Jump to content

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் சீரற்ற வானிலை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

  மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும்   காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டிலும், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மேற்கு சரிவிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

  இதற்கிடையில், கடல் பகுதிகளைப் பொறுத்தவரை, கொழும்பு முதல் காலி வரை கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் தென்மேற்கு திசையில் காற்று வீசும் என்றும் தீவின் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்றும் எதிர்வு கூறியுள்ளது.

காலி முதல் பொத்துவில் வரை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாகவும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசந்துறை வரையிலும் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 60 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.

காலி முதல் பொத்துவில் வரை மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாகவும், புத்தளம் முதல் மன்னார் வழியாக கங்கசேந்துறை வரையிலான கடல் பகுதிகளிலும் சில நேரங்களில் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், தீவைச் சுற்றியுள்ள மற்றும் கடல் பகுதிகளும் சில நேரங்களில் கடினமானதாக இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. .

இதன் விளைவாக, இது தொடர்பாக கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பை பொறுத்தவரையில் காலையிலிருந்து தொடர்ச்சியாக சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக கடுமையாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால், பிரதான வீதிகளிலும் தாழிநில பகுதிகளிலும் காட்டாறு வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதைப்போல, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மழையும்  சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருக்கின்றது.

வீதிகள் பல வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்களும் காணப்படுகின்றன. வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் பல, கவிழ்ந்து விழுந்துகிடக்கின்றன.  (படம்: சமூக வலைத்தளம்)

image_6d6f6a5655.jpgimage_ac5ad81019.jpgimage_abf79b1ac4.jpgimage_ab949fb765.jpg


Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

சா... லீவுல போக இருக்கிற, இரண்டொரு சினேகிதருக்கு, கைக்காசை போட்டு, சிறி லங்காவுக்கு கொலிடே அனுப்புவம் எண்டு இருந்தன்....

மழை வந்து கெடுத்துப்போட்டுது...  😰

***

நேற்று பின்னேரம், கிழக்கு லண்டன் போனேன்.

45 நிமிட பயணம், 3 மணி நேரம் எடுத்தது, திரும்பி வரும் போது, போன பாதை பூட்டி, வேறு பெரு வழி பாதை வழியே திருப்பி, விட்டார்கள். அது 2 மணிநேர பயணம்.

காரணம் இரு மணிநேர பேய் மழை.

****

அத விடுவோம்...

இந்த உலகம்.... மனிதத்துக்கு எதோ ஒரு தகவல் சொல்கிறது என்று மட்டும் தெரிகிறது.

பாவம், மனிதனால், இப்புவியில், சேர்ந்தே வாழும், அனைத்து விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.

மனிதனின் இயற்க்கைக்கு எதிரான வேலைகளில் ஒன்று.... கோழிகளில் பெண் கோழிகள், மாடுகளில் பெண் மாடுகள் மட்டுமே, ஒரு கிழமைக்கு மேலே வாழும்.

வாழும் போது, முட்டை, பால், வாழ்ந்து முடியும் போது இறைச்சி.

இந்த போக்கில், மனித இனத்துக்கு ஆணே தேவையில்லை என்று வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

கலியுகம் முடிய புது யுகம் வரும். அப்போது கல்கி அவதாரம் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.... ஆனால் கலியுகம் எப்போது முடியும் என முடியும் போது தான் தெரியவரும். 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதென்ன  இது உலகம் பூரா கொரோனா....
இப்ப உலகம் பூரா அடைமழை வெள்ளம்....... காட்டுத்தீ

கலிகாலமாய் இருக்குமோ????  😎

இங்கும் பலத்த காற்றுடன் நல்ல மழை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இந்த உலகம்.... மனிதத்துக்கு எதோ ஒரு தகவல் சொல்கிறது என்று மட்டும் தெரிகிறது.

இதை நீங்கள் நான் மட்டுமல்ல......
சகல ஆன்மீக வாதிகளும் இதைத்தான் சொல்கின்றார்கள்.
விஞ்ஞானிகளும் எதிர்காலத்தில் வரப்போகும் அழிவுகளைப்பற்றி முன்னெச்சரிக்கை விடுகின்றார்கள்.

