாம் முடிந்த பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று திரும்ப சிங்களவனோடு ஒட்டிக் கொள்வான்.

(இந்தியாக்காரனை செத்து ஆவியானாலும் நம்பக்கூடாது. முந்தைய காலங்களின் இவனுடைய படிப்பினைகள் எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மேற்கண்ட கட்டுரையே கண்முன் சாட்சி. எங்களுக்கு இவ்வளவு பேரழிவுகளையும் ஏற்படுத்திவிட்டு, இப்ப எப்படி அமுசடிக்கிப் பூனை மாதிரி வாரான் எண்டு. கழிசடை நரி அவன்! )

 

 

அப்படியாயின் இலங்கை அரசுடன் நேரடியாகவோ

சிங்களவன் நேரடியாக எமக்கு தீர்வு தருவான் என்பது இலகு காத்த கிளிக்குச் சமனானது. ஜெனீவா ஒப்பந்தம் ஞாபகம் இருக்குத்தானே... 

 

அல்லது சீனா மூலமோ பேசி எமக்கு ஒரு கெளரவமான தீர்வு வரும் என நம்புகிறீகளா?

ம்ம்ம்ம்... சீனாக்காரன் இதுவரையிலும் உலகில் எங்கேனும் சமாதான உடன்படிக்கைக்கு யாருக்கேனும் நடுநிலை வகித்திருக்கானா? நானறிந்த வரை இல்லை. எனவே இக்கேள்விக்கு அவன் எப்படி செயல்படுவான் என்று தெரியாது.
 

ஊகத்தில்:
இதுகால் வரை சிங்களவனோடுதான் கொடுக்கல்வாங்கல் வைத்திருந்தவன். முந்தி இயக்கத்திட்ட கொடுக்கல்வாங்கலிற்கு கேட்ட போது, இயக்கம்,  திருகோணமலையில் அவனுடைய ஆய்வுக் கப்பலை(?) மூழ்கடித்து துரத்தியடித்தது. இப்போது அவன் வடக்கு தெற்கு மேற்கு என்டு மூண்டு திசையிலையும் ஒற்றை அரசாங்கத்தின் கீழ் நிறைய அனுபவிக்கிறான். இந்த நேரத்தில் எமக்கு ஏதேனும் வேணும் எண்டு கேட்கப்போனால் அவன் கண்டிப்பா வரமாட்டான். ஏனெனில் அவனுக்கு வேண்டியதில் 85 வீதம் கிடைத்தாயிற்று, ஒற்றைக்குக்கீழ். அப்ப பிரிச்சு அனுபவிக்கிறதை விட ஒறையாயே அனுபவிப்பதையே எல்லா நாடும் விரும்பும். அப்படிப் பார்க்கும்போது எமக்கு ஏதும் கிடைக்காது என்பது என்ர கருத்து.

 

 

இந்தியா தனியே, அமெரிக்கா தனியே என்று வந்தால் அமெரிக்கா பக்கம் சாயலாமா?

ஆ.. ஓமோம். சாயலாம்.

ஏன்னென்டால், அவனுக்கு பிடிக்காதவன் நல்லா காலூண்டிட்டான், அவனுக்கு வேண்டிய இடத்தில். அப்ப அவனுக்கு வேண்டியதை கொடுத்து எமக்கு வேண்டியதை நாம் பெற்றுக்கொள்வோம். தனிய நிண்டு எடுக்க முடியாமல் போயிட்டது. அப்ப இனி கூட்டணி போட்டு முயற்சி செய்வம். அதான் இனி வழி.

ஆனால் அதற்கு கதைக்கப்போக, இப்போது ஊரில் இருக்கின்ற சக்கட்டை அரசியல்வாதிகள் இல்லாமல், பாலா மாமா மாதிரியான நல்ல ஞானிகள் போய்க் கதைத்தால் ஏதேனும் இல்லை முழுப் பலாப்பழமும் கிடைக்க வாய்ப்புண்டு.  இவங்களை விட்டால் ஒற்றையாட்சிக்குள் கூட ஒன்டையும் வாங்கிக்கொண்டு வரமாட்டாங்கள்.

