Jump to content

பிட்காயின்களை ஏற்குமா அமேசான்? கிடுகிடுவென உயரும் கிரிப்டோ கரன்சி மதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை.

அமேசானால் வெளியிடப்பட்ட இந்த ஆள் சேர்க்கை விளம்பரம், கிரிப்டோ கரன்சி மீது ஆர்வம் உள்ள தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

மேலும்,``அமேசான் நிச்சயமாக எதிர்காலத்தில் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும்`` எனப் பெயரை வெளிப்படுத்தாத ஒரு அமேசான் ஊழியரை மேற்கோள்காட்டி லண்டனின் 'சிட்டி ஏஎம்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

கிரிப்டோ கரன்சி பற்றிய புரிதல், டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் குறித்த உத்திகளை உருவாக்குவது, அமேசான் தொடர வேண்டிய வழிகளை உருவாக்குவது, மிக மூத்த நிர்வாகிகளிடம் வாதங்களை வைப்பது போன்ற தகுதிகள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இருக்க வேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.

கிரிப்டோ கரன்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

``கிரிப்டோ கரன்சியில் ஏற்படும் வரும் முன்னேற்றங்கள் மற்றும் அதன் புதுமைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இதனால் அமேசானுக்கு என்ன நன்மை என்பதை ஆராய்ந்து வருகிறோம்`` என அந்த நபர் சிட்டி ஏஎம் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

``நவீனமான, வேகமான மற்றும் மலிவான முறையில் பணத்தைச் செலுத்தும் புதிய தொழில்நுட்பங்களால் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அந்த எதிர்காலத்தை அமேசான் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்`` எனவும் அவர் கூறியுள்ளார்.

``கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் பற்றிய ஒவ்வொரு செய்திகளும், அதன் ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது`` என ஹர்கிரீவ்ஸ் லான்ஸ்டவுன் நிதி நிறுவனத்தின் மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளர் சூசன்னா ஸ்ட்ரீட்டர் கூறுகிறார்.

``பெரு நிறுவனமான அமேசானுக்கு, பணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மீது ஆர்வமிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கக் கூட அவர்களிடம் திட்டம் இருக்கலாம்``என்கிறார் சூசன்னா.

பிட்காயின்கள்

பட மூலாதாரம்,SAUL LOEB

``கிரிப்டோ நாணயங்கள் மற்றும் டோக்கன்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அந்தந்த நாட்டு மத்திய வங்கிகள் தங்களது சொந்த டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில், பிட்காயின் போன்றவற்றின் எதிர்காலம் நிச்சமற்றதாக உள்ளது.`` என்கிறார் அவர்.

டெஸ்லா கார் நிறுவனம் எதிர்காலத்தில் மீண்டும் பிட்காயினை ஏற்கத் தொடங்கலாம் என ஈலோன் மஸ்க் கடந்த வாரம் சூசகமாகக் கூறினார். மஸ்கும் அவரது டெஸ்லா நிறுவனமும் பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த கார் நிறுவனம் சிறிது காலத்துக்கு பிட்காயின்களை ஏற்றது. ஆனால், டிஜிட்டல் நாணயங்களால் சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து என கூறி அந்த திட்டத்தைப் பின்னர் கைவிட்டது.

பிட்காயின் நெட்வொர்க் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸ்கள் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன

ஆனால், பிட்காயின் பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவது அதிகரிப்பதாக ஈலோன் மஸ்க் தற்போது கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் விவாத அளவிலேயே உள்ளது.பிட்காயின்களை ஏற்குமா அமேசான்? கிடுகிடுவென உயரும் கிரிப்டோ கரன்சி மதிப்பு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

El-Salvador Bitcoin cryptocurrencyயை  தங்களது சட்டபூர்வமாக கொடுக்கல் வாங்களல்களுக்கு பயன்படுத்தும் நாணயமாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் 7/9/2021ல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.  ஆனால் அதை எதிர்த்து ஆர்பாட்டங்களும்நடைபெற்றதாக செய்திகள் உள்ளது.. உலகின் பலமிக்க நாடுகள்/வளமிக்க நாடுகள் கூடஇன்னமும் பரீட்சத்த அளவில் உள்ளதும், இலகுவில் கணிக்கமுடியாத தன்மையையும்  கொண்டஇந்த Bitcoin சட்டபூர்வமாக கொடுக்கல் வாங்கல்களுக்கு அறிமுகப்படுத்தியது வியப்பாக உள்ளது!!

El Salvador becomes first country in the world to accept cryptocurrency bitcoin as legal tender

El Salvador has become the first country in the world to adopt bitcoin as legal tender, a real-world experiment proponents say will lower commission costs for billions of dollars sent home from abroad but which critics warn may fuel money laundering.

Key points:

On Monday the country bought its first 400 bitcoins 

The government says accepting it as legal tender will save some $538 million annually in fees on remittances

Polls show Salvadorans are skeptical and wary of the volatility of the cryptocurrency

The plan spearheaded by President Nayib Bukele is aimed at allowing Salvadorans to save on $US400 million ($538 million) spent annually in commissions for remittances, mostly sent from the United States.

Last year alone remittances to El Salvador amounted to almost $US6 billion, or 23 per cent of its gross domestic product, one of the highest ratios in the world.

What is a cryptocurrency?

Can't tell a bitcoin from a blockchain? Read our explainer to see how the cryptocurrency works.

Polls suggests Salvadorans are skeptical about using bitcoin and wary of the volatility of the cryptocurrency that critics argue could increase regulatory and financial risks for financial institutions. Still, some residents are optimistic.

"It's going to be beneficial … we have family in the United States and they can send money at no cost, whereas banks charge to send money from the United States to El Salvador," said Reina Isabel Aguilar, a store owner in El Zonte Beach, about 49 kilometres south-west of capital San Salvador.

El Zonte is part of the so-called Bitcoin Beach geared toward making the town one of the world's first bitcoin economies.

In the run-up to the launch, the government has already been installing ATMs of its Chivo digital wallet that will allow the cryptocurrency to be converted into dollars and withdrawn without commission, but Mr Bukele sought on Monday to temper expectations for quick results and asked for patience.

"Like all innovations, El Salvador's bitcoin process has a learning curve. Every road to the future is like this and not everything will be achieved in a day, or in a month," Mr Bukele posted on Twitter, a platform he often uses to spruik his achievements or excoriate opponents.

On Monday, El Salvador bought its first 400 of the cyrptocurrency, temporarily pushing prices for bitcoin 1.49 per cent higher to more than $US52,680.

The cryptocurrency has been notoriously volatile. Earlier this year, it rose over $US64,000 in April and fell almost as low as $US30,000 in May.

Some analysts fear the move to make bitcoin legal tender alongside the US dollar could muddy the outlook for El Salvador's quest to seek a more than $US1 billion financing agreement with the International Monetary Fund (IMF).

After Mr Bukele's bitcoin law was approved, rating agency Moody's downgraded El Salvador's creditworthiness, while the country's dollar-denominated bonds have also come under pressure.

But Mr Bukele, who does not shy away from controversy, retweeted on Monday a video that showed his face superimposed on actor Jaime Foxx in a scene from Django Unchained, Quentin Tarantino's film about American slavery.

The video portrayed Mr Bukele whipping a slave trader who had the IMF emblem emblazoned on his face.

Mr Bukele later deleted the retweet.

His own tweet said: "we must break the paradigms of the past. El Salvador has the right to advance towards the first world."

Reuters

https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100441472

https://www.google.com.au/amp/s/www.bbc.co.uk/news/business-58459098.amp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.