ஏன் பாமர மக்கள் கூட இனம்புரியாத அச்சுறுத்தல் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாத்தியார் said:

இயற்கையை மீறி எதுவுமில்லை அண்ணா.
ஒரு காலத்தில் உலகம் ஒரேயடியாக அழிவுகளை சந்தித்ததாம்.
இன்றைய காலத்தில் மெல்ல மெல்ல அழிக்கின்றது. 

மனித குலத்திற்கு நான் என்ற அகங்காரம் கூடிவிட்டது.
உதாரணத்திற்கு தேவையில்லாத விண்வெளி போட்டிகள்.

https://www.bild.de/video/clip/news-ausland/tierischer-terror-affen-gangs-legen-stadt-lahm-viralpress-77197572,auto=true.bild.html

உணவை தேடி நகரம் வரும் காட்டு விலங்குகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதை நீங்கள் நான் மட்டுமல்ல......
சகல ஆன்மீக வாதிகளும் இதைத்தான் சொல்கின்றார்கள்.
விஞ்ஞானிகளும் எதிர்காலத்தில் வரப்போகும் அழிவுகளைப்பற்றி முன்னெச்சரிக்கை விடுகின்றார்கள்.

ஏன் பாமர மக்கள் கூட இனம்புரியாத அச்சுறுத்தல் அச்சத்துடனேயே வாழ்கின்றார்கள்.

பிரிட்டனில் மட்டும் தாவர உணவு, மிருக கொழுப்பில்லாத (நெய், தயிர், பால், முட்டை) உணவுகளின் மீதான மக்களின் ஆர்வம் 750% அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 3 வருடங்களில்.

அப்படி ஒரு உணவு உண்ணும் ஒரு வெள்ளையிடம் பேசியபோது தான், மெல் உள்ள தகவல் சொல்லி (பெண் கோழி, ஆடு, மாடு), மனிதனின் பேராசை அளவு மீறி விட்டது என்றும் சொன்னார்.

19ம் நூறாண்டு வரை, மலட்டு ஆண்கள் இருந்தார்கள் என்று தெரியாமல், பெண்களை மலடிகள் என்று உலகம் சொன்னது.

20ம் நூறாண்டில், பரிசோதனைக் குழாய் குழந்தை, ivf சிகிச்சை என்று மருத்துவம் வளர்ந்தது.

இனி ஆண்களே உலகத்துக்கு தேவை இல்லை என்று நிலைமை வந்து விட்டது.

இதுவே, மனிதன் இயற்கைக்கு விடும் அதி உச்ச சவால். இயற்கை தன்னை உறுதி செய்யும்.

மனிதனால் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த மணல் புயல்.

https://www.bild.de/video/clip/news-ausland/sichtweite-unter-5-meter-sandsturm-verschlingt-chinesische-stadt-reuters-cctv-77193822.bild.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்து விட்டோம் இன்னும் விதைத்து கொண்டும் உள்ளோம் மனிதனுக்கு பூமி சொந்தம் அல்ல பூமிக்கே மனிதன் சொந்தம் என்பதை அடிக்கடி மறந்து போகின்றோம் இனி காலம் தப்பிய  மழை அதுவும் ஓரிடத்தில் வெள்ளப்பெருக்கை உருவாக்கும் அளவுக்கு கொட்டி தீர்க்கும் உலகெங்கும் இது வழமையாகும் திருத்துவத்துக்கு வழியில்லை .

7 hours ago, Nathamuni said:

நேற்று பின்னேரம், கிழக்கு லண்டன் போனேன்.

45 நிமிட பயணம், 3 மணி நேரம் எடுத்தது, திரும்பி வரும் போது, போன பாதை பூட்டி, வேறு பெரு வழி பாதை வழியே திருப்பி, விட்டார்கள். அது 2 மணிநேர பயணம்.

காரணம் இரு மணிநேர பேய் மழை.

அந்த மூன்றுமணிநேர காரின்  கரியமிலவாயுவின் பங்கை குறைப்பதுக்கு  இங்கு வழியில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

வினை விதைத்து விட்டோம் இன்னும் விதைத்து கொண்டும் உள்ளோம் மனிதனுக்கு பூமி சொந்தம் அல்ல பூமிக்கே மனிதன் சொந்தம் என்பதை அடிக்கடி மறந்து போகின்றோம் இனி காலம் தப்பிய  மழை அதுவும் ஓரிடத்தில் வெள்ளப்பெருக்கை உருவாக்கும் அளவுக்கு கொட்டி தீர்க்கும் உலகெங்கும் இது வழமையாகும் திருத்துவத்துக்கு வழியில்லை .