 

1. தனியே அமெரிக்கா பக்கம் சாய்தல்

போலாம்

2. தனியே இந்தியா பக்கம் சாய்தல்

🤬

3. அமெரிக்க + இந்தியா பக்கம் சாய்தல்

மேலே சொல்லிப்போட்டன்

4. இலங்கையோடு நேரடியாக பேசல்

இலவு காத்த கிளியாக விருப்பமில்லை!

5. சீனா மூலம் இலங்கையையை அணுகல்.

மேலே சொல்லிப்போட்டன்

 

 

 

இவற்றை விடவும் வேறு தெரிவுகள் உண்டா?

அமெரிக்காவோட கதைத்து, எம்மை ஒரு தேசிய இனமாக உலகப்பரப்பில் அறிவித்து, (சம நேரத்தில்) அவனும் ஏதேனும் கேட்டான் எண்டால் அவனையும் கொஞ்சம் கவனித்து(இனி அப்படித்தான் செய்ய வேணும்), அப்படியே ஐநாவோடையும் கதைத்து, வாக்கெடுப்பு நடத்தி, அரிவு வெட்டுவதுதான் என்ட திட்டம்.

 

 

அல்லது இவற்றில் உள்ளதில் எது நல்லது?

தெரிவு ஒன்று

 

நீங்கள் சொல்வதுதான் எனக்கும் சரியாக படுகிறது. குறி அமெரிக்காவோடு டீல் பண்ணுவதாகதான் இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா கோபப்படாமல் இந்தியாவை வெட்டி விடோணும்.

ஆனால் வெள்ளைத்துரைக்கு கங்காணி மாரி, இந்தியா அமெரிக்க வந்தாலும் ஏதோதாந்தான் கூட்டியந்தவர் எண்ட மாரி நடக்கவே முற்படும்.

மேலே நீங்களும் முதல்வனும் சொன்னது போல் இதில் யார் நம் நிகராளி ( அற்புதமான சொல்) என்பது விடை தெரியா கேள்வி. 

1 hour ago, முதல்வன் said:

சீனாவுடன் அதன் நலன் சார்ந்த (திருகோணமலை துறைமுகம்) குத்தகை திட்டத்துடன்  மறைமுக பேச்சுவார்த்தை நடாத்திப்பார்க்கலாம்.

எமக்கும் இந்தியாவுக்குமான பகையை நிச்சயமாக சீனா அறிந்திருக்கும், ஆனால் எங்களின் பிரதிநிதியாக யாருடன் பேசுவது, நான் மேற்சொன்ன திட்டத்திற்கோ அல்லது வேறு திட்டதிற்கோ உறுதியளிக்கும் பிரதிநிதிகள் யார் என்பது தான் தற்போதைய கேள்வி. 

 

நன்னி சொல்வது போல் - இப்போதே புல் மீல்ஸ் கிடைக்கும் போது சீனா நம்மை சீண்டுமா? அப்படி எம்மோடு பேசினாலும், இந்தியாவை போல் எப்போதும் இலங்கைதான் அவர்களின் முதல் தெரிவாக இருக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வதுதான் எனக்கும் சரியாக படுகிறது. குறி அமெரிக்காவோடு டீல் பண்ணுவதாகதான் இருக்க வேண்டும். இடையில் அமெரிக்கா கோபப்படாமல் இந்தியாவை வெட்டி விடோணும்.

ஆனால் வெள்ளைத்துரைக்கு கங்காணி மாரி, இந்தியா அமெரிக்க வந்தாலும் ஏதோதாந்தான் கூட்டியந்தவர் எண்ட மாரி நடக்கவே முற்படும்.

மேலே நீங்களும் முதல்வனும் சொன்னது போல் இதில் யார் நம் நிகராளி ( அற்புதமான சொல்) என்பது விடை தெரியா கேள்வி. 

