Jump to content

தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம்

மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டன்டெனொங்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்குவயது மகன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ள நிரந்தர பாதுகாப்பை கோரும் தமி;ழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
rithees-218x300.jpg

குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ணப்பங்களை வேண்டுமென்றே பரிசீலிப்பதை உள்துறை அமைச்சு வேண்டுமென்றே தாமதித்துள்ளது,அவர்கள் குடிவரவு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ள போதிலும் ஆவணங்களை ஆராய்வது தாமதமாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நிரந்தரமான வதிவிடமொன்றை கண்டுபிடிப்பதில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தனர்,தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தப்பி 2012 இல் அவுஸ்திரேலிய சென்ற அவர்களை அதிகாரிகள் முதலில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைத்திருந்த பின்னரே அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதித்தனர்.
அவர்கள் கடந்த ஒன்பது வருடங்களாக பிரிட்ஜிங் விசாவில் தங்கிஉள்ளனர்.
பொருளாதார பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காக அவர்கள் சிட்னி அடிலெய்ட் பேர்த் உட்பட பல நகரங்களில் வசித்த பின்னர் ஒரு மாதத்திற்கு முன்னரே மெல்பேர்னில் குடியேறினார்கள்.
221930543_2239765109488251_4774519108415
கிறிஸ்தநீதன் குடும்பத்தின் நிரந்தர பாதுகாப்பிற்கான கோரிக்கை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.அது பிள்ளைகளிற்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாத பரிதாப நிலையை பெற்றோருக்கு ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
ரீத்திசிற்கு இடம்பெற்றது மிகவும் துன்பகரமான விடயம்,அவுஸ்திரேலியாவில் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்திற்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அரன்மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/129611

Link to comment
Share on other sites

ரீத்திசிற் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.!!

3 hours ago, கிருபன் said:

கிறிஸ்தநீதன் குடும்பத்தின் நிரந்தர பாதுகாப்பிற்கான கோரிக்கை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.அது பிள்ளைகளிற்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாத பரிதாப நிலையை பெற்றோருக்கு ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து துரத்தப்பட்ட காடையர் கூட்டமொன்று இலங்கைவந்து இன்றைய இலங்கையை ஆட்சிசெய்வது போலவே, இங்கிலாந்திலிருந்து துரத்தப்பட்ட காடையர் கூட்டமொன்றுதான் இன்றைய அவுத்திரேலியாவை ஆட்சி செய்கிறது. இவர்களிடம் அனுதாபத்தை அன்றி மனிதத்தையோ எதிர்பார்க்க முடியாது.😲 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.