மனிதன் என்று இயற்கை தந்த காலநிலையை மாற்ற முயற்சி செய்தானோ அன்று தொடங்கியது இயற்கை அனர்த்தங்கள்.

சீனாவில் மேக கூட்டங்களை கலைப்பது வழமையான ஒன்றாம். அது போல் ஜேர்மனியிலும் நடக்கின்றதாக கேள்விப்பட்டது.

அண்மையில் அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப் அவர்கள்  சூறாவளி மேக கூட்டங்களை அணுகுண்டு மூலம் நிற்பாட்ட முனைந்த நிகழ்வு அனைவரும் அறிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கலியுகம் எப்போது முடியும் என முடியும் போது தான் தெரியவரும்

வானம் கறுத்தால் மழை வரும் என்று எதிர்வு கூறுகிறோம். நடக்கும் நிகழ்வுகள்  உலகம் முடிவை நோக்கி நகருகிறதோ, அருகில் உள்ளதோ, தொலைவில் உள்ளதோ என்று அங்கலாய்க்க வைக்கிறது.பஞ்சம், போர், இயற்கை அனர்த்தங்கள், வானிலும் தோன்றலாம். கடவுள் ஆணும் பெண்ணுமாக மனிதனை படைத்து, பலுகி பெருகி உலகை வழிநடத்துங்கள் என்று விட்டார். மனிதனோ ஓரின கலியாணம், பரிசோதனைக்குழாய் குழந்தை, பால் மாற்றம் என்று கடவுளுக்கு சவால் விட்டு தன்னைத்தானே அழிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் ஐபிசிசி அறிக்கை: எழுதும் பணி தொடங்கியது - BBC News தமிழ்

 

பருவநிலை மாற்றம்: உலகின் வயிற்றில் புளியை கரைக்க போகும் ஐபிசிசி அறிக்கை: விஞ்ஞானிகள் எழுத தொடங்கினர்

 

  • மேட் மெக்கிராத்
  • சுற்றுச்சூழல் செய்தியாளர்

26 ஜூலை 2021

lake

பட மூலாதாரம், Justin Sullivan

 
படக்குறிப்பு,

வரலாறு காணாத வகையில் வற்றிய கலிபோர்னியா ஏரி ஒன்று.

பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன.

இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி என்ன மாதிரியான ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்து மிக மிக முக்கியமான, விரிவான அறிவியல் அறிக்கையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது ஓர் ஐ.நா. அமைப்பு.

இந்த அறிக்கை இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகும்.

இது போன்ற தீவிர பேரிடர்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன? பருவநிலை மாற்றத்துக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு? எந்த அளவுக்கு பருவநிலை மாற்றம் ஆபத்தான கட்டத்துக்கு பூமியை கொண்டு சென்றிருக்கிறது? தீர்வு என்ன என்பது குறித்தெல்லாம் உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் ஒன்று கூடி ஒரு அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு என்ற ஐ.நா. அமைப்பு இந்த விரிவான அறிக்கையை உருவாக்கி வருகிறது. பருவநிலை மாற்றம் புவியை எதிர்நோக்கும் அடுத்த கட்ட ஆபத்தாக உருவாகி வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதும் நிலையில், இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல நாடுகளுக்குமான கையேடு போல இந்த அறிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

2013ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி இந்த அறிக்கை விரிவாகப் பேசும்.

195 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கை உருவாக்கத்தில் பங்கு வகிக்கிறார்கள். விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை வரிக்கு வரி விவாதித்து இந்த அறிக்கையை உருவாக்குவார்கள்.

அரசுகளுக்கு இந்த 40 பக்க அறிக்கை ஒரு அறைகூவலாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக அதிகரித்து வரும் புவி வெப்ப நிலையை ஆராயும் மைய அமைப்பாக ஐபிசிசி எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு இருக்கிறது. ஆனால், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதி தீவிர இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையை தற்போது தயாரிக்கிறது ஐபிசிசி. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் பற்றிய கேள்வி இப்போது முன்னெப்போதையும் விட உரத்து கேட்கிறது.