 

பத்தி ஒன்றிற்கு:
நான் என்ன நினைக்கிறன் எண்டால், அமெரிக்கன் ஒருநாளும் இந்தியனை முன்னுக்கு நிப்பாட்டி தான் பின்னுக்கு வரமாட்டான், எங்கட சிக்கலில். ஏனென்டால் இப்போதைய உலகப்போட்டி அவனுக்கும் சீனாக்காரனுக்கும். தன்ர பகையோட ஆயுதமல்லாத மோதலில் தானே முன்னுக்கு நிண்டு மோதவில்லையெண்டால், மற்ற நாடுகள் அவனை உலக சட்டாம்பிள்ளையாக மதிக்காது. இந்தியாவிற்குப் பின்னால் வந்தால் இந்தியனுக்கும் கொஞ்சம் துளிர் விட்டுவிடும் (இந்தியரை வெள்ளையள் மதிக்கமாட்டினம் என்பது நினைவிருக்கட்டும்.)

மேலும், இந்திய நரியள் இந்த மாதிரி எங்களோட படம் காட்டுவதும், இந்த ஒப்பந்தத்தை பாதிக்கும் என்பதால் (உலக கமுக்கங்களை அறிந்தவன், எங்களுக்கும் நரியளுக்குமான பல்லாண்டு பகையினை அறியானா என்ன?) உந்த நரியை இந்த மாதிரி படம் காட்டி குழப்ப விடமாட்டர், அமெரிக்காக்காரர். 

ஆனால் இந்திய துணைக்கண்டம் மற்றும் சூழலில்(தென்கிழக்காசியாவின் இந்திய பெருங்கடலோடு ஒட்டியுள்ள நாடுகளோடு ஒப்பிடுகையில்) ஆயுத அடிப்படையில் பலம் பொருந்தியவன் என்ற வகையில் சில பாத்திரங்கள் வழங்கப்படக்கூடும். அதை வைத்து நீங்கள் சொன்னதுபோன்று கண்டிப்பாக எமக்கும் கிடைப்பவற்றை குறைக்க எத்தனிப்பான்(ரஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்ததத்தின் அடிப்படையில் இந்தியா சிங்கள தேசத்தின் காவலனாக நிற்கும் என்பது உடன்படிக்கை. எனவே அதை நிறைவேற்றுவான் இந்தியன்) அது தடுக்க ஏலாதது. 

 

பத்தி இரண்டிற்கு:
ஓமண்ணை,  இப்போதைய சூழ்நிலையில் பரவலாக அறியப்பட்ட ஞானி அளவிலான நிகராளிகள் ஆருமில்லை. அடுத்த சில ஆண்டுகளில் ஆரேனும் முளைக்கக்கூடும் என்பது என் கணிப்பு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நன்னி சொல்வது போல் - இப்போதே புல் மீல்ஸ் கிடைக்கும் போது சீனா நம்மை சீண்டுமா? அப்படி எம்மோடு பேசினாலும், இந்தியாவை போல் எப்போதும் இலங்கைதான் அவர்களின் முதல் தெரிவாக இருக்காதா?

நாங்கள் இரண்டு பிரிவாக இயங்கவேண்டும். ஒரு பிரிவு இந்திய அமெரிக்க சார்பு நிலையும் மற்றைய பிரிவு சீன சார்பு நிலையும் எடுக்க வேண்டும்.  ஒரு சமநிலை சார்பு பேச்சுவார்த்தைகளும் தூண்டல்களும் இடம்பெறவேண்டும்.

அதற்கு முதலில் சீனாவில் ஒரு தமிழ் சங்கமோ, அமைப்போ, வானோலியோ ஆரம்பித்து சீனாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புகளை பேணவேண்டும். 

அதைக்கொண்டு மேற்குடன் பேச வேண்டும். எங்களின் சகல அறிவும் ஒற்றைப்போக்கும், தான் பெருசு என்று காட்டுவதில் தான் அழிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.