Jump to content

1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம்

1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

அதன்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நேற்று (26) செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை செலுத்தியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக விமர்சங்களை முன்வைத்தவர்களினால் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2021/1231049

################   ################   ################

 Goundamani and Senthil Latest All Comedy Scenes | Karakattakaran | Tamil  Film | Cinema Junction animated gif

சீனாவிடம்... புதிய  கடன் வாங்கி, 
பழைய கடனை... சீனாவிடம் கொடுத்தாச்சு.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை இலங்கையின் எந்த பகுதி, சீனாவுக்கு அடகுக்கு போயிருக்குது?

சொல்லுங்கப்பா.... சொல்லுங்க... 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

நம்பும்படியாகவா  உள்ளது? நேற்றுவரை பஞ்சப்பாட்டு, இன்று எப்படி இவ்வளவு தொகையை புரட்ட முடிந்தது இவர்களால்? ஒருவேளை அமெரிக்கா கொடுத்திருக்குமோ?

11 hours ago, Nathamuni said:

இந்த முறை இலங்கையின் எந்த பகுதி, சீனாவுக்கு அடகுக்கு போயிருக்குது?

அடகு வைத்ததையோ, கடன் அடைக்க இன்னோர் கடன் பெற்றதையோ மறைக்க இவ்வளவு பில்டப். இன்னும் கொஞ்ச நாளில் உண்மையை  மெல்ல வெளியில் கொண்டு வந்து விடுவார்கள் எதிர்க் கட்சியினர்.

Link to comment
Share on other sites

 

மகிந்த அரசிடம் இறக்குமதி பொருட்களுக்கு கொடுக்க திறைசேரியில் டொலர் இல்லை. இதனால் வாகனம்,உரவகை, மாவகை என்பனவற்றின் இறக்குமதி தடை செய்பப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் ஆகாசப்புளுகர் ரம்புக்வலவின் புளுக்குக்கும் ஒரு அளவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

 

மகிந்த அரசிடம் இறக்குமதி பொருட்களுக்கு கொடுக்க திறைசேரியில் டொலர் இல்லை. இதனால் வாகனம்,உரவகை, மாவகை என்பனவற்றின் இறக்குமதி தடை செய்பப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் ஆகாசப்புளுகர் ரம்புக்வலவின் புளுக்குக்கும் ஒரு அளவு வேண்டும்.

ஒரு உண்மையை மறைக்க பல பொய்களை ஆளாளுக்கு இறக்குமதி செய்யிறது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கினமாம் ஆனால் உற்பத்திப் பொருட்களுக்கே தட்டுப்பாடு. செய்யிறது வங்குரோத்து அரசியல் அதில வரட்டுகவுரவம் கதைப்பினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.