ஐபிசிசி என்றால் என்ன?

1988ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீட்டை, அதன் தாக்கத்தை, தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆர்க்டிக்

பட மூலாதாரம், Reuters

 
படக்குறிப்பு,

ஆர்க்டிக் பனிப்பாறைகள் எப்படி இருக்கின்றன என்பது தொடர்பாகவும் ஐபிசிசி ஆராயும்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் ஆபத்துகள் குறித்த ஆதாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த அமைப்பின் அறிக்கைகள் கடுமையாக மாறின.

6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான குறிப்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்கியது.

ஜப்பான் ஸ்பிரே

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஜப்பானில் ஸ்பிரே அடிக்கப்படுகிறது.

"காரணம், இந்த அறிக்கை எல்லோரைம் ஆச்சரியப்படுத்தி, சிந்திக்கவைத்தது. இது எதிர்காலப் பிரச்னை அல்ல. இப்போதைய பிரச்னை என்ற எண்ணத்தை இந்த அறிக்கை தந்தது" என்கிறார் ஐபிசிசி துணைத் தலைவரும் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவருமான கோ பாரெட்.

ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக உள்ள ஐபிசிசி அறிவியல் அறிக்கையும் அதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. புவி வெப்பமாதல் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் கிளாஸ்கோவில் சந்திக்க உள்ளார்கள். COP26 மாநாட்டில் பங்கேற்கும் பலரும் இந்த அறிக்கையை படித்துவிட்டு வரவேண்டியிருக்கும்.

"தூக்கத்தில் இருந்து எழுப்புகிற அறைகூவலாக இது இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை," என்கிறார் ரிச்சர்ட் பிளாக் என்ற விஞ்ஞானி. லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள கிரான்தம் இன்ஸ்டிடியூட்டில் கௌரவ ஆய்வாளராக இருக்கிறார் இவர்.

ஐபிசிசி வெறும் விஞ்ஞானிகள் அமைப்பா?

ஐபிசிசி என்பது வெறும் விஞ்ஞானிகள் அமைப்பு என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. 195 நாடுகளின் பிரதிதிநிகள் இதில் இருக்கிறார்கள். பல கல்விப் புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இவர்கள் அறிக்கைகளை கோரிப் பெறுகிறார்கள் என்கிறார் ரிச்சர்ட் பிளாக்.

ஏதோ சில விஞ்ஞானிகள் எழுதுகிற அறிக்கை அல்ல ஐபிசிசி அறிக்கை. மாறாக இது அரசுகள் கோரிப் பெறுகிற அறிக்கை. அரசுகளுக்கு உரிமையான அறிக்கை. இது மிகவும் தனித்துவமானது என்கிறார் அவர்.

ஐபிசிசி எப்படி செயல்படுகிறது?

ஐபிசிசி-க்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. ஆனால், இது தாமாக ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை. இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை. தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு வெளியாகும்.

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

காட்டுத்தீ

ஆகஸ்ட்டில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகைகளில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள்.

வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கலாம், அரசுகள் கருத்து கூறலாம். இதைப் போல இந்த வரைவு அறிக்கை தொடர்பாக 75 ஆயிரம் கருத்துகள் வந்தன. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கருத்துகளை எல்லாம் கணக்கில் கொண்டு இறுதி அறிக்கை 40 பக்கங்களில் தயாராகும்.

தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது அது மிக முக்கியம் என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது. கடந்த ஆண்டு புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே, இந்த ஆண்டு தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பின் அறிக்கை கடுமையான உண்மைகளைப் பேசுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது அரசுகளுக்கு உண்மையில் களத்தில் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்த அழுத்தத்தை உண்டாக்கும்.

https://www.bbc.com/tamil/science-57973004?at_custom4=F2DEE260-EE23-11EB-974C-75FC39982C1E&at_custom3=BBC+Tamil&at_medium=custom7&at_custom2=facebook_page&at_custom1=[post+type]&at_campaign=64&fbclid=IwAR09iZEMWog0RqiKUohi8Zd9CE16i-MuXCOzcvwnSy4YB0hsi269rWGx9ZM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம், வெப்பம் கூடி பனிக்கட்டிகள் உருகும் நிலை ஏற்பட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நீரில் மூழ்கும் நிலையேற்படும் என்று. அப்போ அது நம்ப முடியாததாக இருந்தது, இப்போ நடப்பவற்றைப் பார்த்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்கண்டம் மூழ்கும்போது நம்ம ஹவுஸ்கன்றி காணாமல் போயிருக்கும்.....!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

ஒரு சில வருடங்களுக்கு முன் வாசித்த ஞாபகம், வெப்பம் கூடி பனிக்கட்டிகள் உருகும் நிலை ஏற்பட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நீரில் மூழ்கும் நிலையேற்படும் என்று. அப்போ அது நம்ப முடியாததாக இருந்தது, இப்போ நடப்பவற்றைப் பார்த்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

 

7 minutes ago, suvy said:

அவுஸ்கண்டம் மூழ்கும்போது நம்ம ஹவுஸ்கன்றி காணாமல் போயிருக்கும்.....!  😢

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

 

வயிற்றில இல்லையண்ணா

காணிக்க  உப்பு  தண்ணி  வரப்போகுதாம்???😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

இஞ்சேரும் சும்மா வயித்தில உப்பைக் கரைக்க வேண்டாம்......!   😢

வயித்தில புளியை கரைத்தது போல என்றுதானே சொல்வாக, ஒருவேளை உங்க ஊரு வழக்கில இப்படி உலாவுதோ? அல்லது கடல் நீர் புகப்போகுது என்கிற பயத்தில் வாய் உளறுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் விக்க வேண்டாம்.

ஒரு ஐடியா சொல்லுறன் கேளுங்கோ.

இப்பவே நல்ல கருங்கல்லு, கொங்ரீட் எல்லாம் போட்டு, காணியை ஒரு 3 அடி உயத்தி விடுங்கோ. பிறகு கடல் உயர், உங்கட காணி மட்டும் தீவு மாரி ஆயிடும். 

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்🤣

14 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாணம் கடல் மட்டத்திலிருந்து, அரை மீற்றர் உயரத்தில் தான் இருக்கின்றது.

விலைகூடின காணிகள் வைத்திருக்கிற ஆட்கள், இப்பவே…. சிங்களவன், சோனகனுக்கு…. கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்று விடுங்கள். 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஒண்டும் விக்க வேண்டாம்.

ஒரு ஐடியா சொல்லுறன் கேளுங்கோ.

இப்பவே நல்ல கருங்கல்லு, கொங்ரீட் எல்லாம் போட்டு, காணியை ஒரு 3 அடி உயத்தி விடுங்கோ. பிறகு கடல் உயர், உங்கட காணி மட்டும் தீவு மாரி ஆயிடும். 

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்🤣

 

சா. ஜே. வே. செல்வநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா  நம்ம Jaffna - #யாழ் மணிக்கூட்டு கோபுரம். | Facebook 

அந்தத் தீவில் இருந்தபடியே....
செல்வநாயகம் நினைவு தூபி, யாழ். மணிக்கூட்டு கோபுரம்.... 
எல்லாம் பார்க்கலாம் என்று சொன்னால்,
புலம் பெயர் தமிழர்களே....  உடனே ரிக்கற்  “புக்”  பண்ணி விடுவார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வயித்தில புளியை கரைத்தது போல என்றுதானே சொல்வாக, ஒருவேளை உங்க ஊரு வழக்கில இப்படி உலாவுதோ? அல்லது கடல் நீர் புகப்போகுது என்கிற பயத்தில் வாய் உளறுதோ?

ஊருக்குள்ளே பழமொழியில் புளியைத்தான் கரைக்கிறது.....ஆனால் கடல்நீர் காணிக்குள் வந்தால் அது உப்பைத்தான் கொண்டுவரும் சாத்தன் புளியை அல்ல......அதுவும் பக்கத்தில நாவற்குழி தரவைக் கடல் இருக்கு........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

பிறகென்ன luxury private island in the Indian Ocean only a boat ride away from Killinochchi எண்டு சொல்லி நல்ல காசு பாக்கலாம்

பண முதலைகளுக்கு எப்பவுமே பணத்திலதான் கண்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.